Blog Archive

Friday, June 13, 2008

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ







மிக மிக நன்றாக சமைப்பவர்கள் மத்தியில், நீட்டோலை வாசியா நெடுமரம் நான்.


அவர்கள் பேசும்போதெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு,

வானொலியில் சொல்லும், ம.மலரில் வரும் குறிப்புகள் எல்லாம் எழுதி வைத்துக் கொண்டு சமைத்த காலங்கள் உண்டு.


அது எங்க குழந்தைகளின் போதாத காலம்.:)

சில அனுபவங்களுக்கு அப்புறம், ;அம்மா எனிதிங் நியூ ' அப்படீனு கேக்கிறதையே பெரியவன் விட்டு விட்டான்.

(அவ்வளவு பயம்)பசங்க அலறுகிற மாதிரி ஒரு மாங்காய் ஜாம் செய்து

இருந்தேன்.


இந்த சோகம் ஆரம்பித்தது ,முதல் முதலா எங்க வீட்டு மாமரத்தில மாங்காய் அபரிமிதமாகக் காய்த்த 1983 சித்திரை மாதம்.


ஊறுகாய் போட்டால் ஒத்துக்கொள்ளும்படி இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. நல்லா காரமா ,எண்ணையில் மிதக்கும் மாங்காய்த் துண்டுகளை அழகாக பாட்டில்களில் பாக் செய்து எல்லாருக்கும் கொடுத்திருக்கிறேன்.
அவர்கள் எல்லோருமே நல்லாத்தான் இருக்காங்க:)

அப்போ சென்னையில் ஹாப்பினஸ்னு ஒரு சாகலேட் பானம் நடமாடிக் கொண்டிருந்தது.

