Blog Archive

Sunday, April 03, 2011

1954லிருந்து 1960 வரை ஒரு நினைவுப் பயணம்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்இந்தப் படம் பார்க்கும் போது பள்ளி நாட்களில் சனிக்கிழமை அனேகமாகக் கட்டு சாதம் எடுத்துக் கொண்டு
 கண்மாய்க்கரை போவோம். தண்ணீர் இந்தக் கண்மாயில்   இருந்து  நாங்கள் பார்த்ததில்லை.

ஆனால் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கும்.

அதில் தொங்கும் விழுதுகளில் ஆடினதுண்டு.

அம்மா கொடுக்கும் டிபன் தூக்கில் தயிர்சாதமும் வறுத்த மோர்மிளகாயும் தான் இருக்கும்.


இங்கயும் அதே கரியடுப்பும், விறகடுப்பும் தான்.

காலை வேளையில் பழையசாதம் மோர். நார்த்தங்காய், இல்லாவிட்டால் கத்திரிக்காய், கொத்தவரங்காய் வற்றல்:))


ஆஹா, அந்த வாசனையை என்ன சொல்வது. அம்மா கையில் பாகற்காயும், கருணைக்கிழங்கும் கூட பிரமாதமாக இருக்கும்.


நாம் இப்போது 1954ஆம் வருட ஜூன் மாத, ஒரு திங்கட்கிழமை மதியத்துக்கு இல்லையா போகணும்!!


அந்த 12 மணி வெய்யிலில் தம்பியிடமும் சொல்லாமல் அவனைத் தனியே விட்டு விட்டு(அவனுக்கு 5 வயது)

தனியாக வரப் பயமாக இருந்தாலும்,

அநியாயம் நிகழ்ந்தது போல ஒரே கோபம்,அழுகை.

கதவைத் திறந்த அம்மா, தம்பி எங்கே என்று கேட்டாலும் ,சாப்பிடலையா என்று விசாரித்தாலும் பதில் சொல்லாமல், பள்ளியில் நடந்ததை மட்டும் சொல்லி நான் இனிமேல் ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று தீர்மானம் சொல்லியாச்சு.

அம்மாவுக்கு ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் சிரிப்பு.

சரி அப்பா வரட்டும், விசாரிக்கலாம் என்று தட்டெடுத்து சாப்பாடையும் எடுத்து வைத்தார்.

சாப்பாடு உள்ளே போனதும் தம்பியைத் தனியே விட்டது

கவலை கொடுத்ததால் மீண்டும் பள்ளிக்கு ஓடி அவனைக் கைப்பிடித்து அழைத்து வந்தேன்.


அப்பா சாப்பிட்டதும் ப்ரச்சினையை அம்மா சொன்னார்.

உனக்கு அவன் உன்னொட படிப்பதால் என்ன கஷ்டம் என்று அப்பா கேட்டார்,.

அதெப்படி அக்காவும் தம்பியும் ஒரே வகுப்பில் இருக்க முடியும் என்பது என் வாதம்.

அப்பா தன் சைக்கிளில் எங்களை ஏற்றிக் கொண்டு

பள்ளி வந்து பெரிய டீச்சரைச் சந்தித்தார்.


அவர் எனக்காக வந்தார் என்று நான் நினைத்தாலும், உண்மை அது இல்லை.

அவர்களிடம் தம்பியின் வயதுக்கு ஏற்றது இரண்டாம் வகுப்பு என்றும் அதற்கு உண்டான பாடங்களைப் படித்தால் சரியாக இருக்கும் என்றும் சொன்னதும்,தலைமை ஆசிரிய்ரும் ஏற்றுக் கொண்டார்,. நானும் தம்பியும் எதிர் எதிர் வகுப்பில் அமர்ந்தோம்.

அப்படியிருந்தும் அவன் 15 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து விட்டான்:))

திருமங்கலத்தில் அப்போது இரண்டு ஹைஸ்கூல்கள் இருந்தன. ஒன்று பெண்களுக்கான போர்ட் ஹைஸ்கூல்,

மற்றது பி.கே.என். நாடார் பள்ளி ஆண்பிள்ளைகளுக்காக.


ஒரே ஒரு நீளமான மெயின் ரோட்.

பஸ் நிலயத்திலாரம்பித்து ஆனந்தா திரை அரங்கத்தைக் கடந்து,மீனாட்சி பவன் ஹோட்டல்,தபாலாபீஸ்,அங்குவிலாஸ் வீடு,

சின்னக்கடைத்தெரு,சன்னதித் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் வழியாக,வாடிப்பட்டி,

உசிலம்பட்டி,கல்லுப்பட்டி,சோழவந்தான் என்று பஸ்கள் நம் வீட்டு வாயிலாகப் போகும்.


நாங்கள் இருந்த வீட்டுக்குப் பின்னால் ஒரு முனீஸ்வரர் கோவிலும் உண்டு.

அங்கே கேட்கும் உடுக்கைச் சத்தம் கேட்டு ஜுரம் வந்ததும் உண்டு.

பக்கத்து வீட்டில் நாலைந்து குடித்தனங்கள் இருந்தார்கள். ஒரு வீட்டில் கிளி வளர்த்ததால் அங்கேயெ இருந்து,அவர்களது இட்லிமெஸ்ஸுக்கு சட்டினி அரைத்துக் கொடுத்த அனுபவமூம் உண்டு:))

வாரமொருமுறையாவது அங்கிருந்து நான்கு அணாவுக்கு இருபது இட்லி நிறைந்த பாத்திரம் எடுத்து வந்ததும்,

ஒரு அரசு மருத்துவமனையில் அடிபட்டுக் கொள்ளும்போதெல்லாம் டின்க்சருக்கு அலறிக் கட்டுப் போட்டுக் கொண்ட நினைவும் உண்டு.


