Blog Archive

Thursday, October 20, 2011

மங்கையர் உலகம், தொலைக்காட்சியின் நலம்

திருமதி ரேவதி சங்கரன்
எழுத்தாளர்  சிவசங்கரி
ஸ்ரீவேளுக்குடி  கிருஷ்ணன்
நற்கதைகள்  கூறி நம்மைக் கவரும் கற்பகவள்ளி.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தொலைக் காட்சியில் எத்தனையோ தொல்லைகள் இருந்தாலும்
நல்ல நிகழ்ச்சிகள் எத்தனையோ இல்லாமலா  போகிறது. பொதிகையின்  மூலிகை சமையலிலிருந்து,விஜயின் தரிசன ஸ்பெஷல், திரு வேளுக்குடி கிருஷ்ணனின் கட்டுரை மூலம்  நற்கருத்துக்களை நம் மனதில்
பதிய வைக்கும் பாங்கு.
கலஞர் தொலைக்காட்சியில் ஏழு மணிக்கு ''டாண்'' என்று ஆஜராகி நம் நாளை இனிமையாக இருக்க வாழ்த்தும் கலைமாமணி திருமதி ரேவதி சங்கரன்.

இந்தமங்கையர் உலகம் நிகழ்ச்சியை நான் முக்கால்வாசி பார்த்துவிடுவேன்.
அவசர வேலைகள் இருந்தாலொழிய.


இவரைப் பழைய நாளைய உலாவரும் ஒளிக்கதிரிலிருந்து பின்பற்றி வருகிறேன்.
சொல்லும் விதத்திலேயே ஒரு உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
இப்போதோ சகல கலாவல்லியாக ,சமையல் நிகழ்ச்சியாகட்டும்,
மற்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கட்டும்.
அசத்துகிறார்.

அவர் அணியும் வளையல்கள், மருதாணி, புடவை மற்றும் கழுத்தில் அணியும் மணிமாலைகளுக்கு என்று என் அம்மாவும் தம்பி மனைவியும் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்துதான் இப்படி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாவதே தெரியும்.
வார நாட்கள் ஐந்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம். அந்த அரைமணி நேரத்துக்குள்,
இதய மருத்துவர் ஒரு நாள், சர்க்கரை வைத்தியர் ஒரு நாள், மூட்டு வைத்தியத்துக்கு ஒரு நாள் என்று   ஒரு நொடி கூட வீணாக்காமல் அறிவுரை வழங்கிச் செல்கிறார்கள்.
அதுமுடிந்ததும் நீதிக்கதைகள் சொல்லும் கற்பகவள்ளி ஒரு நாள் வருவார்.
திங்களன்று என்று தான் நினைக்கிறேன்.

நமக்கோ கதை கேட்க ரொம்பவே பிடிக்கும். இன்று ஒரு தகவல் தெகச்சி சுவாமிநாதனை மிகவும்    பிடிக்கும்.
அவரில்லாத  குறைக்கு இவர்கள் அந்த அளவு இல்லாவிட்டாலும்
அழகாகவே உரையாற்றுகிறார்கள்.
பின்னொரு நாள் வயோதிகத்தைப் பற்றி எழுத்தாளர் சிவசங்கரி   பேசிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது.
எப்பொழுதும்  போல ஆணித்தரமான பேச்சு.:)
பிறகு ஒரு நாள் நீதித்துறையைச் சார்ந்த விஷயங்களை விளக்க வழக்கறிஞர்
ஒருவரும் வருவார்.
பின்னர் இருக்கவே இருக்கிறது மனநலம்.
பிறகு தையல் கலைகள்,கைவேலைகள்   என்று அரைமணி நேரம் போவதே  தெரியாது.
 அத்துடன் நம் தொலைக்காட்சி  பார்வை முடிந்து பாட்டு  ஒலிபரப்பு தொடங்கிவிடும்.
அதைக் கேட்டுக் கொண்டே கணினியும் மேயலாம் அல்லவா:)