அந்த பாட்டில் கெட்டியாக இருக்கும். அதோட மூடியில் ஹாப்பினஸ் என்று வேறு எழுதி இருக்கும். செண்டிமெண்ட் ஆவும் இருக்கும்,பாட்டில் சேர்க்கிறத்துக்கு ஆசைப் பட்ட நாட்கள்.
பக்கத்துவீட்டு தீபக்கோட பாட்டி மொட்டை மாடியில் உலர்த்திய ஒரு சுவையான பண்டத்தைப் பார்த்தேன்.
அப்போ வத்தல் வடகம் போடுகிற நாட்கள். நான் ஜவ்வரிசியைப் பிழிய அந்தப் பாட்டி மாங்காய் வத்தல் போடுவதாக அறிவித்தார்.
ஓ நாங்க கூடப் போடுவோம்னு நான் சொல்ல அது இல்ல இது. இது தித்திப்பு மாங்காய் என்றாரே பார்க்கணும்.
ஓஹோ ஆம்சத் போல இருக்கு ,அதான் எனக்குத் தெரியுமேனு நான் சொல்ல அவருக்குக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. இதுல காரம் திதிப்பு எல்லாம் சப்குச் இருக்கும் என்றார். அவங்க வட நாட்டவங்க.
சரி இதையும் கேட்டுக்கலாம்னு என்ன விவரம்,செய்முறை சொல்லுங்க என்று பணிவோடு கேட்டதற்கு
அவங்க அசால்ட்டா மாங்காய்த் துண்டு எட்த்துக்கோ. உப்பு போடு
வெல்லம் போடு. மிளகாய்ப் பொடி போடு, காய வைச்சால் வத்தல் கிடைக்கும்னு சொன்னாங்க.
நமக்கு ஒண்ணு காரம் ஒண்ணு திதிப்பு அப்படிச் செய்தால் ஒழுங்கா வரும்.
அது இப்பத் தெரிகிறது.
அப்ப இளமைக்காலம் இல்லையா.
அசத்திட வேண்டியதுதான்னு எங்க வீட்டு மகாப் புளிப்பு மாங்காயைத் துண்டம் செய்தேன்.
உடனே அதில் உப்பு மிளகாய்ப் பொடி போட்டுப் பிசிறி வச்சாச்சு.
இனிமேல் வெல்லம் சேர்க்கணும்.
அங்கதான் சனிபகவான் லேசா எட்டிப் பார்த்துட்டார்.
சரிக்கு சரி வெல்லம் சேர்க்க சொன்னாங்களா, இல்ல பாதியா என்று கேட்க அடுத்த வீட்டு ஜன்னலைப் பார்த்தால் பூட்டி இருந்தது.
வாட்ச்மேன் அவங்க திருப்பதிக்குப் போயிட்டதாச் சொன்னார்.
அட ஆத்தோட போற மாமியாரேனு நினைத்துக் கொண்டு:)(இது வேற கதை)
சரி, நம்ம மாங்காயோ புளிப்பு. அதுக்கு வெல்லம் சரியாயில்லாட்டா
பசங்க சாப்பிடாதுன்னு,
வெல்லப் பாகா செய்து மாக்கய் மேல விட்டு விட்டால் பர்ஃபி மாதிரி செய்துடலாம்,
என்ற யோசனையில் வெல்லத்தை உருளியில் போட்டு
இளக்கி ,...
போன் அடித்ததா...
என்னன்னு கேட்டு வரதுக்குள்ள கெட்டிப் பாகு ஆகிவிட்டது.
அதன் தலையில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மாங்காயை அதோடு சேர்த்தேன்.
நல்ல வாசனை வந்தது.
கொஞ்சமே கொஞ்சம் வினோத வாசனை:0)
ஆறின பிறகு வாணலியில் கிளறுவதற்காக ஒரு கரண்டியைப் போட்டேன்.
சுழற்ற வந்தது. அப்பாடி!! இறுகிப் போகவில்லை.
தாம்பாளத்தில் கொட்டி விட்டு வெயில்ல வச்சால் ஆச்சு, என்று தைரியமாக
மதியம் கல்லூரியிலிருந்து சாப்பிட வந்த பெரியவனிடம், எப்படிப்பா மாங்காய் வாசனை நல்லா இருக்கு இல்லையா என்றதும்,
ஏம்மா மாங்காய்ப்பச்சடி செய்தியா என்று ஆசையாக வாணலியைப் பார்த்தான்.
ஒரே கறுப்பா இருக்கேம்மா.என்றபடி கரண்டியை எடுக்கப் போனான்.
ஆறட்டும்பா. நான் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்றேன் என்று
நானும் கரண்டியில் கைவைத்தால் அது நகர்ந்தால் தானே:)
பயங்கரப் பாகு பிடித்துவிட்டது!!!
கொஞ்சம் சந்தேகமா இருந்ததால் ,எப்படியும் கரண்டியை வெளில எடுத்துடலாம் என்று மறுபடி அடுப்பில் ஏற்றினேன்..
சளக் ப்ளக் என்ற சத்தத்தோடு மாங்காய்த் துண்டுகள் வெல்லத்தோடு ஐக்கியமாகி விட்டன.
இன்னும் பாகு இறுகி கரண்டி,மாங்காய்,வாணலி எல்லாம் திரி மூர்த்தி சங்கமம் ஆகி,
அந்த அழகான கல்கத்தா வாணலியின் கதை முடிந்தது.
மாங்காயைப் பிரிக்க செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
கொஞ்சம் வாயில் போட்டுப் பார்க்கலாம் என்று ஓரமாகக் கிடைத்த ஒரு சின்ன மாங்காய்த் துண்டை எடுத்து சுவைத்தால்...
அப்படியே தலைக்குப் போயிற்று காரம்.
கண்ணில தண்ணி வந்தாச்சு.
என்னைப் பார்த்துப் பெரியவனுக்கும், மகளுக்கும் சிரிப்புப் பொங்கியது.
''அம்மா ஸ்பெஷல் பாம் எல்லாம் தயாரிக்க வேண்டாம்.
இதை அனுப்பு. உன்னை டிஃபென்ஸில் சேர்த்துக் கொள்வார்கள்.
அணுகுண்டெல்லாம் எந்த மூலைக்கு எங்க அம்மா செய்த
மாங்கய்ப் பணியாரத்துக்கு முன்னால்" என்று
ஒரே ஆரவாரம்:)
அதனால் மக்களே இந்தக் கதையின் மூலம் உங்களுக்கு நான் சொல்ல வருவது,
வருமுன் காத்துக் கொள்ளுங்கள் என்றுதான்.
புதுசு புதுசாக சமைக்க நல்ல துணிச்சலும் விவேகமும் வேண்டும் அது என் கிட்ட இல்லை. ஒத்துக் கொள்கிறேன்:)






23 comments:

ஆயில்யன் said...

//சில அனுபவங்களுக்கு அப்புறம், ;அம்மா எனிதிங் நியூ ' அப்படீனு கேக்கிறதையே பெரியவன் விட்டு விட்டான்.//
:))))

//கரண்டி,மாங்காய்,வாணலி எல்லாம் திரி மூர்த்தி சங்கமம் ஆகி,
அந்த அழகான கல்கத்தா வாணலியின் கதை முடிந்தது.//
:)))

ஆயில்யன் said...

