Blog Archive

Friday, October 05, 2007

இணையத்தில் நட்புகளுடன் இருப்பது

சஷ்டாஷ்டகம் எனும் வார்த்தை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
நானும் இது ஏதோ முருகன் சம்பந்தப்பட்டது, பக்திமாலை, ஆறு ஸ்லோகம் அடங்கியது
என்று நம்பிக் கொண்டிருந்தேன்.
பெரியவர்கள் வீட்டில் ஒருவரோடு ஒருவர் பேசும்போதும், திருமண முயற்சிகள் நடக்கும் போதும்
ஷஷ்டாஷகம் இருக்கும் போல இருக்கே என்பதைக் குறிப்பிடும் போதுதான்
ஓஹோ இது மனிதர்கள் இடையே இருக்கும் விஷயம் என்று புரிந்தது.
நம்ம ஜோதிட ஆசானைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.அவர் கட்டாயம் நல்ல விளக்கம் வைத்து இருப்பார்.
அதைத்தவிர சந்திராஷ்டமம் வேறயாம்.
எங்க மாமியார் சொல்லுவாங்க. இன்னிக்கு எனக்குச் சந்திராஷ்டமம் நான் நிறையப் பேசக் கூடாது என்று,
எனக்கு இப்போது உண்மையாகவே இதைப் பற்றிக் கவலை வந்துவிட்டது.
நாமோ நிறைய எழுத்துக்களைப் படிக்கிறோம்.
நாமும் எழுதுகிறோம். எழுதியவர்களுக்குப் பின்னூட்டம் இடுகிறோம்.
நமக்குப் பின்னூட்டம் இடுபவர்களுக்கும் பதில் சொல்கிறோம்.
நகைச்சுவையாகச் சொல்வதாக நினைத்து எதையாவது எழுதிவிட்டு அவஸ்தைப் படுகிறோமோ என்று சில சமயம் தோன்றுகிறது.
நல்ல நண்பர்களை இழந்துவிடக் கூடாது இல்லையா.
எழுதுவது ஒரு அற்புதமான கலை.
பேசுவதும் அதைப் போலத்தான்.
சில சமயம் நாம் சொல்ல வரும் விஷயங்கள், பாதை மாறிச் சிலபேருக்கு வேறு விதமாகப் புரிகின்றன.
நமது நெருங்கிய உறவுகளுக்கேச் சில சமயம் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்று புரிவதில்லை.
அப்படிப் பார்த்துக் கொண்டே போய்த்தான் சிலசமயம் பேசாமலே இருந்த நாட்களும் உண்டு
அத்ற்குப்.
பலன் ,,மன அழுத்தம் அதிகரிப்பதுதான்.
ஆனால் நாம் பேசாமல் இருப்பதால் யாரும் அதைப் பற்றிக்கவலைப் படப் போவதில்லை.
அது சரியான அணுகு முறையும் இல்லை.
பேச வேண்டும், நாம் பேசுவது சரியான முறையில் புரிந்து கொள்ளப் பட வேண்டும், இதெல்லாம் unwritten rules.

என் வாழ்க்கையில் என் பெற்றொர்களோ, என் புகுந்த வீட்டில் என் மாமியோரோ சில சமயம் மௌனம் அனுஷ்டிப்பதைப் பார்த்து இருக்கேன்.
அப்பாவிடமோ, அம்மாவிடமோ,மாமியாரிடமோ கேட்கும்போது, '' பேசுவதால்'' சில துன்பங்கள் வரும்போது
மௌனமே சிறந்தது என்று பதில் வரும்போது ,
என் மனம் வருத்தப் படும்.
நாம் ஏதாவது சொல்லி இவர்களை வருத்திவிட்டோமோ என்று.!!
''


''
எஃபெக்டிவ் கம்யூனிகேஷன்''
என்ற ஒரு மேலாண்மை வகுப்பு ஒரு வாரம் போய்ப் படித்து வந்தேன்.(ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னால்)
அது பற்றி இப்போது சில தாள்களே ஒரு அனுபவமாகக் கற்றதற்கு அடையாளம்.
எந்தப் பாடமும் அனுபவத்தில் பயன் படுத்தப் படாவிடில் அதனால் பயன் என்ன என்று தோன்றுகிறது.
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
கனியிருப்பக் காய் கவர்வது தவறு,
யாகாவராயினும் நா காக்க.....
இதெல்லாம் நாம் கற்ற, கற்றுக்கொண்டே வளர்க்கப் பட்ட வாக்கியங்கள்.

இருந்தாலும் இணையத்தில் நல்லமுறையில் எழுதிப் பிழைத்திருப்பது எப்படி என்றும் ஒரு'' கோர்ஸ்''
எடுத்தால் என் போன்ற இணைய சிறார்களுக்கு(!!!!!!) நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.
மேலான இந்தத் தகவல் தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்தும் முறைகள் வரையிறுக்கப் பட்டால்,
கற்றுக் கொடுக்கப் பட்டால் உண்மையாகவே சிறப்பாக இருக்கும்.
கருத்துக்களைச் சொல்லுங்கள் நண்பர்களே,நண்பிகளே.

56 comments:

துளசி கோபால் said...

