Blog Archive

Thursday, December 30, 2010

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அனைவருக்கும்  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் .


மனம் நிறைந்த மகிழ்ச்சியும்,
உடல் நிறைந்த ஆரோக்கியமும்,
இனிய நட்புகளும் சூழ,
உற்றார் உறவினரோடு 
2011  சிறக்க எங்கள் அனைவரின்   இதயம் கனிந்த வாழ்த்துகள்.
ரேவதி மற்றும் நரசிம்ஹன் குடும்பம்.

Friday, December 24, 2010

மறந்த சங்கதிகள்

இலந்தைப் பழமும்  கொடுக்காப்புளி மரமும்
அமீரகம்  போயிருந்தபோது   பார்த்த கொடுக்காப்புளி  மரத்தைப் பார்க்கச்  சந்தர்ப்பம்
கிடைத்தது.  கீழே கிடந்த பழுப்புத் தோலும் சிவந்த பழமுமாகக் கிடந்த கொடுக்காப்புளி  

பழங்களைப் பார்த்த போது தோன்றிய  நினைவுகள்  பல.
பள்ளிக்கூட வாயிலில் விற்கும் இலந்தப் பழம், ஐஸ் குச்சி,கமர்கட்,கடலை  மிட்டாய்,எள்ளுப் புண்ணாக்கு மிட்டாய்  எல்லாம்  நினைவில் நடனமாடின.

கொடுக்காப்புளிக்காவது அம்மா ஓரணா கொடுப்பார்.  மற்றவை வாங்கவே கூடாது:)
என்ஜிரண சக்தியின்  மேல் அத்தனை  நம்பிக்கை அவர்களுக்கு.


தங்கமணியும், சீதாலக்ஷ்மியும் வாங்கும் நெல்லிக்காயும்,இலந்தம்பழமும் 
பண்டமாற்று  முறையில் என் தோள் பையில் வந்து சேரும்:)
அதற்கு நான் மாற்றாகக் கொடுப்பது, அம்மா   இடைவேளை போது சாப்பிடக் கொடுக்கும் தட்டையும், முறுக்கும்  தான்.

அந்தத் தோழிகளைத்தான்   சிநேகத்தோடு   நினைக்கிறேன். எந்தக் குடும்பத்தைக் கட்டி மேய்த்துக் கொண்டிருக்கிறார்களோ:)
என் பெண்ணிடம் இந்தக் கண்டிஷன்   எல்லாம் நான் போடவில்லை.
உனக்கு  என்ன விருப்பமோ அதை  , சுத்தமா   இருக்கா என்று    பார்த்துவிட்டு வாங்கிக் கொள் என்றும் சொல்லிவிடுவேன்.


  பிள்ளைகள் இருவருக்கும்  இந்த ஆசை வந்ததில்லை. அது என்ன  விஷயம் என்று தெரியாது:)நிறைய விளையாடத்தான் ஆசை காட்டுவார்கள்.
மாடவீதியில் வள்ளிக்கிழங்கும்,நெல்லியும் மாங்காய் இஞ்சியும் கொட்டிக் கிடக்கிறது.

ஆசைக்கு   ஆறே  எண்ணம்  நெல்லிக்காய் வாங்கி வந்தேன்.

இதெல்லாம் எழுத   ,கருத்து கிடைத்த இடம் ஒரு பள்ளிக்கூட வாசல். அரைப் பரீட்சை முடிந்து பிள்ளைகள் களிப்புடன் ஓடி வந்த    வேகம்.
 கிளிகளும்,குயில்களும் ஒன்று சேரக் கூடிக் குலவுவது போல   ஒரு கலவையான ஒலி.
சந்தோஷத்தின் பிரதிபலிப்பு.

அனைவருக்கும்  இனிய க்றிஸ்துமஸ் திரு நாள்   நல் வாழ்த்துகள். 






