Blog Archive

Friday, November 28, 2008

பாரத நாடு பழம் பெரும் நாடு,நாமதன் புதல்வர்

அமைதிப் புறாக்கள்
------------------------------------

கறுப்பு வெள்ளை சாம்பல்
வண்ணங்களோடு இரைதேடி
பறந்து அமர்ந்து ஓடி
அலையும் உங்களுக்கு
உங்கள் முன் ஒரு சமுதாயம் சீரழிவது தெரியவில்லையா.
வெடிகளும் குண்டுகளும் உங்களுக்குப் பழகி விட்டனவா.
சத்தமும் புகையும் கண்ணில் உறுத்தாத பரமானந்த நிலைக்கு நீங்கள்
சென்றிருக்க வேண்டும்.


இல்லையெனில் இந்திய நகரமொன்று அழுது கண்சிவந்து
நொந்து அலறித் துவளுகையில்,
புறாக்களே உங்களுக்கு அங்கே இரை தேட எப்படி முடிந்தது.
மனிதனின் கொடூரம் உங்களிடம் காற்றொடு சேர்ந்து கலந்து விட்டதோ.


காலம் மாறும்
நாங்களும் மனிதம் பெறுவோம்.
நீங்களும் அமைதிப் புறாக்களாகப் பறக்கப் பழகுவீர்கள்.
நொந்த உள்ளங்களுக்கு உங்கள் இறகுகளால்
அமைதி தூவுங்கள்.

Tuesday, November 25, 2008

பயணங்களில் தருணங்கள்

தாவரவியல் பூங்காவில் விட்டுப் போன முள்ளம்ப்ன்றி.


துபாய் மாலில் ஸ்டிங் ரே மீன்



செயிண்ட் லூயிஸில் சூவனீர் கடை. வாங்க முடியாத விலையில் படங்கள்:)




நம்ம ஊரு மண்பாண்ட சொப்பு, தக்ஷின் சித்ராவில வாங்கினது.





சிகாகோ மிருகக் காட்சி சாலையில் மஞ்சள் மர வரிசைகள்,.








தாவரவியல் பூங்காவின் மேலும் சில விற்பனைக்கான மரப் பொருட்கள்.





இந்தப் பருந்தாரின் படமும் விட்டுப் போச்சு.

இத்தனை கம்பீரத்தையும் இவரை ஓவியமாக்கிய அம்மாவின் முகத்திலும் பார்த்தேன். அவங்க ஒரு நேடிவ் இந்தியன்.








சீகாகோ வீட்டு வாசலில் இலை உதிர்க்கக் காத்திர்ருக்கும் வண்ண மரம்.









துபாய் மால், அக்வெரியத்தில் நீந்தும் சுறாக்கள்.










தங்கம் மற்றும் நாம் யோசிக்க முடியாத ப்ரெஷ்யஸ் கற்கள் விற்கும் அரங்கம். துபாய் மால்.


























Posted by Picasaபசுமை சுற்றி நிற்க சீக்கிரமே குளிர்காலத்துக்குத் தயார் ஆன ஆரஞ்சு மரம்.
---------------------------------------------------------------------------------------------
சிகாகோ மண் வாசம் முடிஞ்சு துபாய் வந்து ரெண்டு வாரமும் ஆச்சுது. முதல்ல அன்னியமாப் பார்த்த பேத்தியும் இப்ப அழகாத் தூக்கிக்கோன்னு கைகளைக் காட்டுகிறாள்.
துபாயில் வீட்டுக்கு எதிர்த்தாப்பில் மெட்ரோ அநேகமாக முடியும் தருவாயில் இருக்கிறது.
.
இரவெல்லாம் வேலை நடக்கிறது.சென்னை நிலவரங்களை அறிய சன் தொலைக்காட்சியும் ஜெயா டிவியும் இருக்கிறார்கள்.
ஏதாவது கண் கொண்டு பார்க்க முடிந்தால் தானே.
எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு.
பிறகு எல்லாம் பழகிவிடும்.:(

இங்கே இந்த ஊரில் ரிசெஷன் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கேட்பார்கள் போலிருக்கிறது.
இன்னும் வாகனங்கள் பெருகிவிட்டன. அதே வேகத்தோடு வண்டி ஓட்டுகிறார்கள்.

