Blog Archive

Saturday, February 04, 2012

அன்றொரு நாள் இதே பகலில்....

அறிவிப்பு ...இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது.

**********************************************************************

இந்தப் பதிவுக்குக் காரணம் திருமதி கீதா சாம்பசிவமும், தம்பி வாசுதேவனும்  தான்.
இன்னோரு காரணம்  நம்ம திருமதி பக்கங்களின்  கோமதி அரசுவுக்கும்  இதே
தைமாதம் 7 ஆம் தேதி திருமணநாள்.
அன்பும் அறனும் மிக்க நல் வாழ்வு வாழும் இந்த அருமை தம்பதியருக்கு நம்  இனிய மணநாள் வாழ்த்துகளைச் சொல்லி
ஆசிகளையும்   அனுப்புகிறோம்.சிங்கம் &  மிஸஸ் சிங்கம்..


**********************************************************************************************

.

எப்பவும் ஸ்கூல்பசங்களோட லீவு ஒட்டியே முன்னாளில் கல்யாணங்கள் நடக்கும். நாத்தனார் முடிச்சு போட வரணும்னால் அவங்க குழந்தைகளுக்கு லீவ் விட்டாத்தான் வரமுடியும்.

அதால கூட இருக்கலாம்.இப்பத்திக் கல்யாணம் மாதிரி இல்லையே.

வீட்டுக்கு முன்னாடி பந்தல். பந்தக் கால்போட்ட அன்னிலேருந்தே உற்சாகம் கிளம்பிடும்.

வண்டியில் வந்திருங்கும் கீற்றுகள்,வாழைமரம்,சரம் கட்டிவிடும் பழங்கள்

விதானம் கட்டும் துணி எல்லாமே ஒரே த்ரில்லிங்காக இருக்கும்.

வாசனை,பஜ்ஜி,பட்சண வகையறா செய்யப் போட்டக் கோட்டை அடுப்பு.பிரமாதமான சூழ்நிலை.

மருதாணி இட ஒரு நாள். அக்கம்பக்கம் இருக்கும் பெண்கள் முற்றுகையிட்டுவிடுவார்கள். பகல் மருதாணி,இரவு மருதாணி என்று எல்லோரும் பறித்துக் கொண்டுவந்த இலைகளை அம்மியில் வைத்து,பாக்குகளைஅதில் பொடித்துப் போட்டு,துளி எலுமிச்சஞ்சாறு பிழிந்து

ம்ம்ம் மருதாணிக்கே உண்டான ஸ்பெஷல் வாசனை வீட்டை நிரப்பும்.

அந்த மாமி,இந்த அத்தை,பாட்டிகள் குழுமிவிடுவார்கள்.

சின்னப் பெண்களிலிருந்து,பையன்கள் ,முதிர்ந்தவர்கள் எல்லோரும் கைகளில் மருதாணி இட்டுக் கொண்டுதிரியும் அழகு தனி.

மருதாணி இட்ட கைகள் காயும் வரை

அடுத்தவர்கள்,(சில பேருக்கு மருதாணி அலர்ஜி அப்பவே உண்டு) உதவி

சகல விஷயத்துக்கும் தேவைப்படும்.

இவ்வளவு நினைவும் வரக்காரணம் இந்த அனிவர்சரிப் பதிவுகள்தான்.

அப்படியே போற போக்கில எங்க கல்யாணம் நிச்சயமான கதையையும் சொல்லலாமே என்று தோன்றியது:-)

*******************************************************

மதுரையின் அருகே பசுமலை என்கிற ஊர் .அப்போது...41 வருடங்களுக்கு முன்னால் வயல்கள் ஒரு பத்துப் பதினைந்து புதிதாகக்கட்டிய வீடுகள் மெயின் ஹைவே(மதுரை/திருமங்கலம் சாலை)யை ஒட்டித்

இருந்தன.(பசுமலை பைக்காராவுக்கும் திருப்பரங்குன்றத்துக்கும்

இடையில் இருக்கும்.)

அவைகளில் ஒன்று தபால் அலுவலகம். இப்போதும் அங்கேயே தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.அப்பா போஸ்ட்மாஸ்டர்.நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஊர் மாறிக்கொண்டே இருப்போம்.

அப்படி வந்த இடம் பசுமலை.ஏற்கனவே பழங்காநத்தம்

இடத்தில் பாட்டியும் தாத்தாவும் இருந்ததால் மதுரை பழகின இடமாயிருந்தாலும் அப்பா என்னைத் தனியே அனுப்பமாட்டார்.

