Blog Archive

Sunday, October 30, 2011

பிசையோ வலியோ தெரபி:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

கால் புராணம்
1998  ஒரு தரம். 2000 ஒரு  தரம். அப்புறம்  கணக்கு மறந்துவிட்டது.
அநேகமாக எக்ஸ் ரே எடுக்கப்பட்டது காலும் பாதமும் தான்.

ஏது இந்த அம்மா இன்னும் வரலையே நாலு மாசங்கள் போய் விட்டதே
என்று அப்போதைய
  தேவகியும் இப்போதைய மீனாட்சி  ஆசுபத்திரி  எமர்ஜென்சி
நர்ஸ் நினைச்சிருப்பாங்க,.

மண்ணோ, கல்லோ, தண்ணீரோ  எதுவாயிருந்தாலும்
ஆக்ஷேபனையே இல்லை. தடுக்குமா தடுக்காதா என்று என் கால்கள் தேடும்.
தடுக்கி விழுந்தால்  வலி வராமல் இருக்குமா. இல்லை வைத்தியருக்குக்
கொடுக்கவேண்டியதைக் கொடுக்காமல்தான் சரியாகப் போகுமா.

முதல் தடவை விழுந்தபோதே  வைத்தியர் சொன்னது  , முதுகெலும்பு தேய்ந்து
உதிருவது போல இருக்கு.
கால்ஷியம் மாத்திரை எடு.  உடல் எடையைக் குறைத்துவிடு.
உடல் தானே  சமநிலைப் பட்டுவிடும் என்றார்.

அதற்காக அகஸ்தியர் மாதிரி இமயம் முதல் பொதிகை வரை நட க்க
என்னால்  முடியுமா.:)
அவ்வப் பொழுது விழுவதும் எழுவதும் கால்கட்டு போடுவதும்
வழக்கமாக ப்  போதும்,  ஆறு மாதங்கள் முன்னால்   காலில் பட்ட  அடி
வலி குறையவே இல்லை.

சரிசெய்தே ஆகவேண்டிய நிலையில்   எலும்பு  வைத்தியரிடம் போய்
வந்து ஒரு வாரம் ஓடிவீட்டது.
டாக்டரின் உதவியாளினி  என் காலில் ஒரு அங்குலம் கூட விடவில்லை.

இரண்டுகைகளினாலும்    அழுத்தி இத்தனை நாட்களாக எனக்குத் தெரியாமல் இருந்த தசைநார்கள், செல்லணுக்கள்  எல்லாவற்றையும் வன்மையாக ச்  சிறந்த  முறையில்    அறிமுகப்   படுத்தினார்.:(

உங்களை  ஒரே மாதத்தில்  சரிப் படுத்திவிடுகிறேன். தினம்
ஃபிசியோதெரபி எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்தப் பயிற்சிகளைச்   சரிவர  வீட்டிலும் செய்தால்  தசைகள் பலம் பெறும் என்று    புத்திமதி சொல்லி அனுப்பினார்..

தமிழ்மண நட்சத்திரம் அப்படி இப்படின்னு நான்கு நாட்கள்     வாய்தா வாங்கி  வைத்துக் கொண்டேன்.
எங்கள் குடும்பத்திலேயே  அவரிடம் சிகித்சை எடுத்துக் கொண்டவர்களின் அனுபவங்கள்  என்னைப் பயமுறுத்தின.   உடல் பூராவும்
வலி க்கும்  ஆனால் பழகிவிடும்.பூரண    குணம் நிச்சயம்.!!!!

மதில்மேல்  பூனையாக வீட்டுக்குப் பக்கத்து   தெருவிலேயே  இருக்கும்
வைத்திய சாலைக்குப் போன முதல் நாள்   ' ராஷி'
(அதுதான் அந்தப் பெண்ணின் பெயர்)   பூப்போல்  கால்களுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல  எங்கெல்லாம் வலியிருக்கிறது என்று தெரிந்து கொண்டார்.

இவ்வளவுதானா. இதற்காப்  பயந்தோம்  என்றவாறு

 எல்லோரிடமும்
தொலைபேசி என் ஆநந்தத்தைப் பகிர்ந்து கொண்டு   நீங்க எல்லாரும் அங்கே
வைத்தியம் செய்து கொள்ள தாராளமாகப்   போகலாம்.
வலியே      இல்லை என்று சொல்லிப் பெருமை சொல்லிக்கொண்டே அடுத்தநாள்    வைத்தியத்திற்குப்   போனேன்..

கோதுமை மாவு    ,சப்பாத்திக்குப்  பிசைவோம் இல்லையா....
அதுபோல  என் கால்களில் உள்ள     தசைகள் அழுத்தப்பட்டுப் பிசையப் பட்டு,
வலி தாங்காமல் போன போது,
பனிக்கட்டி நிரம்பிய பையினால்   ஒத்தடம் கொடுத்தார் அந்தப் பெண்.

