Blog Archive

Saturday, December 08, 2012

சர்க்கரை யும் கோலா போன்ற பானங்களும்




இந்த    தாகம் தீர்க்கும்(என்று)  நாம் நினைக்கும் பானங்கள் ஒரு சர்க்கரை  நோயாளியின் 

பேச்சையே    இழக்கும்   அளவுக்கு    இழுத்துவிட்டது என்றால் நம்ப  முடியுமா.
இது   கொஞ்ச நாட்களாக  எல்லோரையும் டயபடீஸை நோக்கி அழைக்கும்

வகையில் செயல் பட   ஆரம்பித்திருக்கின்றன.
மேலை நாகரீகம் கொஞ்சம் கீழை நாடுகளூக்குப் பரவி அமீரகத்தில்  குழந்தைகளை  பலூனாக ஊதவைத்து
ஆப்பிரிக்க நாடுகளிலும் பழகி வருகின்றதாம்.

எங்கள்    பக்கத்து வீட்டு அம்மா   போக்குவரத்து    இலாகாவில் வேலை செய்பவர். கணவனை  இழந்தவர். சர்க்கரை வியாதி எப்படியோ அவரை ஆட்கொண்டுவிட்டது.
இத்தனைக்கும் நிறைய நடப்பவர். தினம் மூன்று பஸ் தடங்களில் பிரயாணம் செய்பவர்.

அவரது  வைத்தியர்    இந்த மாதிரி  சாஃப்ட்  ட்ரின்க்ஸ்  பருகக் கூடாது என்று   அறிவுறுத்த  மறந்துவிட்டார்,.

விளைவு தாகம் எடுக்கு மதிய வேளைகளில் நான் பெயர் சொல்ல விரும்பாத ஒரு பானத்தை  வாங்கி வைத்துக் கொண்டு

பாதி ஒரு நாளும் மீதி மறுநாளும் குடித்து    வந்திருக்கிறார்..
முதலில் ஒன்றும் தெரியவில்லை.

திடீரென்று   ஒரு ஞாயிற்ற்றுக் கிழமை  என்னை வந்து அழைத்தார்.
வீட்டில் அண்ணா,அவர் மனைவி ,அவர்கள் குழந்தைகள்  எல்லோரும்
வெளியே போயிருக்கும் போது இவருக்கு  வயிறு சரியில்லாமல் போய்விட்டது. எனது தொலைபேசி எண்ணும்  மறந்து போக.,
 கஷ்டப்பட்டு இங்கே வந்துவிட்டார்.

கைகாலெல்லாம் வெட வெடக்கறது என்ன பண்ணனும்னு தெரியலை. குளிருகிறது என்ற வண்ணம் நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.

உடனே   கொஞ்சம் சூடான பாலைக் கொடுத்து ச் சாப்பிடச் சொன்னேன்.
சுகர்  பரிசோதனை செய்யட்டுமா  என்று கேட்டேன். இது ஷுகர் பிரச்சினை
இல்லை ஜுரம் வந்திருக்கு என்கிறார்.

எதுக்கும்  நான் பாத்துடறேன். அண்ணா  மன்னிக்கும் ஃபோன் செய்யலாம் என்று சமாதானப் படுத்தி, க்ளூகோஸ் மீட்டரில் ரத்தம் எடுத்துப் பார்த்தால் 250 ஐ எட்டிக் கொண்டிருக்கிறது.

இது அவ்வளாவாகப் பயம் கொடுக்கவில்லை. அவர் உடல் இந்த நிலைமையைச் சமாளிக்க முடியாது போலத் தோன்றியது.
அவரிடம் உண்மையான எண்ணைச் சொல்லாமல் நீங்கள் வேணுமானால் சாய்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் . இல்லாவிட்டால் பக்கத்தில மீனாட்சி மெடிக்கல்ஸுக்குப் போகலாம் என்று சொல்லிக் ஒண்டே அவருடைய பதிலை எதிர்பார்த்தேன். வாயை திறந்து திறந்து மூடுகிறார்.
வார்த்தை வரவில்லை.
எனக்குப் பதைப்பாகப் போய்விட்டது.