கொசுறு மாதிரி சின்னத் தம்பி கூட வந்தால், நான் போகலாம் .டவுன் என்று அழைக்கப் படும்

செண்ட்ரல் பஸ்ஸ்டாண்டைச் சுற்றியுள்ள உறவினர்களைப் பார்த்துப் பேசிவரச் சொல்லுவார்,.

அவனும் பெரிய மனது பண்ணி,தன் (சேதுபதி உயர்னிலைப்பள்ளிக்குப் ) போவதற்கு முன்னால்,என்னை எங்கள் சித்தப்பா வீட்டில் (சந்தைப்பேட்டை)விட்டு விட்டுப் போவான்.

இப்போது நினைத்தால் சிரிப்பக இருக்கிறது. அப்பொது சுதந்திரம் பறிபோன மாதிரி இருப்பேன்.

என்ன இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் தங்கிக் கல்லூரிக்குப்

போய்வந்து விட்டேன்,எனக்கு இந்த அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்

போய்வரத் தெரியாதா என்று தோன்றும்.

கேட்க முடியுமா??

அத்தனை பயப்பட்டு இருக்க வேண்டாம்.

அதுபோல ஒரு தடவை டவுனு பக்கம் போனபோது சின்னப்பாட்டி வீட்டுக்குப் போனொம்.

அங்க வந்த தபால்களைப் படித்துக் காண்பிக்க ,மற்றும் அவங்களுக்கு வேணும் என்கிற ஏவல்கள் ,வேலைகள் எல்லாம் செய்து முடிக்கணும்.இதெல்லாம் நாமா எடுத்துச் செய்கிற வேலைகள்.

அப்படி வந்த ஒரு கடிதத்தில் நான் இது வரை கண்ணால் கூடப் பார்த்திராத

ஒரு அத்தை, ''தன் உயரமான சிவப்பான 26 வயசு ஆன பையனுக்கு

ஒரு ஒல்லியான, உயரமான,சிவப்பான,அழகான (!!!!)

பெண் யாராவது இருந்தால் பார்த்து எழுதவும் .ஜாதகம் அனுப்புகிறேன்

என்று எழுதி இருந்தார். எனக்கும் எங்க சித்தப்பா மகளுக்கும்

தாங்க முடியாத வம்பு பிடித்துக்கொண்டது.

" அதென்ன பேச்சு.ஏன் கொஞ்சம் அழகு குறஞ்சா கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களோ. இவங்க எல்லாம் மன்மத ஜாதியோ "என்றெல்லாம் பேசி அந்தப் பாட்டியை உண்டு இல்லைனு செய்துட்டோம்.

அவங்க அசரவில்லை.

ஏன் நீங்க தான் ரெண்டு பேரு மாமா பெண்ணுங்க இருக்கீங்களே

இவ்வளவு பேசறவங்க பதில் கடிதம் எழுதுங்களேன்னு சொல்ல,

உடனே பேனாவை எடுத்தது நான்தான்..

அன்புள்ள கமலாவுக்கு,(அத்தைன்னா போட முடியும்..விஷயம் தெரிந்து போயிடுமே)

இப்பவும் உன் கடுதாசி பார்த்து சந்தோஷம்.உன் பையனுக்கு ஏத்தமாதிரி

இங்கே உன் பெரியப்பாவின் பேத்தி ஸோ அண்ட் ஸோ

இருக்கிறாள்.

சிவப்பிலேயும் சிவப்பு .

உயரத்திலேயும் உயரம்.

கிளி போல அழகு.(:))நீ ஜாதகத்தை அனுப்பு. நான்

கோபாலன் கிட்டப் பேசிக்கறேன்.

இப்படிக்கு,

ஆசீர்வாதங்களுடன்

அம்முச் சித்தி.

இப்படி ஒரு கடிதம் அழகான கையெழுத்தில் உருவாகிப் பாட்டிக்கு வாசிக்கப்பட்டது.

நான் இந்த ஆட்டைக்கு வரலப்பானு தங்கை விலகிக் கொண்டாள்.

இதில வந்த வர்ணனைகள் நான் படித்த கதைகளிலிருந்தும்

எங்க பாட்டி அவ்வப்போது பேசும் பேச்சுகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை.

பாட்டிக்கு சிரிப்பு ஒருபக்கம். என் அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் வேறு.

அதைப் பார்த்துவிட்டு நான் அவங்களைச் சமாதானப் படுத்தி

இதுக்கெல்லாம் பதிலே வராது என்று சொல்லி அடுத்த நிமிடம்

மறந்தும் விட்டேன்.