இப்போது    நான் முழங்கால் வலி என்றே சொல்வதில்லை.
உடல் முழுவதும் புதுரத்தம் ஓடுபவது போல புத்துணர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.
டாக்டர்   அப்படித்தான் சொல்லி இருக்கிறார்.  இன்னும்  பத்து நாட்கள்  இந்தப் பயிற்சி மேற்கொண்டால் போதும்.
ராஷி என்னை ரொம்பவே மெச்சிக் கொள்கிறார்.
இங்க வரவங்க இரண்டு நாட்களுக்கு மேல  வரத்தயக்கம் காட்டுகிறார்கள்
ஆந்டி..
உங்களுக்குப்  பொறுமை  அதிகம்.
நீங்க   மூணு நாள் வந்துட்டீங்க.
இனிமே  வலி குறைந்துவிடும். முன்னைவிட வேகமா நடப்பீங்க  பாருங்க.
என்று அவள் சொன்ன அடுத்த நாள் ஏதோ  ஒரு தடங்கல் வந்துவிட்டது.
போக முடியவில்லை.


அடுத்தநாள்     பயிற்சியை நினைத்தால்   இரண்டு கைகளுக்கு   நடுவில் அகப்படும்    பரோட்டா மாவுதான் நினைவுக்கு  வருகிறது.
பரவாயில்லை இதையும்  தாண்டிவிடலாம்  மெள்ள,:)

பிறகு  அதே வைத்தியரின்  பயிற்சிக் கூடத்துக்குச் சென்று
ஒற்றைக் காலில் நிற்கப் பழகினேன்.
அடுத்த நாள்  கீழே உட்காரப் பயிற்சி நடந்தது.

ஒவ்வொரு நாள் பயிற்சிக்கும் 450 ரூபாய்தான்
பயிற்சிகளைத் தொடர்ந்து  ஆறு மாதங்கள் கற்றுக் கொள்ளுமாறு அங்கே இருக்கும்  ஆன்ட்ரு  வற்புறுத்தினார். பத்து நாட்களுக்குப் பிறகு போகவில்லை.

இப்பொழுது  ஒரு மாதிரி வேகம் குறைந்த நடையாதலால்  விழவில்லை.

மெரினா,வீட்டு வாசல்,துபாய்  ஏர்போர்ட், சுவிஸ்  நிலம் எல்லாவற்றையும்  என் கால்  ஸ்பரிசித்திருக்கிறது.

இனி விழாமல் அவன் பார்த்துக் கொள்ளுவான். நடை தளர்ந்துவிட்டதல்லவா.



















13 comments:

வெங்கட் நாகராஜ் said...

அட புதுப் பெயரா இருக்கே... பிசையோ வலியோ தெரபி....

முதல்ல கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்மா....

பழகிடும்....

ஸ்ரீராம். said...

அடடா... பொறுமையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்...சீக்கிரம் குணமாகி நலம் பெற எங்கள் பிரார்த்தனையும், வாழ்த்துகளும்.

வல்லிசிம்ஹன் said...

காலை வணக்கம் வெங்கட்.
வலியை விட அதைப் பத்தின பயம் தான் காரணம்.
வாளால் அறுத்துச் சுடினும்
மருத்துவர் பால் மாளாப் பயம் வந்துவிட்டது.குணம் கொடுக்கப் போகிறவரும் அவரே.
அதனால் பழகிக்கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

பதினோரு வருஷம் அசடாக இருந்தாகிவிட்டது. இப்பவாவது இதற்கு விடிவு தேடணும்.
சர்க்கரைக்கும் உள்காயத்துக்கும் ஆகாது. நன்றி ஸ்ரீராம்.

அமைதி அப்பா said...

பிஸியோதெரபி வலி நீக்க ஒரு நல்ல வைத்தியமுறை. தொடருங்கள் குணம் கிடைக்கும்.

அமைதி அப்பா said...

மேலே உள்ளதில் 'எனது அனுபவத்தில்' என்று சேர்த்துக் கொள்ளுங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வலிக்கு வலிதான் சரியான மருந்து வல்லிம்மா. பயிற்சியின் போது வலிக்குமேன்னு பயந்தா, அப்றம் ஏற்கனவே இருக்கற வலி போகாதே..

தக்குடு said...

இவ்ளோ வலிக்கு நடுலயும் உங்களோட குறும்பும் சேட்டையும் அப்பிடியே இருக்கு வல்லிம்மா! ;)

வல்லிசிம்ஹன் said...

நன்றி அமைதி அப்பா. நல்ல வார்த்தை சொன்னீர்கள்.
இன்று டாக்டரைப் பார்க்க வேண்டும். அவர் சொல்கிறபடி ரி ஹாபிட் பயிற்சிகளைச் செய்தால் உய்யும் வழி கிடைக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் தக்குடு.
வலி பாட்டு வலி. குசும்பு பாட்டு குசும்பு.
ஆத்மா வேற . உடம்பு வேற இல்லையா:)

தக்குடு said...

//ஆத்மா வேற . உடம்பு வேற இல்லையா:)//

ஆஹா!! அடிக்கடி திவாண்ணா ப்ளாக் பக்கம் போகாதீங்கோ!னு சொன்னா கேட்டாதானே! இப்ப பாருங்கோ ஜீவாத்மா பத்தி எல்லாம் பொலந்து கட்டரேள்! :)

இராஜராஜேஸ்வரி said...

ஆத்மா வேற . உடம்பு வேற இல்லையா:

பயனுள்ள பகிர்வு..

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராஜராஜேஸ்வரி.இன்ன்னும் கொஞ்சம் எழுதி இருக்க வேண்டும்.