Blog Archive

Wednesday, October 19, 2011

காதுமா காது! (மீள் பதிவு)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


இது நம் காது.

இடது காது.


ஒன்றும் இடாத வரையில் பிரச்சினையில்லை.

நாம் என்ன காதில் போடுபவர்களா?


காதில் போட்டுக்கறதே இல்லை என்பது தான் எல்லோருடைய கம்ப்ளைண்ட்.


வேணும்கறது மட்டும் காதில விழுமே!

காதை இந்தப் பக்கம் திருப்பேன் ஒண்ணு சொல்லணும்

இது வயசான பாட்டிகள் அடிக்கடி சொல்லும்

வார்த்தை.


ஏன் உனக்கு வயசாலயானு கேக்கக் கூடாது.


நான் இப்போ ஆறு வயது (mode)ல இருக்கிறேன்.


அப்போதெல்லாம் அம்மா நம் காதுகளைப் பார்த்துக் கொள்ளுவார்கள்.

எங்கள் மூன்று பேரையும்

உட்காரவைத்து , அது அநேகமாக இரவு வேளையாக இருக்கும்.

அப்பா இன்னும் வீட்டிற்கு வந்து இருக்க மாட்டார்,.


சாப்பாடு வேளை சரியாக 7 மணிக்கு.


அம்மா கையில் அந்த சிறு பாட்டிலை எடுத்ததும்

எங்களுக்கு உற்சாகம் பற்றிக்கொள்ளும்.

அம்மா இன்னிக்கு காதாம்மா?

என்று கேட்டுக்கொள்ளுவோம்.

ஆமாம் நேத்திக்கு நகம், இன்னிக்குக் காது என்று சின்னவன் ஒத்து ஊதுவான்.


எங்கள் ஆரோக்கியம், சுத்தம் இவைகளை அம்மா கவனிக்கும் அழகே தனி.


கையில் வைத்து இருந்த திரவம் ஹைட் ரஜன் பெராக்ஸைட் என்று நினைக்கிறேன்.


இன்னும் எனக்கு சரியாகத் தெரியாது.

நாகரீக நல்ல அம்மா எங்களுக்கெல்லாம்

வாய்த்தது எங்களுக்கு பாக்கியம்.


நாகரீகம் என்றால்அந்தவடிவத்துக்கு ஒன்பது கஜம்,சிறு புன்னகை

வாரிப் பின்னிய கூந்தல்.

சாதரண நூல் புடவை தான்.


ஓஹோ!!!  காதிலிருந்து அம்மாவுக்குப் போய் விட்டேனா:)
சரி.

.காதுக்கு வருவோம்.

எங்களுக்கு ஆவல் தூண்டும் விதமாக

ஒரு சொட்டு திரவத்தை தரையில் அழுக்கு

இருக்கும் இடத்தில் விடுவார்கள். அங்கு அப்படிய்யெ அழுக்கு நுரைத்து வரும்.

ஏம்மா இப்போதானே சுத்தம் செய்தே நீ, என்று நாங்கள் கேட்டால்,

கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ இருக்கும்மா

என்று சொல்லி,

ஒவ்வொருவருக்கும் காதைச் சுத்தம்

செய்து முடிப்பதற்கும் அப்பா வருவதற்கும் சரியாக இருக்கும்.

இதில் எங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்

அம்மா மடியில் படுத்துக் கொண்டு


சுகமாகக் காது சுத்தம் செய்து கொள்வது.




அதெல்லாம் போய் இப்போ புதிதாக


அதே காதுக்கு வலி வந்தால் ,


என்ன செய்வது?முதலில் காட்டன் பட்ஸ்.

அது வலியை அதிகப் படுத்தும்.


எப்படியென்றால் காது குடைவது சுகம்.

வலியோ அதிகம்.


அடுத்தது தேங்காய் எண்ணை வைத்தியம்

1,எண்ணையைக் காய்ச்சி, அதில் உள்ளிப்பூண்டைப்


பொரித்து,

மிதமான சூட்டில் காதில் விட்டுக் கொள்வது.

பூண்டு பிடிக்காதவர்கள்

கற்பூர வில்லையைப் போட்டு

மணக்க மணக்கக் காதில் விட்டுக் கொள்ளலாம்.


அனேகமாக இந்த வாசனையெல்லாம்


பசியைக் கிளப்பி விடும்.

அதனாலேயெ காது வலி போகுமோ?

போகாது.