அதைவிட அப்போது வெளிவர இருந்த அடிமைப்பெண் திரைப்படம்,

எங்க வயசே இருக்கும் ஒரு பெண் நடிக்க வருவது பற்றிப் பேச்சு

என்று போய் விட்டது பொழுது.

பிறகு நடந்தது இன்னும் சுவாரசியம்.

நாளைக்குப் பார்க்கலாம்:-)

எல்லோரும் வாழ வேண்டும்.

இந்தப் பதிவு வெளிவர நேரம் மணநாள் காணும் எல்லோருக்கும்,காணப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கடிதம் எழுதிவிட்டு தம்பியோடு அதே அஞ்சாம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்கு வந்து ரேடியோல பாட்டுக் கேட்டு,

என்ன ஏது என்று விசாரித்த பெற்றோரிடமும் எல்லார் நலங்களையும் சொல்லிவிட்டுப் படுக்கவும் செய்தாச்சு.

திடீரென்று மன உறுத்தல்.என்னடா ஏதாவது தப்பு செய்துட்டோமோ.

சாமி கடவுளே அந்தத் தபால் போகாம செய்திடேன் .

என்னவோ பிரார்த்தனை.

அது எப்படி நடக்கும்,நாமதான் போஸ்ட்மாஸ்டர் பொண்ணு.

சுத்தமா அட்ரஸ் எழுதி, ஐம்பது பைசா ஸ்டாம்பும் ஒட்டி

சந்தைப்பேட்டை தபாலாபீஸில் போய்ப் போடவும் போட்டாச்சு.இத்தனை நேரம் மெயில் பையில் திருனெல்வேலி எக்ஸ்ப்ரசில்

அது போய்க் கொண்டு இருக்கும்.

முகந்தெரியாத அத்தைக்குக் கடிதம்.

நமக்குக் கல்யாணத்தைப் பத்தி என்ன தெரியும்.

சிவாஜி,சரோஜாதேவி

ஜெமினி சாவித்திரி

பத்மினி எம்ஜீயார் பாடற டூயட் தெரியும்.

ஆளு யாருனு கூடத் தெரியாதே .பேரும் கேள்விப்படாத ஒரு பேரு.

அவஸ்தைடா கடவுளேனு தூங்கியும் போயாச்சு.

இரண்டு நாள் கழித்து எங்க அப்பா ஒரு பதினோரு மணிவாக்கில் வீட்டுக்குள் நுழைந்தார்.

சாவகாசமாக ஈசிசேரில் சாய்ந்துகொண்டு சேவற்கொடியோனின்தொடர் கதைபடித்துக்கொண்டிருந்த என்னை

ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையல் உள்ளுக்குப் போய்விட்டார்.

அப்பாவுக்கு இன்னிக்கு சீக்கிரமே பசித்துவிட்டது போலிருக்கே !என்று நினைத்தபடி மறுபடியும் ஆ.வி.யில் மூழ்கிவிட்டேன்.

கசமுச என்று பேச்சு.

இரண்டு பேருமாக வெளியே வந்தார்கள்.

அப்பா முகம் படுசீரியசாக இருந்தது.

அன்னிக்கு சித்தி வீட்டில என்ன நடந்ததுனு மெதுவாகத்தான் கேட்டார்.

சட்டுனு கடிதம் ஞாபகம் வர, ''இல்லைப்பா'',என்று ஆரம்பித்த என்னை அம்மா முறைக்க,எனக்குப் பேச்சு வரவில்லை.

''அத்தை கிட்டேயிருந்து அப்பாவுக்கு லெட்டர் வந்து இருக்கு. அப்பா பேரில எழுதினயா ஏதாவது.''

நான் மென்று முழுங்குவதைப் பார்த்த அப்பாவுக்கு

மனசு வரவில்லை.

''ஏம்மா அப்படி எழுதின.திஸ் இஸ் சம்திங் சீரியஸ்''.

என்று பேச ஆரம்பிக்க.

இவளைத் தனியா அங்கே அனுப்பினதே தப்பு. வாயை வச்சுண்டு சும்மா இருந்ததா பாரேன்.பதினேழு வயசுக்கு உண்டான விவரம் வேண்டாம்???????

என்று அம்மா வருத்தப்பட ,

சரி சரி முதல் முதல்ல மஞ்சள் தடவிக் கடிதம் வந்து இருக்கு.

தம்பிகிட்டப் பேசிட்டு மற்றதைப் பார்க்கலாம்..

என்று அப்பா திரும்பிப் போய்விட்டார்.

