Blog Archive

Thursday, March 21, 2013

ஊரைச் சுற்றும் சளியும் தொந்தரவுகளும்

அடப் பாவமே, சளி பிடிச்சுடுத்தா!!
மூக்கு    ஆதாரங்கள்
எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்?
நாங்க எல்லாம் ஸ்பெஷல் இல்ல.!!!
 




 ஏதோ ஊருக்குப் போனோமா, கடமையைச் செய்தோமா
வந்தோமான்னு இருக்கத் தெரியாதே'
பச்சத்தண்ணியைத் தலையிலே  விட்டுக்கோன்னு  மாமியாரா விரட்டினார்?

என்னவோ இன்னும்  முப்பதிலியே  நின்னுட்டதா  நினைப்பு./

நாங்க எல்லாம்  வெந்நீர் போட்டுக் குளிக்கலையா. உனக்கு மட்டும் பக்தி மிஞ்சி  இப்படி எல்லாம்  செய்யணும்னு தோணறது பாரு.

ஆஹச்!!

ம்ம் . தும்மு தும்மு. எல்லாம் வெளில வரட்டும்.

எனக்குன்னால் அத்தனை சுக்கையும் என் தலைல கொட்டுவியே!
இப்ப வீட்ல சுக்கே இல்லையோ???

''ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.''
மூக்குதானே கோளாறு.
வாயும் பேச வரலியா.

என்னா தொண்டையா? வரண்டு போயிடுத்தா. வெந்நீர் சாப்பிட வேண்டியதுதானே.

யாரோ சொல்லிப்பாங்க. எனக்கெல்லாம் கோல்டே
பிடிக்காதுன்னு.
அதுதான்  இப்படி வந்திருக்கு.

''ம்ம்ம்ம்ம்.!!!!!''

தோட்டத்தில தான் கற்பூரவல்லி  போட்டு இருக்கியே,
அந்தக் கஷாயம்  சாப்பிடலாமே.
துளசி டீ இருக்கு.

''ஹான்  ஹான். ''

அடக் கடவுளே இது ஹிந்தி சளியா!!!  ஹா ஹா

இப்படி படுத்துக் கொண்டால் எல்லாம் இங்க வருமா.
இரத்த ஓட்டமே இருக்காது. எழுந்துநடந்தால்
பாதி சளி போயிடும்.

இதற்கு மேலத் தாங்காது. நான் எழுந்துவிட்டேன்.
நான் சளித் தொந்தரவில் கஷ்டப் படுவதைவிட இவர்
சிரமப் படுவது இன்னும்   தொந்தரவாக இருக்கு.:)


மேல  இருக்கிற டயலாகெல்லாம் ஆங்கிலத்தில மொழிபெயர்த்துக்கொள்ளவும்.

கோபம் வந்தால்  தமிழ் எங்க வீட்டில தடுமாறும்.)))









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

35 comments:

துளசி கோபால் said...

ஹாஹா............ ஹாஹா...

எனக்கு Gகோல்ட் ரொம்பப்பிடிக்கும்ப்பா. சும்மாப் பிடிக்காதுன்னு பொய் சொல்லுவானேன்?

செஸ்ட் கோல்ட் மருந்து சாப்பிடணும். அம்ருதாஞ்சன், விக்ஸ் எல்லாம் தடவிக்கணும். ஒரே வாரத்துலே சரியாகிரும்.

மருந்து வேணாமுன்னா..... ஏழு நாள் கஷ்டப்படணும் கேட்டோ!!!!

டேக் கேர்.

கோமதி அரசு said...

இதற்கு மேலத் தாங்காது. நான் எழுந்துவிட்டேன்.
நான் சளித் தொந்தரவில் கஷ்டப் படுவதைவிட இவர்
சிரமப் படுவது இன்னும் தொந்தரவாக இருக்கு.:)//

உண்மை அக்கா, உடம்பு முடியவில்லையே என்று அக்கடா என்று படுக்க முடியாது!
அவர்களுக்காக எழுந்து கொள்ள வேண்டி உள்ளது.
அருமையாக சொன்னீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

gold பிடிக்காதவங்க இருப்பாங்களா துல்சிமா.:) சேலம் போனபோது குடிக்கிற தாண்ணிர் மாறி,பக்திசிரத்தையா கிணற்றுத்தண்ணிரில் தலை முழுகியதால் பிடிச்சது. 7 நாட்கள் ஓடியாச்சு. சளியும் ஓடிடும்:)

வல்லிசிம்ஹன் said...