அது காத்துக் கொண்டு இருக்கும் சைடில்  :))



இவள்  எப்போது ஏதாவது வாயிலெ போட்டு மெல்லுவாள்.?

அப்போ நமக்கு வேலை என்று.

அதே போல வாயிலே சாப்பாடு போட்டதும் காது

வலிக்கும் ,

உடனே முறைக்கும்.

நான் இங்கே கஷ்டப்படறேன், நீ நாக்குதொண்டையைக் கவனிக்கிறயே என்று வலி கூட்டும்.


ஆகக்கூடி '' வெல் கனெக்டட்னு " சொல்லணுமுன்னா

இந்தக் காது மூக்குத் தொண்டை தான்.

உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் தான்.


ஜலதோஷம் வந்தால் கூடவே காது சிவக்கும்.தொண்டை


வலிக்கும்.

என்ன ஒத்துமை பாத்திங்களா?

என்னை இப்படி எழுத வைத்ததே இந்தக் காதுவலி

தாங்க.


புலம்பறதுக்கும் , அதைக் கேக்கறதுக்கும் ஆளெ,

இந்தப் பதிவாப் போனதாலே,

இங்கேயே எழுதறேன்.

போன

வியாழன் இரவுத் தூக்கத்தின் நடுவில்


எங்கேயோ டிரில்லிங் சத்தம் கேக்கிறது.

ஓக்கே, ரோடில ஏதோ ரிப்பேர் என்றூ திரும்பிப்

படுத்தால், அந்த வினோத சத்தம் காதுக்குள்


வலியோடு கூட்டு வைத்துகொண்டு கச்சேரி ஆரம்பித்துவிட்டது.


தேவுடா, என்று மருந்துப் பெட்டியைப் பார்த்தால்

க்ரோசின் தான் இருந்தது.


சாமி காப்பாத்துனு அதை முழுங்கித் தூக்கம் வராமல் முழித்து, டி.வி பார்த்து, காலையில்

சோக முகத்தோடு, ஈ.என்.டி டாக்டர் கிட்டே போனொம். அன்று நவராத்திரி வெள்ளி.


டாக்டர் அம்மா" என்ன காட்டனாலே(பஞ்சாலே) காதைக் குடைந்தீர்களா ""என்று நக்கலாகக் கேட்டுவிட்டு



முகத்தை அப்படி இப்படித் திருப்பி,

வலது காதில், கம்மலை ஆராய்ந்து,


பல்லைப் பார்த்து, மூக்கைப் பாத்து

மறுபடி ஆரம்பித்த இடத்துக்கு

வந்தார்.

அவர்கையில் ிருந்த சின்ன கூரான ஊசியைப் பார்த்ததும்

கொஞ்சம் நடுக்கமாக இருந்தாலும் ,பல்லைக் கடிக்கக் கூட முடியாதே
பொறுத்துக் கொண்டேன்.


மெலிதாக அவர் காதுக்குள் பரிசோதனை செய்து
"ஓ

சம் டெப்ரீஸ் ஆர் தெர்"

எண்று அவைகளை எடுக்க ஆரம்பித்தார்.


எனக்கொ நாம் மூளையைக் கசக்கும் வேலையை செய்யவில்லையே,

எப்படி பொடிகள் வரும் 'என்ற சிந்தனையில்

ஆழ்ந்தேன். '


'லுக் அட் திஸ் லுக் அட் திஸ்'

என்று சில பொடிகளைக் காண்பித்தார்.

நானும் பூம் பூம் மாடு மாதிரி

தலையை ஆட்ட முற்பட்டுக் காது வலித்ததால்

நிறுத்திக் கொண்டேன்.


சிங்கம் வேற சும்மா இல்லாமல்

ரொம்ப நேரம் சத்தமாப் பாட்டுக் கேக்கறாங்கனு சொன்னார் அவர்களிடம்.


இவருக்குப் பாட்டு என்றால்

டி.விக்கு க்கூட கேக்காமல் கேட்கணும்.

எனக்கோ பாட்டோடு ஒன்றும் அளவிற்கு

சத்தம் வேண்டும்.

எப்படியோ அதற்கும் வலிக்கும் சம்பந்தம் இல்லை

என்று டாக்டர் சொல்ல , இரண்டு பக்க மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.

''அம்மாவுக்கு வயசு 58ஆ. ''(ஐந்து வருடம் முன்னால்)

ஓ?? !!!!!


என்று மெதுவாக ,ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்பா

வயசானவர்களுக்கு சொல்லுவது போல


''இதை(மாத்திரை) உடனெ எடுத்துக்கணும்.


