Blog Archive

Thursday, September 27, 2012

ஜிமிக்கி அழகா இருக்கே

 அம்மா தொப்பா வலிக்கிறது:(

வெந்நீர் கொடுக்கறேண்டா. சரியாப் போயிடும். இல்ல இன்னிக்கு நறைய
வலிக்கிறது  ம்ம்ம்ம்.
இரு அப்பாவும் அக்காவும் கிளம்பட்டும் . உனக்கு
மருந்து தரேன்
என்று சொல்லிவிட்டு எட்டு மணிக்குக் கிளம்பவேண்டிய கணவனுக்கு லன்ச்  எடுத்துவைத்துக் காரில் கொண்டுபோய்வைத்துவிட்டு,பெண்ணுக்கு
வேண்டிய நூடில்ஸ் செய்து  ஹாட்பாக்ஸில்  வைத்து வெளியே வந்த பள்ளிப்
பஸ்ஸில் ஏற்றிவிட்டு வந்தாள்.
பெண் ஆறாம்   வகுப்புக்குப் போனதிலிருந்து தம்பிக்கு
பள்ளிக்குப் போவது சிரமமாக இருந்தது.
இவன் வேறு பள்ளி அவள் வேறு பள்ளி.
அது தினப்படி வயிற்று வலியாக  உருவெடுத்தது.:(

அம்மாவுக்கு அது புரிந்தாலும் நிஜமான வயிற்றுக் கோளாறாஆக இருக்குமோ என்ற கவலை வந்தது.
சின்னவனே  இன்னிக்கு டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கறேன் போலாமா என்றாள்.
அய்ய  அவ்ளோ வலிக்கலைமா. வெந்நீர் சாப்பிட்டதும் இப்போ  சரியாப் போச்சு. நாம ஸ்கூலுக்குப் போலாமா.
என்று உற்சாகமாகப் போகும் மகனைப் பார்த்தவண்ணம் நின்றாள்.

லன்ச் போது நான்வரட்டுமா. வயித்துவலி  இருக்குமா?
அம்மா  நோபடி கம்ஸ்  டு ஸ்கூல் . லன்ச் ரூம்ல அம்மா எல்லாம் வரக்கூடாது.
சீஸ்  டோஸ்ட் வச்சிருக்கியா.
ஆமாம். அப்ப ஐ ஆம் ஒக்கே.
என்று அம்மாவின் கைகளைப் பற்றியபடி   பள்ளியை நோக்கி விரைந்தான் சின்னவன்.

பள்ளிக் கதவுகள் திறந்திருந்தன.
தயங்கினான்.
அம்மா என்னை  என் க்ளாஸ் வரை வரை விடுகிறாயா.
கார்ரிடார் லாங்கா இருக்குமா. இட் ஃபீல்ஸ் ஸ்ட்ரேஞ்ச்.

எனக்கு அனுமதி இல்லையேடா. சரி இன்னிக்கு மட்டும் விடுகிறேன்.
வா என்ற போதே சின்னவனின் வகுப்பு டீச்சர் வந்தாள்.
"ஹை  டார்லிங்
கம் வித் மி  "என்று அழைத்துப் போய்விட்டாள்.
இப்போது அம்மாவுக்கு வயிறு கலங்குவது போல இருந்தது.
ஓ!  இந்த வெளிச்சமில்லாத வழிதான் அவனுடைய வயிற்று வலிக்குக் காரணமா.
என்ன செய்யலாம்   என்று  பள்ளியின் அடுத்தபக்கத்துக்கு வந்தாள். கண்ணாடிக கதவுகள் வழியே பார்க்கும் போது மகன் அவன் வகுப்பில் நுழைவதைப் பார்த்தாள்.
இப்பொழுது    பிரச்சினைக்கு வழி தெரிந்துவிட்டது.
அடுத்த நாள். பின்  கதவு வழியே  அவனை அழைத்துச் சென்றதும் சின்னவன் முகத்தைப் பார்க்கவேண்டுமே. ஹை அம்மா. திஸ் இஸ் பெட்டர்.
அவனது ஐந்துவயது உடல் பூராவும் சந்தோஷம்:0)
அடுத்த நாள்   வயிற்றுவலி வரவில்லை.!!!!







எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

15 comments:

sury siva said...

What a symbolic story !!
Hats Off Madam !!