காலை உணவு,பிறகு வீட்டு வேளை, தொலைத்ததைத் தேடும் படலம்,இஸ்திரி, நீலகிரீஸ் கடையில்  வேணும் வேண்டாம் என்கிற பொருட்களை அள்ளிக் கொண்டு வருவது. அம்மா பினாயிலை மறந்துட்டீங்களேன்னு நம்ம ரானியம்மா கேப்பாங்க.
அவங்களையே  வாங்கி வரச் சொல்லிப் பணமும் கொடுத்துவிட்டால் அடுத்த நாள் காலையில் சரியாகச் சில்லறையோடு கொண்டு வந்து கொடுத்து விடுவார்.

எல்லோருக்கும் தீபாவளிக்குப் புடவைகள் வாங்கிக் கொடுத்தாச்சு.
பட்டாசு ஒன்றுதான் இன்னும் வாங்கவில்லை.
குழந்தைகள் இல்லாத ஒவ்வொரு பண்டிகையும் அத்தனை ருசிப்பதில்லை.
அதனால் என்ன ராணியின் பேரன் பேத்திகளுக்கு மத்தாப்பு வாங்கிக் கொடுக்கலாம்.

அதோடு கிருஷ்ணாவில் மிக்சருக்குச் சொல்லிவிட்டால் போதும். எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள நல்லதொரு ஐட்டம்.
வீட்டில்  திரட்டிப்பாலும் ஓமப்பொடியும் தான்.
மருதாணியைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
கோவில் வாசலில் விற்கிறார்களாம்.
பார்க்கலாம்.  விரல்களுக்கு யோகம் இருக்கிறதா என்று:).
அடுத்த  வாரம் தீவிளி முடிந்திருக்கும்:)))











Posted by Picasa

16 comments:

துளசி கோபால் said...

ஹேப்பி தீவுளிப்பா!

இங்கே எல்லாம் சுத்தம்:-)

geethasmbsvm6 said...

குழந்தைகள் இல்லாத ஒவ்வொரு பண்டிகையும் அத்தனை ருசிப்பதில்லை.
அதனால் என்ன ராணியின் பேரன் பேத்திகளுக்கு மத்தாப்பு வாங்கிக் கொடுக்கலாம்.//

எவ்வளவு உண்மை! அங்கே வருடா வருடம் அப்படித்தான் செய்து கொண்டிருந்தோம். இந்த வருஷம் தீபாவளிக்குப் பதினொரு வருடங்களுக்கு அப்புறமாப் பையரோட, முதல்முறையா மருமகளோட கொண்டாடப் போறோம். ஆனாலும் இந்தியாவில் இல்லையே என்ற ஏக்கமும் இருக்கு.

அக்கரைக்கு இக்கரை பச்சை!

geethasmbsvm6 said...

நீங்கள் சொல்லும் நிகழ்ச்சிகளெல்லாம் நான் பார்த்ததில்லை. பொதிகையிலும், விஜயிலும் வேளுக்குடியின் சொற்பொழிவுகள் தவிர்த்து மற்றவை குறித்து எதுவும் தெரியாது. ரேவதி சங்கரனை மங்கையர் மலர் ஆசிரியராகவும், தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பவராகவுமே அறிந்திருக்கிறேன். மற்றவற்றிற்கும் நன்றி.
சங்கரா தொலைக்காட்சியில் சிந்துஜாவின் பாண்டுரங்கர் குறித்த சங்கீத உபந்நியாசம் கேட்டிருக்கிறீர்களா? தெரிந்த பெண். அவள் அம்மாவும் நானும் ஒரு காலத்தில் நண்பர்கள். இப்போ நினைவு இருக்கோ இல்லையோ!

கோமதி அரசு said...

//குழந்தைகள் இல்லாத ஒவ்வொரு பண்டிகையும் அத்தனை ருசிப்பதில்லை.//

எனக்கும் அப்படித்தான் அக்கா.

