Blog Archive

Tuesday, September 30, 2008

வருமுன் காத்தல் மாந்தருக்கு அழகு






































Posted by Picasaஇந்த வண்ணங்களைப் பார்த்தால் மனசுக்கு இன்பம் கிடைக்குமென்று கூகிளில் பறித்து வைத்தேன்.
அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.
நன்மை தழைத்திங்கு நானிலம் பிழைத்திட வந்திடுவாள் பராசக்தி.
முந்தின பதிவில் இதயப் பரிசோதனை செய்து கொண்டதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
இன்றோடு அந்த மலிவு விலை சோதனைக் காலம் முடிகிறது.
அதாவது 300 டாலர் கொடுக்கவேண்டிய இடத்தில் நூற்றம்பது டாலரோடு முடிந்தது.
மருந்த மறந்து நான் நயகரா போனது நினைவு இருக்கலாம். அப்போது ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுத்து என்னைக் காப்பாற்றியவர்.:)
அவருக்கு நன்றி சொல்லிப் பணமும் கொடுக்கப் போனபோதுதான் எனக்கு இதய முப்பரிமாண சோதனைக்கு சீட்டு எழுதிக் கொடுத்தார்.
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, இதயபாதிப்புக் கட்டாயம் வரும்.முன்னெச்செரிக்கையாக இருப்பது நல்லது என்றுதான் அவர் சொன்னார்,.
நான் பண செலவை யோசித்தபோதுதான், வருமுன் காப்பது நல்லது என்று தோன்றியது.
ஏனெனில் எங்கள் வீட்டில் எல்லோருக்கும்(பிறந்த வீட்டில்) இந்த இதயம் சோதித்துவிட்டது.
பெண்ணிற்குக் கவலை.
அவள் இணையத்தில் தேடியபோது எட்வர்ட்ஸ் ஆஸ்பத்திரியில்
இந்தச் சோதனை செப்டம்பர் 30 வரை வெறும் 150 டாலருக்குச் செய்து கொடுப்பதாகச் சொன்னதும், உடனே பதிந்து கொண்டாள்.
போயாச்சு,வதாச்சு.
இப்போது நிலைமை என்னவென்று தெரியும். அதற்கேற்ற மருந்துகளும் கொடுத்துவிட்டார்கள்.
இன்ஸுரன்ஸ் செய்திருக்கிறோம்.
இந்த செகப்பிற்கு ரி எம்பர்ஸ் செய்ய மாட்டார்களாம்.
பரவாயில்லை.
இந்தியாவில் செய்திருந்தாலும் இதே செலவுதான் ஆகியிருக்கும்.
நான் இவ்வளவு விலாவாரியாக இதை எழுதுவதற்குக் காரணமே
சில உறவுகள் ,ஏன்யா, சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிற என்று
என்னைச் சலித்துக் கொண்டதுதான்.
இந்தச் சோதனையை நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் செய்து கொள்ளலாம்.
ஊசி, இந்த இதயத்துக்குள்ள செலுத்தற சாயம் அதெல்லாம் கிடையாது(ஆஞ்சியோ கிராம்)
ஒரு பத்து நிமிடம் சோதனைக்குப் போய்விட்டு,கேள்விகளுக்குப் பதில் சொல்லி வீட்டுக்குத் திரும்பி விடலாம்.
இதுதானப்பா விஷயம் சரியா.