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, December 22, 2010

சின்ன அரும்பு மலரும்






























  நீ இருக்க.தாத்தா இருக்கார். இந்த வீடும் ஸ்பெஷல் வீடு.!
எனக்கு ஓட்ட  குட்டி கார் இருக்கு.
விளையாட   டாய்ஸ் இருக்கு.
எனக்கு இந்தியா   ரொம்பப் பிடிக்கும். வார்ம்  ஆக இருக்கு.இனிமேல்  நான் இங்கயே  இருக்கேன் பாட்டி.          











                                            






எனக்கு மனம் நிறைந்து விட்டது......
இதைவிட

வேற சொர்க்கம் உண்டா.?
















Thursday, December 16, 2010

மார்கழி வந்தது.துதி பாடும் மாதமும் வந்தது

மார்கழி மாதத்தின்   தனித்துவம் மனம் விழிப்பது. நேற்று வரை  அதிகாலை என்றால் ஐந்தரை மணி.





இந்த உடலுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது.

இன்றோ நான்கு மணிக்கு விழிப்பு வந்தாச்சு.கண்ணனையும் கோதையையும் நினைக்க 
  மனதூசு அகற்றி, தீப மங்கள ஜோதியில் லயித்து அனைவரும் இனிதே  வாழப் பிரார்த்திக்கலாம்
.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, December 13, 2010

விடுமுறையில் இருக்கிறேன்:)

டிசம்பர் மாதம் பிறந்தது. வேடந்தாங்கலில்   பறவைகள் கூடின.
பாட்டும் பரதமும்     , காண்ட்டீனுமாக அலையும்   மக்கள்.

அவசியத்துக்காகவும், ஆதரவுக்காக்கவும் சில விருந்தாளிகள் வரவு.
இவையெல்லாம் செய்திகள்.

இவையெல்லாம்  நம்ம வீட்டுக்கும் பொருந்தும்.
முக்கியப்பட்டவங்க ஒரு மூணு வாரம் தங்குவதற்கு வரோம்
அப்படீனு சொன்னதும்
நாம   தட்ட ஆரம்பித்த தூசி  வெளில  போகிற மாதிரி போயிட்டுத் திரும்ப வந்து உட்கார்ந்து கொள்ளுகிறது.

இப்பதான் கொசுக்களும் சொந்தம் கொண்டாட ஆரம்பிக்கின்றன. என்ன இருந்தாலும் சென்னை ரத்தத்துக்கும், சிகாகோ ரத்தத்துக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க வேண்டுமே:)

பாதி படித்த  புத்தகங்களை எல்லாம்  ஒரு பெரிய பையில் போட்டு   கட்டிலுக்கு அடியில் தள்ளியாச்சு.

நாலு வாரம் கழித்துத் தேடும்போது மறந்து தொலைக்கும்.

வரவங்களுக்கு   கெமிக்கல்ஸ் நெடி ஆகாது.
அதனால இரண்டு நாட்கள் முன்னாடியே பேகான்  ஸ்ப்ரே  அடித்து
அவங்க தங்குமிடத்தைச் சுத்தம் செய்தாச்சு.



ஓடாத ட்ரெட்மில்லை ஓரம் தள்ளி  அதன் மேல் பாய் படுக்கைகளைச் சுத்தி வச்சாசு.
பேரன் அது மேல ஏறி தேகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தால்...அந்தப் பயம்தான்.!!
தாஜ்மகால்   பார்க்க அழைச்சுண்டு போறியா பாட்டி?
 நம்ம ஊர்லியே நிறைய இடங்கள் இரூக்குப் பா. அதைப் பார்க்கலாம்.
ஓகே.


இஸ் இட் ஸ்டில்   ரெயினிங் பாட்டி.?
சின்னவனின் ஆசை. தண்ணீரில் ஆட.


 இல்லை ராஜா.
ஒ:)
அதனால இன்னும் மூணு வாரத்துக்கு உங்க எல்லாருக்கும் என்  கவிதை,கதை,கட்டுரை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கொடுக்கிறேன்.

