Blog Archive

Tuesday, June 05, 2012

வளரும் தேயும் நிலைக்கும் உறவுகள்

எப்படியெல்லாம் எடுக்க முடியுமோ அப்படியெல்லாம் நிலவம்மாவைப்பிடித்தேன்.

உண்மையாகவே நீல வானம்.
நீந்துகின்ற வெண்ணிலா
இப்படியே களங்கமே இல்லாமல்   வாழ்வும்  போனால் நன்றாகத்தான் இருக்கும்.
என் பெரியக்காவும்  இது போலத்தான் . இன்பம் வந்தால் தலைகால் தெரியாது. நானும் தெரிய மாட்டேன்.
சிறிது ஏறுக்கு மாறாக ஏதாவது காதில் விழுந்தால் புலம்புவாளோ அப்படிப் புலம்புவாள்.
எஸ்டிடி  போட்டுப் புலம்புவாள்.

உனக்கென்ன என்று ஆரம்பித்தால் தெரிந்துவிடும். ஏதாவது தகறாரு
மாமியாருடன்   என்று,
நான் என்ன செய்யட்டும். என் மாமியாரும் எண்பது தொண்ணூறு வயது இருந்தால் நானும் சந்தோஷம்தான் பட்டிருப்பேன்.
அருமையான  மனுஷி.

இவள் இந்த  லக்ஷ்மி இருக்கிறாளே, அப்பா  செல்லம். 
வரைந்த சித்திரம் போல அழகு. 
பதினெட்டு வயதிலியே கண்கள் நாலும் பேசும்.
மதுரை   வசந்தநகர்  வீட்டுக்கு யாராவது ஏதாவது காரணத்தைக் கொண்டு வருவார்கள் போவார்கள்.
பாதி நபர்களுக்குச் சின்னம்மாவைப் பார்ப்பதுதான். வேலை. இவளும் ஊஞ்சலை விட்டு நகராமல்,நீண்ட கூந்தலைப் பின்னித் தளர்த்தி
இந்தக் கையில் ஜயகாந்தன் புத்தகம் வைத்துக் கொண்டு  அசையும் ஓவியமாய்க் காட்சி தருவாள்:)
அப்பா   சீதாலக்ஷ்மி மில்லில் நல்ல வேலையில் இருந்தார்.
எப்பவாவது  நம்  வீடு வழியாகப் போகும்போது   லக்ஷ்மியை இற்க்கிவிட்டுப் போவார்.
சாயந்திரம்    வரை கதை அளந்துவிட்டுப் புதிதாகக் கற்றுக் கொண்ட எம்ப்ராய்டரிக் கலையில் பட்டாம்பூச்சியையை ஏற்றிய  
துணியைத் தைக்க தயார் செய்வோம்.

ஒருநாள்   காலையில் பெரியப்பா வந்தார்.
லக்ஷ்மிக்குப்  பரோடாவிலிருந்து வரன் வந்திருக்கிறது. அவர்களும் 
மதுரைக்காரர்கள் தானாம்.

மாப்பிள்ளை மானேஜர் வேலையில் இருக்கிறார் வசதியான  குடும்பம்.
இவர் ஒரே    பையந்தான். படமும் அனுப்பி இருக்கிறார்கள் .
நல்ல உயரம் , சேப்பா நன்றாக இருக்கிறார்.
உன் மனைவி கலர் இருப்பார்' என்றதும் அப்பா சிரித்துக் கொண்டார்.
அம்மா  உள்ளே  டப்பென்று எதையோ   வைக்கிற சத்தம் கேட்டது.:)

அப்பா  படத்தைப் பார்த்துவிட்டு, நல்லதாப் போச்சு   கோவிந்தா,
லக்ஷ்மியைக் கேட்டியா,அவள் சம்மதம் இல்லாமல் செய்யாதே
என்றார்.
அதெல்லாம் நேற்றே  ஆச்சு.
அவளுக்கு எப்படியாவது இந்த மதுரையைவிட்டுப் போனால் போதும் என்றிருக்கு, அவள் அம்மாவுக்குத்தான் இவ்வளவு தூரத்துக்குப் பெண்ணை அனுப்பணுமே.அடிக்கடி  பார்க்க முடியாதே. உன் பெண்ணாவது இங்கே புதுக்கோட்டையில் இருக்கிறாள்.

இதோ கல்யாணமாகி ஆறு மாதத்தில் கருவும் தரித்தாச்சு.
மாப்பிள்ளையும் வாராவாரம் மோட்டார்சைக்கிளில் வந்துவிடுகிறார் பார்க்க. 

நாங்கள் அப்படி செய்ய முடியாதே   என்று ஜானகி
கவலைப் படுகிறாள்  என்று முடித்தார் பெரியப்பா.

இது நடந்தது ஒரு ஆவணியில். அதற்குள் எங்அளுக்குச் சேலம்  மாற்றம் கிடைத்துப் போய்விட்டோம். திருமணத்துக்கு வரமுடியவில்லை.
சென்னையில் எங்களுக்குச் சீமந்தம் முடிந்த அம்மா கையோடு என்னை மதுரைக்கு அழைத்துவந்துவிட்டார்.
அதற்குள்  லக்ஷ்மி  திருமணம் முடிந்து பரோடா போயிருந்தாள். அம்மா
அந்தக் கல்யாணப் பெருமைகளைச் சொல்லி முடிக்க ஒரு நாள் எடுத்துக் கொண்டார்.!!