Sunday, September 28, 2008

இந்த நாள் நல்ல நாள்



















Posted by Picasaஇன்று என்ன விசேஷமாக இருக்கு என்று பார்த்தால்,
நிறைய விஷயங்கள் கண்ணில் பட்டது.
நல்லவங்க பிறந்திருக்காங்க.
இந்த வருடம் இன்னிக்கு மஹாலய அமாவாசை. நவராத்திரிக்கு ஏற்பாடு செய்கிற நாள்.
சென்றவர்களை நினைத்து வணங்கும் நாள்.
லதா மங்கேஷ்கர் பிறந்த நாள்.
இன்னும் கூகிளில் தேடினால் ஏகப்பட்ட பிரபலங்கள்,நடிக நடிகையர்
பிறந்திருக்கிறார்கள்.
அந்தக் கால கனவுக்கன்னி ப்ரிஜிட் பார்டொ பிறந்து மயக்கி இருக்காங்க.
தி.ரா.ச சார் 100ஆவது பதிவு போட்டு இருக்கிறார்.(கௌசிகம்)
இயற்கை, தமிழ்,சினிமா,சிவாஜி கணேசன்,மகள்,பெற்றோர்,அக்கா,அண்ணா,மனைவினு எல்லோரையும்,எல்லாவற்றையும் நேசித்த,
வாழ்க்கையை ரசித்த என் தம்பியும் பிறந்தான்.
இன்று அவனுக்கு 56 வயது பூர்த்தியாகிறது.
நீ கொடுத்த,காட்டிய அன்புக்கும், செய்த உதவிகளுக்கும் நன்றி தம்பி.
இன்னும் ஒரு உதவி செய்ய நீ மறந்துவிட்டாய்.
இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம்.
வாழ்த்துக்களுடன்,
உன் அன்பு அக்கா.

Friday, September 26, 2008

உள்ளத்தினுள்ளெ ஒளிந்திருப்பது ஒன்றல்ல.

Good,bad ugly cholestrols சாப்பிட வேண்டிய பதார்த்தங்கள்

ஃப்ளாக்ஸீட்



நீல பெர்ரி



சிவப்புத் தக்காளி





நம்ம இருதயம்.(என்னுடையதல்ல)









தைரியமாப் போயிட்டு வாங்க சார்.

பயமில்ல,


நேற்று என் இதயத்தை ஒருவர் அளந்துவிட்டார்.
ஐந்து நிமிடம்தான்.என்ன இருக்கு,என்ன அதிகமா இருக்கு......
இதெல்லாம் டைப் செய்து கம்ப்யூட்டரில் ப்ரிண்ட் அவுடெடுத்த்க் கொடுத்துவிட்டார்,.
என்னோட இருதயத்துக்கு இப்போது 70 வயதாம்:)
இந்தக் கால்ஷியம் கொஞ்சம் அதிகமா இருக்காம்.
அது இருதயத்தோட இடது பக்கத்தில நாலு இடத்தில இருக்காம்.
சரிப்ப்பா அது மாட்டு ஒரு ஓரத்தில இரூக்கட்டும் .இனிமேகாஅல்ஷியம் மாத்திரை சாப்பிடலைன்னு சொன்னேன்.
அதுக்கு அவங்க நாங்க சொல்ற கால்ஷியம் வேற.
நீங்க சர்க்கரையை விட்டீங்க,இப்ப உப்பு,சிகரெட் எல்லாம் விட்டுடுங்கன்னு சொன்னாங்க,.
சரின்னுட்டேன்.
நமக்குத்தான் அந்த வாசனையே பிடிக்கிறதில்லையே:)
ஒரு ஹைரிஸ்க் பட்டம் போட்டு 150 டாலர் வாங்கீக் கிட்டு,
ம்ம்,ஜாக்கிராதையா இருங்கனு அனுப்பிட்டாங்க.
அது வெள்ளைக்காரங்க ஆஸுபத்திரி அப்படித்தான் சொல்லுவாங்க,
அதூக்காக நம்ம இந்திய வம்சாவளி வைத்தியரிடம் போனோம்.
அந்த அம்மா, ரெகார்டெல்லாம் பார்த்துட்டு
ஆமாம்மா,கொலஸ்ட்ரால் கொஞ்சம் நிறைய இருக்கு.
அதுக்கு மருந்து கொடுக்கிறேன்.
தினம் ஒரு மணி நடங்க.
பழம் சாப்பிடுங்க. தட்டை,முறுக்கு,ஊறுகாய் எல்லாம் வேண்டாம்.(ஹையோ)
பழுப்பு அரிசி,சப்பாத்தி இதெல்லாம் ந்நிறையச் சேர்த்துக் கோங்கன்னு ஆதரவா விளக்கினாங்க.
என்ன இருந்தாலும் நம்ம வைத்தியர் மாதிரி வருமா சொல்லுங்க:0)
சரின்னு வீட்டுக்கு வந்தா,சென்னையிலிருந்து வந்தவங்க, தேன்குழல்,
சீடை,தட்டை எல்லாம் ஆசையாக் கொண்டுவந்து கொடுத்திருக்காரு. அதில புளீக்காய்ச்சலும்,தக்காளீத்தொக்கும் அடங்கும்.
ப்பிரச்சினைன்னு வந்தா
சமாளித்துதானே ஆகணும்.
சாப்பிடக்கூடிய பொருட்கள்
ப்ளூபெர்ரி,
தொண்டங்காய் கறி,
ஃப்ளாக்ஸ் சீட் ஆயில்,
ஆலிவ் ஆயிலில் சமையல்,
வறட்டுத்தனமா இங்க ஒரு பிஸ்கட் இருக்கு. தவிட்டில தட்டினா மாதிரி. அதை சாப்பிடலாமாம்.
பயறு,சேத்துக்கலாம்.
ஆனா வேர்க்கடலை ஆகாது
பாதாம் நாலு சாப்பிடலாமாம்.
இன்னும் தேடிக்கொண்ட்டு இருக்கிறேன். நடூவில உங்களூக்கும் ஒரு ஆவலாதி பதிவு போட்டுடலாமேனு வந்தேன்.
உங்களுக்குத் தெர்ரிந்ததை சொல்லுங்க.
ஆங் நோ தயிர்சாதம்:(
மறக்கக் கூடாது.










Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Sunday, September 21, 2008

புரட்டாசி..சனிக்கிழமை,அரிசிப்பாகு,மாவிளக்கு

இவருக்கு நேர்ந்து கொண்டு மாவிளக்கு ஏற்றுவது, குடும்பங்களில் வழக்கம். தீராத வயிற்றுவலிதீர வயிற்றின் மேலேயெ, ஒரு வாழையிலையில் மாவிளக்கு ஏற்றி கொள்வதை, நான் பார்த்திருக்கிறேன்.
சீனிம்மாவின் அக்கா நாச்சிப் பெரியம்மா.

அவருடைய பெண்ணின் பெயர் மங்கை. நாச்சியார் பெரியம்மா அந்த நாளில் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் திருமலை ஏறிப் போவது வழக்கம்.
இத்தனைக்கும் அவர் உருவம் ஒரு நாலடி உய்ரமும் உழக்குக்கு ஆடை கட்டின மாதிரி,
ஒரு கட்டம்போட்ட சிகப்புக் கலர் ஒன்பது கஜப்புடவையை நேர்த்தியாகக் கால் தெரியாமல் கட்டிக் கொண்டு,
அந்த வயதில் வாய் கொள்ளாத சிரிப்போடு ஏறும் அழகை அம்மா சொல்லிக் கேட்டு இருக்கிறேன்.
எனக்கு விவரம் தெரிந்தபிறகு நானே பார்த்தும் இருக்கிறேன். 1962ஆம் வருடம் மே மாதம் ஒரு மாமாவின் திருமணம் முடிந்து
நாங்கள் எல்லோரும் திருப்பதி போனோம்.

வெளியில் சாப்பாடு வாங்கி சாப்பிடாத வகை இவர்கள்.
கையில் பலவகை உலர்ந்த பழங்கள்,முந்திரி இவைகளை எடுத்துக் கொள்வார்கள்.
காப்பி டிகாக்ஷன் பாட்டிலில் இருக்கும். பால் வாங்கிக் கலந்து கொள்வார்கள்.
போனால் போகிறது என்று எனக்கும் ஒரு மிடறு கொடுப்பார்கள். அதுவே அம்ர்தமாக இருக்கும்.

தங்குமிடம் ஏதாவது ஒரு மடமாக இருக்கும். பழைய பரகால மடம் என்று நினைக்கிறேன்.
அங்கு போய்ச் சேர்ந்ததும் கோபுரத்தைத் தரிசனம் செய்துவிட்டு,
இரவு ஆகியிருப்பதால் கொண்டுவந்த பூரி உருளைக் கிழங்கை முடித்து,
தயிர்சாதமும் முடித்து உறங்கிவிட்டோம்.

சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வெந்நீரோடு வந்து எழுப்பினார்கள். அனைவரும் நன்றாகக் குளித்துவிட்டு, எதிர்த்தாப்போல் இருக்கும் புஷ்கரணியில் தண்ணிர் எடுத்துத் தெளித்துக் கொண்டு கோவிலுக்குப் போனோம்.
அப்போதெல்லாம் கோவில் வாசல் வழியாகவே உள்ளே நுழையலாம். வெளிச்சுற்று கியூ எல்லாம் கிடையாது.
அங்கப் பிரதக்ஷிணம் செய்பவர்கள் பூர்த்தி செய்தார்கள்.