உடனே  மீனாட்சிக்கு தொலைபேசினோம். இவர் விவரத்தைச் சொன்னதும் டியூட்டியிலிருந்த  டாக்டர் (இந்த அம்மாவைக் கவனிப்பவர்)
உடனே வந்தார்.

ஏதோ   ஊசி போட்டார். நான் நிலைக்  கொள்ளாமல் அடுத்தவீட்டைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

நல்லவேளையாகக் கொஞ்சநேரத்தில் அண்ணனும் மற்றவர்களும் வந்தார்கள்.

உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து  எமெர்ஜென்சிக்கு அழைத்துச் சென்று

சலைன்   ட்ரிப்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அடுத்த நாள் பேசும் நிலைக்கு வந்தார்.

பிறகுதான் இந்த   குளிர்பான விஷயம் தெரியவந்தது.
வைத்தியருக்கோ சொல்ல முடியாத கோபம். ஜூஸ்,இளநீர்,
இதெல்லாம் சாப்பிட வேண்டாம்னு சொன்னேனே. கேட்காமல் இந்த லிம்காவைச் சாப்பிட்டு இருக்கிறார்களே.

என்ன சொல்வது என்றார்.
அறியாமைதான்.   பசிதாகத்தின் போது பாவம் அந்த அம்மா இப்படி
சாப்பிட்டு இருக்கிறார்.கூடவே  மாரி பிஸ்கட்ஸ்.
அது தன்ஸ்வரூபத்தை த் திடீரென்று காட்டிவிட்டது.
பாவம் அந்த அம்மாவுக்குக் குழந்தைகளும் இல்லை. ஜீவனம் நல்லபடியாக் இருக்கவேணுமே  என்று   தன் கணவரின்
வேலையை ஏற்றுப் போய் வந்து கொண்டிருக்கிறார்..
இப்போது   இன்னும் இரண்டு நாளில் மீண்டும் வேலைக்குப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

வீட்டினர்  வாலண்டரி ரிடயர்மெண்ட் வாங்கச் சொல்கிறார்கள்.
பார்க்கலாம். கடவுள் துணை இருக்கட்டும்.

சர்க்கரை எப்போது ம் கட்டுக்குள் இருக்கவேண்டும்.
இவரைக் குற்றம் சொல்லமாட்டேன். இனி உணர்ந்து செயல்படுவார்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

26 comments:

எல் கே said...

சர்க்கரை வந்தால் இன்னும் ஐந்து வருடங்கள் கூட வாழ இயலும். நாக்கை கட்டு படுத்தினால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்

அப்பாவிற்கு சர்க்கரை பதினைந்து வருடங்களாக இருக்கு. ஆனால் எந்த தொந்தரவும் இல்லை. இப்ப சர்க்கரை மாத்திரை கூட சாப்பிடுவதில்லை....

வெங்கட் நாகராஜ் said...

அடடா.... இந்த பானங்களை அருந்தாமல் இருப்பதே மேல்.

முதலில் பேர் சொல்ல விரும்பவில்லை எனச் சொல்லி விட்டு கடைசியில் சொல்லி விட்டீர்களே....

Unknown said...

மொத்தத்தில் குளிர்பானங்களைக் குடிப்பதே உடல நலத்திற்குக் கேடு என்பதே என் கருத்து!

Unknown said...

மொத்தத்தில் குளிர்பானங்களைக் குடிப்பதே உடல நலத்திற்குக் கேடு என்பதே என் கருத்து!

Geetha Sambasivam said...