பேசாம அந்த வகுப்பை நீங்களே ஆரம்பிச்சுருங்க.

நான் அதுலெ சேர்ந்தாச்சு:-)

cheena (சீனா) said...

கருத்துடன் உடன்படுகிறேன். பேசுவது எதிர்பார்த்த பலனைத் தர வேண்டும் - இல்லை எனில் பேசாமலேயே இருக்கலாம். ஆனால் பேசாமல் இருந்தால் பலன் கிடைக்குமா ?? மன அழுத்தம் - நட்பில் விரிசல் - உறவில் குழப்பம் என வாழ்க்கையில் பிரச்னைகள் அதிகமாகும். அதை விட மனது விட்டுப் பேசி விடுவது நல்லது. பெரும்பாலும் சரியான தீர்வுகள் கிடைக்கும். மேலும் இதற்கெல்லாம் யாரும் வகுப்பெடுக்க முடியாது. கற்றுக் கொடுக்கப்பட்டாலும் அம்முறைகளைச் செயல் படுத்துவது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இருந்தாலும் அடிப்படை விதிகள் கற்றுக்கொடுக்கப்பட்டால் நல்லது தான்

வடுவூர் குமார் said...

சிலர் மாதிரி பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் சொல்லக்கூடாது.மௌனமாக இருந்துவிட வேண்டும். :-)) என்னோட நாலணா!!
மௌனம் மிகப்பெரிய ஆயுதம்,நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் எதிரி அறிய முடியாதல்லவா?பல சமயங்களில் இதை நான் உபயோகப்படுத்துவேன்.:-)

VSK said...

கடைசி வரைக்கும் பாம்புக்கும் கீரிக்கும் சண்ட விட்டுக் காட்டாத மோடி மஸ்தான் போல சஷ்டாகம் என்றால் என்னவெனச் சொல்லாமலேயே பதிவை முடித்து விட்டீங்க!

செம கில்லாடிதான் நீங்க!

இப்ப நான் ஆசன்கிட்ட போய்ன் கேக்கணும்!
வரட்டா!
பை தி பை, என்னையும் ஒரு மாணவனா என்ரோல்ல்[double l வருமாமே!] பண்ணிக்கங்க!
:))

மெளலி (மதுரையம்பதி) said...

//ஒரு'' கோர்ஸ்''
எடுத்தால் என் போன்ற இணைய சிறார்களுக்கு(!!!!!!) நன்மை பயக்கும் என்று //

முதல் பெஞ்சுல எனக்கு ஒரு இடம் வேண்டும்....காப்பிடேஷன் பீஸ் எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை. :-)

வல்லிசிம்ஹன் said...

நியாயமா துளசி:)))
என்னப்பா சீனியரே இப்படி சொன்னா எப்படி??

நான் கேக்கறது என்ன தெரியுமா, இப்படி சொல்றது சில சமயம் பாக்ஃபையர்
ஆகிறது. சிலரைக் கஷ்டப்படுத்தி விடுகிறது.
நாம சொல்ல வந்த வார்த்தைகள், பதிவு , வேறுவிதமாகப் புரிந்து கொள்ளப் படுகிறது.அதுதான்.ஏன். நமக்கு அழகாப் படுகிறது.அவங்களுக்கு அவஸ்தையாப் படுகிறது:((((துளசிக்கு ஃபர்ஸ்ட் சீட் ஒதுக்கப்பட்டது. வகுப்பு டீச்சர் யாரோ!!!!

வல்லிசிம்ஹன் said...

அதுதான் நானும் நினைக்கிறேன் சீனா.

வாழ்க்கையில் எல்லாமே புரிந்து விட்டால் சுலபமாகி விடும். புரியாத புதிர்களில் இந்த வார்த்தையும் அதன் நல்ல கெட்ட விளைவுகளும்தான்.
ரொம்ப நன்றி சீனா.

வல்லிசிம்ஹன் said...

குமார் மௌனத்தை நான் உபயோகப்படுத்தி இருக்கிறேன்.

ஆனால் அதற்குப் பலன் இருந்ததில்லை.

இன்ஃபாக்ட் விவாதம்னு வரும்போது விலகி விடுவது கூட நல்லதுதான்.

நீண்ட நாள் வாழ்க்கையில் பேசித்தானே ஆக வேண்டும்.

இணையமும் நமக்கு இன்னோரு குடும்பம் மாதிரி ஆகிவிட்டது.

இதையும் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறேனா என்று கூடத் தெரியவில்லை:))

ஆனால் நல்ல பயன்கள் விளையும் நிலத்தை இன்னும் சீராகப் பயன்படுத்தலலமே என்கிற யோசனையில்தான் இந்தப் பதிவை
எழுதினேன். நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் விஎஸ்கே சார்.
ஷஷ்டாஷ்டகம் வாத்தியார் ஐயா கிட்டக் கேட்டு இருக்கேன்,.
அவர் சொல்லுவார் என்றே நம்புகிறேன்.
அவருடைய வகுப்பு அறையில் இதுவும் ஒரு விளக்கமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

மௌலி உங்களோடு சேர்த்து அஞ்சு பேராச்சு.

