Blog Archive

Tuesday, July 01, 2008

சதுரங்கம்...நீயும் நானுமா?



புதிதாக மகன் வாங்கி வைத்திருக்கும் மடிகணீனி சாப்பாட்டு மேசையில் இருப்பது மகா சௌகரியம்.

மடியில் பாப்பாவை வைத்துக் கொண்டு தமிழ்மணம் மேயலாம். இதிலென்ன சங்கடம் என்றால் பாப்பாவுக்கும் கணினி மேல் ஆர்வம் வந்து விட்டது.

கண்முன்னால் பாட்டி கை மட்டும் போய்ப் போய் வருதே பாட்டி எங்க என்று மேலே முகத்தை நிமிர்த்துகிறது.
இல்லாவிட்டால் கைவளையலைப் பிடித்துக் கொள்ளுகிறது.
இப்ப என்ன பண்ணுவேங்கிற மாதிரி.:)

அப்படியாவது இணையத்துல உலாவணுமான்னு கேக்கலாம்.
நமக்கு அஷ்டாவதானியாகணும்னு ரொம்ப நாள் ஆசை.

இதையும் செய்து அதையும் செய்து, இடுப்பில் குழந்தை, அடுப்பில தோசை
இதெல்லாம் அந்தக் காலத்தில செய்தது.
அது போறாதுன்னு ரேடியோ வேற பாடிக்கிட்டு இருக்கும்..:)
பார்க்க்கிறவங்களுக்குக் கொஞ்சம் விபரீதமாவே தோணும். ஏன்னா
அடுப்புக்கு அந்தப் பக்கம் படித்துக் கொண்டிருக்கும் நாவல் வேற இருக்கும், பக்கம் திரும்பாமல் இருக்க அது மேல ஒரு குழவி:)
சப்பாத்தி செய்யறதுதான்..

இதெல்லாம் செய்தது ஒண்ணும் பெரிசில்லைம்மா. இப்ப இந்தக் கணினியில் செஸ் விளையாட்டு இருக்கு.அதுகிட்ட நம்ம வீரம் பலிக்க மாட்டேன் என்கிறது
நானும் ஏதோ எங்க அப்பா கத்து கொடுத்த
மூவ்ஸ் வச்சு சுலபமா என் பேரனை ஜெயிச்சுடுவேன்.(சீ)

இந்த கல்லுக் குண்டு கணினி என்னைத் தோற்கடிப்பதிலியே இருக்கு. தோற்பதும் ஜெயிப்பதும் விளையாட்டில் சகஜம்தான் இல்லைன்னு சொல்லலை.
ஆனா இது ரொம்ப மோசம். என்னோட சுய மதிப்பீட்டையே கவுத்துடும் போல இருக்குப்பா..

முதல் ஐம்பது கேம் வரை தோற்பது பிரமாதமாகப் படவில்லை.
என்ன இருந்தாலும் ஒரு கணினிகிட்டத் தோற்கிறதில பெரிய நஷ்டம் ஒண்ணுமில்ல.:)))
அப்புறம் கொஞ்சம் கவனமாகத் திட்டம் போட்டு விளையாடியதில் நான்கு முறை ஜெயித்துவிட்டேன்.

பிறகு திடீரென ஸ்ட்ராட்டிஜி மாற்றிக் கொண்டு விட்டது. நான் ஜெயிப்பது போன்ற நிலைமை வந்தால் ''நௌ தெ கேம் இஸ் அ ட்ரா'' என்கிறது.
செக்மேட் வைத்து வெற்றி பெறப்போகிறோம் என்கிற நிலைமையில் என்னைச் செக் செய்துவிடுகிறது.

