Blog Archive

Friday, June 19, 2009

32 கேள்விகளும் பதில்களும்!!

மதுரையம்பதி என்னும் சந்திரமௌலி என்னையும் அங்கீகாரம் கொடுத்து இந்த 32 கேள்விகளை அனுப்பி வைத்து இருக்கிறார்.கொஞ்சம் சீரியசாக இருக்கிறதோ என்று மீண்டும்படித்தேன். சாதாரணமாகத் தானிருக்கிறது:)பயமில்லாமல் படிக்கலாம்.

நன்றி மௌலி.



உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

பிடிக்கும். ரெண்டு மூணு பேரு இருக்கு. எல்லாமே பிடிக்கும். அம்மா அப்பா வைத்தால் முதல் பெயர் பிடிக்கும்:)


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

என் தம்பி மறைந்த போது.


3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

முன்பு அழகாக இருந்த போது பிடிக்கும்


4. பிடித்த மதிய உணவு என்ன?

ரசம்,உ.கிழங்கு பொடிமாஸ்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்சம் யோசிப்பேன்.ஆனால் நட்பு பிடிக்கும்.


6. கடலில் குளிக்கப் பிடிக்குமா?

அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

கடல் என்னை இழுத்ததால் பயம். அதனால் அருவியை ரொம்பப் பிடிக்கும்.


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?


கண்கள். நேராகப் பார்த்துப் பேசுபவரிடமே என்னால் பேச முடியும்.
 
8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

எதற்கும் படபடப்பு அதைப் பிடிக்காது. பிடித்தது மிஞ்சி இருக்கும் நகைச்சுவை:)


9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது சுறுசுறுப்பு. பிடிக்காததுன்னு ஒண்ணும் இல்லை.
 
10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் பெற்றோர்கள்,தம்பி.மூவரிடம் ஏதாவது அறிவுரை கேட்டுக் கொண்டே இருப்பேன்:)


11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
பிடித்த பச்சைவண்ணத்தில் புடவை ,பச்சை வண்ணத்தில் ப்ளௌசும்.


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
விஜய் சினிமா அவார்ட்ஸ்.
 
 
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?
ஆரஞ்சு வண்ணம்.


14. பிடித்த மணம்?
நித்திய மல்லி,ஜாதி மல்லி உயிர்.


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
நான் அழைக்க நினைப்பது துளசியையும்,
 
கீதாவையும்,கொத்சையும், அபி அப்பாவையும்
 
நாலு பேருமே கற்பனை வளம் நிறைந்தவர்கள். மிகவும் படித்தவர்கள். எல்லாவற்றையும் விட அன்பானவர்கள்.
எல்லோருமே நிறைய வேலைகளில் பொதிந்து இருக்கிறார்கள்.
அழைக்கப் போகிறேன். எப்போ முடிகிறதோ அப்போது எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.


 
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
அவருடைய எல்லாப் பதிவுகளையும் படித்துவிட்டதாகச் சொல்ல மாட்டேன். சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். அதில் தொனிக்கும் உயர்ந்த கருத்துகளும், ஆன்மீகச் சிந்தனைகளும்,தேடுதலும் பிடிக்கும்

17. பிடித்த விளையாட்டு:
ரிங் டென்னிஸ்.


18. கண்ணாடி அணிபவரா?


கண்ணாடி இல்லாமல் நான் இல்லை:0)


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மாயா பஜார்,மிஸ்ஸீயம்மா, கலாட்டா கல்யாணம் இந்த மாதிரி சிரிக்க வைக்கவே எடுத்தார்களே அந்தக் காலத்தச் சேர்ந்தவள்.


20. கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டர் பக்கம் போய் வருடக்கணக்காகி விட்டது. மிஸஸ்.டவுட் ஃபையர்னு நினைக்கிறேன்.


21. பிடித்த பருவகாலம் எது?
குளிர்காலம்.மார்கழி.


22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஸ்ரீராமாயணத்தில் சுந்தரகாண்டம்.


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ரொம்பப் போரடித்தால் வருடத்துக்கு ஒரு முறை.


24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது மழையின் சன்ன இசை. பிடிக்காதது இடிச் சத்தம்


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?


அமெரிக்கா, கானடா.
 
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?


இருக்கலாம். மற்றவர்கள்தான் சொல்லணும்


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?


பொய் பேசுவது.


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.


29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?
மதுரை.


30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?
இன்னும் நிறையப் படிக்க வேண்டும்,என்னை விட வயதானவர்களுக்கு உதவ வேண்டும்.


31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
ஒன்றுமே இல்லை.


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.


எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் கொஞ்சம் லேட்டாகச் சொல்லிக்கொடுக்கும் டீச்சர்.:)







எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Friday, June 05, 2009

திருமணநாள் நல்வாழ்த்துகள்



Friday, June 05, 2009



இப்பத்தான் வாழ்த்துகள் சொன்ன மாதிரி இருந்தது . அதற்குள் இன்னோரு வருஷம் ஓடிவிட்டது.
மணநாள் என்பது எல்லோருக்கும் எப்படிப் பட்டவர்களுக்கும் இனிய நினைவுகளைக் கொடுக்கக் கூடியதே.
நேற்று சண்டையும் வாக்கு வாதமும் இருந்தாலும் இன்றாவது நல் வார்த்தை சொல்லி நல்லபடியாகச் சேர்ந்து இருப்போம் என்று ஒவ்வொரு தமபதியரும்
 
மீண்டும் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டிய நாள்.
அந்த மாதிரிப் பலவித தடைகள், அனுபவங்கள் ,சமீபத்திய நிகழ்வு என்று எல்லாவற்றையும் தாண்டி வந்து கொண்டிருக்கும் அருமைத் தமபதிகள் திரு கோபாலும் ,நம் துளசி கோபாலும்.
இன்று தங்களுடைய
 
35ஆவது
திருமணநாளைக் காண்கிறார்கள் இன்று.
அவர்கள் என்றும் இதே போல செழிப்பாக,அன்பு கொழிக்கும் இல்லறம் சிறந்து வாழ,
ஆரோக்கியம் சூழ
இன்னும் அநேக ஆண்டுகள் இனிய ஆண்டுநிறைவுகளைக் காண இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.







எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.