ஆசான் விளக்கம் கொடுப்பார்னு நினைக்கிறேன்.
அவரது ஜோதிட வகுப்புகள் இப்போது ரொம்ப சீரியஸ் பதிவுகளாக வந்து கொண்டிருக்கின்றன.
அவருக்கு நேரம் இருந்து சொல்லணும்.

வாத்தியாருக்குக் கொடுக்கிற மரியாதையும் வணக்கமும்தான் காபிடேஷன் ஃபீஸ் ஆக இருக்க முடியும் இல்லையா:)))

G.Ragavan said...

சொல்ல வேண்டியதச் சொல்ற மாதிரிச் சொல்லனும். எதிர்க்கருந்து இருந்தாலே எதிரின்னு நெனைக்கிற எண்ணம் மாறுனாப் போதும். எல்லாம் ஒழுங்கா நடக்கும்.

வல்லிசிம்ஹன் said...

சொல்ல வேண்டியதைச் சொல்ற மாதிரி தான் சொல்லணும்.

நல்ல கருத்து.
சரி.

நம்ம கருத்தை அவங்க அதே மாதிரி புரிஞ்சுக்கணும் இல்லையா.
இங்கதான் ஏதோ ஆகிவிடுகிறது.

சொல்லறதைச் சொல்லிப்புட்டேன்னு சந்திர பாபு மாதிரி போய் விட முடியாது:))

எதிர் கருத்துக்கு மறுப்பு சொல்லலை ராகவன்.எதிரினு நினைக்கவும் இல்லை.:)))))

நன்றி. இது பாசிடிவா இருக்கு.

SP.VR. SUBBIAH said...

'சஷ்டாஷகம்'

இந்தச் சொல்லிற்கு யாராவது நேரடி தமிழ்ச் சொல்லைத் தந்தால், அதன் உண்மையான பொருள் தெரிந்து நானும் மகிழ்வேன்.

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. ஆனால் ஏராளமான ஜோதிட நூல்களை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, ஜோதிடத்தை ஒரு ஜனரஞ்சக சாஸ்திரம் ஆக்கிய பெருமை முன்னாள் மைசூர் சமஸ்தான ஜோதிடரான திரு.சூர்ய நாராயண ராவ் அவர்களையே சேரும். அதனால்தான் இன்று ஜோதிடம் பல வீடுகளில் குத்து விளக்காகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த மகான் அவர்

தமிழில் உள்ள ஜோதிட நூல்களெல்லாம் கடினமான தமிழில் உள்ளன.நான் ஜோதிடம் கற்றதெல்லாம் ஆங்கில மொழியில்தான்.

உலகத்தில் மூன்று விஷயங்கள் அற்புதமானவை:

1.தாயின் அன்பு ஏற்படுத்தும் கிறக்கம்!

2.உண்மை அல்லது சத்தியத்தை உணரும்போது ஏற்படும் மயக்கம்!
(மயங்குகிறாள் ஒரு மாது...என்ற கண்ணதாசன் அவர்களின் வரிகளில்
வருமே அந்தவிதமான மயக்கம் என்று பொருள் கொள்ளல் வேண்டும்!)

3. நல்ல நட்பு ஏற்படுத்தும் நெகிழ்ச்சி!
இந்த மூன்றிற்கும் ஈடானாது எதுவுமே கிடையாது!

மடல்காரன்_MadalKaran said...

சொல்லின் வலிமையை மனதால்தான் உணரமுடியும்.
சில சமயம் அதன் வலி செவி வழி இறங்கும்போது
மனதில் பூகம்பம் வெடிக்கிறது. சொற்கள் திராவகமா அல்லது தேவாம்பிரதமா என்பது எடுத்துக் கொள்பவரையும் தொடுத்து கொடுப்பவரையும் பொருத்து. தீயினால் வரும் வடுவைவிட நாவினால் வரும் வடு ரொம்ப ஆழமானது. எல்லாவற்றிக்கும் அனுபவப் பாடம் கற்க முடியாது. யாகாவாராயினும் நாகாக்க என்று நீங்க கோடிட்டு சொன்னது எல்லாருக்கும் பொருந்தும்.

அன்புடன், கி.பாலு

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி அக்கா!
எனக்கொரு மாமனார் இருந்தார். அவரோர் ஆசிரியர். அவர் கூறுவார் "ஒருவர் ஒரு தவறான வேலை செய்தால் ,உடனே என்ன?முட்டாள் வேலை செய்துவிட்டாய் எனக் கூறக் கூடாதாம்; "என்னப்பா...இது புத்திசாலி செய்யும் வேலையா ? என முதுகில் தடவிச் சிரித்துக் கொண்டு கூறினால்; அந்த மனிதர் ஆனந்தப் படுவதுடன்...சிக்கலே வராதாம்.."நான் தவறாகச் செய்தபோதும் ,என்ன கண்ணியமாக அதைச் சுட்டிக்காட்டிக் கூறினார்..;இவரெல்லோ பெருமனிதர் என நம் காதுபடப் பலருக்குக் கூறி மகிழ்வாராம்.
புத்திசாலி செய்யும் வேலையா?= முட்டாள் வேலை என்பது இங்கே அடிபட்டு விட்டது.
எதையும் நாசூக்காக மனம் நோகாமல் சொல்லலாம்.
பாரிஸ் கம்பன் விழாவில்( 29-09- 2007) திரு சுகி சிவம் அவர்கள் கூறினார். "நம்மிடையில் எதிர்க் கருத்துகள் உள்ளனவே தவிர ,நாம் எதிரிகள் அல்லர்.
இதைப் புரிந்தால் சமாளிக்கலாம்.