பின்னூட்டம் வரலைன்னால் கூட இவ்வளவு கவலையும் வருத்தமும் இருக்காது.
இப்ப என்னடா என்றால் இந்தப் பொட்டிகிட்ட தோற்கிறோமே என்ற தாழ்வுணர்ச்சி பயங்கரமாக இருக்கிறது, காரம் அதிகமானா ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டுக் கொள்ளுவதைப் போல ,வெறும் ஃப்ரீசெல்லும்,ஸ்பைடரும்,சாலிடேரும் விளையாடி மனதை சமாதானப் படுத்திக்கொள்கிறேன்.:(

அடிமனதில் எப்படியாவது இந்த வெற்றி விகிதத்தைச் சமமாக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. யார் விட்டா:)
ஒரு கை பார்த்துடலாம்,.:)
இதுக்காக மாக்ருடில போயி ''ஹௌ டூ'' புத்தகம் வாங்கறதாக இல்லை.

28 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

இப்படி எல்லாம் சொல்லி எங்க வயித்துல ஜிவ்வுனு அக்னி ஏத்தக்கூடாது...

BABU said...

Glad to visit & comment on your first blog! Welcome on board!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) வளையலைப் பிடிச்சுக்கிட்டு கேக்கறாளா??
இந்த கிச்சன் அஷ்டாவதானி வேலை நானும் செய்வேன் ...

ambi said...

ஹிஹி, இதுக்கு தான் நான் அந்த பக்கமே போறது கிடையாது.

@முத்தக்கா, நாங்க எல்லாம் தசாவதானியாக்கும். :p

ராமலக்ஷ்மி said...

// யார் விட்டா:)
ஒரு கை பார்த்துடலாம்,.:)//

அதானே! வல்லிம்மாவது விடறதாவது:)? வாழ்த்துக்கள்! வெற்றி பெற்றதும் சொல்லுங்கள்:)!

வடுவூர் குமார் said...

அம்பி மாதிரி தான் எனக்கும்.

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

//நமக்கு அஷ்டாவதானியாகணும்னு ரொம்ப நாள் ஆசை.

இதையும் செய்து அதையும் செய்து, இடுப்பில் குழந்தை, அடுப்பில தோசை
இதெல்லாம் அந்தக் காலத்தில செய்தது.
அது போறாதுன்னு ரேடியோ வேற பாடிக்கிட்டு இருக்கும்..:)
பார்க்க்கிறவங்களுக்குக் கொஞ்சம் விபரீதமாவே தோணும்.//

சூப்பர். ஆஹா என் அம்மாக்களின் காலம். சிறு வயது காட்சிகள் என் கண் முன் அப்படியே :)))

கோபிநாத் said...

\\ambi said...
ஹிஹி, இதுக்கு தான் நான் அந்த பக்கமே போறது கிடையாது.
\\

;-))

ரீப்பிட்டே ;)

சதங்கா (Sathanga) said...

//@முத்தக்கா, நாங்க எல்லாம் தசாவதானியாக்கும். :p//

ஒரு தடவ சொன்னா .... :))))

அம்பி நானும் இத தான் நெனச்சேன்.

வல்லிசிம்ஹன் said...

கிருத்திகா, எந்த வரி உங்களைக் கலக்குதுனு தெரியலையே:)

வல்லிசிம்ஹன் said...

Babu, do you mean to say you are coming here for the first time:)
welcome and thank you.

வல்லிசிம்ஹன் said...

கயலு, இப்படித் தலைகிழா ஆடித்தான் பிள்ளைகளை வளர்க்கிறொம்:)

எங்க பாதையிலேயெ நீங்களும் வரதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு:)

வல்லிசிம்ஹன் said...

அம்பி, தசாவதானின்னா என்ன தெரியுமா கயல்.
சென்னைக்கு வரது,
டயப்பர் மாத்தறது,
டிக்கெட் புக் செய்துட்டு,
பூஜா தரிசனம் பண்ணிட்டு,
ஊருக்குப் போயிட்டு,
மீண்டும் சென்னைக்கு வரது
அப்புறம் ப்ளாகில பூரிக்கட்டை கனாக் காணறது.