அவஸ்தைப் பட்டுப் போய் விடுகிறார்ப்பா. பாவமா இருந்தது.இதைத்தவைர ஸ்கைப்ல வர பிள்ளைங்க கிட்டயும் உங்க அம்மாக்கு ஜுரம்,தலைவலி இப்படிஒரு வரி சொன்னால் போதும்,. அக்குப்ரஷர்லிருந்து நாட்டு மருந்துகள் வரை வரிசையாக ஈமெயிலில் வந்துவிடும்.அக்குப்ரஷர் உண்மையாகவே நல்ல பலன். நகைச்சுவைக்காக எழுதினேன். இனி எல்லாம் சுகமே:)

priyamudanprabu said...

:)

வெங்கட் நாகராஜ் said...

:) ஜலதோஷம் வந்தால் கஷ்டம் தான்.

துளசி டீச்சர் சொன்ன ஏழு நாட்கள் கணக்கு இங்கே ஐந்து நாட்களாக சொல்வோம்!

மருந்து எடுத்துக் கொண்டால் ஐந்து நாட்களில் சரியாகி விடும்! எடுத்துக் கொள்ளாவிட்டால் Five Days-ல சரியாகிடும்னு! :)

sury siva said...

// மேல இருக்கிற டயலாகெல்லாம் ஆங்கிலத்தில மொழிபெயர்த்துக்கொள்ளவும்.//

எங்க அப்பாதுரை ஸார் முந்திண்டு மொழிபெயர்த்து அதற்கான சம்பளத்தை வாங்கிண்டு போயிடுவாரோ
அப்படின்னு எனக்கு தெரிஞ்ச இங்கிலீஷிலே நானே மொழி பெயர்த்துட்டேன். நன்னா இருந்தா நாலு
பேருட்ட சொல்லுங்க... இல்லைன்னா நரசிம்மன் ஸாருட்ட மட்டும் சொல்லுங்க...
some townu govaa, dutiyai didaaa
commaa so dont know weee

green waterai head on poru mother in law drovu ?

somehowu even nowu thirtilee standinggu thoughttu.

wee all hot water prepareddu andu bathe u know , you only devotion balance so all do see u think why

haach

mm...mm.....haach haach....sneeez... all outtu commu.

aikku only all sukku my head le poru.

what ? now house in no sukku ?


m...m....m....


nose only planet river.
.

mouth also speak no vaa

what throat aa !! paarched gonaaa ! hot water eat want only..



somebody said. ai kku no gold dont like. that only this way came.

m...m...m...m

garden in camphor valli sow did u.
that decaution eat is not ?
thulasi tee is also yes.

' haan haan

oh god . this is hindi phlegm ....ha haa.


this way down lying u all here no come. blood run never. stand walk half phlegm get out .

this up bear no. i stand up. no . stood up.

i phlegm disturbed toiling.. but this man toiling troubled much more disturbance is.
s dialogue all english in translate u.
anger coming thamil we house le struggle .


சுப்பு தாத்தா.









வல்லிசிம்ஹன் said...

நன்றி பிரபு:)

வல்லிசிம்ஹன் said...

அதே தான் வெங்கட்.விக்ஸ், குங்குமப் பத்து,மஞ்சள் காய்ச்சி மூக்கில வாசனை பிடிச்சு,அக்குப் பிரஷர் செய்து கொண்டு, டீத்தண்ணி குடிச்சு, டோலோ 650 எடுத்து, வயிற்றுவலி வந்து இப்போ சளி ஓடிவிட்டது.வறட்டு இருமல்தான் பாக்கி.:)

வல்லிசிம்ஹன் said...

