Blog Archive

Friday, May 11, 2007

நல்ல பயணம்,இனிய ஆரம்பம்










பயணங்கள் முடிவதில்லை படத்தின் பெயர்தான் நினைவு வருகிறது.
உண்மையாகவே உடலால் மேற்கொள்ளும் பயனங்கள் ஓரிடத்திலிருந்து ஆரம்பித்து மறு இடத்தில் முடிகிறது.
மீண்டும் ஒரு அசைவு.
வாழ்க்கையின் வேறு வேறு நிகழ்வுகளும்,
அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்றவிதத்தில்
தொடங்குகின்றன.
ஆதலினால் , இயங்கும் சக்திக்கும் முடிவில்லை.
ஆசைகளுக்கும் அளவில்லை.
தொடரும் பந்தங்கள்,
நட்புகள் எத்தனையோ.
நினைக்காத விதத்தில் எனக்குக் கிடைத்த இணைய நட்புகள்
இங்கே வட அமெரிக்கா வந்ததும் பெருகின.
இப்போது ஆறு மாதங்களுக்குப் பிறகு
பிரியும் போதும்,
பதிவுகளில் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருப்பதால் பாரமாகத் தோன்றவில்லை
அழகிய அர்த்தமுள்ள இந்தப் பயணம் வேறு ஒரு இடத்தில் ஆரம்பிக்கீறது.
அங்கிருந்து மீண்டும் பேசிக்கொள்ளலாம்.:-)

19 comments:

துளசி கோபால் said...

பயணம் இனிதாக அமைய மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

Take Care.

Radha Sriram said...

நல்லபடியா போயிட்டு வாங்க வல்லி....!!

வடுவூர் குமார் said...

மீண்டும் சந்திப்போம்.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
அங்கிருந்து மெயில் போடறேன். பெருமாள் கிருபையில்.
தான்க்ஸ்பா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ரதா. இப்போதான் நிறைய பேர்கள் பழக்கம் கிடைத்து இருக்கிறது.
நல்ல அனுபவம்.
பத்திரமா இருங்க.
பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார்.
கண்டிப்பாகப் பார்க்கலாம்.

பாலராஜன்கீதா said...

Well begun is half done என்று என் ஆங்கில ஆசிரியர் வாழ்த்துவது நினைவிற்கு வந்தது.

கோபிநாத் said...

பயணம் நல்லபடியாக அமைய என்னோட வாழ்த்துக்கள் அம்மா

அப்புறம் அன்னையார் தினா வாழ்த்துக்களும் ;-)

மீண்டும் சந்திப்போம்

ஷைலஜா said...

Happy journey Vallima!
(sending my #no to yr mail ID)
shylaja

Geetha Sambasivam said...

எளிமையான கவிதைத்துவமான பதிவு. வாழ்த்துக்கள். மெயிலி இருக்கேன். பார்த்துக்குங்க. :D

தி. ரா. ச.(T.R.C.) said...

இனிய பயணமாக இருக்க வாழ்த்துக்கள்.இன்றும் நாளையும் அம்பி கல்யாணத்தில் கலந்து கொண்டு உங்கள் சார்பிலும் ஆசிகளை வழங்குகிறேன்.take care health on tour

வல்லிசிம்ஹன் said...

WELCOMEBalarajangiithaa,

thankyou
for
thegoodwords.

வல்லிசிம்ஹன் said...

shailaja
thanku$
recd ur mail. have come to Swiss. mudinthaal
phone seyyaren.

வல்லிசிம்ஹன் said...

geetha thank u. it wasso
nice
talking
to u.
will writeagain.

வல்லிசிம்ஹன் said...

varanum thi.raa.sa.

many manythanks for wishes andofcourse
iththanai neram maappillai azhaippu
nadanthu irukkum.
our asirvaathangaL tothe
vadhukkaL.

SurveySan said...

Have a safe trip.

Thanks for your participation and singing. hope you will continue doing that :)

வல்லிசிம்ஹன் said...

Thank u Gopinath.
Happy to wish ur household a very Happy Mothers day.

மெளலி (மதுரையம்பதி) said...

வல்லியம்மா,

ஆக இந்தியா திரும்புகிறீங்க...

இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்...

மதுரையம்பதி.

காட்டாறு said...

உங்கள் பயணம் இனிதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.