ஆனா ஒண்ணு சொல்லணும் எல்லாம் பரிபூர்ண கமிட்மெண்டோடச் செய்துடுவார்.

அதனால தசாவதானிதான்.:)

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி வாங்கப்பா. கொஞ்ச நாளகும் . இந்த (சரியான அழுகுணி அடிக்கிற)கம்ப்யூட்டரை வெற்றி கொள்ள!! நோ ப்ராப்ளம்.
முன் வைத்த காலை,கையைப் பின் வைப்பதில்லை.:0)

கட்டாயம் சொல்றேன்.

வல்லிசிம்ஹன் said...

குமார் நீங்களுமா:)

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்,
வரணும்பா.

பதிவு எழுதறது நல்லா செய்யறவங்க எல்லாம் இந்த விளையாட்டுப்பக்கம் வர சான்சே இல்லை.
அதனால் நேரம்(உங்களுக்கு) கிடைச்சாதானே கவலை:))))

வல்லிசிம்ஹன் said...

அட,
சதங்கா கொசுவத்தியாயிடுச்சா இந்தப் பதிவு.:)

எல்லா அம்மாக்களுக்கும் இது கை வந்த கலைம்மா.
என் கணக்குப்படி கையில தட்டு வைத்துக் கொண்டு ரெண்டாவது தோசைக்காக அம்மா தலைப்பப் பிடித்திருப்பீர்கள்:)

ambi said...

இதுல மாவாட்டல் எல்லாம் சேக்காம விட்டீங்களே, அது வரைக்கும் என் மானம் தப்பியது. :p

Geetha Sambasivam said...

//அடுப்புக்கு அந்தப் பக்கம் படித்துக் கொண்டிருக்கும் நாவல் வேற இருக்கும், பக்கம் திரும்பாமல் இருக்க அது மேல ஒரு குழவி:)
சப்பாத்தி செய்யறதுதா//

இப்போ கணினியைச் சுத்தின்னு சொல்லலாமோ??? ஹிஹிஹி, அங்கே எப்படியோ, இங்கே தடுக்கி விழுந்தால் புத்தகத்திலே தான் விழ வேண்டி இருக்கு!!! :P

நல்லா எழுதி இருக்கீங்க! நான் இந்த விளையாட்டுப் பக்கமே போறதில்லை, எங்கே பிடிச்சுண்டுடுமோனு பயம், வேறே என்ன??? :))))))

வல்லிசிம்ஹன் said...

ஆஹாங்.அம்பி! இல்லவே இல்லை. பசங்க அப்படியெல்லாம் செய்யறதா எழுத முடியுமா.பாவம் இல்லையா.
மேலும் பெண்களே மாவாட்டறதில்லையே இப்ப:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. பின்ன ராமாயணம் எழுதறது சும்மாவா.
படித்த அனுபவம்,உள் வாங்கிக்கொண்ட உணர்வு இருந்தால்தான் இப்படி ஒரு இணையக் காவியம் படைக்க முடியும்.

உங்க வீட்டில ஏதாவது இடம் புத்தகம் இல்லாமல் இருந்தால் தான் அதிசயம்.நன்றிம்மா.

இலவசக்கொத்தனார் said...

:))

ஏற்கனவே ஒரு முறை இது பத்தி பேசி அட நீங்களுமான்னு சொல்லியாச்சே!!

வல்லிசிம்ஹன் said...

நிஜமாவா கொத்ஸ்?
ஏற்கனவே எழுதிட்டேனா. அட கடவுளே.

அய்யய்ய.....:(

NewBee said...

//இடுப்பில் குழந்தை, அடுப்பில தோசை
//
இது நச்!

//இந்த கல்லுக் குண்டு கணினி //

ஹி..ஹி..அது, எழுதிக் கொடுத்த ப்ரோகிராமை செயல் படுத்துது.