பெருமாளையும் மிக அருகில் போய்ப் பார்த்ததாக நினைவு.
அப்போதுதான் மடப்பள்ளி நாச்சியார் வெளித்திண்ணையில் மாவிளக்குக்கான
பொருகளான,ஊறவைத்து அரைத்த அரிசி மாவு,
அங்கேயே இடித்த வெல்லம்,வீட்டிலிருந்து கொண்டு போன நெய்,திரி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி,
ஒரு வாழை இலையில் வைத்து ஈர உடையுடன் இருந்த பெரியம்மாப் பாட்டி தன் குட்டி சரீரத்தை அங்கே தரையில் சாய்த்துக்கொண்டு, வயிற்றின் மேல் மாவிளைக்கை ஏற்றச்சொல்லி வைத்துக் கொண்டார்கள்.

ஸ்வாமி மலையேறும் வரை கோவிந்த நாம ஜபம்தான்.




புரட்டாசியும் பெருமாளும் மாவிளக்கும் இங்கேயும் நினைவு வரத்தான் செய்கிறது.
ஆனால் வழக்கம், இல்லாவிட்டால் ஏற்றமாட்டார்கள்.
அதனால் அரிசிமாவும் வெல்லமும் சேர்த்து ஏதாவது ஒரு பண்டம்
வெங்கடேசனுக்குக் கை காண்பிக்கணுமே என்று மேலே இருக்கும்,பாகு,பர்ஃபி
செய்தேன்.

செய்த விதம் பார்க்கலாமா.

அரிசிமாவு வறுத்துக் கொண்டு,
அதில் பாதி அளவு வெல்லத்தைப் பொடித்துப் போட்டு,
200கிராம் வெண்ணெயும் கலந்து
வாணலியில் கிளறி ஒரு பீங்கான் கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டேன்.
இந்தக் கலவையை அப்படியே எடுத்து
மைக்ரோவேவில் எக்ஸ்ப்ரஸ் 4இல் வைத்ததும், மைசூர்பாகு மாதிரியே நுரைத்துக் கொண்டு வந்தது.
அதை வெளியே எடுத்து கட்டம் கிழித்தாச்சு.

பெருமாளும் பிரமாதம்னு சொல்லிட்டார்:)
பெத்த பெருமாள்,சின்னப் பெருமாள் சளித்தொல்லை இருந்தாலும் அனுபவித்துச் சாப்பிட்டார்கள்.

ஒரு வாரம் தாங்கும் என்று நினைக்கிறேன்.
வட்டிக்காசு வாங்கற வடமலையானுக்கு குட்டிக் கோவிந்தா கோவிந்தா!!!









Posted by Picasa

Thursday, September 18, 2008

ஊறுகாயும் பெரிய மனுஷனும்






எலுமிச்சங்காய் ஊறுகாயைப் பத்தின பதிவில்லைம்மா இது.
ஊறுகாயச் சாப்பிட்டவங்களைப் பத்தினது.
எல்லாரும் நல்லா இருக்காங்க. (சாப்பிட்டவங்களைச் சொல்றேன்)
ஊறுகாய்ப் பாத்திரத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்.
பாதிதான் மிச்சம் இருக்கு:)

சாதாரணமா வடுமாங்கா...பாட்டி போட்டது கொடும்மான்னு கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க ரெண்டு பேரன்களும்.
சின்னவனுக்குத் துளி சாறு அவன் சாப்பாட்டில் விட்டாப் போது. பெரியவன் தயிர்சாதத்துக்கு உண்மையாவே ரசித்துச் சாப்பிடுவான்.

