Blog Archive

Tuesday, April 29, 2008

293,பயணமா ..மீண்டுமா...


உருண்டோடும் நாளில்,கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா? என்று பத்மினி கேட்பார் ஒரு படத்தில். பட்டி,விக்கிரமாதித்யன் கதைகளில் காடாறு மாசம் நாடாறு மாசம்னு படிப்பாவைகள்,கதைகள்,வேதாளம்னு கதை போகும். சம்சாரம் ஒரு சாகரம்னு தெரியும்.
நம்ம சம்சாரம் எல்லாம் சாகரத்தைத் தாண்டி இருக்கிறதுனால் ஒவ்வொரு சாகரத்தையும் தாண்டிப் போய்த்தான் சம்சாரத்தைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

எங்க சாகரத்தில லேட்டஸ்ட் ஆகக் குடியேறினவர் ஒருவர் அரபிக்கடலுக்கு அப்பால இருக்கிறார்:)

அவரைப் பார்க்கவும் கொஞ்ச நாட்கள் கொஞ்சவும் ,
சென்னையிலிருந்து கிளம்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.


இப்பத்தான் திரும்பி வந்தோம். என்ன, ஒரு எட்டு மாதம் ஆகிறது.
மறுபடி வீட்டுக்காவல்,மின்சார,தொலைபேசி கட்டண ஏற்பாடு என்று ஒரு சுத்து போக வேண்டும். ஏன் உங்களுக்கு இந்த ஈசிஎஸ் இதைப் பற்றித் தெரியாதான்னு நீங்க கேக்கலாம்.
இன்னும் அவ்வளவு முன்னேறவில்லை நாங்க.:)


உண்மையான ரிடையர்டு வாழ்க்கை நடத்துவது நான். சுறுசுறுப்புக்கு இன்னோரு பெயர் சிங்கம். ஒரு இடத்தில உட்காருவேனா என்பது போல் பார்வை.

'சும்மா இரு'ன்னு யாரோ எப்பவோ அதட்டுப் போட்டதில் உட்கார்ந்தவள் தான். இப்ப எல்லாம் நகருவதற்கு நாலாயிரம் கேட்கிறேன்.

இதெல்லாம் சரி வருமா. இயங்கினாத்ததானே உலகம்.
நானென்ன தக்ஷிணா மூர்த்தியா.

கண்ணை மூடித் தியானம் செய்துகொண்டால் எல்லாம் நடந்துவிடுமா.
அவர் சங்கல்பம் அவருக்கு எல்லாம் ஓடும்,ஆடும்.:)

நமக்கு நாமதான் ஓடணும்,
வேலை செய்யணும்.இப்பட்சியாகத்தானே நாம் சும்மா இருப்பது,கணினில ,இணையத்தில,வலைப் பதிவில
மொக்கை போடுவது,
பிடிக்காதவர்கள் செய்த ஏற்பாட்டினால் மீண்டும் புறப்படுகிறது க்ராண்ட்பேரன்ட்ஸ் எக்ஸ்பிரஸ்.:)


எல்லாம் சந்தோஷம்தான். ஆனா இந்த வலைகள் பக்கம் வர முடியுமா என்றுதான் தெரியவில்லை.
நமக்கோ இது புதிதாகத் திருமணம் செய்த தம்பதிகள் மாதிரிக் காலங்கார்த்தாலேனு ஆவர்த்தனம் ஆரம்பித்தால்,குளியல், உணவு,
குட்டித்தூக்கம், வங்கி,கோவில் இத்யாதிகளுக்கு நடுவில் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று படிக்காவிட்டால், பதில் போடாவிட்டால்.......
என்னவோ சாப்பிடாவிட்டால் யாருக்கோ கைகாலெல்லாம் பறக்குமாமே:)
அப்படி ஆகிப் போகிறது.!!

ஏதோ தமிழ்மணத்தில சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலேயும் ஆகிவிட்டது.
தத்தித் தத்தி 300 பதிவுகளாவது போட்டு விடலாம், அப்புறம் மீண்டும்
ஆட்டம் ஆரம்பிக்கலாம்னு பார்த்தால், நடுவில உனக்காச்சு எனக்காச்சுனு பேத்தி பிடித்து இழுக்கிறார்.

நாம் நம் தனித்துவத்தை எப்பவும் விடக்கூடாது இல்லையா.
மீண்டும் பார்க்கலாம்.












Posted by Picasa

26 comments:

வல்லிசிம்ஹன் said...

இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கு என்றாலும், வயசாச்சு இல்லையா...ஒரு புறபாடு என்றால் எத்தனையோ யோசனை.அதில ஒரு யோசனைதான் இந்தப் பதிவு:)

இலவசக்கொத்தனார் said...

நம்ம ஊர் பக்கமும் வரப் போறீங்களா? இல்லை வெறும் அமீரகம் மட்டும்தானா?

வல்லிசிம்ஹன் said...

இது கேள்வி.:)!!

அண்ட பகிரண்டப் பட்சிகள்னு ஒரு காலத்தில இருந்ததாம்.
நாங்க கண்ட பகிர் அண்டப் பட்சிகள்.
எல்லாக் கண்டங்களுக்கும் விசிட் உண்டு.

அங்கும் வரத் தான் பகவத்சங்கல்பம்.

எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டுமே!! ஒண்ணைப் பார்த்துட்டு ஒண்ணை விடமுடியுமா;)

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ், நன்றிம்மா.
பேர் சொல்ல விட்டுப்போச்சு.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லபடியா போயிட்டு வாங்க...இந்தமுறை நீங்க அமெரிக்கால இருக்கும் போது ரெக்கார்ட் பண்ண இப்பவே பாடலை ரெடிபண்ணி வைக்கிறேன்... எப்பவும் போல ஆர்.எஸ் மிச்சத்தை பார்த்துப்பாரு... :)

மெளலி (மதுரையம்பதி) said...

//உண்மையான ரிடையர்டு வாழ்க்கை நடத்துவது நான். சுறுசுறுப்புக்கு இன்னோரு பெயர் சிங்கம். ஒரு இடத்தில உட்காருவேனா என்பது போல் பார்வை.//

இதெல்லாம் ஜாதக விசேஷம்...என்ன பண்ணறது, உங்க சிங்கம் போன்ற ஜாதககாரர் உலகத்தில் நிறையப் பேர் இருக்கோம்...:)

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ், நன்றிம்மா.
பேர் சொல்ல விட்டுப்போச்சு.//

இப்படி எல்லாம் பின்னூட்டக் க்யமைத்தனம் செய்யக் கத்துக்கிட்டீங்களா? சரிதான்!!!

அப்புறம் நம்ம ஊருக்கு எப்போ வரப் போறீங்க? சிகப்புக் கம்பளம் எல்லாம் வாடகைக்கு எடுக்கணும்!! :))

வல்லிசிம்ஹன் said...

மௌலி, ததாஸ்து.
அப்படியே நடக்க பகவான் சித்தம் கொள்ளட்டும்.

பாட்டுத் தலைவன் யாரோ.இல்லை தலைவியோ!!

தொண்டை சாரீரம் ஒத்துழைக்க இந்த பாகவதரிணி பாடலாம்.

வல்லிசிம்ஹன் said...

பி க வா??????
ஐய்யய்யோ. நமக்கு அதெல்லாம் வருமா:)
அப்பப்போ ஏதோ ஒரு வருஷத்துக்கு ஒரு முறை:))

நானானி said...

ஹையா! ஜாலிதான், நல்லா எஞ்சாய்
பண்ணீட்டு வாங்க! அப்படியே பதிவுக்கும் சமாச்சாரங்களும் மொக்கைகளும் தேத்திட்டு வாங்க! வல்லி!
நாங்க வெயிட்டிங்!!

வல்லிசிம்ஹன் said...

பின்ன.
பதிய ஆரம்பிச்சாச்சு இல்ல!!

போட்டுத் தாக்க வேண்டியதுதான்:)
நன்றி நானானி.

சுந்தரா said...

அனல் பரக்கும் அமீரகம் உங்கள் வருகையால் குளிரட்டும்(!!!) வரவேற்கிறேன் வல்லி அம்மா.

Anonymous said...

வல்லிம்மா, நியீஸி வர்ரீங்க போல இருக்கு, கொஞ்சம் வெலிங்டன் பக்கம் வந்து என்னையும் கண்டுகிட்டு போங்க

வல்லிசிம்ஹன் said...

அப்படியா!!!!!!!!!!!!!!!! அம்மிணி!
யாருப்பா சொன்னாங்க.
வருவோம் .....ஒரு ரெண்டு வருஷம் தாண்டட்டும்.
வந்தா எல்லாரையும் பாக்காம,துளசி ஊஞ்சல்ல ஆடாம போயிடுவோமா:)நீங்கதான் வரது இங்க?