லிம்கா மட்டுமா? கோக், பெப்சி ஆகியவற்றை விட்டுட்டீங்களே. இவற்றால் நம் தேசீய பானங்கள் முற்றிலும் மறைந்துவிட்டதோடு உடலநலக்கேடும் இப்போது அதிகரித்து விட்டது. நம் சுதேசி பானங்கள் தயார் செய்யப்பட்ட முறைக்கும் இவற்றுக்கும் எத்தனை வேறுபாடு. எங்க வீட்டில் இவற்றுக்கு எப்போதுமே தடாதான். நானாவது மற்றவர் கட்டாயத்தில் கொஞ்சமானும் ருசி பார்த்திருக்கேன். நம்ம ரங்க்ஸ் கிட்டே கூடப் போக மாட்டார். எப்போவுமே ஃப்ரெஷ் பழச்சாறுதான் தாகம் எடுத்தால். காசையும் கொடுத்துட்டு உடல்நலக்கேட்டையும் ஏன் வரவழைச்சுக்கணும். ஆனால் சொல்கிறவங்க தான் பைத்தியக்காரங்க. :((((

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு நன்றி கார்த்திக்.சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையும். இந்த அம்மா செய்தது அறியாமையால்.யாரோ சொன்னதைக் கேட்டு இந்தப் பானத்தை அருந்தி இருக்கிறார்.இத்தனைக்கும் அவர் நடக்கும் நடை யாரும் நடக்க மாட்டார்கள்.ஒர்ரெ தவறு ரெகுலர் செகப் செய்து கொள்ள மாட்டார். சர்க்கரை நோயின் தீவிரம் எங்கு போய் முடியும் என்றும் தெரியாது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வெங்கட். எங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு காப்பியோ டீயோ தான் கிடைக்கும். குளிர் பானங்கள் வாங்கி வைப்பதில்லை.
பேரைச் சொல்லிவிட்டேன்:)
சர்க்கரை இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம் என்றுதான் சொல்லி இருக்கிறேன்.தப்பு இல்லையே:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் புலவர் ஐயா. காற்றடைக்கப் பட்டு குளிர வைத்து எல்லோர் கவனத்தையும் இழுக்கிறார்கள். நம் ஊர் இளநீரும் கரும்புச் சாறும் எவ்வளவோ மேல்.நன்றி ஐயா.

Azhagan said...

" நம் ஊர் இளநீரும் கரும்புச் சாறும் எவ்வளவோ மேல்.நன்றி ஐயா.".... please bear in mind, these two items are NOT SUITABLE FOR DIABETICS.

வல்லிசிம்ஹன் said...

முன்பெல்லாம் எங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு(வெளி நாட்டுப் பறவைகள்) ஃப்ரிட்ஜ் நிறைய குளிர்பானங்கள் தான். இன்னும் அவர்கள் அந்தப் பழக்கங்களை விடவில்லை. இப்படி ஆரம்பிப்பது எங்கு போய் முடியும் என்றும் தெரியும்:(
இப்பவெல்லாம் மோர்சிலுப்பி வைத்துவிடுவது.
பைத்தியங்களாகவே இருக்கலாம். அதிமேதாவிகள் தங்களைப் பார்த்துக் கொள்ளட்டும்!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி அழகன். நான் இளநிர்,கரும்புச்சாறு பக்கம் போயே 9 வருடங்கள் ஆகிவிட்டன.:)

ஹுஸைனம்மா said...

நலல்தில்லன்னு தெரியும். ஆனாலும், இந்தளவுக்குப் பாதிக்கும்னு தெரியவரும்போது கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருக்குது.

இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன்: “டயட்” பானங்கள்னு சொல்லி விற்கப்படும் பிரபல பானங்களும் அப்படியொண்ணும் இனிப்பு, உப்பு குறைவில்லையாம்!! அதுவும் நல்லதில்லைன்னும் சொல்றாங்க. பழமையே இனிமை!! :-)))

ஸ்ரீராம். said...

இந்த பானம் தொடர்ந்து சாப்பிட்டதால் மட்டும் சர்க்கரை நோய் வந்திருக்க வாய்ப்பில்லை. குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது இருந்திருக்கலாம். ஆனாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் அவங்க ஏற்கனவே டயபடிஸ் உள்ளவங்கதான்.
அதனாலதான் அந்த பானம் அவர்களைப் பாதித்திருக்கிறது.
பரம்பரையில் யாருக்காவது உண்டான்னு எனக்குத் தெரியாதும்மா:(

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா.அதே அதே சபாபதே.