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். 23ம்தேதி கோவை போகிறோம் தீபாவளிக்கு.

வெங்கட் நாகராஜ் said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

மாதேவி said...

நலம் தரும் தொலைக்காட்சிகள் கண்டுகொண்டோம்.

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

இத்தனை நிகழ்ச்சிகளையும் எப்போதாவது பார்க்கலாம். தொடர்ந்து பார்க்கத் தோன்றுவதில்லை..!

தி. ரா. ச.(T.R.C.) said...

எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள நல்லதொரு ஐட்டம்.
குழந்தைகள் இல்லாத ஒவ்வொரு பண்டிகையும் அத்தனை ருசிப்பதில்லை

உண்மைதான் வல்லியம்மா இந்ததடவை எல்லோருக்கும் தீபாவளிக்கு முன்னாலேயே துணி, ஸ்வீட் காரம் எல்லாம் கொடுத்த் உவிடவேண்டும் என்று பிளான். மிச்சம் மீதியை கொடுத்தா மாதிரி இருக்ககூடாது.குழந்தை சாரங் வருவதாக இருந்து கான்சல் ஆகிவிட்டது வருத்தமாக இருந்தது. இன்னிக்கி மாலை நாட்டுபொண்ணு போன் பண்ணி சாரங்குடன் 24 ஆம் தேதி ராத்திரி வரேன்னு சொன்னதும் சந்தோஷம் தாங்கலை. பையன் 4 ஆம் தேதி வரனாம். ஏன் திடீர் முடிவுன்னு கேட்டா பையன் சொல்லிட்டானம் அப்பா சாரங்கை பாக்கனும்னு ஆசையிருக்கா ஏமாத்தகூடாதுன்னு சிட்னி டு சென்னை. தலைதீபாவளிக்குகூட எனக்கு இவ்வளவு சந்தொஷம் இருந்துதான்னு தெரியாது.

நானானி said...

நானும் டாண்னு ஏழு மணிக்கு காபியும் பேப்பரும் கையுமாக கலைஞர் டீவி முன் உக்காந்து விடுவேன். திருமதி ரேவதி சங்கரன் மலர்ந்த முகத்தோடு, அன்றைய நாள் நல்ல நாளாக கழிய வாழ்த்தும் வாழ்த்துக்காக. அதோடு அதில் நீங்கள் கூறியபடி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளும் சுவாரஸ்யமாயிருக்கும்.

மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மருதாணி !!
ஆகா அதும் வட்டவட்ட மருதாணி.. ம்.. தீபாவளின்னா அம்மா அழகா வச்சிவிடுவாங்க..

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்கும் ஹாப்பி தீபாவளிப்பா.
அதான் பூ கம்பம் வந்து ஆடுதே.
நிம்மதியா இருங்கப்பா.

வல்லிசிம்ஹன் said...

நல்லபடியாக் கொண்டாடணும் கீதா. எல்லாரும் சந்தோஷம் இருக்கணும்.
உங்கள் பெண் குடும்பமும் அங்கே வரமுடிந்தால் நன்றாக இருக்குமே.

வல்லிசிம்ஹன் said...

கீத என்னுடைய டாட்டா ஸ்கையில் சங்கரா டிவி வரது இல்லை.
ரொம்ப நல்ல விஷயங்களை மிஸ் பண்ணுகிறேனோ.
சிந்துஜா காலாட்சேபம் கேட்டதுமில்லை. யூடியூப்ல வேணும்னால் தேடிப் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நலம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள் தங்கச்சி கோமதி. அங்கே இருக்கும் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளோடு பண்டிகை கொண்டாடட்டும்.
இதுவும் ஓருவிதமான மரியாதைதான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட். உங்களுக்கும் குடும்பத்துக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல் நாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு டிஆர்சி சார், குழந்தைகள் வருவது மிகவும் சந்தோஷம்.

தீபாவளி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.