வந்திறங்கிய அன்று நமது அண்டைய நாட்டிலிருந்து புத்தம் புதிய ஸ்வெட்டர்,கால் செருப்பு இத்தியாதிகளுடன் 40,50 இளைஞர்கள்
அவர்களது மேஸ்திரியின் காவலில் விமானநிலையத்தின் வாயிலில் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். எல்லோர் கண்களிலும் ஒரு மருட்சி கலந்த அதிசயம் தெரிந்தது.
இவர்கள் எல்லாம் எப்போது வீடு திரும்புவார்களோ என்ற நினைப்பு சூழ்ந்தது என்னை.

அடுத்தடுத்து நிறைய இந்த உழைப்பாளிகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினாலும் பி.பி.சியில் நடந்த உரையாடல் ஒன்றில்,
உழைப்பாளர்களின் கேள்விகளுக்கு, அதிகாரி ஒருவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. அவர் ஒரு விஷயத்தில் தீர்மானமாக இருந்தார்.
எங்களுக்குத்
தொழிலாளிகள் தேவை. அவர்களுக்குப் பணம் தேவை. அதுவரை இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாறும்.
பணம்,பணம்,பணம். இதுவே மந்திரம்.

போன வாரம் இங்கே நடந்தேறிய ஒரு திறப்புவிழாவில மூன்று மில்லியன் டிர்ஹம் செலவு செய்து வாண வேடிக்கை காண்பித்தார்கள்.
அது இங்கே திறக்கப்படும் அட்லாந்டிஸ் என்ற ஒரு வியாபாரத்தலத்துக்கான விழா.
அது சிஎனென் என்று எல்லா தொலைக்காட்சி சானல்களிலும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இங்கு வந்ததற்குப் புதிய பதிவர் அறிமுகம் கிடைத்தது. அவர் பெயர் சுந்தரா.
நெல்லையைச் சேர்ந்தவர். ஒரு நெல்லைச் சங்கம் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்.
என்னைத் தவிர எனக்குத் தெரிந்து கொத்ஸ்,அம்பி,ராமலக்ஷ்மி,நானானி எல்லோரும் இருக்கிறார்கள். எனக்குத் தெரியாதவர்களும் இன்னு ம் நிறைய இருக்கலாம்:) இருக்கிறார்கள்.

மதுரக்காரங்களுக்கு யூனியன் இருக்கு. மாயவரக்காரங்களுக்கும் இருக்கு. திருவண்ணாமலைலிருந்து ஒரு பெரிய மக்கள் கூட்டமே இருக்கு.
நெல்லைக்கு மட்டும் வேண்டாமா. யோசிச்சு சொல்லுங்கப்பா.
இங்க வந்ததும் பாதி சுதந்திரம் கிடைத்துவிட்டது சிங்கத்துக்கு.
மாலையில் சரவணபவன் காப்பி. ''சார் வந்துட்டார்'' லெவலில் அங்கே எல்லோரிடமும் நட்பு. அப்படியே தமிழ்ச்சந்தையிலிருந்து எனக்கு வேண்டும் என்கிற கு,கு,ஆவி,கல்கி எல்லாம் வரும்.
நம் நிலாரசிகன் கவிதை வந்த விகடனும் பார்த்தாகிவிட்டது.

