Blog Archive

Thursday, June 17, 2010

அனைத்து தந்தையர்களூக்கும் தந்தையர் தின வாழ்த்துகள் ஜூன்20



வழி காட்டிய தந்தை,
வருத்தப்பட்டால் தேற்றிய தந்தை

, உயிரின் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களின் நலனையே  நினைத்த என் தந்தைக்கும் என் தம்பிக்கும் என் அஞ்சலிகள். அப்பா,தம்பி உங்கள் உழைப்பு வீணாகவில்லை. முத்தான செல்வங்கள் நேர்மை வழியில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும்  பல மழலைச் செல்வங்கள் வரக் காத்து இருக்கிறேன்.

உங்கள் உறவு,பாசம்
கண்முன்னால் தெரியாவிட்டாலும், அதை வலுப்படுத்த எத்தனையோ சகோதரர்களும்,தம்பிகளும்,பிள்ளைகளும் கிடைத்திருக்கிறார்கள்.

அந்தச் செல்வங்களுக்கு  இன்று  தந்தையர் தின வாழ்த்துகளை மனம் நிறைய
அள்ளிக் கொடுக்கிறேன்.

அணைக்கும் தந்தையைப் பெற்ற செல்வங்கள்  ,நாளை அவர்களது குழந்தைகளையும் இதே அன்பு வழியில்  நடத்திச் செல்லுவார்கள்.

தாத்தாக்களுக்கும்,
அவர்களது பிள்ளைகளுக்கும்,
பிள்ளைகளின்   பிள்ளைகளுக்கும்(நாளைய தந்தையர்)
வாழ்த்துகள். உங்கள் அன்பு செழிக்கட்டும்.





எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

20 comments:

எல் கே said...

nandri madam,

ஆயில்யன் said...

தந்தையர் தின வாழ்த்துக்கள் :)

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு வல்லிம்மா. உங்களுடன் நானும் இணைந்து வாழ்த்துகிறேன்.

தந்தையர் தின வாழ்த்துக்கள்:)!

KarthigaVasudevan said...

ரொம்ப நாளாச்சு வல்லிம்மா உங்க வலைப்பக்கம் வந்து...நலம் தானே ;

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு எல்.கே,
பெண்ணிடம் ஒர் பாசம் மிக்க
வாழ்த்துகளை வாங்கிக்கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஜூன் 20க்கு இப்பவே போட்டுட்டென் ஆயில்யன். என்றுமே நல்ல தந்தையருக்கு இனிய வாழ்த்துகள் உரிமையானது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி உங்கள் கணவருக்கு என்ன பரிசு இந்த வருடம்:)

ஆனந்த லக்ஷ்மியாக நீங்கள் இருக்கிறீர்கள். அப்புறம் சொல்லுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கார்த்திகா, ரொம்ப நாளாச்சு இல்லப்பா.
அதனால் என்ன சீக்கிரமே பார்த்துட்டாப் போச்சு. உங்கள் வீட்டுத் தந்தைகளுக்கு என் வாழ்த்துகள் சொல்கிறேன் மா.

மாதேவி said...

வாழ்த்துத் தெரிவித்த உங்களுக்கும் அனைத்துத் தந்தையர்களுக்கும் வாழ்த்துகள்.

Unknown said...

அனைத்து தந்தையர்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் :))

அபி அப்பா said...

மூன்று வருடங்களுக்கு முன் இதே தந்ததையர் தினத்தில் இரண்டாம் முறையாக நான் தந்தையானேன் வல்லிம்மா. தெரியும் தானே உங்களுக்கு! நேற்று இரவு 11.58க்கு முதல் வாழ்த்தாக வாழ்த்து சொன்ன கார்த்திகா உட்பட வாழ்த்திய அனைத்து சொந்தங்களுக்கும் என் அன்புகள், நன்றிகள். அனைத்து தந்தைகளுக்கும் என் வாழ்த்துக்கள்!

*இயற்கை ராஜி* said...

அனைத்து தந்தையர்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் :))

துளசி கோபால் said...

தந்தையர் தின வாழ்த்து(க்)கள்.


எங்களுக்கு இப்போ இல்லை. செப்டம்பர் மாதம் முதல் ஞாயிறு.

கோமதி அரசு said...

நல்ல அன்பான பதிவு அக்கா.

உங்களுடன் நானும் இணைந்து எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.

தந்தையர் தின வாழ்த்துக்கள்!

ஒவ்வொருவருக்கும் அவர்கள் தந்தை மனக் கண் முன் வந்து நிற்பார்கள் உங்கள் பதிவு படிக்கும் போது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, உங்கள் வீட்டுத் தந்தைகளுக்கும் என் வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுமதி உங்கள் வீட்டுத் தந்தைக்கும் , வரப்போகும் தந்தை(உங்கள் மகன்)க்கும் வாழ்த்துகள்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு அபி அப்பா, எப்படி மறப்பேன் நட்ராஜின் பிறந்த நாளை. போன பதிவிலியே வாழ்த்துச் சொல்லிவிட்டேன்.
உங்களைப்போல நல்ல தந்தையைப் பெற்ற அபிக்கும்,நட்டுவுக்கும் என் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்புத் தங்கை கோமதியின் வீட்டுத் தந்தைகளுக்கும் என் வாழ்த்துகள்.

என் தந்தை இருந்திருந்தால் ரசித்திருப்பாரா தெரியாது. ஆனால் மகிழ்ந்திருப்பார்.
கடமையைத் தவிர வேறு ஏதும் அறியாதவர்களுக்கு நாம் எந்த விதத்தில் நன்றி சொல்லப் போகிறோம்.வருகைக்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க இயற்கை ராஜி.

வாழ்த்துகளை எங்கள் வீட்டில் இருக்கும் தந்தைக்கும் வெளியூரில் இருக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லிவிடுகிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் உங்க ஊர் வேற உலகத்தில இல்ல இருக்கு.
இங்க குளிரினா அங்க சூடு. வெய்யில் அங்க எட்டிப் பார்த்தா எங்களுக்குக் கொஞ்சம் காத்து அடிக்கும்.:)
அதான் ஜூன் மூணாவது வாரம் அங்க செப்டம்பர் ஆகிவிடுகிறதோ. எதுக்கும் உங்க நியூசிலாண்ட் புத்தகத்தை ஒரு கண்ணோட்டம் விட்டுவிட்டுச் சொல்கிறேன்:)