ஆடுமாடு said...

இதுக்கெல்லாம் எதுக்கு கோர்ஸ்? துளசிம்மா கூடலாம் நான் படிக்க மாட்டேன். பேசுவது, எழுவது எல்லாம் அனுபவம் சார்ந்தது. எந்தப் படிப்பும் சொல்லிக்கொடுக்காத பலவிஷயங்களை என்னோடு ஆடு மேய்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். சில விமர்சனங்கள் வலிப்பதும் சில வன்முறையாக இருப்பதும் அவரவர் மனம் சார்ந்த விஷயம். அந்த அவரவர்கள் தானாக உணர்ந்துகொண்டால்தான் தங்களை மாற்றுவார்களே தவிர, வேறெந்த கோர்ஸும் திருத்தி விடாது.
ஆடுமாடு

RATHNESH said...

People quarrel when they donot know how to argue.

Reprimanding the action and not the person will never fetch you an enemy

இவை இரண்டும் யார் மூலமாகவோ மனதில் பதிந்த வரிகள். ஞாபகத்திலாவது வைத்திருக்கிறேன் என்பதே வாழ்க்கையில் நிறைய உதவி இருக்கிறது. முயற்சித்துப் பாருங்களேன்.

RATHNESH

வல்லிசிம்ஹன் said...

தாயின் அன்பு ஏற்படுத்தும் கிறக்கம்!

2.உண்மை அல்லது சத்தியத்தை உணரும்போது ஏற்படும் மயக்கம்!
(மயங்குகிறாள் ஒரு மாது...என்ற கண்ணதாசன் அவர்களின் வரிகளில்
வருமே அந்தவிதமான மயக்கம் என்று பொருள் கொள்ளல் வேண்டும்!)

3. நல்ல நட்பு ஏற்படுத்தும் நெகிழ்ச்சி!
இந்த மூன்றிற்கும் ஈடானாது எதுவுமே கிடையாது!//



உண்மைதான் ஐயா.
எனக்கும் சமஸ்கிருதம் பொருள் சொல்லுமளவு தெரியாது.
தப்பாகச் சொல்லும் வாய்ப்பு அதிகம்:)
வடமொழி கற்றவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம்.
நன்றி.ஜோதிடம் அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
இது ஏதோ நட்சத்திரப் பொருத்தம் சம்பந்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.விவாகத்துக்குப் பொருத்தம் பார்க்கும்போது இதைப் பற்றிப் பெரியவர்கள் பேசிக் கேள்விப் பட்டு இருக்கிறேன்.மிக்க நன்றி சுப்பையா சார்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கி.பாலு.
சொற்களும் அவைகளின் பொருளும் என்றே ஒரு ஆராய்ச்சி நடத்தலாம் என்று நினைக்கிறேன்.
வெகு நாட்கள் முன்பு நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. எங்கள் நண்பர் ஒருவரும் அவர் மனைவியும் சொந்தமாய்க் கட்டும் வீட்டிற்கு மின் விசிறிகள் வாங்க வந்த, கடையில், கூடுதலாக ஒரு தண்ணீர் சுடவைக்கும் ஹீட்டர் ஒன்றும் வாங்கிவிடலாம் என்று கணவன் சொல்ல,
மனைவி கணவனுக்கு நல் வார்த்தை சொல்வதாக நினைத்து இந்த மாதக் கடன் அடையட்டும்,அடுத்த மாதம் வாங்கலாம் என்று சொல்லி விட்டாள்.
கடையில் வைத்து சொன்ன அந்த ஒரு சொல்லுக்காக அந்தக் கணவர்,
அவர்கள் பையன் பிறந்த போது கூட மருத்துவ மனைக்குப் போகாமல் இருந்து விட்டார்.

வார்த்தை பொறுக்கக் கூடிய வயதில் அவர் இல்லை என்பதைவிட, யோசித்துப் பேசும் வயதில்லவ்ளும் இல்லை என்பதுதான் அங்கே நடந்த சம்பவத்துக்கு ஆதாரம். இப்போது இருவரும் அத்தனை அன்யோன்யமாக இருக்கிறார்கள். ஆனால் மறந்து கூட ''கெய்சர் '' என்ற சொல் அவர்கள் பேச்சில் வராது.:((( நீங்கள் சொன்ன வடு இதுதான்னென்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க யோகன்.

நற்சொற்கள் செய்யும் மாயஜாலம் அற்புதம்.

அல்லாத சொற்கள் அப்படி இல்லை.
நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல புத்திசாலித்தனமான வார்த்தைகளை உபயோகப் படுத்தலாம்:)))



இந்தப் பதிவு எழுதியதற்கு இப்போது கொஞ்சம் தெளிவு கிடைக்கிறது.

Anonymous said...

Vallimma, I came to your blog today and was surprised by the topic of discussion ... havent been to the blog world for a long time ...