வழி என்ன எனத்தெரிந்து போயின்
வலி எல்லாம் மறைந்து போமோ ?

இருப்பினும்,

வாங்கி வந்த வரமெல்லாம்
தாங்கி வந்த சுமையெல்லாம்
நீங்கும் வரை அத்திரு
வல்லிகேணியான் பாதத்தில்
வாழ் நாளும் அமர்ந்திருப்பேன்.
வெளிச்சம் வர காத்திருப்பேன்.

சுப்பு ரத்தினம்.

சாந்தி மாரியப்பன் said...

குழந்தைகளின் நுண்ணிய மன உணர்வுகள் சில சமயங்களில் நமக்குப் புரிவதில்லைதான்.

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்கு இல்லாத வெளிச்சமா சுப்பு சார்.ஆத்மபலம்,பரிசுத்தமானமனம் இரண்டும்

போதுமே.அவை உங்களீடம் நிறையவே இருக்கின்றன.

குழந்தைகளுக்கு நிறையக் கடவுள் நம்பிக்கையைக் கதைகள் வழியாக மனதில் ஏற்ற வேண்டும்.அதைத்தான் அந்தப் பையனின் அம்மாவுக்குச் சொன்னேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சாரல்.அதுவரைக்கும் அந்த அம்மாவுக்கு வழிகண்டுபிடிக்கும் அறிவு இருந்திருக்கிறது. நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

வெளிச்சம் கொடுத்த தைரியம்....

நல்ல பகிர்வும்மா....

சென்னையில் உங்களை சந்திக்க இயலவில்லை! :(

திவாண்ணா said...

பையனுக்கு "அம்மா, அங்க காரிடார் இருட்டா இருக்கு, பயமா இருக்கு" ன்னு சொல்ல முடியாததற்கு காரணம் என்ன? ஸம்திங் ராங்!

வல்லிசிம்ஹன் said...

அவனுக்குப் பயம் என்று சொல்ல முடியவ்வில்லை.எல்லா நாளும் வெளிச்சம் இருக்கும்.அவனுடைய தோழனுடன் போய்விடுவான். அவன் தோழன் பள்ளி மாறிவிட்ட்டான். இவனுக்கும் இது புது பள்ளி. இப்போது அங்கேஎ மழை நாள் வந்துவிட்டது இருட்டும் இருப்பதால் தனியாக்ப் போக பயம். எல்லா நாளும் டீச்சர்.வரமாட்டார்... இந்தப் பள்ளிக்குப் போக ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிறது நடுவில் நிறைய லீவும் வந்துவிட்டது.
இப்போது ப்ரின்சிபல் தன்னை ஸ்பெஷலாக் கவனித்தாக அளக்க ஆரம்பித்திருக்க்கிறான்:)

வல்லிசிம்ஹன் said...

தினமும் அம்மா இப்போ பின் வாசலிலேயே கொண்டு விடுகிறாள்.தம்பி வாசுதேவன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட். சென்னை வந்து போவீர்கள் என்றால் கட்டாயம் வீட்டுக்கு வரவும். நானும் தொலைபேசுகிறேன்.
அடாவடி வீட்டில நிறைய செய்வான். வெளியில் இந்த மாதிரி பயம் எல்லாம் உண்டு அந்தப் பிள்ளைக்கு.

ஸ்ரீராம். said...

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்தால் பயம் தோழர்கள் மீதா, பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள் கெடுபிடி செய்கிறார்களா என்றெல்லாம் கொஞ்சம் கவனியுங்கள்,என்று எங்கோ படித்திருக்கிறேன். இது புதிய பிரச்னைதான். உடனடியாக பிரச்னையைப் புரிந்து கொண்ட தாய்க்குப் பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு அம்மா...

நன்றி...

அப்பாதுரை said...

பிரமாதம்! 100/100.

Kanchana Radhakrishnan said...

நல்ல பகிர்வு .

கோமதி அரசு said...

குழந்தைகள் மனதை புரிந்து கொண்டால் அவர்கள் சந்தோஷ்மாய் இருப்பார்கள்.

கொஞ்சம் பொறுமை வேண்டும் தாய்க்கு.
தாய் பொறுமையுடன் புரிந்து கொண்டு உடன் நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி.

ADHI VENKAT said...

வெளிச்சம் தான் காரணமா.....

நல்ல கதைம்மா.