காதுக்குள்ள பஞ்சு போடக்கூடாது.


இதை சாப்பிட்ட பிறகு எடுத்துக்கணும். (இன்னோரு மாத்திரை)


''நாட் பிஃஃபோர் ஃபுட்'' என்றெல்லாம் திருப்பி திருப்பி சொல்லி முடித்து வெளில அனுப்பியதும் ,


அடுத்த வந்த வாலிபரிடம் அவர் சொன்ன வார்த்தை

தான் டாப்.


''பாவம் வயசானாலே புரிஞ்சுக்கிறது


கஷ்டமாகி விடுகிறது.


வி ஹேவ் டு பி பேஷண்ட்,"


என்றதும் எங்கே போயி முட்டிக்க என்று தெரியாமல் மருந்துக் கடைக்கு வந்தோம்.


நான்கு நாள் படாத அவஸ்தை பட்டாச்சு.


கொலு பார்க்கவந்த மாமி சொன்னது

இன்னும் சிரிப்பு.

உங்க காதுக்கு இன்னும் பெரிய தோடு போடலாம் போல இருக்கே என்றதுதான்.

நானும் கீதா(சாம்பசிவம்) மாதிரி ஹி ஹி சொல்லி, ஒண்ணுமில்லை

காது வீங்கி இருக்கு என்றேன்.


பதிவு ஆரம்பத்தில் எழுதிய யோசனைகள் எல்லாம

ஊரார் எனக்குக் கொடுத்த அறிவுரைகள்.



இந்தப் பதிவைப் படித்து உங்களுக்குத் தலைவலி வந்தால்

சொல்லுங்கள்.

தனிதனியாகப் பிரித்து வைத்தியம் செய்து விடலாம்.:)

29 comments:

வெங்கட் நாகராஜ் said...

Buds உபயோகிப்பது கெடுதல் என்று சொன்னால் யாரும் கேட்பதில்லை. :))

காது வலியைக் கூட சுவையாக சொல்லி இருக்கீங்கம்மா... :)))

அம்மா மடியில் படுத்து காது சுத்தம் செய்துகொள்வதில் தான் எத்தனை சுகம்... :) அம்மா ஊரில் இருந்து வந்து இருக்காங்க இப்போ... இன்னிக்கி சாயங்காலமே செய்துக்க வேண்டும்...

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட், உங்களுக்கு அப்புறம் நட்சத்திரமா இருக்கிறது மஹா சிரமம்பா.
டஃப் ஆக்ட் டு ஃபாலோ:)
ரொம்ப நன்றிமா. அதுக்கப்புறம் எனக்குக் காதுவலி வரவே இல்லை.
காதுக்கு டாக்டரம்மா கிட்டப் பயம் வந்துட்டது!!!

கௌதமன் said...

என்னுடைய இடது காதில் சிறிய வயதில். உப்பு, மிளகாய், பூண்டு பெருங்காயம் இத்யாதி பொருட்களைத் தாளித்துக் கொட்டிய காரணத்தினால் - இப்பொழுது என்னுடைய இடது காது கேட்பதே இல்லை. யாராவது என்னைத் திட்டினால் நான் என்னுடைய வலது காதை மட்டும் பொத்திக் கொண்டு, இடது காதால் கேட்பது போல ஆக்சன் செய்வேன்!

தக்குடு said...

//''பாவம் வயசானாலே புரிஞ்சுக்கிறது


கஷ்டமாகி விடுகிறது//

ஹா ஹா ஹா!! நீங்க ஒரு உலகம் சுற்றும் 'ஹை-டெக்' மாமினு அந்த டாக்டருக்கு தெரியுமா??:))அடுத்த தடவை உங்காத்துக்கு வரும் போது மறக்காம உங்க காதை கவனிக்கனும்!! :)

ஹுஸைனம்மா said...

//மூளையைக் கசக்கும் வேலையை செய்யவில்லையே, எப்படி பொடிகள் வரும்//

ரசித்தேன்!!

/உப்பு, மிளகாய், பூண்டு பெருங்காயம் இத்யாதி பொருட்களைத் தாளித்துக் கொட்டிய காரணத்தினால்//

ஆ... பயங்காட்டுறீங்களே..