துளசி கோபால் said...

ஹைய்யா ஜாலியோ ஜாலிதான். பயணங்கள் முடிவதில்லைப்பா வல்லி.

பதிவு எங்கிருந்தாலும் படிக்கலாம். டோண்ட் ஓர்ரி யார்:-)))))

ஒட்டச்சிவிங்கியும் ஊருக்குப் போறாரா?

வல்லிசிம்ஹன் said...

சுந்தரா , இப்பவே அனல் பறக்குதா. நம்ம நேரம் தான். இங்க சட்டி கொதிக்குது அங்க அடுப்பே இருக்கு போல!!
பரவாயில்லை. வெளில சுத்தி அனுபவப் பட்டாச்சு போன தடவை.
இந்தத் தடவை வீட்டோட கிடக்க வேண்டியதுதான். நன்றிம்மா.

NewBee said...

ஹாப்பி ஜர்னி!

பதிவுக்குக் கருவும் படமும் இன்னும் நிறையக் கிடைக்குமா?:-).

கோபிநாத் said...

வல்லிம்மா..நல்லபடியா போயிட்டு வாங்க ;)

இந்த பக்கம் எப்போன்னு ஒரு ஓலை அனுப்புங்க ;)


\\இப்ப எல்லாம் நகருவதற்கு நாலாயிரம் கேட்கிறேன்.\\

காஸ்ட்லி பாட்டி தான் நீங்க..;)))

வல்லிசிம்ஹன் said...

துளசி ,
ஒட்டகச்சிவிங்கி அங்கதான் இருக்கார் பொண்ணு வீட்டில.

இந்தத் தரம் நமக்கு வெளிய போகச் சந்தர்ப்பம் கிடைக்குனு நினைக்கிறேன்.

ஆமாம் பதிவு படிக்கலாம்தான். ஒரு இடத்தைத் தவிர:)

வல்லிசிம்ஹன் said...

அச்சோ கோபி, உங்களுக்குத் தெரியாது நான் எவ்வளவு காஸ்ட்லினு:)

மெயில் போடறேன்பா. ரொம்ப நன்றி.

சதங்கா (Sathanga) said...

பயணங்கள் முடிவதில்லை. வெற்றிப் பயணம் அமைய வாழ்த்துக்கள்

வல்லி டீச்சர் ... ஹீம் ...

வல்லி மேடம் ... ஹூ ஹூம் ...

வல்லிம்மா ... (அமைதி)

சரி சரி, வல்லி பாட்டி ... :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நியூபீ.
நிறைய வம்பு தேடப் போறேன்.
அங்க பக்கத்தில என் பி சினு ஒரு அம்மாவுக்குப் பெயர் வச்சு இருக்கோம். அவங்களுக்குத் தெரியாம ஒரு துரும்பு அசையாது நெய்பர்ஹூடில்:0)

கேட்டு வாங்கிப் பதியப் போறேன்.,,,

வல்லிசிம்ஹன் said...

அப்பாடி வழிக்கு வந்தாரப்பா சதங்கா.

நன்றிம்மா. அங்கெ வந்த பிறகு மெயிலுகிறேன்.
இப்படிக்கு வல்லிப்பாட்டி.

ஜீவி said...

பயணம் செளகரியமாக அமையட்டும்.
வெளிநாடு செல்லல், பதிவுகள் படிக்க எழுத இன்னும் செளகரியம். (எனது அனுபவத்தைச் சொன்னேன்)
வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஜீவி ஐயா, வரணும்.
உண்மைதான் நீங்கள் சொல்வது . முதன் முதலில் இந்த தினசரி கணக்கு வழக்கு நம் கையை விட்டுப் போகிறது.:0)

பணம் பணம்னு எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம்;)
மற்ற ஆசீர்வாதங்கள் குழந்தைகள்.
நன்றி.

Geetha Sambasivam said...

நிம்மதியாப் போயிட்டு வாங்க வல்லி, பேத்திக்கு எங்கள் ஆசிகள், இந்த மட்டும் நல்லபடியாய்ப் பிரசவம் ஆச்சே, அதுக்கு இறைவனுக்கு நன்றி. யு.எஸ்ஸும் உண்டா? போயிட்டு வாங்க, பேரன்களோடும் இருந்துட்டு வரலாம். நமக்கு இருக்கவே இருக்கு, தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம் கட்டும் பிழைப்பு, அது பாட்டுக்கு நடக்கும், நடக்கட்டும். கவலையை விடுங்க!