நாம் திரும்புவது இருக்கட்டும். வளரும் குழந்தைகளைப் பிடித்திழுக்கும் இந்த மாதிரி உணவுப் பண்டங்களிலிருந்து எப்படி விடுவிப்பது.அதுதான் கவலை.
எனக்கு கொடுக்கப்பட்ட சுகர் ஃப்ரீ மாத்திரைகளே தீமை விளைவிக்குமாம். இப்போது அதன் பக்கமே போவதில்லை. காப்பி நல்லாதான் இருக்கு:)

ADHI VENKAT said...

இந்த மாதிரி குளிர்பானங்கள் உடலுக்கு கேடு தான்....அதுவும் சர்க்கரை உள்ளவர் அதை எடுத்துக் கொண்டது தான் மோசம்...

Ranjani Narayanan said...

எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
குழந்தைகளுக்குக் கூட இவற்றை அதிகம் வாங்கித் தந்து பழக்கப்படுத்திவிடக் கூடாது.
இப்போதெல்லாம் சிறு குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருகிறது என்று செய்தித் தாளில் படித்தேன்.

இந்தவகைப் பானங்களில் உள்ள வேஸ்ட் கலோரிகள் உடல் எடையையும் கூட்டும்.

ராமலக்ஷ்மி said...

அந்தப் பெண்மணிக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இது ஒரு பாடம். விழிப்புணர்வைத் தரும் பகிர்வு, வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மா ஆதி. குழந்தைகளுக்கு நம் வீட்டு நல்ல பானங்களே போதும்.
இந்தப் பானங்களைப் ப்பழக்கப் படுத்தவேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ரஞ்சனி.

நானே எங்கள் குழந்தைகளுக்குச் சிறுவயதில் சினிமா பார்க்கும்போது
வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.

பிறகு ரீடர்ஸ் டைஜஸ்டில் ஏதோ படிக்கப் போக அதையும் நிறுத்தி விட்டேன்.எப்பவும் விழிப்புணர்வோடு இருக்கணும். அதுவும் சர்க்கரை நோய் இருந்தால் ஒவ்வொரு கவளமும் பார்த்துச் சாப்பிடவேண்டும். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி, இந்தப் பானங்கள் குழந்தைகளைத்தான் எப்படி ஈர்க்கின்றன.பெரியவர்களும் கொஞ்சமும் யோசிப்பதில்லை வெளிநாட்டுப் பழக்க வழக்கங்கள் பீட்ஸாவும் கோக் என்று பழக்கப் படுத்திவருகிறார்கள்.

துளசி கோபால் said...

நல்ல விழிப்புணர்வு பதிவுப்பா.
நன்றிகள்.

அந்தம்மா இப்ப எப்படி இருக்காங்க?

வல்லிசிம்ஹன் said...

நல்லாயிட்டாங்க. துளசி. அவ்வளவு பாதிப்பு இல்லை. அடுத்த நாலு நாட்களில் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
புதுவருஷத்துக்கு அப்புறம் தான் வேலைக்குப் போகணும் என்று சொன்னார்கள் 48 வயதுதான் ஆகிறது. இப்போதிலிருந்து வீட்டில் என்ன செய்வேன் என்கிறார்.

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு வல்லிம்மா.

மாதேவி said...

நல்ல விழிப்புப் பகிர்வு.

இந்தவகை பானங்களை தொடர்ந்து அருந்தும் இள வயதினருக்கும் சக்கரை வியாதி வருகின்றதாக டாக்டர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.

எனது முன்னைய பகிர்வு நேரம் கிடைத்தால் பாருங்கள்.
http://sinnutasty.blogspot.com/2008/08/blog-post_09.html