I agree with your polambals completely - have felt it the same way - many times! Blogging gets us into such challenging questions on interpersonal relationships! :) ... Looks like you are having spicy fun!

Your word "chadrashtamam" got me seriously into an idea whether it meant PMS! Menstrual - is moon based period - women's cycles!
Or it could be just another instance when a commenting person misunderstood what was said in the blog and took into an entirely different direction that the writer never intended!!! :) ...
oops!

Just stopped by to say "hi" to a friend!

வல்லிசிம்ஹன் said...

Hi Madhura,
what a surprise. where were you all this time.???

Yes ma'm sariyaana polambalthaan:)))))

I am very good at saying the wrong word at the arong time. in Movies they say the timing is neccessary for delivering the correct dialogue.
well I can proudly proclaim I do put my feet where they are not intended to be!!!!!!
Th e word CHANDHRAASHTAMAM (as I understood from our family elders)happens when the moon is in the eighth place with your rasi or zodiac sign.

ofcourse with some of us, well !!I do wonder:))))))))
Thank you Madhura.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆடுமாடு,

வார்த்தைகள் பற்றிய விவரம்+ வருத்தம்
எல்லோருக்கும் இருக்கு.

வாழ்க்கை போலயே இதுவும் அனுபவத்தில் கற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
துளசிம்மா தான் வகுப்பே எடுக்கப் போறாங்க:))))
அவங்க தானே டீச்சர்!!!!
நன்றி ஆடுமாடு.

வல்லிசிம்ஹன் said...

Rathnesh, it is so true, when we argue, we forget what words are coming out.
and it is also true when the person who is saying those words is someone who does not fall in the category of yr friends.

''எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்,
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு''
இதுவும் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட குறள்.

புரியாத போதுதான் தொந்தரவே!!
நன்றி ரத்னேஷ்.

வல்லிசிம்ஹன் said...

கடைசி வரைக்கும் பாம்புக்கும் கீரிக்கும் சண்ட விட்டுக் காட்டாத மோடி மஸ்தான் போல சஷ்டாகம் என்றால் என்னவெனச் சொல்லாமலேயே பதிவை முடித்து விட்டீங்க!

செம கில்லாடிதான் நீங்க!

அட ராமா, விஎஸ்கே சார். !!!
சாமி! ஷஷ்டாஷ்டகம் புரியாமத் தானே பதிவே எழுதினேன்....
மோடியாவது மஸ்தானாவது... நீங்க வேற:)))

தி. ரா. ச.(T.R.C.) said...

எப்போ கிளாஸ் எடுத்தாலும் என்னையும் ஒரு மாணவனாசேத்துக்குங்கோ வல்லியம்மா.சரியாவே எழுதத்தெரியலே

நாகை சிவா said...

அடுத்தவங்க நாம சொல்லுறதை புரிஞ்சுகனும் என்பதை விட அடுத்தவங்க சொல்ல வரதை நாம புரிஞ்சுக்கிட்டாலே போதுமே...

ஏதும் புரியுதா? :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச சார்.

வகுப்பு ரெடி.

டீச்சர் வரணும்.:))))))
உங்க எழுத்துக்கு என்ன சார் ,,, நிறைவாகத்தான் இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

சிவா,
இப்படி ஒரு கோணம் இருக்கோ.:)))
அப்ப அதுக்கும் டிக்ஷனரி
வேணும்:))))

நாமக்கல் சிபி said...

//கடைசி வரைக்கும் பாம்புக்கும் கீரிக்கும் சண்ட விட்டுக் காட்டாத மோடி மஸ்தான் போல சஷ்டாகம் என்றால் என்னவெனச் சொல்லாமலேயே பதிவை முடித்து விட்டீங்க!

செம கில்லாடிதான் நீங்க!//

Repeatu!

Anonymous said...

பேசாமல் இருப்பதால் பலன் கிடைப்பது உண்மைதான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிங்க சிபி.
இப்படி மோடி மஸ்தான் ஆகிட்டேனே:(((

வல்லிசிம்ஹன் said...

நன்றி தூயா.

கண்மணி/kanmani said...

வல்லியம்மா எதையும் சொல்லும் விதமாகச் சொன்னால் புரிந்து கொள்ளுதல் அதிகரித்து பிரச்சனைகளைக் குறைக்கும் யோகன் பாரிஸ் சொன்னது போல.
நமக்குக் கிடைத்த இந்த வாழ்க்கை,நாளை என்பதின் நிச்சயமற்ற நிலை,எல்லோரும் சமம் என்ற பக்குவம் இருந்தால் வார்த்தைகளில் தானாகவே ஒரு அனுசரணையும் நேயமும் வெளிப்படும்.
எப்போதோ படித்த விஷயம் வாழ்க்கையில் வெற்றி பெற இரண்டே இரண்டு வழி[மந்திரங்]கள்.

1.தயவு செய்து.....
2.மன்னித்துக் கொள்ளுங்கள்...

எதை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டால் போதுமே
பிறகென்ன எல்லோரும் நம் நண்பர்களே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கண்மணி,

நன்றி சொல்வதுகூட நல்லதுதான்.
நாம் அனுபவித்துத்தான் சொல்லுகிறோம்.