இன்னும் பத்து நாட்களில் கிளம்பி சென்னை சென்றுவிடலாம்.
குழந்தைகளிடமிருந்து தனிமைப் படுத்தப் பட்ட உணர்வு வரும்.
அதனாலென்ன. ஒரு பட்டன் தட்டு. நேரிலியே பார்த்து உரையாடலாம்.
தாத்தாதான் பேத்திக்கு பெஸ்ட் ஃப்ரண்ட்.
நான் வெளி வராந்தாவில் ஈரமான தலைமுடியை உலர்த்திக் கொண்டிருந்தால்,
அவர் கண்ணாடி வழியே
'அதோ பார்த்தியா புறா. பக்கத்தில பார்த்தியா லேடி அந்நியன்;; என்று கேலி காட்டுகிறார்.
நான் தலைமுடி கட்டாமல் தட்டுவது அவளுக்கு அத்தனை சிரிப்பாக இருக்கிறது.:)

Wednesday, November 19, 2008

இது ஒரு பதிவு!

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்னு ஒரு பதிவு போடணும்னு நினைத்தேன்.


ஏதாவது யோசனை தோணினால் தானே எழுத.
நல்லதாப் போச்சு எல்லார் சொல்கிற மாதிரி நாமும் உண்மையாவே எழுத்தாளி ஆகிட்டோம் போலிருக்கு. இந்த மெண்டல் ப்ளாக் வந்திடுத்து.
மெண்டல் ப்ளாக் வந்தால் கட்டாயம் நாம் எழுத்தாளர் என்பது லாஜிக்.


அதாவது தலைவலின்னு ஒண்ணு வந்தால் தலை இருக்கு என்பது நிதர்சனம்,
ஒண்ணு இருக்கு என்று நிரூபிக்க வேண்டும் என்றால் அது இல்லாமல் மேல ஒண்ணும் நடக்காது என்று சொல்லணும்.
அதே போல முதிய பதிவாளர் என்றால் அப்பப்போ உணர்ச்சிகரமா ஏதாவது எழுதவேண்டும்.(என்னை மாதிரி)
வர்த்தி ஏத்தவேணும். அதாவது கொசுவர்த்தி. (அதே என்னை மாதிரி)
கவிதை எழுதலாம்.அநேகமா அது உரைநடைல இருக்கணும்.
ஐயோ ஏன் இந்த அம்மா இப்படி வதைக்கிறாங்கன்னு நாலு பேராவது நினைக்கணும்.

பந்தபாசம்,படிக்காத மேதை, கணவனே கண் கண்ட தெய்வம் ,பொன்னித் திருநாள், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் இந்த மாதிரி புதுப் படங்களுக்கு ரெவ்யூ எழுதலாம். பழசுக்கு எப்பவும் மதிப்பு இல்லையா.

இதெல்லாம் இந்த துபாய்க்கு வந்த பிறகு எனக்குத் தோன்றிய எண்ணங்கள்.
சிகாகோ குளிருக்குப் பயந்து இங்கே வந்தால், இங்க வீட்டுக்குள்ள குளிருகிறது.



வெளியில் நல்லா இருக்கிறது.

வெளி வராந்தாவை சிங்கம் குத்தகை எடுத்து விட்டதால், வீட்டுக்குள்ள ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டு, என்னடா எனக்கு வந்த சோதனைன்னு யோசித்தேன்.


பாப்பா தூங்கின பிறகு வாங்கி வைத்திருக்கும் குங்குமம்,விகடன் எல்லாம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.


உள்குளிர் நம்மளை வெளியில் தள்ளினாலும், ஏற்கனவே நமக்கு அனுபவம் இருப்பதால் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.



ஆகக்கூடி செய்ய வேண்டிய ஒரே கடமை,
அரபு நாடுகளுக்கு ,அமீரகத்துக்கு நாம் விஜயம் செய்யும் விஷயத்தை ஒரு பதிவாப் போட்டுடலாம்


அப்புறம்,மொக்கை பதிவே போடாத நல்ல பதிவர்களின் அர்த்தமுள்ள பதிவுகளைப் படித்துத் தேறி, அறிந்த தெரிந்த விஷயங்களை எழுத வேண்டியதுதான்.
அமீரகப் பதிவர்களுக்கு என் வணக்கம்.:)

Tuesday, November 11, 2008

அமெரிக்கப் பதிவர்களுக்கு பை பை

இந்தக் காட்சி கண்ணில பட்டுக் குளிர் எடுக்கும்முன்னால் கிளம்புகிறோம்.


