Blog Archive

Friday, October 07, 2011

அக்டொபர் படங்கள் பிட் போட்டிக்கு

கிணறும் சகடையும்
பழைய ஆட்டுக்கல்லின் குழவி. ஒரு படி அரிசியைக் கூட சுலபமா அரைக்கும். நான் அரைத்திருக்கிறேன்.:)
நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால்  வாங்கிய  கூடை நாற்காலி
அதுக்கு ஒரு இருபது வருடத்துக்கு முந்திய  மேஜை
பழைய படம்
பாத்திரப்  பெட்டி. சீதனமாக வந்தது.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

27 comments:

ஸ்ரீராம். said...

பழகிய பொருட்கள்------ பழைய பொருட்கள்--- படங்கள் நன்றாக இருக்கின்றன. தீம் பழைய பொருட்கள் பற்றியா? ஆட்டுக்கல் குழவி பெரிய சைஸாக இருக்கிறது. எப்படி இதை வைத்து அன்று மாவு அரைத்தீர்களோ...ஆச்சர்யம். வெற்றி பெற வாழ்த்துகள்.

சகாதேவன் said...

ப்ரெசிடென்ட்பஞ்சாக்ஷரம்
படத்தில்
//யாரோ
நீயாரோ
பேரழகு
என்பதுன்
பேரோ//
டி.எம்.எஸ்ஸும்
சுசீலாவும்
ஜி.ராமனாதன்
இசையில்
பாடும்
பாட்டு
எனக்கு
ரொம்ப
பிடிக்கும்.

சகாதேவன்

பி.கு.
என்கீபோர்டில்
ஸ்பேஸ்
பட்டன்வேலை
செய்யவில்லை.
ஸாரி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
தலைப்பு ''மறந்து போன பொருட்கள்.
நாங்கள் மறக்கவில்லை உபயோகப் படுத்திக் கொண்டுதான் இருந்தோம்.:)
குழவி இவ்வளவு பெருசு. இது இருந்த ஆட்டுக்கல் மஹா பெரிசு.
கிட்டத்தட்ட பதினைந்து பேருக்கு ஒரு நாள் டிபனுக்கு அடை மாவு அரைக்கலாம். கையெல்லாம் எரியும்.
நன்றி மா.
பழைய ரேடியோக்ராம் தேடிப் பார்த்தேன். காயலானுக்குப் போயிடுத்தோ என்னவோ.

ராமலக்ஷ்மி said...

காலம் மறந்து வருபவற்றைத் தேடிப் பிடித்து படமாக்கியிருக்கிறீர்கள். அருமை. குழவி இத்தனை பெரிதாக நானும் பார்த்ததில்லை:)!

ஹுஸைனம்மா said...

ஆஹா, இத்தனைப் பொருட்களா!! இந்த மாதப் போட்டியில் நிச்சயம் ஒரு பாட்டிதான் ஜெயிப்பாங்கன்னு நினைக்கிறேன். :-)))))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் சகாதேவன்.
எனக்கும் ப்ரசிடெண்ட் பஞ்சாக்ஷரம்
பாடல்கள் பிடிக்கும்.
நாடகமாக வந்தபோதும் பார்த்திருக்கிறேன்.
கீபோர்ட் பிழையெல்லாம் பார்த்தால் நாம் சொல்ல வந்தது நின்று போய்விடுமே!அதனால் பரவாயில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா,
இதெல்லாம் மறந்த பொருட்கள். சிலசமயம் என்னையே கூட மியூசியத்தில வைக்கலாமோன்னு நினைக்கிறேன்:)))
வெற்றி எல்லாம் எட்டா தூரம் .
கலந்து கொள்ளும் ஆசைதான் எனக்கு.
மிகவும் நன்றிமா.

மாதேவி said...

பார்ப்பதற்கு அரிய பொருட்கள்.

வெற்றிக்கு வாழ்த்துகள்.

எனது பிறந்த வீட்டிலும் இப்படி ஒரு மேசை இருக்கிறது. படம் எடுத்து வைத்துள்ளேன்.பின்புபோடுகின்றேன்.

சாந்தி மாரியப்பன் said...

எங்க சித்தி முன்னாடி இருந்த கிராமத்து வீட்லதான் முதன்முதல்ல இப்டியொரு குழவியைப் பார்த்து மலைச்சுப் போயிட்டேன்..

உங்க வீட்டுக்குழவியும் ஜோரா இருக்குது. இதுல அரைக்கிறதுக்கே எனர்ஜிக்குன்னு தனியா சாப்டணும் போல :-))

நானானி said...