நாளை என்ற நிச்சயமற்றநிலை எல்லா வயதினருக்கும் புரியாது.
அதனால்தான் சில சமயம் நாம் சொல்வது புரிவதில்லை.

அனுசரணையிலயே ஓடும் வார்த்தைகள் அப்படியே புரிந்துகொள்ளப்படுகிறதா.
புரிந்துகொள்ளப்பட்டால் நாம் நண்பர்களே.
நன்றிம்மா:)))

நானானி said...

உறவுகளோடு சுமுகமாக உரையாடல் ஒரு பிரச்சனை..ஓகே..ப்ளாக்கில் நல்ல உரையாடலுக்கும் பிரச்சனையா?
என்ன ப்ளாக்குக்கு வந்த சோதனை?
உங்கள் வகுப்பில் எனக்கும் கடைசி பெஞ்சில் துண்டு போட்டு வைக்கவும்.
நான் அங்கு உள்வேன் அம்மா!

வல்லிசிம்ஹன் said...

நானானி,
வரணும் வரணும்.
எங்கப்பா காணோம். மெயிலனுப்புங்க.

நம்மஉரையாடலுக்கெல்லாம் பஞ்சமே இல்லை.:))

முத பெஞ்சிலியே இடமிருக்கு.

ambi said...

சஷ்டாஷ்டகம் என்றால் தசவித திருமண பொருத்ததில் ஒன்னு தான். அதாவது, பெண்ணின் ராசியில் இருந்து பையனின் ராசியானது ஆறாவதாக இருந்தால் அவை இரண்டும் ஒன்றுகொன்று பொருந்துகிறதா? என பார்ப்பர். இதில் சில விதிகள் எல்லாம் உள்ளது. சொன்னால் மிக நீளாமாகி விடும். மேலும் விவரங்களுக்கு வீட்டில் உள்ள பாம்பு பஞ்சாங்கம் பார்க்கவும்.


சந்திராஷ்டமம் - உங்கள் ராசிக்கு எட்டாவது ராசி என்ன?னு பாத்து அந்த ராசிக்குரிய நட்சத்திரம் அன்றைய தேதிக்கு வந்தால் அது சந்திராஷ்டமம். உங்கள் ராசி விருச்சிகம் என்றால் எட்டாவது ராசி மிதுனம். மிதுனத்துக்கு உரிய நட்சத்திரங்கள் என்னனு பார்க்கவும். (மிருகஷீஷம், திருவாதிரை)

வீன் வம்பு, வாய் தகராறு, எடுத்த காரியத்தில் இழுபறி எல்லாம் வரும்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, அருமை.
நன்றி நன்றி நன்றி.

பாம்பு பஞ்சாங்கம் இப்போ அவசியமில்லாமப் போயிடுத்துப் பாருங்கோ.

நாங்க மீனாட்சி ராசி.கணக்குப் போட்டுக்கிறேன்.:)))0

உண்மையாவே சந்தோஷம் அம்பி.
நான் எழுதினதையும் படிச்சுப் பதிலும் சொன்னதுக்கு.
எங்க தங்க சிங்கத்துக்கு எதிர் ராசி நானில்ல;))))))))00

மெளலி (மதுரையம்பதி) said...

ஏதேது அம்பி நீங்க இவ்வளவு பெரிய ஜோதிடரா, தெரியாம போச்சே. நீங்க அடுத்த முறை என் வீட்டுக்கு வரும்போது கேசரி கண்டிப்பாக உண்டு.... :-)

ambi said...

ஓ! அதான் ரேவதி என்ற பெயரா? ஆயில்யம்-கேட்டை-ரேவதி - பாத ரஜ்ஜு தேசாந்திரம் போய் கொண்டே இருப்பீர்கள். என்ன சரி தானே? :p

வீக் எண்டுலயே படிச்சாசு! பதில் போட இப்ப தான் கை வந்தது. (சோம்பேறிதனம் தான் வேறேன்ன?) :)))

குமரன் (Kumaran) said...

வல்லியம்மா. எல்லோரும் வலையுலக நண்பர்களிடம் எப்படி பேசுவது என்பதைப் பற்றிச் சொல்லிவிட்டார்கள். கூடுதலாகச் சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவும் அனுபவமும் இல்லை. அதனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. :-)

சஷ்டாஷ்டகம் பத்தி சொல்லலாம்ன்னு வந்தேன். அம்பி சொல்லியிருக்கிறார். கூடுதல் விவரம் மட்டும் சொல்கிறேன். சஷ்டி என்றால் ஆறு; அஷ்டகம் என்றால் எட்டு; பையனின் இராசி பெண்ணின் இராசிக்கு ஆறாவதாகவோ எட்டாவதாகவோ இருந்தால் பெண்ணின் இராசி பையனின் இராசிக்கு எட்டாவதாகவோ ஆறாவதாகவோ இருக்கும். எடுத்துக்காட்டுக்கு பையனின் இராசி மிதுனம், பெண்ணின் இராசி விருச்சிகம் என்றால் மிதுனத்திலிருந்து எண்ணிக் கொண்டு வர விருச்சிகம் ஆறாவது இராசி; விருச்சிகத்திலிருந்து எண்ணிக் கொண்டு வர மிதுனம் எட்டாவது இராசி. இதுவே பெண்ணின் இராசி மிதுனமாகவும் பையனின் இராசி விருச்சிகமாகவும் இருந்தாலும் அதே பொருத்தக் குறைவு தான். சஷ்டாஷ்டகம் இருந்தால் இராசிப் பொருத்தம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இராசிப் பொருத்தம் அவ்வளவு முக்கியமில்லாத பொருத்தம். 10ல் 5க்கு மேல் பொருந்தினாலே போதும் என்று சொல்லும் போது இராசிப் பொருத்தத்தை அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, எந்த் ராசி சோம்பேறிராசி??:)00
நல்ல விளக்கம் கொடுத்ததுக்கு மறுபடி ரொம்ப ரொம்ப தான்க்ஸ்...
பாத ரஜ்ஜு சரிதான்.