வாய்ப்பிருந்தால் மீடுன் பார்க்கலாம்.






கண் கொண்ட அளவு காட்சிகள்,
நயாகரா,
ஸெயிண்ட் லூயிஸ் நகரம்,
பக்கத்தில் இருக்கும் உள்ளூர்க்காட்சிகள்,
கோவில்கள்
எல்லாம் போய் வந்தாச்சு.
இனி கிளம்ப வேண்டியதுதான் பாக்கி.
பொட்டிக்கு ஐம்பத்தொன்று பவுண்டு ஏற்றி நாலு பெட்டிகளும் தயார்.
சின்னப் பேரன் இன்னிக்குப் போயிட்டு நாளைக்கு வான்னு சொல்லிட்டான்.
வெள்ளாடணூமே' அவன் கவலை அவனுக்கு:)
ஆதலால் சக பதிவர்களிடம் விடை பெறுகிறேன்.
முயற்சித்திருந்தால் பார்த்துப் பேசி இருக்கலாமோ.
தெரியவில்லை.
எழுத்துதானே நமக்கு சங்கிலி.
அது வழியாகவே
பேச்சும் தொட்ர்பும்,ஆரம்பமாகி முடிகிறது.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
குறையில்லாமல் இருக்க என் பிரார்த்தனைகள்.
போய் வருகிறோம்.





Saturday, November 08, 2008

மாற்றம்,ஒபாமா,லின்கன்மற்றும் உழைப்பு

லின்கன் பிறந்த எளிமையான வீடு.
பதினாலாவது ஜனாதிபதியும் அவரது கடைசி மகனும்.

பிரெசிடெண்ட் எலெக்ட் பராக் ஒபாமா.








ஏப்ரஹாம் லின்கன் 17 ஆண்டுகள் வாழ்ந்த வீடு ஸ்ப்ரிங்ஃபீல்ட்





திரு ஏப்ரஹாம் லின்கன் 14 ஆவது ஜனாதிபதி,அமெரிக்கக் குடியரசு






மரக்கட்டைகளை உடைத்துச் சம்பாதித்தவர் நாட்டுக்குத் தலைவர்.
--------------------------------------------------------------------------------------

இப்போது இன்றைய செய்தி ஒபாமாவைச் சுற்றி.
----------------------------------------------------------------

இன்னும் அதிர்வுகள் ஓயவில்லை. சிகாகோவின் கிராண்ட் பார்க்,அதில் நடந்த வெற்றி ஏற்புப் பேச்சு
பார்வையாளர்களின் உணர்ச்சி,கண்ணீர்,குதூகலம்
எல்லாம் ஓய நாளாகும்!!
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 44ஆவது பிரசிடென்டாகப் பதவி ஏற்கப் போகும் ஒபாமாவுக்கு
மனம் கனிந்த வாழ்த்துகள்.
எனக்கிருக்கும் ஒரே பிரார்த்தனை இந்த மகிழ்ச்சி என்றும் இவர்களுக்கு நிலைக்கவேண்டும் என்பதுதான்.