எங்க பாட்டி கண்ணு, மூக்கு, வாய் ஒண்ணு விடாம வாராவாரம் விளக்கெண்ணெய் ஊத்திப்பாங்க. கடசீ வரை கிண்ணுன்னு இருந்தாங்க!! நானும் அப்படித் தேக்கணும்னு (ஒரு பத்து வருசமா) நினச்சுக்கிட்டே இருக்கையில.....

பாட்டி வைத்தியங்களை விரும்பினாலும், செய்து பார்க்கத் தயக்கம் வருவது இப்படியான செய்திகளை அவ்வப்போது அறிவதால்தான். எங்க உறவுலயும் ஒருத்தருக்கு தலையில் பேனுக்குச் செய்த (டேஞ்சரஸ்) வைத்தியத்தில், காது கொஞ்சம் பாதித்துவிட்டது.

ராமலக்ஷ்மி said...

பட்ஸ் காதுக்குப் பிடித்தமான எதிரி:)!

பாட்டி வைத்தியம் பார்த்தோம் என எந்த ENT-யிடமாவது சொன்னோம், அவ்வளவுதான்.. மருத்துவர் முகம் படத்திலிருக்கும் காதை விடச் சிவந்து விடும்:))!

நல்ல பகிர்வு.

geethasmbsvm6 said...

நாகரீகம் என்றால்அந்தவடிவத்துக்கு ஒன்பது கஜம்,சிறு புன்னகை

வாரிப் பின்னிய கூந்தல்.

சாதரண நூல் புடவை தான்//

அதே, அதே, எனக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடும் என் அம்மா நினைவில் வந்தார். ஏற்கெனவே குளித்ததுமே எங்கிருந்தோ வரும் ஜுரம் பயப்படுத்தும் என்றால் அதைவிட மோசமாக நான் பயமுறுத்துவேன்.


//எனக்கொ நாம் மூளையைக் கசக்கும் வேலையை செய்யவில்லையே,

எப்படி பொடிகள் வரும் 'என்ற சிந்தனையில்

ஆழ்ந்தேன்.//

ஹாஹா, நல்ல நகைச்சுவை,

மேலதிகத் தகவல்களாக என் காதில் இருந்து கரப்பெல்லாம் வெளியே வந்திருக்கின்றது. எப்படி உள்ளே போயிருக்கும்னு ஆச்சரியமா இருக்கும். பையர் ஸ்கூலில் எக்ஸ்பெரிமென்டுக்குத் தேடினா ஒண்ணு கூடக் கிடைக்காது. எல்லாம் என் காதுக்கு வந்திருக்கும் போல!





//நானும் கீதா(சாம்பசிவம்) மாதிரி ஹி ஹி சொல்லி, ஒண்ணுமில்லை

காது வீங்கி இருக்கு என்றேன்.//

ஹாஹாஹா, நன்றி

geethasmbsvm6 said...

தொடர

மாதேவி said...

"காதுமா ...காது' ரசனையான பதிவு.

தி. ரா. ச.(T.R.C.) said...

காதுலே போட்டுக்கவேண்டிய விஷ்யம்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

காது குடைவதர்க்கு 'கோழி இறகு'தான் பெஸ்ட். அதன் சுகமே அலாதிதான்...!
தமிழ்மணம் நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்!

நானானி said...

//ரொம்ப நேரம் சத்தமா பாட்டுக் கேக்கிறாங்க//
ஆஹா...எவ்வளவு நேக்காக தன் கடுப்பைக் காட்டி சந்திலே சிந்து பாடி விட்டார் சிங்கம்!

திவாண்ணா said...

mmmm படுக்க போகு முன் கொஞ்சம் 2-3 சொட்டு தேங்காய் எண்ணை காதிலே விட்டுக்கணும். வாக்ஸ் இருந்தா அதை கரைச்சுடும். மத்த படி காதை குடையறது எல்லாம் தப்பு.

சாந்தி மாரியப்பன் said...

காதுல போட்டுக்கறதுங்கறது இதானா :-)))

Porkodi (பொற்கொடி) said...

Vallimma!! do you remember me? :) Star padhivara??? Vazhthukkal!! ella postaiyum nidhanama padikkanum :D

kaadhu vali - aiyo kadavule naan pusthagame poduven!

வல்லிசிம்ஹன் said...

வரணும் கௌதமன்.

