Blog Archive

Tuesday, January 19, 2010

491 சினிமாவின் இரண்டாவது பாகம்

விஞ்ஞானியும் அவரின் குழந்தைகளும்



நூற்றைம்பது நாட்கள் பசியிலும் குளிரிலும் அலைந்த ஹச்கீஸ்


மாயாவும் காப்பாற்றப்பட்ட விஞ்ஞானியும்





மெதுவாக நகரும் மாயா.


எயிட் பிலோ படத்தின் கதை.
இந்தப் படத்தை யு டியூபில் பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=NXkoGlxVbLY
********************************************
ஜெர்ரியின் சின்ன விமானம் புறப்பட்டு ஒரு வட்டமெடுத்துப் பறந்து சின்ன புள்ளியாகும் வரை இந்த ஹஸ்கீஸ் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவன் சொன்னது மட்டும் அவர்களுக்கு அப்படியே பதிந்து விடுகிறது. ,கடுமையான பனிப் பொழிவிலும் அவை அமைதியாகப் பொறுமையாக் அந்த ஐஸ்கட்டி மலையில் கண்களையும் காதுகளையும் மூடியபடி படுத்துக் கிடக்கின்றன.
ஓல்ட் ஜாக் என்கிற நாய்க்கு உண்மையிலியே வயதாகிவிட்டது. பசியும் குளிரும் தாங்கவில்லை.
உடனே எல்லா நாய்களும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துத் தங்கள் மொழியில் சங்கிலியிலிருந்து விடுபடும் எண்ணத்தை உறுதிப் படுத்திக் கொள்கின்றன.

அருமையான உணர்ச்சி அவைகளின் முகத்தில்.
இப்படிக் கூட நடிக்க முடியுமா. பார்வையிலியே இத்தனை பரிமாற்றம் நடக்க முடியுமா என்று யோசித்தேன்.

முடிய வேண்டும். இல்லாவிடில் ஒரு குழுவாக இந்த ஆள் அரவமில்லாத பனிக்காட்டில்,எலும்பு உறையும் குளிரில் ஒரு ஸ்லெட் வண்டியைச் சீராக இழுத்துப்
போக முடியுமா....ஒன்று ,இரண்டு மைல்கள் இல்லை... நூற்றுக்கணக்கான மைல்கள் கணக்கில் பனிப்பிரதேசத்தில் கண்களை மறைக்கும் புயல் நடுவே போகவேண்டும்.

ஒன்றன் பின் ஒன்றாக, மாயா, ஓல்ட் ஜாக்,டியூயி,மாக்ஸ்(ஸ்லெட் டாக்ஸ்) என்று அவர்களின் பயணத்தைதொடங்குகிறார்கள். ஓரிரு கடல் பறவைகள் அவர்களுக்கு உண்வாகின்றன. ஓல்ட் ஜாக் நடக்கமுடியாமல் இறந்துவிடுகிறது.
ஓரிரவில் னார்தர்ன் லைட்ஸ் எனப்படும் அரோரா போரியோலிஸ் என்னும் வடதுருவ ஒளிக்கற்றைகளைக் கண்டு
உற்சாக மிகுதியால் ஓடும் 'டியுயி'' கால் வழுக்கி ஆழ்பள்ளத்தில் விழுந்து இறக்கிறது.
மாயா ,தன் எஜமானன் ஜெர்ரியின் நினைவில் உணவெடுக்க மறுக்கும் நிலையில் தான்
அவர்களை விட்டுச் சென்ற ஜெர்ரி ஷெபர்ட் திரும்புகிறான்.
தாய்நாடு சென்றதிலிருந்து தான் விட்டு வந்த நாய்களை நினைத்துத் தினமும் வருந்தும் அவன், மீண்டும் அங்கே திரும்ப பலரிடம் உதவி கேட்டுப் பார்க்கிறான்.
கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ''மாயா''வினால் காப்பாற்றப்பட்ட விஞ்ஞாஆனிக்கு,அவரது கண்டுபிடிப்புக்காகப் பட்டம் வழங்கப் படுகிறது.
அவரையும் ஜெர்ரி சந்தித்து,மீண்டும் அண்டார்டிகா போக உதவி கேட்கிறான். அவர் மறுத்துவிட,
மனிதர்களின் நன்றி மறத்தல் குணத்தை எண்ணி விரக்தி அடைகிறான் ஜெர்ரி.

விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் டாக்டர், தன் மகன் படுத்திருக்கும் அறைக்கு ,வருகிறார்.
தூங்கும் மகனருகில் உட்காரும் போதுதான் அவனது எழுதி வைத்திருக்கும் குறிப்பு ஒன்று கண்ணில் படுகிறது.
அதில் ''என் தந்தையைக் காப்பாற்றிய நாய்கள் தான் எனக்கு ஹீரோ'' என்ற வாசகம் இருக்கிறது. அடுத்த காட்சியில் விஞ்ஞானியும்,ஜெர்ரி ஷெபர்ட்,அவந்து உதவியாளர்,அவனது காதலியான விமான ஓட்டி அனைவரும் 155 நாட்கள் முடியும் தருவாயில் அண்டார்டிகாவை வந்து அடைகிறார்கள்.

எஞ்சியிருக்கும் மாயா,மாக்ஸ் இன்னும் இரண்டு நாய்களுடன் சேர்ந்து மகிழ்கிறார்கள்.
அதே வேகத்தில் அவற்றை அழைத்துக் கொண்டு திரும்புகிறார்கள்.

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்தது இந்த நாய்களின் நடிப்புதான். என்னதான் பயிற்சி கொடுத்திருந்தாலும்,அவைகளின்
அபார சக்தியும் புத்திசால்த்தனமும் என்னை மிகவும் கவர்ந்தன,.
அதே சமயம் உதவி கிடைக்கும் போது லகுவாக ஏற்றுக் கொண்டு, பிறகு அதை முழுவதும் மறந்துவிடும் மனித குணமும்,
நாய்கள் தானே என்று அலட்சியமாக இல்லாமல் , முயற்சி எடுத்துக் காப்பாற்றும் ஜெர்ரி ஷெப்பர்டின்
அளவுக்கு மீறிய அன்பு சுபாவமும் அழகாகப் படைக்கப் பட்டிருக்கின்றன,.


இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது உண்மையாகவே நடந்த சம்பவம் என்ற செய்திதான்.

எல்லோரும் வாழ வேண்டும்.


















2 comments:

கோமதி அரசு said...

நானும் இந்த படம் பார்த்தேன் ,நாய்களின் நடிப்பைப் பார்த்து வியந்தேன்.

//மனிதர்களின் நன்றி மறத்தல் குணத்தை எண்ணி விரக்தி அடைகிறான் ஜெர்ரி//

கதையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி. வாங்கப்பா.
யாருமே படிக்கவில்லை இந்தப் பதிவை என்று நினைத்தேன்.:)
நன்றிம்மா.