உடனே நினைத்தது ஏப்ரஹாம் லின்கன், அவர்களைத்தான்.
நாங்கள் ஸ்ப்ரிங்ஃபீல்ட் (இல்லினாய் மாகாணத்தின் தலை நகரம்) போகும்போது , அவர் குடியிருந்த வீட்டையும்,
அவரது நினைவு நூலகத்தையும்
அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக அந்த ஊரிலிருந்து கிளம்பிய
ரெயில்வே ஸ்டேஷன், டெப்போ என்று அழைக்கப்படும் இடத்தையும்தான்.
அவரும் அவரது மனைவி மேரி,குழந்தைகள் வளர்ந்த அந்த வீடு இப்போதைய
நிலைப்படி மிகச் சிறியது. அத்தனூண்டு வீட்டுக்குள் 700 நபர்களுக்கு விருந்து
கொடுத்தார்களாம்.
ஒரு சின்ன வரவேற்பறை.
ஒரு விளையாட்டு அறை, ஒரு சாப்பாட்டு அறை கீழ்தளத்திலும், மேல ஏப்ரஹாமுக்கு,மேரிக்கென்று தனித்தனி அறைகளும் இருந்திருக்கின்றன,.
சமையலறை நம் வீடுகளை விடச் சின்னது.
ஒரே ஒரு அம்மணியின் துணையோடு வீட்டை நிர்வாகம் செய்திருக்கிறார்.
நடுவில் ஒரு மகனை எலும்புருக்கி நோய்க்கும் பறி கொடுத்திருக்கிறார்கள்.
மிகுந்த ஏழ்மையான பெற்றோர்கள் வளர்த்த மகனாக் ஏப்.
நல்ல செல்வச் செழிப்பில் வளர்ந்த மேரியைத் திருமணம் செய்ததும், அந்தப் பெண்மணி தன்
கணவரின் சமூக(society) வாழ்க்கைக்கு உண்டான நாகரீகங்களைக் கற்றுக் கொடுத்ததாக எங்களுடன் வந்த கைட்
சொன்னார்.
அவர் அந்த ஊரைவிட்டு ஜனாதிபதி பொறுப்பு ஏற்க, ரயில்வண்டியில் கிளம்பிய இடத்தையும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஸ்ப்ரிங்ஃபீல்டிலிருந்து வாஷிங்டன் வந்து சேர எட்டு நாட்கள் ஆனதாம்!!!!
இப்போது ஒரு எட்டு மணி நேரம் ஆகுமோ என்னவோ:)
அந்த நிலைமையில் அவர் சொன்ன வாக்கியம் எல்லாமனிதர்களும் சமமானவர்கள்.
all men are equal'' .ஏப்ரஹாம் லின்கனைப் பற்றிய படம் ஒன்றும் பார்த்தோம்.
அவர் பிறந்ததாகக் கூறப்படும் சின்ன மரத்தினாலான காபினையும் பார்த்தோம்.
அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அடிமைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு
மற்றவர்களின் பகைமையையும் சம்பாதித்துக் கொண்டார்.
அமெரிக்காவின் 14 ஆவது ஜனாதிபதியாக அவரைக் குடியரசு கட்சி
தேர்ந்தெடுத்தது.மக்களும் அவரை ஓட்டுப் போட்டு வெள்ளைமாளிகைக்கு அனுப்பினார்கள்.
இத்தனை சம்பவங்களும் எனக்கு நினைவில் ஓடுவதற்குக் காரணம்,
அன்று நான்காம்தேதி இரவில் மக்கள் முகத்தில் பார்த்த நம்பிக்கையும்.,ஆனந்தக் கண்ணீரும் தான்.
1861ஆம் வருடம் ஏப்ரஹாம் லின்கனால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்,
மார்ட்டின் லூதர் கிங்க் போன்றவர்களால்
ஊட்டம் பெற்று,
இன்று 21ஆம் நூற்றாண்டில் ஒரு கறுப்புத் தோல் கொண்ட அமெரிக்கப் பிரஜை
நாட்டின் தலைமைத்தளபதியாக வருவதற்கு அடிகோலியிருக்கிறது.
கிட்டத்தட்ட 150 வருடங்கள்.
வேறு ஒன்றும் தோன்றவில்லை.
விடிவு என்பது வரக்காத்திருக்கிறது எல்லோருக்கும்.
துன்பத்திலிருப்பவர்கள் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்.
தீரமும் தன்னம்பிக்கையும்,என்றும் தளரா முயற்சியும் தான் வேண்டும்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்,வாழிய பாரத மணித்திரு நாடு.