நீங்க சொல்லும் டீடெயில்ஸ் மிக பயத்தைக் கொடுக்கிறது.
உண்மைதான் அறியாமையால் கிராமத்துச் சந்தையில் குரும்பியினால் காது சுத்தம் செய்து கொள்பவர்களுக்கும் காது பட்ஸ் போட்டுச் சுத்தம் செய்பவர்களுக்கும் நிறைய வித்யாசம் இல்லை.
சும்மாதானெ சொல்கிறீர்கள் உங்கள் காது பற்றி:)காது திட்டுக்களை உள்ளே போட்டுக்கலை என்றால் மகிழ்ச்சிதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தக்குடு, உடம்பு எங்க போனாலும் ,இப்போதைக்குக் காது அவர் கையில் மாட்டியது இல்லையா.
சொல்லவேண்டியதைச் சொல்லாமல் விடுவார்களா.:)
காதை வேணால் படம் எடுத்து அனுப்புகிறேன் மா.மாப்பிள்ளை அவசரம் இருக்கும் காலத்தில் காதைப் பார்க்க வந்தால் வீட்டு லட்சுமிக்குப் புருவம் சுருங்கச் சான்ஸ் இருக்கு:)

வல்லிசிம்ஹன் said...

பாட்டி வைத்தியம் பற்றின சேதி பயங்கரமா இருக்கு ஹுசைனம்மா. பாவம் அந்தப் பையன்.
தேங்காயெண்ணெய் வைத்துச் சுத்தம் செய்வது சின்னக் குழந்தையாக இருக்கும் போதே செய்வதுதான். எங்க குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை, கடவுள் புண்ணியத்தில்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.
பட்ஸ் வைத்து காதோரங்களைச் சுத்தம் செய்வதில் தப்பொன்றுமில்லை. காதுக்குள் விடுவதில்தான் பிரச்சினை.
இன்னும் கியூ டிப்ஸ் டப்பா டப்பாவாக அமெரிக்காவில் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தொடர்ந்த வருகைக்கு மிகவும் நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா உடல் நலம் எப்படி இருக்குப்பா.
காதிலிருந்து கரப்பா. என்னப்பா சொல்கிறீர்கள்.:(

கரப்பு என்றதும் நினைவுக்கு வருகிறது. துபாயில் மகன் வீட்டைப் பெஸ்ட் கண்ட்ரோல் வைத்துச் சுத்தம் செய்ததில் 800 குட்டிக் கரப்பான்களைப் பிடித்திருக்கிறார்கள். ஜெர்மன் கரப்பாம்.சீக்கிரம் கொல்ல முடியாதாம்.
வீட்டை மாற்ற யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, காது கொடுத்துப் பார்த்ததில் மகிழ்ச்சி:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தி.ரா.ச
னாமெல்லாம் காதில போட்டுக்கலாம். வாயிலதான் போட்டுக்கக் கூடாது:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தமிழன் வீதி தோழன்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். சிலிர்க்கிறது நீங்கள் சொல்லும் கோழிச் சிறகு.

பத்திரமா இருங்கப்பா.அதுக்கும் ஏதாவது சொல்லப் போறாங்க:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன்.
சூடு பொறுக்கத் தேங்காயெண்ணெயும் ,காதுக்குப் பஞ்சும் வைத்துக் கொண்டு தூங்கினால் நல்லதுதான்.

வல்லிசிம்ஹன் said...

அய்ய நானானி அதையேன் கேக்கறீஈங்க. அவங்க எல்லாம் உசந்த வம்சம். நானெல்லாம் மொஃபசல்.:)

பாட்டுக் கேட்கும்போது என்னையறியாமல் சத்தமாக வைத்துவிடுவேன் போலிருக்கிறது. அதுவும் பழைய சிடிக்கள் கேட்கும் நேரம் ...என்னையே மறந்துவிடுவேன்.
இப்போவெல்லாம் அறைக் கதவைச் சாற்றிவிட்டே பாட்டுக் கேட்கிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

காதில போட்டுக்கிட்டீங்களா சாரல்.
நல்லதுதான். தொடர்ந்த வருகைக்கு ரொம்ப நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா பொற்கொடி. எவ்வளவு நாளாச்சு.
எப்படிமா இருக்கிறீர்கள் நலமா.
நான் எப்படி மறப்பேன். நீங்கள், ப்ரியா எல்லாம் ரெகுலர் விசிட்டர்ஸ் ஆச்சே.
'இப்பவும் கண்டுகொண்டதற்கு ரொம்பவும் நன்றிமா. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

துளசி கோபால் said...

ஹைய்யோ:-)))))))))))

நீங்களும் 'கேட்டுக்கோடி உருமி மேளம்'தானா?????????

அன்புடன் அருணா said...

ஆஹா சூப்பர்!