எஞ்சாய்  மக்களே:)







                                                               


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, December 10, 2010

மீண்ட காட்சி

வாழ்க்கைக்கு  இரு கரைகள்.
மேடும் உண்டு
பள்ளமும் உண்டு
இன்று
தொலைக்காட்சியில்  ஒரு  அதிர்வு
வேறு நினைவை மீட்டது.
வேறு குதிரைகள்
வேறு  மக்கள்
வலி தாங்காத முகங்கள்
 கொதித்து அழும் உள்ளங்கள்
தாக்கப்பட்ட  அரசு
குதிரைக் காலில் மாட்டிய வீரன்
எங்கேயோ பார்த்திருக்கோமெ
ஓ,ஜாலியன் வாலா பாக்.!!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, December 09, 2010

காலையில் தினமும்

காலையில் தினமும் கண்விழித்தால்
கண்ணில் படும் இறைவனிடம்
வேண்டுவது என்ன.
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி.
இன்றாவது ஒரு லீக், ஒரு ஸ்காம்,
இல்லாமல் பத்திரிகை படிக்கவிடு

ஆண்டவன் சொன்னான்
பத்திரிகை  வேண்டாம்
தொலைக்காட்சி வேண்டாம்
சும்மா இருத்தலே சுகம்.
காலங்கள் மாறினாலும்
 காட்சிகள் மாறாது.

ஒவ்வொரு நாட்டுக்கும்
ஒவ்வொரு அழுக்கு.
ஒவ்வொரு நாட்டுக்கும்
ஒவ்வொரு அழகு.

டிஸ்கி.
இது கவிதை இல்லை.
வெண்பா கண்டிப்பா இல்லை.
புதுக் கவிதை இல்லை.
மரபும் நமக்குப் பழக்கம் இல்லை.
இது வெறும் வயிற்றெரிச்சல்.
வெறும் கையாலாகாத்தனம்!
**********************************

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Wednesday, December 08, 2010

முதன் முதலாக....பள்ளிக்கூட அனுபவங்கள்


ஸ்விஸ் பேத்தி
மாண்டிசோரி போக ஆரம்பித்துக் கிட்டத்தட்ட  மாதங்கள் ஆகப் போகிறது.
தம்பி பிறந்ததும் , அம்மாவிடம் பெண்ணுக்குப் பாசம் அதிகரித்துவிட்டது.
நானும் உதவிக்கு இருக்கிறேனே  என்ற நல்ல எண்ணம்தான்.:)

அக்காவாகத் தன் கடமைகளைச் சரியாகச் செய்வதில் அவ்வளவு ஈடுபாடு.!!
அந்தக் குட்டிப் பாப்பாவையும் பார்க்கணுமே.அக்கா குரல் கேட்கிற பக்கமெல்லாம் தலையைத் திருப்புகிறான்.

ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை , அவளுக்குப் பள்ளி விடுமுறை. நான் மகனிடம்
என்பா  அது ஸ்கூல் போகலியேன்னு    கவலைப் படறதா என்றால் , அவன் பலமாகச் சிரிக்கிறான்.

அது  ,படுக்கையை விட்டே எழுந்திருக்கவில்லை ,
எங்கே எழுந்தால்   ஸ்கூலுக்குப் போகச் சொல்லிவிடுவார்களோ என்று அந்த டாபிக்கையே எடுக்க மாட்டாள்.
இத்தனைக்கும் பள்ளியில் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்வதில் அத்தனை மகிழ்ச்சி.  அவ்வப்போ ஜெர்மனில் வேறு பாடி அசத்துவாள்.

அங்கே  கதை அப்படியென்றால் அமெரிக்காவில், மூன்று நாட்கள் பள்ளி அழைத்துப் போவதற்கே,
ஜகஜ்ஜாலம் செய்ய வேண்டி இருக்கிறதாம்.
நாலு வயசும் பூர்த்தியாகிவிட்டது.