எல்லாமே 'பட்ட பழசாயிருக்கே!'

Thenammai Lakshmanan said...

அட இவ்வளவு பொருட்களையும் இன்னும் வைத்திருக்கிறீர்களா.. க்ரேட்..:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

காண கிடைக்காத அறிய பொக்கிசங்கள் படங்களை... தேங்க்ஸ் வல்லிம்மா...

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா ராமலக்ஷ்மி.
குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது
பின்னூட்டத்துக்குப்பதிலெழுதக்கூட நேரம் ஆகிறது.
பழசை மறக்கக் கூடாது என்பதில் நான் சேர்த்து வைத்திருக்கும் பொருட்கள் இன்னும் இருக்கு;) நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா, உங்கள் டிரங்குப் பெட்டியைத்தான் நினைத்துக் கொண்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி கட்டாயம் படத்தைப் போடுங்கள் எனக்கும் அந்தச் செய்தியைச் சொல்லுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், சாப்பாடு உள்ளபோனால் இதைத் தள்ள முடியாதுமா.
இதற்கு மேல் அழகான முக்காலடிக்கு ஒரு பிடியும் இருந்தது. பின்னால் புழக்கடையை மாற்றி அமைக்கும் போது அது எங்கயோ போய்விட்டது.:(

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நானானி. நம்மளை மாதிரி நம் பொருட்களுக்கும் வயசாகிவிட்டது. பட்ட பழசு:)நம்ம ஊர் வழக்கு.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா தேன்.
எதையும் சுலபத்தில் போட்டு விட மாட்டேன். என் குழந்தைகள் கோபத்துக்கு ஆளாவதும் இந்தப் பழக்கத்தினால்தான்:)

Geetha Sambasivam said...

கல்லுரலில் கிட்டத்தட்ட குழவி எட்டாமல் படுத்துக்கொண்டு அரைத்தது உண்டு. அவ்வளவு பெரிய கல்லுரல்,குழவி இரண்டு கைகளாலும் பிடிச்சு அரைக்கணும். இப்போ கோவிலுக்குக் கொடுத்தது, அங்கேயும் பயன்பாட்டில் இல்லை. சென்னையில் எங்க வீட்டில் கொல்லைத் தாழ்வாரத்தில் கல்லுரல், அம்மி புதைத்திருக்கோம். ஒரு அவசரம்னா பயன்படும்னு. நல்லதொரு நினைவுப் பதிவு. தமிழ்மண நக்ஷத்திரத்தை வாழ்த்த வந்தேன். நக்ஷத்திரம் அடுத்த வாரம் தான் மின்னுமா?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா .அப்படித்தான் இருக்கும். கூட ஒருத்தர் இருந்தாத்தான் மாவு அரைக்க முடியும்.

கல்லுரல், அம்மி யெல்லாம் தூக்கிப் போடக்கூடாத சமாசாரங்கள்.

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிமா.

ராமலக்ஷ்மி said...

அட்வான்ஸாக நானும் சொல்லிக்கறேன். நட்சத்திர வாழ்த்துக்கள்:)!

இராஜராஜேஸ்வரி said...

அருமையான் நினைவுகளை மலரச்செய்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

அப்பாதுரை said...

மறந்து போன பொருட்களா? என்ன அப்படிச் சொல்லிட்டீங்க?! மறக்க முடியாத பொருட்கள்னு சொல்லலாமா?

ஆட்டுக்கல் குழவியை எடுத்துக் கழுவி வைக்கச் சொல்வார்கள். பட்ட பாடு இருக்கிறதே...

அப்பாதுரை said...

நாற்பது வயதுக் கூடை நாற்காலிக்குப் பக்கத்தில் ஹ்ன்டெய் .. interesting contrast.. திட்டமா தற்செயலா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜெஸ்வரி, வருகைக்கும் நல்ல கருத்துக்கும்
மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை இன்னும் உபயோகத்தில்தான் இருக்கின்றன.
அந்த ஹ்யுண்டாய் தரை விரிப்பு, தூசிகள் உல்ல வராமல் இருக்கப் போடப்பட்டது.
பேரனுக்குக் கால்கள்(தவழும்போது) குத்தியதால் அதைத் தள்ளிப்
போட்டுவிட்டேன்.:)
இருக்கும் இடத்திலேயே நாற்காலியையும் படம் பிடித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

துரை, நீங்களும் குழவியெல்லாம் அலம்பி இருக்கிறீர்களா.
நான் பார்த்த துரையை அப்படிக் கற்பனை செய்தால்:))