Tuesday, November 04, 2008

ஒரு கோவில்.....இந்தியக் கட்டிடக் கலை
















































































நம் ஊர்க்கோவில் டெல்லி, மற்றும் நிறைய இடங்களீல் கட்டியிருக்கும் அதே ஸ்வாமி நாராயணா கோவில்தான்.
இந்த சிகாகோவில் இருக்கிற கோவில்கள் வெங்கடாசலபதிக்கு ஒன்று, ஸ்ரீராமனுக்கு ஒன்று, ஷீர்டி பாபாவுக்கு ஒன்று என்று நிலம் வாங்கிக் கட்டி இருக்கிறார்கள்.
அதையெல்லாவற்றையும் விட இந்தக் கோவில் கலை நுணுக்கத்தில் மேலோங்கி இருக்கிறது. சென்ற போது எடுத்த படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.













Sunday, November 02, 2008

ஒரு விவாதம்.. அறுபதுக்கும் பத்துக்கும்





ஊருக்குக் கிளம்பப் போகிறொம் என்ற முஸ்தீபுடன் பேரனுடன் ஒரு அதிகாலை
பேச உட்கார்ந்தேன்.
அவன் தன்னுடைய காலை நேரத் தியானம் முடித்துக்கொண்டு, உடல்பயிற்சியும்
செய்த பிறகு ,என்னுடன் வந்து உட்கார்ந்தான்.
அவன் முகத்தில் கேள்வி. ஒன் மோர் அட்வைஸ் செஷனா
என்ற கேள்வி அவன் முகத்தில்.

எங்கள் அறையில் படுப்பதால் எங்களுடனேயே எழுந்திருக்கும் வழக்கம் வந்துவிட்டது.
அவனுக்கு வீட்டுப்பாடங்கள் இல்லாத நாளகப் பார்த்து,
நேரம் இருக்கும் போது, மெஷின் துப்பாக்கி, வான்வெளி, குற்றங்கள் தண்டிக்கப் படவேண்டியவை
என்று ஒரே வேகமாகப் பேசுவான்.
எனக்கோ பயமாக இருக்கும். ஒரு வேளை அதிகமாகக் கற்பனை உலகத்தில் ,இருக்கிறானோ. நிறைய வீர தீரப் புத்தகங்கள் படிப்பதால் இத்தனை தீவிர சிந்தனைகள் வருகிறதோ என்று நினைப்பேன்.
''
பையா, இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டாம், அது உடலுக்கு நல்லதில்லை.
எதையும் தீர்மானம் செய்வதற்குள் தீர யோசிக்கணும்'' என்று நான் முடிப்பதற்குள்
பாய்ந்து வரும் பதில்கள்.

அப்படித்தான் என் பள்ளிப்பருவத்தையும் அவனுடைய தற்போதைய பாடங்களையும் நேற்று
பேசிக்கொண்டிருந்தோம். '' உனக்கு இவ்வளவு பெரிய புத்தகங்கள் இருந்ததா பாட்டி?
நீ ஆந்தையைப் பற்றி பிராஜெக்ட் செய்திருக்கியா.
ஆப்ரஹாம் லின்கன் பற்றி என்ன தெரியும்.'' என்றேல்லாம் கேட்டபோது நான் என்னுடைய ' நாலாப்பு'
எப்படி இருந்தது என்று யோசித்து முடிந்தவரை சொன்னேன்.