மாவடு தீர்ந்து போயிடும் பாட்டி,சீக்கிரம் இன்னோரு ஊறுகாய்ப் போட்டுக் கொடு என்று ஆசையாக் கேட்கிறானெ என்று
மைக்கல்ஸில் வாங்கின எலுமிச்சம்பழங்களில் சிலதை
நீர் எலுமிச்சையும், மற்ற இருபது பழங்களை ஆவக்காய் எலுமிச்சையாகவும் செய்துவிட்டேன்.
தினம் இந்த மூடியைத் திறந்து பார்த்து விட்டு இன்னும் ஊறலையா பாட்டின்னுட்டுப் போய் விடுவான்.
நானும் அவன் இவ்வளவு காரம் சாப்பிடக்கூடாதே என்று கொஞ்சமாகத்தான் மிளகாய்,கடு எல்லாம் சேர்த்து இருந்தேன்.
அதைப் பரிசோதிக்க நேற்று அவனுக்கு எண்ணம்.
ஒரு சின்ன கப்பில் எடுத்து வைத்துக் கொண்டான்.
ஜஸ்ட் அ லிட்டில் என்று சொல்லிச் சாப்பிட்டுப் பார்த்தான்.
எங்க அவன் அம்மா கையால(சொல்லால) எனக்கு மண்டகப் படியோன்னு பயமா இருந்தது.
ஒரு துண்டு எலுமிச்சையையும் சாப்பிட்டு விட்டு,
அவன் சொல்லிய பாங்கு இருக்கிறதே அதற்காகத்தான் இந்தப் பதிவு:)

பாட்டி இப்ப உனக்கு அது எப்படி இருந்ததுன்னு சொல்லறேன். என்று என் முன்னால் வந்து நின்று கொண்டான்.
ரொம்பக் காரமாயிருக்கும்னு நினைச்சுத்தான் சாப்பிட்டேன்.
ஆனால் ஊறுகாய் அப்படியில்லை.
''You have done an awesome job paatti.

டிஸ்கி...
எல்லா வரிகளுக்கும் லைன் போட்டது நான் இல்லப்பா.

Monday, September 15, 2008

குழலினிது யாழினிது என்பர்

வாகுள மீன்
வல் யூ
வாமூன்
நாஷானா
அல்லிகா புத்தர்
லாக்கெட்


இவையெல்லாம் சின்ன கிருஷ்ணனின் மொழியில் வார்த்தைகள்.
இன்னும் இருக்கிறது.
நினைவுக்கு வரவில்லை:)

அர்த்தங்கள்.
வாகுளமீன்.......................................வாக்குவம் க்ளீனர்

வல் யூ......................லவ் யூ

வாமூன்........................லாண்மோவர்(lawn mower)

நாஷானா.........நாராயணா.
அல்லிக்கா புத்தர்...........ஹெலிகாப்டர்
லாக்கெட்...........ராக்கெட்.
இதிலென்ன கஷ்டமென்றால் அவன் சொல்லும்போது
நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால்
அவனுக்கு வருகிற கோபம்.!!!!

எங்கே நின்றாலும் ஓடி வந்து கார்ப்பெட்டில் விழுந்து புரளுவான்.
அதுவும் மரத்தரையில் இல்லை. கார்ப்பெட் போட்ட இடத்தில் மட்டும்தான்:)
இதில பச்சமொளகய்,
வடு மாங்கா, ஊறுகாய்,போற்ற்றும் (போதும்) இதல்லாம் க்ளிப்தமாக வாயில்

வருகிறது.

Sunday, September 14, 2008

இங்கு இன்று ,இப்போது

பேரனுக்குப் பத்து வயது பூர்த்தி:)






வாண வேடிக்கை நேவிபியர்




பறவைகளுக்கான தானியக் கூடு.அணிலார் வந்துவிட்டார்.






காடை கவுதாரி இனமோ







கண்ணன் வந்தார் இன்று









அரோரா பாலாஜி கோவில் வெளிப்புறம்










நேவி பியர் சிகாகோ தொழிலாளர் தினமா,தொழில் தினமா செப்டம்பர் 1ஆம் தேதி.























Posted by Picasaஒரு கட்டிடம்:)
அன்று சீனிம்மா எங்களைப் பராமரித்ததற்கும், இப்போது இங்கே நாங்கள் வந்து இங்ஊ இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.
பாட்டிகள் மாறுவதில்லை.
அநுபவங்கள் மாறுகின்றன. அவ்வளவுதான்.

அன்றைய பாட்டிக்கு வேலை செய்ய ஆள் கிடையாது.
இங்கே பேத்திக்கும் அதே நிலைமை.