அம்மாவும் ஏதோ பெரிய பாரம் ஏற்றிவிட்டது போல யோசனையுடன் படுத்துக் கொண்டுவிட்டார்.

சுவற்றுக்கு அப்பால் , போனில் சித்தப்பாவுடன் அப்பா பேசுவது கேட்டது.

சொல்ல மறந்துவிட்டேன்.

போஸ்ட் ஆஃபீசும் வீடும் சேர்ந்துதான் இருக்கும்.கதவைத் திறந்து அடுத்தாற்போல் கார்ட் வாங்கலாம்,போன் பேசலாம்.

மகா சௌகரியம்:-)

மெதுவாக எழுந்து அப்பா வைத்துவிட்டுப் போன கடிதத்தைப் படித்துப் பார்த்தேன் ."அன்புள்ள,.....

சித்தி எழுதின கடிததிலிருந்த கல்யாண வயதில் உனக்குப் பெண் இருப்பது தெரிய வந்தது.

படிப்பைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

கல்யாணம் ஆனபிறகு இங்கெ சென்னையில் தங்கி அவள் மேலே

டிகிரிக்குப் படிக்கலாம்.

அக்கா கணவரிடம் என் பையன் ஜாதகம் கொடுக்கிறேன்.

அவர் மதுரைக்கு நாளைக்கு வருகிறார். எல்லாம் சுபமாக முடியும். தையில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்."

இதுதான் சாரம்.

அப்பா என் திருமணத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.தயாராகவும் இல்லை.

பெரிய அதிர்ச்சியாகத்தான் இந்தக் கடிதம் இருந்திருக்கும் என்பது என்னுடைய சின்னமூளைக்குகூடத் தெரிந்தது.

அடுத்த நாள் சொன்னதுபோல வந்துவிட்டார் இன்னொரு அத்தை வீட்டுக்காரர்.

தானே எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டதாகவும்

இதைவிடப் பொருத்தமான வரன் கிடைக்காது என்றும் பையன் 400ரூபாய் சம்பளத்தில் ...கம்பனியில் அசிஸ்டண்ட் மேனஜர் ஆக இருப்பதாகவும்

சொல்லச் சொல்ல ஒரு மாதிரி வடிவம் உருப்பெற்றது.

எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை அஸிஸ்டண்ட் மானேஜர்.!!!!

ஏனெனில் காதலிக்க நேரமில்லை படத்தில் அந்த நாளைய கதாநாயகன்

ரவிச்சந்திரன் அந்த வேலையில் இருப்பார்.

உங்களால் நம்பக் கூட முடியாது எங்களின் வெகுளித்தனத்தை.:)

கடிதங்கள் பறந்தன.ரகசிய விசாரணைகள் நடந்தன.

ஐப்பசியில் பெண்பார்க்கலாம் என்று முடிவாகியது.

தொடரும் அதிசயங்கள் :)

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

24 comments:

கோமதி அரசு said...

உங்களால் நம்பக் கூட முடியாது எங்களின் வெகுளித்தனத்தை.:)//

ஆஹா! உங்களின் வெகுளித்தனம் அருமையான மாப்பிள்ளையை அடைய செய்து விட்டதே!

கமலா அத்தையின் பிள்ளை தானே உங்கள் கணவர்!

உங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் .

எனக்கு(எங்களுக்கு)( தை மாதம் தான் எங்களுக்கும் திருமணம்) 7ம் தேதி திருமண நாள் வருகிறது. உங்களின் வாழ்த்தை விரும்பும் தங்கை கோமதி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தங்கை கோமதி. காலம் கூடினால் கடிமணமும் புரிவார் என்பதே நமக்குத் தெரிந்ததுதானே. ஒரு வெள்ளம் போல ,வந்து மணமும் நடந்தேறியது.யாராலும் நிறுத்த முடியவில்லை.
வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லி உங்கள் இல்லறமும்செழிக்க இறைவனைப் பிராத்திக்கிறேன்.

geethasmbsvm6 said...

:)))))))))))

geethasmbsvm6 said...

ninaichen. :D

geethasmbsvm6 said...

alukkatha pathivu.

ராமலக்ஷ்மி said...

ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம்:)! அழகாக அதை எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

கோமதிம்மாவுக்கு அரசு சாருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமோ சுவாரஸ்யம்.
கோமதி அரசு தம்பதியர்க்கும் எங்கள் வாழ்த்துகள்.

geethasmbsvm6 said...