இந்த ஊரிலதான் 31 வருஷமா மாறாமல் இருக்கேன்.

அதுவரை ட்ராவலிங் & மாற்றிக் கொண்டே இருப்பதுதான் வழக்கம்:)))

வல்லிசிம்ஹன் said...

குமரன், நல்ல விளக்கமாகப் புரியும்படிச் சொல்லி விட்டீர்கள்.

எனக்கென்னவோ இந்தப் பொருத்தமும் பார்த்தால் நல்லதோ என்று தோன்றுகிறது.

ஜாதகமே இல்லாதவர்களோ,மற்றவர்களொ இந்த ஷஷ்டாஷ்டகம் மட்டும்
பார்த்துத் திருமணம் செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.
எப்படியோ சொல்லுபவருக்கும் கேட்பவருக்கும் புரிதல் இருந்தால் போதும்.


எனக்கு இன்று இந்த விஷயம் புரியக் கொடுத்ததற்கு நன்றி குமரன்.

ambi said...

@kumaran sir, ஆஹா, குமரன் சார், மிக தெளிவாக புரியும்படி சொல்லிவீட்டீகள். இதுக்கு தான் படிச்சவங்கள பக்கதுல வெச்சுகனும்னு சொல்றது!. :p

//நீங்க அடுத்த முறை என் வீட்டுக்கு வரும்போது கேசரி கண்டிப்பாக உண்டு//
@madurampathi, அண்ணா! நீங்க சொன்னாதே எனக்கு சாப்ட மாதிரி இருக்கு எனக்கு. அதுக்காக தராம இருந்துட வேண்டாம்.


@valli madam, கீதா பாட்டியின் ராசியான விருச்சிக ராசி தான் நமக்கும். அதான் சோம்பேறி ராசியோ என்னவோ..? :))))

நானானி said...

குமரன் சொன்ன சஷ்டாஷ்டகம் விளக்கம் தெளிவாக இருந்தது. என் மகனுக்கு ஜாதகங்கள் பார்க்கும்போது
மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல். நன்றி! குமரன்! அம்பிக்கும் சேர்த்துக்தான்!

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பொருத்தம், இன்னும் மனப் பொருத்தம் ரொம்ப
அவசியம்ம்ம்ம்ம்ம்.:))))))00

SALAI JAYARAMAN said...

ஜோதிடம் என்பது ஜோதி இடமாகும், அது மனிதனின் வாக்கில் தான் இருக்கிறது. மற்றபடி கோள்,

கிரகம் என்பதெல்லாம் கற்பனையே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த பெரியோர்கள், சான்றோர்கள்

என்ன மறைந்தா போய் விட்டார்கள். மனோ வாக்கு காயங்களைத் தாண்டி என்றும் முக்தி லோகத்திலிருந்து

பேசாமல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வள்ளுவம் என்ன 'குறளா' ? அது அவருடைய அந்தராத்மாவான

'குரல்' அல்லவா ? நற் செய்திகளை பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் இல்லாதவர்கடையேதான் பிணக்குகள்,

மனக்கசப்புகள். ஒத்த கருத்துடைய நேசம் கிடைக்காதவரை, உறவுகளோ நட்போ பொருந்தாததுதான். முகம்

பார்க்காமலே இதோ ஒரு நல்ல நட்பு வட்டம் இல்லையா- வல்லியம்மா நீங்கள் தான் பேசாத அணுகு முறை

மாற்றி எழுத்து என்ற ஒப்பற்ற வலிமையான ஆயுதம் கைக் கொண்டுள்ளீர்களே. அதுவே போதுமே, மற்றபடி

பேச்செதற்கு.

மற்றுமொரு கருத்து /

'யாகாவராயினும் நாகாக்க, காவாக்கால்'

என்பதில் `காவாக்கால்' என்பது இரு பொருள் தரும்படி அமைத்திருக்கிறார் வள்ளுவர். தகுதியற்ற

பொருத்தமற்ற உரையாடலினைத் தவிர்க்கும் காலத்தை தவிர்க்க வில்லை என்றால் 'சோகாப்பர் சொல்

இழுக்குப்பட்டு' என்பதாகவும், நல்லோர், அறிஞர் நட்பிடையே உரையாடும் போது பகுபதமாக்கிக் கொண்டு,

அதாவது ' கா வாக்கால்' - வாக்கால் அறிஞர்கள் நட்பைக் காத்துக்கொள் என்பதாகவும் உள்ளது. கற்றோர்

சபையில் அமைதிகாத்தலே நல்ல நடத்தை என்பதாகும். பொருளாதாய நோக்கில் உள்ளவரோடு அமைதி காத்தலே நன்மை பயக்குமாம்.

