Blog Archive

Wednesday, October 14, 2009

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்




அன்பு உள்ளம் கொண்ட அனைத்துப் பதிவர்களுக்கும் நம் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குச் சொல்லும் வழஅங்கும தீபாவளி நன்னாள் வாழ்த்துகள். தீப ஒளியும், அன்பும்,ஆதரவும், மகிழ்ச்சியும் எப்பொழுதும் பெருகி நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.















































எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, October 04, 2009

அருள்,பொருள்,இன்பம் , தொடர் ,கவிநயாவின் அழைப்பு









அன்னை










திருமணம்





கடவுள்







பொருள்,பணம்...



















அழகு முகங்கள்












அன்புக் கவிநயா ஒரு வலைத் தொடரில் மாட்டிக் கொண்டு, நம்மையும் அதில் இழுத்துவிட்டார்.
தந்த தலைப்போ தாண்டிக் கடந்து வந்த வருடங்களையே விழுங்கிவிடும்:)
 
இந்த வயதில் கடவுள் பக்கம் போய்க் கொண்டு இருக்கிறோம். அதனால் உணர்ந்து எழுதுவது சுலபமே.
அடுத்தது பணம். பொருளில்லாத உலகம் ஏது அதையும் எழுதிடலாம்.
அழகு??காண்பவர் கண்ணில் இருக்கிறது இல்லையா. சரி ஓகேதான் அதுவும்.
காதல்,
ஆஹா......... தொலைக் காட்சி படங்களில் தவிர காதலை வேறேங்கும் பார்க்கறது இல்லையே. இதை பற்றி என்ன எழுதுகிறது???
சரி விதி வலியது.
நான் எழுத நீங்களும் படிக்கணும்னு சனிப் பெயர்ச்சி போதே முடிவாகிவிட்டது.
எழுதுவதோடு நில்லாமல் இன்னும் நால்வரை அழைக்கணுமாம்.
அதனால் நான் அழைக்கப் போகும் நால்வரை முதலில் சொல்லிவிடுகிறேன்.
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.
******************************************************
1 கோமதி அரசு
2, ஷைலஜா, திருவரங்கப் பாவை,
3,சஹாரா தென்றல்,
4, கயல்விழி முத்துலட்சுமி.
 
எழுதிடுவாங்க. எல்லாம் அந்த அந்தக் கட்டத்தில இருக்கறவங்க தான்.
*********************************************************************************************************
இப்போ நாம், முதலாக
காதல்.
கண்டும் கேட்டும் பிறகு பார்த்தும் ,புரிந்தும் வரும் காதல் நிலைக்கும்.
சந்தேகம் வந்தால் முறியும்.
சந்தோஷம் தரும்.
புது உலகிற்கு இருவரையும் அழைத்துச் சென்றுவிடும்.
இந்த நிலை மாறாமல் காதலைக் கொண்டாடினால் வாழ்வு நுனிக் கரும்பு போல இனிக்கும். நுனிக் கரும்பு நிலையில், வயதில் இருப்பதால் சொல்கிறேன். காதலாகிக் கண்ணீரும் விட்டு, கஷ்டங்களைத் தாண்டி., இப்போது ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறோம்:)

அடுத்தது,
கடவுள்..
இல்லாமல் ஏது வாழ்க்கை. இவர் ரொம்ப அவசியம்.
அப்பப்போ திட்டு வாங்க இவரை விட்டால் ஆள் கிடையாது. அப்புறம் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளணும்னாலும் இவரிடம் தான் பேசணும்.
எத்தனையோ வடிவங்களில்,நிகழ்ச்சிகளின் மூலமாக,மனிதர்கள் உதவிக்கரங்களாக அவர் எங்களிடம் வந்திருக்கிறார்.
இன்னும் இந்த நொடியில் இந்த 11.12 நிமிடம் இரவு வேளையில் எழுதும் ஊக்கமும் அவர்தான் கொடுத்திருக்கிறார். நான் நம்புகிறேன்.

மூன்றாவது பணம், பொருள்.
வேண்டும். அதைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டிய பக்குவமும் நம் அறிவு நமக்குக் கொடுக்கவேண்டும்.
வந்த போது அள்ளி வீட்டுப்,பரப்பி விட்டு இல்லாத போது மற்றவரிடம் கையேந்தா அளவில் நம் புத்தியையும் மனதையும் கூர்மையாக வைத்துக் கொள்ளணும்..
 
நாலாவது அழகு.
புன்னகை,அன்பு,மகிழ்ச்சி,ஆரோக்கியம் இருந்து விட்டால் அழகு தானே நம்மிடம் இருக்கும், வந்துவிடும் என்று நினைக்கிறேன்.
சரியா.
கவிநயா எழுதிட்டேன்பா.!!!
 
 
 










எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Friday, October 02, 2009

அக்டோபர் படப் போட்டிக்கு .....


அக்டோபர் மாதப் போட்டிக்குச் சில படங்களைத் தேர்ந்தெடுக்க, பொம்மைகளைத் தேடியபோது எல்லாமே அழகாகத் தான் இருக்கின்றன என்று தோன்றியது. கலைஞனின் கைவண்ணம் முத்திரை பதித்த கொலு பொம்மைகள் தன் என்ன வசீகரம்.
இன்றுதான் அவர்களுக்கு விடைகொடுத்து ,துணி மணிகளிலும் பேப்பரிலும் சுற்றி வைக்க ஆரம்பித்தேன்.
அதற்கு முன் எடுத்த படங்கள் இவை.
ஏதாவது போட்டிக்கு அனுப்பலாமா என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
ஏனெனில் என் படம் வரை முறைக்கு அப்பாற்பட்டது என்றே பெயர் வந்துவிட்டது போன போட்டியில்.
நான் எப்போதும் அடக்கி வாசிப்பது என்ற வகையைச் சேர்ந்தவள் என்றே நினைத்திருந்தேன்.
இப்ப என்னை கட்டத்துக்கு வெளில நிக்கிற அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடெண்ட் என்று தெரிந்து கொள்வதில் சிரிப்புதான் வருகிறது:))
பார்க்கலாமா.
எந்தப் பொம்மைக்கு முதலிடம் என்று வோட் போடுங்கள்.
அப்படியும் படத்துக்குத்தான் ஓட்டு. பொம்மைக்கில்லை.!!!!!!














































































எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.