அட?? அவசரத்தில் கோமதி அரசுக்கும் திருமண நாள் என்பதைக் கவனிக்க மறந்தேன். கோமதி அரசுக்கும், திரு அரசுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள், எங்கள் இருவரிடம் இருந்தும். நாளைக்கு அவங்க பதிவிலேயும் போய்ச் சொல்லிடறேன். இப்போத் தூக்கம் வந்தாச்சு. டாக்டர் கிட்டோட ரெடியா நிக்கிறார் பக்கத்திலே. :))))))

வெங்கட் நாகராஜ் said...

சுவாரசியமான விஷயங்களை அழகாய் எழுதி இருக்கீங்கம்மா....

திருமண நாள் வாழ்த்துகள் அம்மா... நீங்கள் இருவரும் நீடுழி நல்ல உடல்நலத்தோடும், எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.....

வெங்கட்
ஆதி வெங்கட்.

ஸ்ரீராம். said...

geethasmbsvm6 said...

//ninaichen D//

ஓ...ஸ்மைலியா....!! ரொம்ப நெருக்கம் என்பதால் டீ போட்டு பேசுகிறார் என்று நினைத்தேன்!!! (நாராயண...நாராயண...)

கௌதமன் said...

இனிய, மணநாள் வாழ்த்துகள். இந்த நாள், இன்னும் நூறு முறை வருவதற்கும் எங்கள் வாழ்த்துகள்.

திவாண்ணா said...

மலரும் நினைவுகள் மாதிரி மலரும் போஸ்டுகள் போல இருக்கு!
திருப்பி படிச்சாலும் சுவாரசியமா இருக்கு!
நல்ல கூத்து!
:-)))

திண்டுக்கல் தனபாலன் said...

திருமண நாள் வாழ்த்துக்கள் ! பிரமாதமாக எழுதி உள்ளீர்கள் ! நன்றி அம்மா !

ஹுஸைனம்மா said...

முன்பே வாசித்திருந்தாலும், அலுக்காத மலரும் நினைவுகள்!!

கோமதி அரசு said...

திருமணநாள் வாழ்த்து சொன்ன ராமலக்ஷ்மி, ஸ்ரீராம் , கீதாசாம்பசிவம் எல்லோருக்கும் நன்றிகள்.

உங்கள் வாழ்த்துக்கும் நன்றி அக்கா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதாம்மா.
நன்றி ராமலக்ஷ்மி.கனிவோடு தொடர்வதற்கு.
ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீராம்.அலுக்காத ஞாபகங்கள்.

ஓஹோ!!டி!! நன்றாகத்தான் இருக்கு ஸ்ரீராம்:)நெருக்கம் அதிகமானால் டி வரும். ஆனால் இந்தவயசில் அப்படி வருமான்னு தெரியல:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி.உங்கள் பெயர் ஆதி வெங்கட் டா??

geethasmbsvm6 said...

ஓ...ஸ்மைலியா....!! ரொம்ப நெருக்கம் என்பதால் டீ போட்டு பேசுகிறார் என்று நினைத்தேன்!!! (நாராயண...நாராயண...)//

வாங்க, வாங்க ஶ்ரீராம், நீங்களும் ஜோதியிலே ஐக்கியமாகியாச்சா?? அதெல்லாம் எதுக்கும் அசர மாட்டோமாக்கும். :P :P

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தம்பி வாசுதேவன்.

மனத்தில் எழும் அலைகள் ஓய்வதில்லை. சிலசமயம் பழைய நினைவுகள் சற்றே நிலைப் படுத்துகின்றன.

வல்லிசிம்ஹன் said...

வர்ணும் கௌதமன், ரொம்ப ரொம்ப நன்றிமா.எத்தனை நன்றாக இருக்கிறது. இது போல வார்த்தைகளைக் கேட்க.

வல்லிசிம்ஹன் said...

ரசித்ததற்கு மிகமிக நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

கவனம் வைத்து மீண்டும் படித்துப் பின்னூட்டமும் இடுவதற்கு நன்றி ஹுசைனம்மா.
தமிழ்மணத்தில் அளிக்கத் தான் சிரமம்.எல்லோருக்கும் இந்தத் தொந்தரவு இருப்பதாக அறிகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

//அன்பு வெங்கட் வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி.உங்கள் பெயர் ஆதி வெங்கட் டா??//

என் பெயர் வெங்கட் தான்... ஆதி என் இல்லத்தரசி... :) அவரும் வலைப்பூவில் எழுதிக் கொண்டு இருக்கிறார்.

www.kovai2delhi.blogspot.in என்பது அவரது வலைப்பூ முகவரி...

மாதேவி said...

அன்றொருநாள்....:)) அருமை.
இனிய வாழ்த்துக்கள்.