ஒரு தடவை திருமங்கலம் வழியாக ஒரு சுதந்திரக் கொடியேற்றத்துக்கு வந்த திருமதி இந்திரா காந்திக்கு மாலை போட எங்கள் பெரிய டீச்சர் அழைத்துப்போனதும்



முதல் முதலாக ஒரு வெள்ளைக் கதர்ப் புடவை கட்டி தலையில்
முக்காடு போல அணிந்திருந்த ஒரு அபூர்வ பெண்ணைப் பார்த்ததும், சொல்ல வந்த ஜய்ஹிந்த் மறந்ததும் இப்போது சிரிப்பு வருகிறது.

அவர்களுடன் திருC.R.பட்டாபிராமன் என்பவரும் வந்திருந்தார்.


எங்கள் மூவரின் பல இனிய நாட்கள் இங்கேதான் கழிந்தன.

பெரிய தம்பி வீட்டுக்குள் நிறைய விளையாடுவான். சின்னத்தம்பிக்கு வெளியே வந்து விளையாட வயது பத்தாது.



ஆகக் கூடி ஊர் சுற்றியது நான் ஒருவளே:))

21 comments:

வல்லிசிம்ஹன் said...

நாச்சியார் ஆரம்பமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.
எழுத வகை செய்த தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும், என் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும்
இன்னும்ம்ம்ம்ம் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும்நன்றியையும் தெரிவித்தூஊஉ க் கொள்ளுகிறேன்.:)

தருமி said...

ஐந்தாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள். தொடரட்டும்....

திவாண்ணா said...

வாழ்த்துக்கள் அக்கா! ஏன் திடீர்ன்னு மலரும் நினைவுகள்ன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்! இப்பதான் தெரியுது! :-)))

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் யாதோன் கி பாராத். ஐந்தாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

ஐந்து வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் அக்கா.

நினைவு பயணம் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

ஐந்தாவது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள்..

நினைவுகள் ஜிலுஜிலுன்னு இருக்கு வல்லிம்மா :-))

வல்லிசிம்ஹன் said...

வரணும் தருமி, பதிவுலகத்திலியும் அந்த நாள் நினைவுக்குப் போய்விட்டேன் உங்கள் பெயரைப் பார்த்ததும்.
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

திடீர் நினைவுன்னே சொல்ல முடியவில்லை தம்பி வாசுதேவன்.
பழசிலியே மூழ்குகிறேனோ என்று சந்தேகமே வருகிறது எனக்கு:)
வயதானதற்கு இன்னோரு அடையாளம்:) வாழ்த்துகளுக்கு நன்றி, தான்கீஸ். எல்லாம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
எவ்வளவு பெரிய வடிகாலாக இந்தப் பதிவுகள் இருந்திருக்குன்னு சொல்ல முடியாது.
எத்தனை நல்ல உள்ளங்கள் பழக்கமாகி விட்டன!.
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தங்கச்சி கோமதி.

சீக்கிரமே நகர்ந்துவிட்டன இந்த ஐந்து ஆண்டுகள்.
நண்பர்கள் துணையால் நானும் பதிவாளர் என்ற அட்டையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறேன்.
மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல்.
நீங்கள் எல்லோரும் கூட இருப்பதால்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் அம்மா.
சாதனை எழுத்து என்று இல்லை. சாதாரண எழுத்துக்கும் நீங்கள் துணை நிற்பதே இதற்குக் காரணம். வாழ்த்துகளுக்கு ரொம்பவும் நன்றிப்பா.

ராமலக்ஷ்மி said...

ஐந்து வருட நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொடருங்கள். தொடர்கிறோம்:)!

//கவலை கொடுத்ததால் மீண்டும் பள்ளிக்கு ஓடி அவனைக் கைப்பிடித்து அழைத்து வந்தேன்.//

க்யூட். இதுதான் அக்கா:)!

நானானி said...

ஐந்து வயது ‘நாச்சியாருக்கு’ அன்பான வாழ்த்துக்கள்!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி,
வாழ்த்துகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மா. ஆமாம் அவனை அன்னிக்குப் பள்ளியில் விட்டு வந்திருந்தேன் என்றால் என் மனசே என்னை வருத்தி இருக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க நானானி, ஓடிவிட்டன நாட்கள்னு சொல்லுவோம். இப்போ வருடங்களே ஓடிவிட்டன.
நன்றி மா.

Jayashree said...

வாழ்த்துக்கள் :))

மாதேவி said...

கட்டுச் சாதத்துடன் கண்மாய்கரைக்குச் சென்றது இனிய நினைவாய் கண்முன்னே ஓடுகிறது.

நாச்சியாரின் ஐந்தாவது நிறைவுக்கு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜயஷ்ரீ. ஐந்து வருஷங்கள் எப்படி ஓடி
போச்சுனு தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. நல்ல பழக்கங்களை விட்டு விடவும் செய்கிறேன். அதுதான் சிரமம்:(
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா.

இராஜராஜேஸ்வரி said...

படங்கள் அருமை.மல்லிகை மணக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராஜராஜேஸ்வரி.