எனக்குத்தான் கதை கேட்கப் பிடிக்குமே,பிரசவத்துக்குத் துணயாக வந்திருந்த பெரிய பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
பெரிய  பாட்டி  என் கல்யாணத்தையும் அவள் கல்யாணத்தையும்
ஒத்து நோக்கிக் கொண்டே, 
பாப்பா    உனக்கும்  உங்க ஆத்துக்காரருக்கும் சாம்ர்த்தியம் போதாது போ.
அவனைப் பார்த்தியா. ஊர்ப் பெரிய மனுஷாளையெல்லாம் கூப்பிட்டு  
பந்தல் நிறையப் பரிசாக அடுக்கிவைத்திருந்தான் பார்,

மதுரை ஜங்க்ஷனே கொள்ளாமல்   வண்டிகள், ஃபர்ஸ்ட்    க்ளாஸ்
குப்பியாமே  அதில் இவா மட்டும் போகிறமாதிரி

ஏற்பாடு. மாமியார் மாம்னார் தனியா ஃஃபர்ஸ்ட் க்ளாஸில் போனார்கள்
என்றதும் எனக்குச்  சிரிப்புத் தாங்கவில்லை.
பெரியம்மா அது குப்பி இல்லை  கூபே. இரண்டு பேர் மட்டு போகக் கூடிய ஃபர்ஸ்ட் க்ளாஸ்  .தேன்நிலவுத் தம்பதிகள் இல்லியா 
என்று குறும்பாக முடித்தேன்.

என்னவோடிம்மா.நாங்கள் எல்லாம்  ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் பார்க்கவே நாலு மாசம் ஆகும்;''

ஆமாம் அதுக்குள் பாப்பா மட்டும்    சீக்கிரம் வந்துடும் என்று சிரித்த என்னை அம்மா அடக்கினாள். வாயாடாதே.
இல்லம்மா இப்பா எல்லாம் மாறியாச்சு. நம்ம லக்ஷ்மி சந்தோஷமா இருக்கட்டும்.  
அவர், அவளோட கணவர் எப்படி இருந்தார்.கலகலப்பா  இல்லைன்னா வேற மாதிரியா  என்று கேட்டேன்.வம்பு வேண்டாமா:)
அய்யோ  அதையேன் கேட்கறே. அவர் சிரிச்சே நான் பார்க்கலைடிம்மா.

நம்ம லக்ஷ்மி குணத்துக்கும் அவர் குணத்துக்கும் ஒத்து வருமோ என்று யோசனையில் ஆழ்ந்தாள் பெரியபாட்டி
கன்னத்தில் கைவைத்தபடி.
என்ன இருந்தலும் நம்மகத்து மாப்பிள்ளை போல வராது.
என்று  பெருமிதப் பட்டுக் கொண்டாள். அதற்குள் 
போஸ்ட்  வரவே அவசரமாக எழுந்த என்னை,
அமர்த்தியபடியே அம்மா போய்   வாங்கி வந்து கொடுத்தாள். தினம் எழுத என்ன இருக்கிறது உங்கள்  இரண்டு பேருக்கும்  
என்று  பரிகாசம் செய்தபடி  உள்ளே சென்றாள் அம்மா.

தொடரும்.
கதையின் மறுபாகம் உடனே வந்தாலும் வரும். இல்லை    ,நாட்களானாலும் ஆகும்.
விருந்தாளிங்க வராங்கப்பா.:)



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

22 comments:

சசிகலா said...

இப்படியே களங்கமே இல்லாமல் வாழ்வும் போனால் நன்றாகத்தான் இருக்கும். முதல் வரியே முழுக்க படிக்கும் ஆவலை தூண்டுகிறது தொடருங்கள் காத்திருக்கிறேன் .

Unknown said...

ஏன் அம்மா சுவராஸ்யமான பகுதியில் நிறுத்திவிட்டு ஆவலை தூண்டுகிறிர்கள அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

நன்றி சசி கலா.
இன்று இரவுக்குள் முடிந்தால் எழுதிவிடுகிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் இந்திரா.
ஓஹோ சுவாரஸ்யமா இருக்கா. எழுதிடலாம். இரவுதான் பெண்ணூம் அவள் குழந்தைகளும் வருகிறார்கள்.அதற்குள் முடிந்தால் எழுதிவிடுகிறேன்.

ஸ்ரீராம். said...

தொடர்வதற்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழி...?! எதிரில் அமர்ந்து கதை கேட்பது போலச் சொல்கிறீர்கள்.

சாந்தி மாரியப்பன் said...