அவளும் பாத்திரம் தேய்த்து,துணி உலர்த்தி,
வீடு பெருக்கித் துடைத்து எல்லாம் செய்தாள்.
இங்கு பேத்தியும் அதையே இன்னும் கொஞ்சம் நாகரீக லெவலில் செய்கிறாள்.
அப்பளம் வடகம் வத்தல் எல்லாம் செய்ய நேரம் இருந்தது.
இன்றைய பாட்டியான எனக்கு இங்கே வந்தால்தான் அந்த வேலை.
நம்ம ஊரில்தான்
க்ராண்ட் ஸ்நாக்ஸ் எனக்காகவே திறந்திருக்கிறார்களே;)
மேலும் எங்க வீட்டு மொட்டை மாடிக்கு தூசிதும்பு அதிகம் வரும்.
ரோட்டு மேல வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ''ஐக் புயல்'' சூறாவளி வருவதற்கு முன்பே கொஞ்சம் ஊறுகாய் வடாம் எல்லாம் போட்டாச்சு.
இரண்டு நாட்களாக சூரியனைக் கண்ணால் பார்க்கவில்லை.
நடுநடுவே பேஸ்மெண்ட் செக்கிங் வேற. அங்க தண்ணீர் சரியாக
வெளியேற்றப் படுகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.
சரி இந்த தற்கால நிகழ்வுகளுக்கும் சீனிம்மாவுக்கும் என்ன சம்பந்தம்.
அவருக்கு இந்த அமெரிக்க மனிதர்கள் பற்றிய நாவல்கள் ரொம்பவும் பிடிக்கும்.
எல்லா
எழுத்தாளர்கள்,ஆர்தர் ஹெய்லி,டானியல் ஸ்டீல்,ஜெஃப்ரி ஆர்ச்சர் இவர்களுடைய ஆக்கங்களைத் தமிழ்ப் படுத்தி ராகி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்தில் எழுதும்போது ஒரு வரி விடாமல் படிப்பார்.
எதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.
எல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,
என்று நிதானமாக அதர்சைட் ஆஃப் மிட்னைட் கதாநாயகியை அலசுவார்.
என்னுடைய திருமணத்தின் போது இருந்த சீனிம்மாவுக்கும்,இப்போது
30 வருடங்கள் கழிந்த நிலையில் புத்தம் புதிதான சீனிம்மாவைப் பார்ப்பதற்கும்
ஏகப்பட்ட வித்தியாசம்.
சந்தோஷமாக இருந்தார். நான் முதல்தடவை டெட்ராய்ட்டுக்கு வந்த போது நிறைய விவரங்கள் எனக்குக்
கொடுத்தார்.அவரையும் அழைத்து வந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரோ.
வருவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்;)பிள்ளைகளை விட்டு வரவேண்டுமே!!
காரணங்கள் இவ்வளவுதான் இந்தக் கொசுவத்திக்கு.

Monday, September 08, 2008

மீண்டும் பார்க்கலாம், NIAGARA !

வாணவேடிக்கை.....தினம் இரவு ஒன்பதுக்கு என்று நினைக்கிறேன்.

வேடிக்கையில் பிடிக்க முடிந்தது சிலவற்றைத்தான்.....


அருவிக்குப் பின்னால் கட்டப்பட்ட பாதை.குகை வழி. கூகிள் உதவி.



அருவியின் பின் இருக்கும் பாதையின் வரைபடம்




மிஸ்ட்,மிஸ்ட்,மிஸ்ட். இந்தத் திரை எழும்பும் வேகம்ம்ம்ம்.ஒரு பெரிய கோபுரம் மாதிரி வளர்ந்து மேலே மேகங்களாக அலைய ஆரம்பிக்கும்.





SKYLON TOWER .இங்கே மேலே ஏறவில்லை.நேரமின்மை தான் காரணம்.






இந்தப் பயணத்தை என்னால் என்றும் மறக்க முடியாது. அப்படி ஒரு சந்தோஷம் ,அந்த சாரல் மேலே தெறித்து உள்ளம் குளிர வைத்தது.
ஏதோ ஒரு சுதந்திரம் இங்கே கிடைத்தது என்றே நம்புகிறேன்.







இந்த பொம்மைப் பெண் மீண்டும் பதிவுக்கு வந்துவிட்டாள்.








விடுதியிலிருந்த புகைப்படம்.