விடுமுறை நாள் கொண்டாட்டத்தில இருக்கறப்ப, உங்க பிள்ளைக்கும் இன்னிக்கு ஏதோ டெஸ்ட் ரெசிப்பி பண்ணி சாப்பிட வைச்ச மாதிரி தெரியுது! இந்த பழங்காலத்து நினைப்பு :)))

ambi said...

ஹிஹி, மாங்காய் காய்ச்சா பேசாம மாங்கா ஊறுகாய் போட்டு பெங்களுருக்கு அனுப்புங்க. ரங்க நாதர் அருள் கிட்டும். :))

ஒரு சந்தேகம், இந்த பதிவு துளசி டீச்சரின் பதிவுக்கு எதிர்வினை பதிவா? :p

puduvaisiva said...

why you waste your time

ask many people near Bahur around the village they are good sarraku master { patta sarraku ]

they help you how can do it best

அபி அப்பா said...

நல்ல வேளை தப்பிச்சேன்! தங்கமணி ஊறுகாய் எல்லாம் பின்னிடுவாங்க பின்னி! ஆனா எனக்கு குடுத்து விட மாட்டாங்க! ஏன்னா என் கல்யாண சட்டை பட்டு சட்டை முழுக்க கடாரங்க்காய் ய்ய்றுகாய் ஆயிலா போச்சா! அதான்! போனா சாப்பிடலாம். 6 வகை ஊறுகாய் எப்பவும் இருக்கும். ஆனா எனக்கு பிடிச்ச நெல்லிக்காய் ஊறுகாய் தவிர! ஒரு தடவை என் அம்மா சொல்லிட்டாங்கலாம் "அண்ணன் தம்பிக்கு உள்ளே சண்டை போட்டுகனும்ன்னா ராத்திரி சாப்பாட்டிலே நெல்லிக்காய் ஊருகாய் போடுவாளாம்"ன்னு... அதனால் என் தங்கமணி அதை கட் பண்ணிட்டாங்க!!!

இதன்னெ கூத்து தக்காளி பாவக்காய் மாதிரி கசந்து ஒரு ஊறுகாஉ செய்வாங்க! அதுக்கு எல்லாம் நம்ம அபிபாப்பாதான் எலி:-)))))

theevu said...

எல்லோரும்சமையல் செய்யும் விதம் குறித்து சமையல்குறிப்பு எழுதுவார்கள்.நீங்கள் எப்படிசெய்யக்கூடாது என்று குறிப்பு எழுதியுள்ளர்கள் :)
//அதில் உப்பு மிளகாய்ப் பொடி போட்டுப் பிசிறி வச்சாச்சு.//
பிசிறிதல் என்றால் என்ன?
சேர்த்தலா?

துளசி கோபால் said...

சூப்பர் படமா இருக்கே.... அந்த பிங்க் பர்ஃபி என்னப்பா?

உங்க மரத்துலே இவ்வளோ மாங்காயா?

பேஷ் பேஷ்.


என்னிடமும் ஒரு கல்கத்தா வாணலி இருந்தது. அது இப்பவும் அண்ணாவீட்டில் பரணில் இருக்குமுன்னு நினைக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

பிழிந்த ஜிலேபி புளிப்பதற்குள் "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ"வா?

//அது எங்க குழந்தைகளின் போதாத காலம்.:)

சில அனுபவங்களுக்கு அப்புறம், ;அம்மா எனிதிங் நியூ ' அப்படீனு கேக்கிறதையே பெரியவன் விட்டு விட்டான்.//

:)))!

ராமலக்ஷ்மி said...

அபி அப்பா://"அண்ணன் தம்பிக்கு உள்ளே சண்டை போட்டுகனும்ன்னா ராத்திரி சாப்பாட்டிலே நெல்லிக்காய் ஊருகாய் போடுவாளாம்"//

அண்ணன் வீட்டு மரத்து நெல்லிக் காய்களை ஊறுகாய் போட தம்பி வீட்டு தங்கமணி கேட்க, ஆகாத அண்ணன் வீட்டு தங்கமணி அடுக்கி விட்ட கதையா இருக்கும் அபி அப்பா!

இலவசக்கொத்தனார் said...

இந்தப் பதிவு இதுக்கு ஐடியா குடுத்த எனக்கு சமர்ப்பணம் என டிஸ்கி போடாதது ஏன்? :)))

வல்லிசிம்ஹன் said...