காத்திருக்கோம்.. தொடருங்கள் வல்லிம்மா:-)

//தினம் எழுத என்ன இருக்கிறது உங்கள் இரண்டு பேருக்கும் என்று பரிகாசம் செய்தபடி உள்ளே சென்றாள் அம்மா//

உங்க புண்ணியத்தால் தபால் துறைக்கு நல்ல வருமானம்.. இல்லையா வல்லிம்மா ;-)

Unknown said...

நானும் ஒருவாரம் விடுமுறை முடிந்ததும் தொடர்கிறேன் அம்மா மகள் மற்றும் பேரகுழந்தைகளுடன் ஆனந்தமாக விடுமுறையை கொண்டாடுங்கள் அம்மா

திவாண்ணா said...

//என்ன இருந்தலும் நம்மகத்து மாப்பிள்ளை போல வராது//
:-)))
உம் அப்புறம்?

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நாளாவே கேக்கணும்ன்னு இருந்தேன் வல்லிம்மா..

உங்க பதிவில் மின்னிட்டிருந்த "நாச்சியார்"ங்கற பேரைக்காணலையே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
எங்க குழந்தைகளும் இப்படித்தான் கேட்கும்:0ஜனதா எக்ஸ்ப்ரஸ்,ஜிடி எக்ஸ்ப்ரஸ் இதெல்லாம் லேட்டா வரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்ப அயல் நாட்டு விமானமே ஒரு நாள் கழித்து வருகிறது. பாவம் குழந்தைகள் அலுத்துக் களைத்து வரப் போகிறார்கள்.:(

வல்லிசிம்ஹன் said...

உங்கள் வாய்க்குச் சர்க்கரை குழந்தைகள் வந்தவுடனே போட்டுவிடுகிறேன் இந்திராமா:)

வல்லிசிம்ஹன் said...

அய்ய,அதை ஏன் கேட்கறீங்க சாரல்.
இவர் எழுதுவதும் ,அதை அப்பா சத்தம் போடாமல் என்னிடம் கொடுப்பதும்.
அதற்குள் தபால்கார யாராவது பார்த்துவிட்டால் மாப்பிள்ளை கடிதாசி என்று அம்மாவிடம் நீட்டுவதும் தினம் நடக்கும் அமர்க்களம்.:)நல்ல வருமானம்தான் தபால் துறைக்கு.!!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தம்பி வாசுதேவன்,. இந்தப் பாட்டிகளுக்கெல்லாம் மருமகள் மேல பாசம் உண்டோ இல்லையோ, மாப்பிள்ளை மேல் தனிப்பாசம்தான்:)
இதோ வரேன் . எழுதப் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

சாரல் நாச்சியார் இல்லைங்கறதையே மறந்துவிட்டிருந்தேன். இப்பப் போட்டுவிட்டேன். பெயரில்லாத குழந்தையா:)
மிக மிக நன்றிமா.

வெங்கட் நாகராஜ் said...

சுவாரசியமாகத் தொடங்கி அழகாய் வரும்போது அடுத்த பகுதியில், அதுவும் எப்ப வரும்னு தெரியாதுன்னு படிச்ச உடனே கஷ்டம்....

சீக்கிரமா எழுதுங்க வல்லிம்மா சரியா... காத்திருக்கிறோம்....

நிரஞ்சனா said...

ஆஹா... உங்களோட எழுத்து எங்கம்மா பக்கத்துல உக்காந்து கதை சொல்ற மாதிரி அவ்வளவு நேச்சுரலா இருக்கும்மா. தொடரும் பகுதிக்கு ஆவலோட வெயி்ட்டிங் மீ! (அதென்ன... லக்ஷ்மிக்கு நான்கு கண்ணும் பேசுமா? எப்படி? ரெண்டுதானே எல்லாருக்கும்?)

வல்லிசிம்ஹன் said...

அது தெரியாதா இந்தக் காலத்துப் பொண்ணுக்கு.நிரூமா, எட்டு கண்ணும் விட்டடிக்கிறதுன்னு கேள்விப்பட்டிருக்கிறீயா. அது மாதிரிதான் கண்ணு நாலும் பேசும் என்றால்,நாலு விதமாகப் பேசும்னு அர்த்தம். நாலு கண்ணிருந்தா யார் கல்யாணம் பண்ணிப்பாங்கம்மா:)

வல்லிசிம்ஹன் said...

எழுதறேன் வெங்கட். நடுல ஒரு குட்டித் தடங்கள். மீறி எழுதணும் .சரியா:)நன்றிமா.

திண்டுக்கல் தனபாலன் said...

காத்திருக்கோம்.. தொடருங்கள் ! நன்றி !

ராமலக்ஷ்மி said...

அழகாக சொல்லிச் சென்று நிறுத்தியிருக்கிறீர்கள். நிலவைப் போல ஒளிரும் நினைவுகள்!

கோமதி அரசு said...

அழகான நினைவலைகள்.
கடிதம் தானே அப்போது எல்லாம். இப்போது என்றால் தினம் செல் சிணுங்கும்.

வல்லிசிம்ஹன் said...

@GomathyARASU,

எல்லோரும் என்றும் வளமுடன் வாழ வேண்டும். இறைவன் நம் பக்கம் நின்று காக்க வேண்டும்.
உண்மைதான் கோமதி.
:)))))