//பிறகு திடீரென ஸ்ட்ராட்டிஜி மாற்றிக் கொண்டு விட்டது//

அப்படின்னா, நீங்க அடுத்த லெவல் போயிட்டீங்கன்னு அர்த்தம்.நல்ல விஷயம் தானே.clap;clap;clap; :)

//யார் விட்டா:)
ஒரு கை பார்த்துடலாம்,.:)
//
அது! அது வல்லியம்மா. கல்லுக்குண்ட பின்னிப் பெடலெடுங்க. :)))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் நியூ பீ.
அப்படியா சொல்றீங்க. ஓஹோ. அப்ப லெவல் என்னன்னு செக் செய்துடறேன்:)

ஆஹா நான் முன்னேறிவிட்டேனா:)
அதுதானெ!! சொல்லிக்கொடுத்ததை அது செய்யுது.அதுக்காக ப்ரோக்ராம்மரைப் பிராண்டவா முடியும்!!!

Vijay said...

அய்யோ!!!!! அய்யோ!!!!!!!

இவ்ளோ பேரு.....அவ்ளோ பின்னூட்டம்....சே....யாருக்கவது அவங்களுக்கு கல்லுகுண்ட ஜெயிக்க உதவணும்னு தோணுச்சாயா? சே...சேச்...சே...செ....ம்....ம்......அது ரொம்ப ஈசிங்க. நான் ஒரு சில வழிமுறை சொல்றேன். கவனமா கேட்டுக்கோங்க....பர்ஸ்ட்....நாம வெள்ள காயா எடுத்துக்கணும்.....செரியா.....(ஏன் எல்லாரும் மொரைக்கிறீங்க......விலாவாரியா சொன்னா ஈசியா இருக்கும்னுதாம்பா......சரி ....சரி...விடுவிடுன்னே சொல்லிடறேன்.அடிதாங்காது எனக்கு...) எந்த காய வேணும்னா எடுத்துகோங்க....எப்பிடி வேணும்னா முவ் பண்ணுங்க.....பய்படவே வேணாம்.ஆமா..(நாந்தான் கூட இருக்கேன்ல)...கல்லுக்குண்டு நக்கலா சிரிச்சிகினே காய நவுத்தும்.இருகட்டும் ...இருக்கட்டும்...நாம அத கண்டுகினதா காட்டிக்கவேகூடாது.முக்கியமா நாம பயந்தோம்னு அதுக்கு தெரிஞ்சிதூஉ...அவ்ளோதான்...நாம தோத்துடுவோம்.(சரி சரி பாய்ண்டுக்கு வந்துட்டேன்..வெய்ட்டீஸ்)......இன்னும் ரண்டு முவ்ல ஆட்டம் குளோஸ்ங்கற நிலம வந்தவொடனே..(இங்கதா..இருக்குது..கிளைமாக்ஸே).கபால்னு காய மாத்திடணும்.....ஆகா......இப்ப பாருங்க கல்லுக்குண்டு முஞ்சிய......எப்டி...கலக்கலா?.....(அட....அட...ஏம்பா.....கல்லு எடுக்குற........போன்னு சொன்னா போகமாட்டமா?...ம்ம்ம்...ம்...அதுக்கு போயி..ம்ம்..நல்லதுக்கே காலம் இல்லபா.....)

Vijay said...

முந்தைய பின்னூட்டம் உங்கள் முயற்சியை கிண்டல் செய்து அன்று. தவறாய் இருந்தால் மன்னிக்கவும். வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

வல்லிசிம்ஹன் said...

தவறே இல்லைம்மா. நான் கிண்டலா எடுத்துக்கவில்லை.

சும்மா பதிவிடறதுதானே. முனைந்து விளையாடினால் கட்டாயம் ஜெயிக்கலாம்.
விஜய்,


அதனால் நான் தப்பா எடுத்துக்க வில்லை. சரியா:)