Blog Archive

Saturday, December 15, 2012

மார்கழிப்பூக்கள்

பாடும் பாவை
எல்லோரும் வாழ வேண்டும்

இதோ இன்னோரு மார்கழித் திங்கள்.   மாயனை மணிவண்ணனைப்

பாட,நினைக்க,வணங்க  இனிமையான  முப்பது நாட்கள் முப்பது பூக்கள்
 முப்பது பாக்கள்    என  நேரம் காத்திருக்கிறது.   நாமும்கண்ணனைப்  பாட                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              இனிதாக    காலைப் பொழுதில்  விழித்து எம்பாவையாம்   ஆண்டாளை முன்னிட்டு,அவளை வழிபட்டு  மாதவனையும்  அடைய  முயற்சிக்கலாம்.                                                                                                                

26 comments:

கார்த்திக் சரவணன் said...

நல்ல படங்கள்...

ராமலக்ஷ்மி said...

அழகான மலர்கள் ஆண்டாள் சூடிட.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மார்கழிப்பூக்கள் அனைத்தும் அழகோ அழகாகச் சிரித்தபடி ..............
சிறப்பான பகிர்வு. ;))))) நன்றி !!

வெங்கட் நாகராஜ் said...

மார்கழிப் பூவே... மார்கழிப் பூவே... :)

நல்ல படங்கள். பகிர்வுக்கு நன்றி.

தனிமரம் said...

படங்களும் மாயணின் மகிமையை போற்றுவதும் ரசிக்கக்கூடிய அம்சம்!

துளசி கோபால் said...

ஆஹா..... மார்கழி பிறந்தாச்சா!!!!!

தினமும் திருப்பாவை கேக்கும்போது எங்களையும் நினைச்சுக்குங்கப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஸ்கூல்பையன். மிகவும் நன்றி

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி.அவளுக்கில்லாத மாலையா. பூமாலை பாமாலை
எல்லாம் சூடவும் சூடிக்கொடுக்கவும் பிறந்தவள் அவள் ஒருத்தியே.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார்.
ஆண்டாளுக்குப் பிடித்த பெயரையும் வைத்துக் கொண்டு காவேரி தீரத்திலும் வசிக்கிறீர்கள்.

இந்த மாதம் இனிதே செல்ல அவள் துணை இருப்பாள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.ஸ்ரீரங்கத்தை மனத்தில் இருத்தி திவ்யதம்பதிகளைத் தினமும் வணங்கும்
பாக்கியம் நமக்கு வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க தனிமரம். மாயனை வணங்குவதால் நம் துன்பம் எல்லாம் மாயமாகும்.நன்

வல்லிசிம்ஹன் said...

துளசி இல்லாத கண்ணனா.
துளசி கோபால் இல்லாத மார்கழியா.
பத்மநாபன் எழுந்து நம்மைக் கவனித்து அருள் செய்யட்டும்.

கோமதி அரசு said...

மார்கழி மாதம் முப்பதும் தப்பாமல் அவன் புகழ்பாட இறைவன் அருள வேண்டும்.

உங்கள் மார்கழி பூக்கள் அழகு, அற்புதம்.

மழை பெய்து பயிர் செழித்து உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ நானும் உங்களுடன் சேர்ந்து பிராத்திக்கிறேன்.

ஸ்ரீராம். said...

மலர்களிலே பல நிறம் கண்டேன்...
திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்....!

துளசி கோபால் said...

//பத்மநாபன் எழுந்து நம்மைக் கவனித்து அருள் செய்யட்டும். //

ஆஹா... இது!!!! இப்போதைக்கு அந்த 'எழுந்து'......... அந்த லக்ஷணமே இல்லை.

இதுதான் போகாத ஊருக்கு வழி சொல்றது கேட்டோ:-))))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா ஸ்ரீராம்.எல்லாவற்றிலும் பாடல்கள் கவிதைகள்.இசைவிழாவே இங்க நடக்கிறதும்மா.

வல்லிசிம்ஹன் said...

துளசிமா. அவன் படுத்திருந்தாலும் எழுந்திருப்பான்.அழித்த குரலுக்கு வருபவந்தான் கண்ணன். நியூசி வரக் கொஞ்சம் நேரம் எடுக்கிறானோ. இருக்காது. சூரியனே அங்கதானே பயணத்தை ஆரம்பிக்கிறான். சூரியநாராயணனும் அவரோட வந்துடுவாரே.அதனால் கவலையே கிடையாது.

மாதேவி said...

சூடிக்கொடுத்த மலர்க்கொடியை பாடும் மாதம் இது.

உங்கள் மலர்களும் அணிவகுத்து நிற்கின்றன.

Muruganandan M.K. said...

கலர் கலராக் பூக்கள்
அழகான பதிவு

Ranjani Narayanan said...

மார்கழியை மலர்களுடன் வரவேற்று இருக்கிறீர்கள் வல்லி!
பாராட்டுக்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி நல்ல பிரார்த்தனை.
மழைதான் வேண்டும்.அதற்கும் அவனே அருள வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி அன்புடையோர் அனைவரும் சேர்ந்து பிரார்த்திக் கொள்வோம் எல்லோரும் வாழ்வேண்டும் என்று..

வல்லிசிம்ஹன் said...

வரணும் திரு .முருகானந்தன்.
அமைதியும் இன்பமும் எங்கும் நிலவவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி பங்களூருவில் உண்மையாகவே குளிரும் மார்கழி. எங்கள் ஊரில் வெய்யில் மார்கழி.
இரண்டையும் மாதவன் ரசிப்பான்.
நன்றி மா.

Geetha Sambasivam said...

மார்கழிப்பதிவுபோடறீங்களா? இப்போத் தான் தெரியும். மலர்களால் ஆன மாலையும், உங்க பதிவும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

இப்படி நினைத்து ஆரம்பிக்கவில்லை கீதா. தானாகக் கோதை எழுதிக் கொள்கிறாள்:)