ஹைய்யோ சுப்பு சார். அதே சேம் இங்கயும் வந்துட்டதா.:)நல்லா இருந்தது.இவர் கவலைப் படுவதைப் பார்த்து என் ஜலதோஷம் வேற எங்கியோ போய்விட்டது.மிக மிக நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... அருமை அம்மா...

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.அந்தந்த நேரத்தில என் வேலைகளைக் கவனிக்காமல் படுத்துவிட்டல் ஹாலுக்கும் ,இந்த அறைக்கும் நடைதான். அத்ற்காக மத்தியானக் காப்பியாவது வருமா? வராது. அம்மா அப்பான்னு காப்பியைச் சுடவைத்தால் எனக்கும் ஒரு கப் கொடுத்திடும்மா என்பார்:)

Geetha Sambasivam said...

இப்போ தேவலையா? ஹிந்தி சளியா? தமிழ் ஜலதோஷம் இல்லையா? ஓகே, ஓகே. சீக்கிரமா சரியாகட்டும். கவனமா இருங்க.

அப்பாதுரை said...

ஹா.. வடை போச்சே..
க்ரீன் வாடர்னு பரக்க பரக்க ஓடி வந்தா சுப்பு சார் என்னை சதுரமா அடிச்சிட்டாரே?

குளிரெல்லாம் உடனே மருந்து சாப்பிடலைனா குணமாக மெள்ள ஏழு நாள் ஆகும்; மருந்து சாப்பிட்ட ஒரே வாரத்துல சரியாயிடும்.

வல்லிசிம்ஹன் said...

கீதா சுப்பு சார் மொழிபெயர்ப்பு பார்த்தீங்களா.:)

இவர் போட்ட போட்டில சளி துண்டக் காணோம் துணியைக் காணோம்னு சொல்ல ஆசைதான். மருந்துகளும் உதவி செய்தன.சரியாப் போச்சு.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா:)
துரை யூ மிஸ்ஸ்ட் த போட். நீங்கள் படகைத் தவற விட்டுவிட்டீர்களே:)

க்ரீன் வாட்டர் சதுரம்!!!ஹா ஹா.:)

sury siva said...

// ஹா.. வடை போச்சே..//

நான் என்ன செய்யட்டும்.? அது உங்களோட planet river.

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

இப்ப எல்லாருக்கும் இந்த தோஷம் பிடித்துக் கொண்டதா. கிரகச் சாரம்!!!
ப்ளானட் வாட்டர் ப்ளானட் வாட்டர்(தலையில் மெல்லத் தட்டிக் கொள்ளவும்:)

ஸ்ரீராம். said...

சே.....நான் சொல்ல நினைத்ததை துளசி மேடம் சொல்லி விட்டார்கள்..! தோட்டத்திலேயே இருக்கிறார்களே...!!! :)

சுப்புத்தாத்தா தூள் கிளப்பறார்...

ஸ்ரீராம். said...

சளி போய் விட்டது இல்லையா?

sury siva said...

//கிரகச் சாரம்!!!
ப்ளானட் வாட்டர் ப்ளானட் வாட்டர்(தலையில் மெல்லத் தட்டிக் கொள்ளவும்//

No. it is planet juice.

subbu thatha

ராமலக்ஷ்மி said...

/எனக்குன்னால் அத்தனை சுக்கையும் என் தலைல கொட்டுவியே!இப்ப வீட்ல சுக்கே இல்லையோ???/

சரிதானே:))!

விரைவில் குணமாகட்டும்.

Geetha Sambasivam said...

//கீதா சுப்பு சார் மொழிபெயர்ப்பு பார்த்தீங்களா.:)//

படிச்சேன் வல்லி, தூள் கிளப்பறார், கலக்கல்! :)))))நான் எப்போவுமே ஜலதோஷத்துக்கு கன்ட்ரி மெடிசின் தான் சாப்பிடுவேன். சரியாயிடும். :))))))

இராஜராஜேஸ்வரி said...

இதற்கு மேலத் தாங்காது. நான் எழுந்துவிட்டேன்.