அந்திவேளை விளக்கு அலங்காரம்.இருகரைகளிலும் மினுக்குகின்றன. விடுதி ஜன்னலிலிருந்து எடுத்த படம். பறவைப் பார்வையா இது:)











மாலை எட்டு மணிக்கு அருவியின் மேல் வண்ணவிளக்கு ஒளி பாய்ச்ச ஆரம்பிக்கிறது. முதல் வண்ணம் வெள்ளை.












அருவியும் பச்சை.கரைகளும் பச்சை.நடுவே இந்தப் பனிச்சாரல் மட்டும் வெள்ளையும் கருப்புமாக ஆவியாகிறது.













ஒண்டேரியோ ஏரிக்கரையோரம்.














இரவு படுக்கப் போவதற்கு முன்னால் க்ளிக்கியது.
















மழையில் அருவிக்குப் பின்னால் போவது தடைப்படுமோ என்று சந்தேகம் வந்தது.
நான் நினைத்தபடி அது ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல. அருவிக்கு மிக அருகில் போகலாம். ஆனால்
ஒரு மேடையில் நின்றுதான் சாரலை அனுபவிக்க முடியும் என்று தெரிந்தது.
நான் என்னவோ குற்றாலம் அருவிக்குப் பின்னால் போவது போல இங்கேயும் போகலாம்
என்று கனவு கண்டு இருந்தேன்.
நாம என்ன ஆண்டாளா:))
கனடா நாட்டில் இது ஒரு பிரமாதனமான ஏற்பாடு.
மலையைக் குடைந்து,அருவிக்குப் பின்னால் சுரங்கம் அமைத்து
நாலைந்து இடங்களில் அருவி விழும் இடம் வரை போக வழி வகுத்து இருக்கிறார்கள்.
போகும் வழியெல்லாம் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது.
மேலே படபடக்கும் நதியின் ஓசை.
மஞ்சள் ப்ளாஸ்டிக் உடை எல்லோருக்கும் கொடுத்திருந்தார்கள்.
ஒரே ஒரு இடத்தில் கீழே இறங்கப் படிகள்.
வெளியே வந்தால் இடியோசையுடன் அருவி விழும் ஓசை.
இந்த அனுபவத்தை எழுத வார்த்தைகள் எனக்குக் கிடைக்க மறுக்கின்றன.ஒரு அரை மணி நேரம்
இங்கே செலவழித்தோம்.
சின்னவன் அருவி சத்தத்துக்குப் பயப்படவில்லை.அம்மாவோடு ஒண்டிக்கொண்டு அண்ணாந்து பார்த்த வண்ணம் இருந்தான். பெரியவனுக்கும் எனக்கும் கண்ணில் இருக்கும் கண்ணாடி நன்றாகப் பார்ப்பதைத் தடை செய்தது.!!
கண்ணாடி லென்ஸெல்லாம் தண்ணீர் தெறித்து பார்க்க முடியவில்லை.
நானும் அவனும் ஜோடி சேர்ந்து கொண்டோம். அருவியின் மிக அருகில் நின்று கண்ணாடிகளைக் கழற்றி விட்டோம்.
இப்போது நாங்களும் நயகராவும் மட்டுமே:)
எப்பவுமே வராத கோபம் என்மேலேயே வந்தது.
கண்களை நன்றாகப் பராமரித்திருந்தால் இப்போது
வாழ்க்கையில் எப்போதாவது ஒரு தடவை கிடைக்கும் இந்த மாதிரி அழகான
அற்புதமான அனுபவத்தை இன்னும் கூர்மையாகக் கவனித்திருக்கலாம். இல்லையா!!
கண் பழுதுபட்ட பிறகு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை:)
ஒரு நிமிடம் தான்!!!.
நயகரா மேலே சிந்திக்க விடவில்லை.குழந்தைகளாய் அங்கே இருந்துவிட்டு,மீண்டும்
பெரியவர்களாய் மேலே ஏறிச் சாப்பாட்டுக்கு விரைந்தோம்.
அடுத்த நாள் பயணம் டெட்ராய்ட்டுக்கு.
அங்கிருந்து மீண்டும் சிகாகோ வந்தாச்சு.வண்டியும் பழைய பொலிவோடு காத்திருந்தது.
நல்லநினைவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு,
நயகராவை நினைவுகளில் மீண்டும் சுவைத்தபடி இதோ பதிவும் இட்டுவிட்டேன்.
நன்றி எல்லோருக்கும்.