கால தாமதாகமாக பதிலளித்தாலும் என் சிந்தனையை பதிய வைக்க ஒரு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. இது தங்கள் பார்வைக்கு வருமோ வராதோ-

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஜயராமன்.அற்புதமான சிந்தனைகளை எழுத்து வடிவில் நீங்கள் தெளிவாகத் தந்தது என்னன்னு சொல்ல முடியாத சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
//
அதாவது ' கா வாக்கால்' - வாக்கால் அறிஞர்கள் நட்பைக் காத்துக்கொள் //

இந்த வாக்கியம் ஒன்றே போதும்.
பேச்சு காக்க மட்டும் பிரயோசனப்படும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
கொள்ளவேண்டும்.
அல்லாத சொற்கள் விலக்கிவிட்டு எழுதுவதையோ சொல்லுவதையோ
வதையில்லாமல் செய்யலாம்.
மிகவும் நன்றி.

அபி அப்பா said...

ம்! உலகத்தில் கஷ்டம் உள்ளவர்கள் இருக்கின்றார்களா! என நினைக்கும் மனப்பான்மை உடையவன் நான்! நவ கிரகங்களும் சேர்ந்து கும்மியடிச்சாலும் அவங்கல்லாம் சேர்ந்து மீட்டிங் போட்டு""இந்த அபிஅப்பா சரியா புரியாதவனா இருக்கானே! இவனை கஷ்டப்படுத்தி அது அவனுக்கு புரிஞ்சு...வெளங்கிடும் நம்ம பொழப்பு...வாங்க வாங்க அடுத்த வூடு பார்ப்போம்"ன்னு போகும் படீதான் இந்த வயசு வரை வாழ்ந்துகிட்டு இருக்கேன்!

காரணம் "ஜோதிடபலன்"ன்னு அப்பா சொல்லுவாங்க!

எனக்கு அட்டானிக்கால் போடும் பழக்கம் உண்டு! சந்திராஷ்டமத்தில் வலது கால் மேல் இடது காலை போட்டால், இடது காலை போட்டால் அப்படின்னு எல்லாம் இருக்காம். ஆஅனா நான் என் சந்திரன் அஷ்டமத்துல இருக்கும் போதெல்லாம் அதுக்கு ஏத்த மாதிரி போடுவதாகவும்,அப்போது சந்திராஷ்டம கஷ்டங்கள் 180டிகிரி மாறி விடுவதாகவும் ஒரு மகா ஜோசியர் சொன்னார்!ஸோ அபி அப்பான்னாவே சிரிப்பும் கும்மாலமும், கவலையின்மையும் மட்டுமே:-))))

ஆஹ, நான் நா காக்க மாட்டேன்!! சிரிச்சுகிட்டே இருப்பேன்:-))

SALAI JAYARAMAN said...

நன்று அபி அப்பா, என்றும் நீங்கள் சந்தோஷமுடன் சிரித்து நிறைவாய் வாழ வாழ்த்துக்கள். அது என்ன சிரிப்பதற்கு நா காக்க மாட்டேன். சிரிப்பதற்கு பல்லைக் காக்காமல் அதாவது உம்மாணம் மூஞ்சியில்லாமல் இருந்தாலே போதுமே. நாவைக் காப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா எப்போதுமெ நிறைவா சிரிச்சுகிட்டு இருக்க வாழ்த்துக்கள்.
நாமும் சிரித்து மக்களையும் சிரிக்க வைப்பதே பெரிய தொண்டு.:)))


சாலை ஜயராமன், மறு வருகைக்கும் நன்றி.

தருமி said...

கண்மணி சொன்னது:
//1.தயவு செய்து.....
2.மன்னித்துக் கொள்ளுங்கள்.....

நான் சொல்றது:
1. sorry
2. thanks

ஆனா அதோட என் 4 வது கட்டளையும் எனக்குப் பிடிச்சதுதான்.

தருமி said...

முந்தின பின்னூட்டத்தில் ஒரு தவறான தொடுப்பு. ஆகவே, மீண்டும் திருத்தத்துடன்:

கண்மணி சொன்னது:
//1.தயவு செய்து.....
2.மன்னித்துக் கொள்ளுங்கள்...//

நான் சொல்றது:
1. thanks
2. sorry

ஆனாலும் அதோடு எனது 4-வது கட்டளையும் ...

அபி அப்பா said...

நல்லா சொன்னீங்க ஜெயராமன் சார்! ஆனா சிரிக்கும் போதும் பேசுவேன்! பேசும் போதும் சிரிப்ப்பேனாக்கும்:-)) அது வல்லிம்மாவுக்கும் தெரியும்! அது போல நான் பேசும் போது எதிராளியும் கெக்கே பிக்கே தான்!

வல்லிசிம்ஹன் said...

தருமி சார்,
thanks works wonderfully.
and a heartfelt 'sorry ' also has its great advantages.



read your post oand the particular topic of RAUTHRAM'


MMMmmmmmmm:))