உடல் நல்க்குறைவை விட மருந்துகளும் , குடும்ப்படுத்தல்களும் அறிவுரைகளும் தான் பயங்கரம் ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதற்கு மேலத் தாங்காது. நான் எழுந்துவிட்டேன். நான் சளித் தொந்தரவில் கஷ்டப் படுவதைவிட இவர்
சிரமப் படுவது இன்னும் தொந்தரவாக இருக்கு.:)//

;))))) நல்ல நகைச்சுவைப்பதிவு. ! ஆஹ் ஹச்சு!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.சளி நிற்குமா. ஓடிப் போய்விட்டது.
ஆமாம் தோட்டத்திலியே துளசி இருக்கிறார்.
கவலையே இல்லை.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,அவருக்கு நாட்டு மருந்தே பிடிக்காது. வலுக்கட்டாயமாக ஏதாவது கொடுப்பேன். அதுதான் சுக்குக் கோபம்.:)

தலைபாரமெல்லாம் குறைந்து இப்பொழுது தேவலைம்மா. நன்றி.

sury siva said...

//அன்பு ராமலக்ஷ்மி,அவருக்கு நாட்டு மருந்தே பிடிக்காது. வலுக்கட்டாயமாக ஏதாவது கொடுப்பேன். அதுதான் சுக்குக் கோபம்.:)

தலைபாரமெல்லாம் குறைந்து இப்பொழுது தேவலைம்மா. நன்றி.//

Madam Ramalakshmi i know is an expert in translating English Poetry. But I can also translate from Tamil to English.

Love Ramalakshmi he national medicine take ear. weight forcing something giving. that vegetable piece sukku anger.

head weight down now normal mother thanks.

subbu thatha.
If you get again headache, I am not responsible. U started the game.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இராஜராஜேஸ்வரி.
முகமெல்லாம் இப்படி வீங்கி இருக்கே. சைனஸோ. ஹெட் கோல்டா, செஸ்ட் கோல்டா.
ஆண்டிபயாடிக் எடுத்துக்கலையா.

ஜலதோஷமே பரவாயில்லை என்று செய்துவிட்டார்கள்:)

வல்லிசிம்ஹன் said...

பதிவைப் படிச்சு உங்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டதா. கோபு சார்.
:)

உங்கவீட்டு ஜல தோஷ விவரங்கள் இருந்தால் சொல்லுங்களேன்:)

வல்லிசிம்ஹன் said...

க்ரஹ ரசமா சுப்பு சார்?

ஹ்ம்ம். நன்றாக இருக்கும் போல இருக்கே.
வாழ்க்கைரசம். கிரஹத்திலும் ரசம். சரியா.!!!

Geetha Sambasivam said...

//subbu thatha.
If you get again headache, I am not responsible. U started the game.//

ஹிஹிஹிஹிஹி

வல்லிசிம்ஹன் said...

நான் ஒரு பதிவு ஆரம்பிக்கப் போறேன் கீதா,சுப்பு சார்.அதை யார் வேணா நகைச்ச்சுவையாத் தமிழ்ல எழுதலாம்.
அதை ஆங்கிலப் படுத்தும் பொறுப்பை சுப்பு சார்கிட்ட கொடுத்துடலாம் சரியா:)
அப்பப்போ துரைகிட்ட ஐடியா கேட்டுக்கலாம்.

மில்கும் ஃப்ரூட்டும் ஹாண்ட்ஸில் டேக்கி
கோரல் லிப்ஸில் ஸ்மைலை ட்ராப் பி
ப்யூட்டிஃபுல் பீகாக் வாகிங் ஸ்லோலி
யூ வில்கம் டு மி.
இது எந்தம்பி பாடுவன்:)//

ராமலக்ஷ்மி said...

@ sury sir,

:))!

கவியாழி said...

ஏழு நாள் சனியன் எல்லோரையும் கஷ்டப்படுத்தும் .சளி சிலருக்கு காய்ச்சல்,தலைவலி,மூக்கடைப்பு ,மூக்கில் ஒழுகுதல் ,நெஞ்சிறுக்கம் போன்ற எல்லா அவச்தைக்குபின் தானே போய்விடும்