பள்ளிக்குப் போகவே பயமாக இருக்கிற்தாம் அந்தப் பேரனுக்கு. ஏகப்பட்ட வேலைகள்   தருகிறார்களாம். ஐய்யாவிற்கு   யாரும் சொல்லிச் செய்வது என்பது ஏற்புடையது கிடையாது. :)
ஏண்டா  இப்படிச் சொல்றே என்று கேட்டால் நீ தனியே  இருப்பியேம்மா'' என்று கண்ணைக் கசக்குகிறானாம்:)
இதே போல இரண்டு மாதங்கள் ஓடி விட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் பிறந்த நாளுக்கு டோநட்ஸ் எடுத்துக் கொண்டு போய்த் தன் கூடப் படிக்கும் குழந்தைகளுடன்
பகிர்ந்து கொண்டான்.
தன் பெற்றோரும் வந்தததால் அன்று பள்ளிக்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லையாம்.

அங்கெ  அவனது   மிஸ் சூசன்,எப்போதும்போல  அமெரிக்கன்  ப்ளேட்ஜ் ஏதோ ஒன்று இருக்காம். அதைச் சொல்லிவிட்டுப் பள்ளி துவங்குவார்களாம்.
அதற்கு எல்லோரும் தங்கள் தங்கள் இதயத்தில்  அதாவது சட்டைக்கு மேலே கையை வைத்துச்   சொல்லணுமாம்.
இவன் தன்னிடத்தில் நின்று கொண்டு முகத்தில்  சீரியஸாக வைத்துக் கொண்டு ,அப்பா அம்மாவைத் தேடினானாம்.
அப்பா கையில் வீடியொ வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தானாம்.
உடனே  அம்மா கண்களை நேராகப் பார்த்து,அப்பா பக்கம் கை காட்டி, அப்பா  தன் கையை நெஞ்சின் மேல் வைத்துக் கொள்ளச் சொல்லு என்று  சைகை
  செய்யறானாம்:)

பிழைச்சுப்பாங்கப் பா. கடவுள் எல்லோர் பக்கமும் இருந்து காக்கட்டும்.








எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Sunday, December 05, 2010

காலைப் பொழுதில் கார்த்திகை மாதம்

மழையில்  குடை  அழகு:)
காலை  5.30 மணி அளவில் வாசல் கதவருகில்
ஒரு மழைக் காலை 5/11/2010
ச்விட்சர்லாண்ட் காலை 4/12/2010
சிகாகோ  காலை 4/12/2010
சிகாகோ  காலை 4/11/2010புகைப்படப் போட்டியில் தலைப்பு அதிகாலை என்று  தந்தார்கள். தீபாவளிப் பரிசாக ஒரு  புது  காமிரா வேறு கிடைத்தது. கேட்கணுமா.தேன் குடித்த நரிக்கு கையில் வடையும் கிடைத்தால் எப்படி:) அதுதான் நிறைய படங்கள் எடுப்பது என்று தீர்மானம். போட்டிக்கு இல்லாவிட்டாலும் அதிகாலையில் போட்டோ எடுப்பதும் அருமையாக இருக்கிறது. நல்ல அனுபவம். கண் கொடுத்த இறைவனுக்கு நன்றி.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Thursday, December 02, 2010

24/7









கணினி     கட்டாய ஒய்வு எடுத்துக் கொண்டது.
தோழி கீதாவின்  உதவியால்  ஒரு நல்ல கணினி  நுட்பம் தெரிந்த  ஒருவரின்
உதவி கிடைத்து இன்றுதான் நானும் கணினியும் சமநிலைக்கு வந்தோம்:)
நன்றி கீதா.
மறு பிறவி எடுத்த மகிழ்ச்சி நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்!








எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்