Blog Archive

Wednesday, August 31, 2011

கணபதியே வருவாய்!

   

ஆதிமுதலான

ஓம் காரப் பெருமானே


எம்

அன்பு கணபதியே


மயிலை

லஸ் முனையில்


நவக்கிரஹ

கணேசனாக அமர்ந்து


நினைத்தால்

ஓடிவந்து கைகொடுக்கும்


தும்பிக்கையானே

கோலாஹலாமான

பந்தலில் இன்னிசை முழங்க உன்


சதுர்த்தி

நாள் அரங்கேறிக் கொண்டிருக்கும்.


நான்

இங்கிருந்தே உன் விபூதியைத் தரித்து உன்னையும் துதிக்கிறேன்.


அன்பர்

துயர் நீக்கி அருள் புரியும்


உன்னை

என்றும் மறவாமல் இருக்க அருள் புரிவாய்.

லஸ்பிள்ளைய்யாருக்கு எங்கள் தலையாய நமஸ்காரங்கள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, August 25, 2011

விமானப் பறவைப் பார்வை

வானமெனும் வீதியில்
உலா வரும்  மேகக் கூட்டம்
ஆல்ப்ஸ்  மலைத்தொடர
 ஆஸ்திரியா  நாடு
பனி மூடிய மலைச் சிகரங்கள்.
பல பயணங்களில் ஜன்னலோர இருக்கைகள் கிடைப்பதில்லை. இம்முறை கிடைத்தது.
சூரிக்கில் விமானம் பறக்க ஆரம்பித்ததுமே 
படங்கள் எடுக்கும் ஆர்வம்  தலை தூக்கியது.
பகல் வேலை,மேகங்களும் மறைக்கவில்லை. கீழே தென்பட்ட காட்சிகளையும் ,வானத்தின்  வர்ண வேடிக்கைகளையும் படம் எடுக்க
முடிந்தது. துபாயின்  இரவு விளக்குகளின்  வெளிச்சமும் அதிகமான போனஸ்.:)




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
துபாய்  நகரம்
Posted by Picasa

Thursday, August 18, 2011

நீந்துகின்ற வெண்ணிலா






































வெண்ணிலா வேளையில்


நான் விழித்திருந்தேன்

எண்ணிலாக் கனவுகளில் எதை எதையோ நினைத்திருந்தேன்.



அம்மாவுடன் ரசித்த நிலவு

கணவருடன் நடந்த நிலவு

பிள்ளைகளுடன் சோறூட்டிய நிலவு

இன்று நட்புகளுடன் உரையாட

இந்த நிலவு.

எங்கிருந்தாலும் வந்து எட்டிப் பார்க்கும் நிலவே

என்றுமே நீ எனக்குச் சாட்சி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, August 15, 2011

சுதந்திர நாள் வாழ்த்துகள்





எப்போதும் முன்னேற்றம்

பெண் சுதந்திரம்  வளரட்டும்

வெற்றிப் படிகளில்
 ஏறுவோம்
தண்ணிலவு போலச்
குளிர்ந்திருக்கட்டும் நம் நாடு
அடிமைகளாக வாழ மாட்டோம்

 


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Sunday, August 07, 2011

வீடு .....




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பயணங்கள்  ஆரம்பிக்கும் போது   உற்சாகம். உடல் களைப்பு
 தெரிவதில்லை..
மனம் நிறைந்த  அனுபவங்களுடன்  அடுத்த கட்டத்துக்கு வரும் போது
வீட்டை   நெருங்கும்  எதிர்பார்ப்புகளும்,சிறிதே அச்ச்சமும் எழுவது
பழகி விட்டது.

சுவிட்சர்லாந்த்  வந்து சேர்ந்தோம். இங்கேயும் வெயில் வரலாறு கானாததாம்:)
இன்று மழை உண்டு. அதனால்  வெப்பம் தணியும்.

முன்னைவிட

வயதானவர்களைப் பார்க்க  முடிகிறது.
இந்த கோடை
முடிந்ததும்  வழமையான   உற்சாகத்துக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
விடுமுறையில் சென்ற குழந்தைகள் வீடு திரும்ப நகரமும் உயிர் பெறும்-
சில மழைக் காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



Posted by Picasa