என்னுடைய தேடல்கள் கூகிளில் தான். மற்றும் புத்தகங்களிருந்து இப்போதுதான்
எனக்கு வேண்டும் என்பதைநிறையப் படிக்கிறேன் என்றும் சொன்னேன்

ஆந்தை சாப்பிட்ட உணவை(எலிகள்) எப்படித் திருப்பிக் கக்கிவிடும் என்றும்
அதை (எலியின் எலும்புகளை) அவர்கள்
பரிசோதனைக் கூடத்தில் அறுத்துப் பார்த்ததாகச் சொன்னதும்
எனக்கு வியப்பு தாங்கவில்லை.
''அந்த எலும்புகளை என் லாக்கரில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் சீல் செய்து வைத்திருக்கிறேன்' என்று
வேறு சொன்னான்.
அது நல்லதில்லையே தொத்து நோய் ஏதாவது வந்துவிடாதா என்றதும், நாங்கள் எல்லோருமே அப்படித்தான் வைத்திருக்கிறோம்,ஒன்றும் வராது''என்றான்.
எதற்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ளணும் என்றேன். 'சுற்றுச் சூழல் பற்றி தெரிந்து கொண்டால்தானே
நாம் ஒழுங்காகப் பிழைக்க முடியும் என்று பதில் வந்தது.

.
நீ எதையாவது டைசெக்ட் செய்திருக்கிறாயா??
நான்; ஏதோ பூக்களைப் பிரித்துப் பார்ப்போம். ஒரு தவளை, ஒரு காக்ரோச்,ஒரு எலி டைசெக்ட் செய்திருக்கிறேன்''
அதுவும் நான் கல்லூரிக்குப் போனபோதுதான் என்றதும்,

உனக்கு ரொம்ப ஸ்லோ எஜுகேஷன் இல்லை??? என்று வேறு கேட்டான்.
நான் இந்திய கல்விமுறையைச் சோதிக்கும் பாட்டிலிருந்து விடுபட ,அப்படிப் படித்தே நம் ஊரில் ஏகப்பட்ட விஞ்ஞானிகள் வளர்ந்தார்கள்,இருக்கிறார்கள் என்றும்
மேற்கோளோடு எடுத்துச் சொன்னேன்.

நான் மேம்போக்காக , ' பரிசோதனைன்னு சொல்லி கினிபிக் எல்லாம் கொல்லறாங்களே
அது தப்புனு தோணுகிறது' என்று சொன்னதும்.
அப்படிப் பார்க்கப் போனால் ''நீ செடியிலிருந்து பூவைப் பறிக்கிறதும் தப்புதான்.''
பூ செடியிலிருந்தால்தான் அந்தச் செடிக்கு நல்லது. நீ அதப் பறித்து சுவாமிக்கு வச்சு அது வாடிப் போய்க்
குப்பைக்குப் போகிறது.'' என்றான்.

ஒருவேளை மனிதர்களை வைத்துப் பரிசோதித்தால் இன்னும் பலன் கிடைக்குமோ என்னவோ என்று என்னை யோசனையோடு
பார்த்தான். என்னிடம் என்ன பதில் வருமென்று சோதனை செய்கிறான் என்று புரிந்தது:)
எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. தாத்தா வாசனை பேரன் பேரில் பட்டிருக்கிறது என்று. அவருக்குத் தான் இந்தச் செடியில் பூக்களைப் பறிக்கிறது எல்லாம் பிடிக்காது.

அவனுடைய எண்ணங்கள், செயல்கள் எல்லாமே வித்தியாசமாகவே எனக்குத் தெரியும்.
கொஞ்ச வருடங்களா இருக்கின்றன அவனுக்கும் எனக்கு இடையில்.
ஐம்பது வருடங்கள்.!!!




Saturday, November 01, 2008

ஹாலோவீன் இரண்டாம் கட்டம்





































































































முந்திய பதிவு ஹாலோவீன் தின கொண்டாட்டங்களைப் பற்றியது. அதில் விட்டுப்போன படங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் வலையேற்றுகிறேன்.
ரசிக்கும்படியாக் இருக்கும் என்றே நம்புகிறேன்.