இதப் பதிவு எழுதக் காரணமாக இருந்த இலவசக் கொத்தனார் என்கிற கொத்ஸுக்கு சமர்ப்பணம்.
இது ஒரு டிஸ்கி:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஆயில்யன், இன்னிக்கு விடுமுறைன்னால், வெளில சாப்பாடு என்று அர்த்தம். முதல் நாளே சொல்லிடுவான். அம்மா டேக் இட் ஈஸி.
அப்படின்னு. மருமகள் அப்புறம் சொன்னாங்க. இது வழக்கம்தான். உங்களுக்காக பயந்து இல்லைன்னு:)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா அம்பி. எதிர்வினையா. சாமி, நினைக்கக் கூட மாட்டேன்:)
நானும் போட்டுட்டு அவங்க பதிவையும் பார்த்தேன்.

அவங்க சாப்பிட வழி சொல்றாங்க. நம்ம பதிவு போ(சோதனை)தனைப் பதிவு:)

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா இப்போ சென்னைல அழகாப் பாக் செய்து தராங்க .உலக முச்சூடும் போலாம். நான் ஏற்கனவே ஒரு புடவையையே ஆவக்காயில் மூழ்கடித்தவள் அதனால இப்போ சர்வ எச்சரிக்கை.
நெல்லிக்காய் ஞாயிற்றுக்கிழமை,வெள்ளிக்கிழமை மற்றும் இரவில சாப்பிடக் கூடாது. கீரையும் ராத்திரி சாப்பிடக் கூடாது. இதெல்லாம் உடல் நலத்துக்காகனு கேள்வி.
ஆனால் நெல்லிக்காயைப் பார்த்தா சாப்பிடாம இருக்க முடியுமா:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தீவு,

நேற்று இரவு சாப்பாடும்போது இவங்க, அம்மா செய்த மாங்கோ பாம் ஞாபகம் இருக்காப்பான்னு எங்க சிங்கம் சொல்லிக் கேலி பண்ணாங்க.
அதனால இன்னிக்கு அதையே எழுதிடலாம்னு பதிவிட்டேன்.

பிசிறினாப்பில ன்னு சொல்றது ஒண்ணோட ஒண்ணு லேசா கலந்து வைக்கிறது. உப்புக் கலக்கிறத்துக்கு அப்படிச் சொல்லுவாங்க.

வல்லிசிம்ஹன் said...

எங்க மரத்தில இந்தத் தடவை 200 மாங்காய் தான் காய்ச்சது. அடுத்த வருஷம் நிறையக் கிடைக்குமாம்.

அது ஆம்சத் மா. துளசி!

இந்த ஹைதிராபாத்லேருந்து முன்னாடி வருமே அது. மாம்பழத்திலிருந்து செய்வாங்களே:)

வல்லிசிம்ஹன் said...

சரியாச் சொன்னீங்க ராமலக்ஷ்மி.
நான் எவ்வளவு நெல்லிக்காய் சாப்பிட்டு இருக்கேன். என் தம்பி என்னோட சண்டை போட்டதே இல்லை. நான் வம்புக்குப் போனால் உண்டு.:)

ஜிலேபி சாப்பிட்ட இனிப்பைப் போக்க மாங்காய்:)

வல்லிசிம்ஹன் said...

@அம்பி நிச்சயமா கேசரியோட ஊறுகாயும் அனுப்பறேன்:)

@துளசி அந்த மாதிரி வாணலி இப்ப கிடைக்கிறதே இல்லை. எல்லாம் ஸ்டைன்லஸ் ஸ்டீல் தான்.

வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன் ,

பரிசோதனைப் பதிவுங்கறீங்களா. அவன் தமிழ் படிக்கிறதுக்குள்ள இன்னிக்கு பூரா ஆகிடும். அதனால் நான் படிச்சு சொல்லிடுவேன்.
அப்புறம் இந்தத் தம்பட்டம் வேறயானு சொல்லுவான்.:0)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//அது எங்க குழந்தைகளின் போதாத காலம்.:)//

:-))))))))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அறிவன். உண்மையாவே பாவம் அவங்க.
என்னை ஒண்ணும் கமெண்டும் பண்ண முடியாது.

ஒரு சோதனைச் சிற்றுண்டி தயாராகிறது என்றால் மூணும் எஸ் ஆகிடுவாங்க:)

Geetha Sambasivam said...

ada,தாமதமாப் பார்த்துட்டேனே இதை, ரொம்பவே நல்லா இருக்கு, ஆனால் அந்த மாங்காய் ஊறுகாய் செய்முறை தெரியும், குஜராத்தில் ரொம்ப பிரசித்தம் இந்த இனிப்பும், காரமும் கலந்த ஊறுகாய். நல்லா இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

UNGALAIK KETTU IRUKKANUM.
IPPAVUM LATE AKALAI.

URUKKU VANTHAATTU KETTUKKIreN.

POONE CITYLA SAPPITTU IRUKKOM.
NALLAVE IRUNTHATHU.