Blog Archive

Tuesday, February 27, 2007

மற்றவர்----(தாத்தா பாட்டிதான்)---தலையிடலாமா


அதீதம் என்று யாரையாவது சொல்ல

வேணுமென்றால் அது தாத்தாக்களும் பாட்டிகளும் தான்.
எல்லாமே நிறைய. அட்வைஸ்,ஆதரவு,அன்பு.
இதோ இந்த லின்க் பாருங்கள்.http://www.ilovegrandma.com/
அற்புதமான அழகான நினைவுகள்.
பதிந்த விதமும் இதம்.
இது பரவாயில்லை.
நாம பெற்ற குழந்தைகள் அவங்க பெற்ற குழந்தைகளை (?!)
எப்படி நடத்தணும்னு நாம பாடம் எடுக்கக்கூடாது.
அது டிஸாச்டர்.
பெருமைதான் பாப்பாக்கள் பிறக்கும்போது.
எங்களுக்கு9எங்க குழந்தைகள் பிறக்கும் போது) அப்போ வாயைத் திறக்க வழி கிடையாது.
திறந்தால் வென்னீர்தான் கிடைக்கும்.
குடிக்கத்தான்.:-)
பேசக் கூடாது.
நோ விசிட்டர்ஸ்.
இப்ப அப்படியில்லை.
பிறந்ததும் சக்கரைத்தண்ணி கொடுக்கக் கூடாதாம். சென்னையிலும் பார்த்தேன்.
நோ சுகர் ப்ளீஸ்!!
இதோ இங்கேயும் பார்க்கிறேன்.
சர்க்கரை,இல்லாட்டா க்ளுகோஸ் தண்ணீர் கொடுத்தால் ரத்தம் டைல்யூட் ஆகுமாம்.
பிறந்த பாப்பா பாட்டு வ்ரரட் வ்ரரட்டுனு கத்தும்போது,
ஒரு நரசம்மா ''ஓ, யூ நாட்டிபாய். ஸ்க்ர்ரிமிங் ஆல்ரெடி/''னு வித விதமான சத்தம் எழுப்பியபடி பாப்பாவை ஒரு பண்டில் செய்து முகம் மத்திரம் தெரியறபடி உருட்டி விட்டுப் போய்விடுவார்கள்.
எனக்கோ கையும் காலும் பறக்கும்.
ஒரு துளி தண்ணீர் கொடுத்தா என்ன குறைவுனு தோன்றும்.
கிடையாது. முடியாது.
வீட்டுக்கு வந்தப்புறம் நம்ம ராஜ்ஜியம்தானேனு நினைச்சீங்க....நோ சான்ஸ்.
அதான் எல்லாம் நெட்டில பார்த்து வச்சு இருக்காங்க.
போதாக் குறைக்கு ஒரு பேபி புத்தகம். அதில
பிறந்த அன்னிலேருந்து ஒரு வயசு வரை
என்ன நடக்கும்.என்ன செய்யலாம் எல்லாம் பட்டியல் போட்டு வச்சு இருக்காங்க.
அதுதான் பெத்தவங்களுக்கு வேத பாடம்.
சின்னவனைப் பற்றி இப்போ எழுதக் கூடாது.அதனால் பெரிய பேரனைப் பற்றீ எழுதுகிறேன்.:-)
அவன் பிறந்து ஒரு மாதத்துக்கெல்லாம்
சரியாக ஜீரணம் இல்லாமல் , மலச்சிக்கல் பிரச்சினை.
ஊரில என்ன செய்வோம்?
ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை போதும்.
பாலில் கரைத்து பாலாடையில் வைத்துப் போட்டிவிடலாம்.
அது கூட வேண்டாம். கொஞ்சம் ஓல்ட் மெதட்.
மில்க் ஆஃப் மக்னீஷியா இரண்டு ஸ்பூன் கொடுக்கலாம்.
அதுவும் இப்போ ஆகாதாம்.
நேச்சுரலாக தானே சரியாகி விடும்.
என்ன பாப்பா ஞொய்னு அழுது கொண்டே இருக்கும். இல்லாட்டா வீல் வீல் கத்தல் போடும்.
ரெண்டு நாளாச்சு மூணு நாளாச்சு. குடல்
அசைந்து கொடுத்தால் தானே.
நான் திராட்சைப் பழமாவது வென்னீரில் ஊற வைத்துக் கொடுக்க நினைப்பேன்.
அப்போது இவங்க இருந்த இடத்தில்,
நம்ம இந்தியன் ஒருவர்தான் குழந்தைநல மருத்துவர்.
அவர் ரூல் போட்டது நாட்டுமருத்துவம் கூடாது.
அவங்க அம்மா அப்பாவும் அவரை இங்கே வளர்த்து இருப்பாங்களோ.:-)
ரெண்டு நாள் பொறுத்துப் பார்த்தேன்.
கிஸ்மிஸ் அதான் உலர்ந்த திராட்சையை நன்றாக கழுவிவிட்டு, சூடானத் தண்ணீரில் போட்டு, அந்த ஜூஸைக் குழந்தைக்கு உட்டிவிட்டேன்.
அவனும் சாப்பிட்டான். அடுத்த நாள் காலையில் 'பிக்ஜாப் டன்.'
முதல் நாள் இந்தப் பசங்க வெளில சினிமா பார்க்கப் போனது வசதியாப் போச்சு.
அடுத்த நாள் குழந்தை கலகலப்பாக விளையாடுவதைப் பார்த்து அம்மா அப்பாவுக்கு சந்தோஷம்.
பெண் மத்திரம் என்னை இரண்டு மூன்று நாட்கள் சந்தேகமாத் தான் பார்த்தாள்.
அம்மா ஏதாவது மருந்து கொடுத்தியா என்று கேட்காத குறைதான்.
நமக்குத்தான் சாமி நல்ல போக்கர் முகம் கொடுத்து இருக்காரே.
அப்பாவியாக இருந்து விட்டேன்.
அடுத்த பிரச்சினை வரும் வரையில.
அப்போது மாப்பிள்ளையே சொன்னார்
நாம வேணா வெளில போலாம்
அம்மா சரி செய்து விடுவார் என்று
சிரிக்கிறார்.
மீதி யிருந்த திராட்சைகளை வெளியில் போட மறந்து
விட்டு இருக்கிறேன்.
சின்க் பக்கத்தில் பார்த்து இருக்கிறார்.
இப்போதெல்லாம் டைரக்ட் டீலிங் தான்.












18 comments:

வடுவூர் குமார் said...

நல்லா இருக்கு உங்க கை வைத்தியம்.
பண்ணி கடைசியில மாட்டிக்கிட்டீங்களே!!?
பரவாயில்லை மாப்பிள்ளை நாசூக்காக டீல் பண்ணிட்டார்.

துளசி கோபால் said...

வாயைத் திறக்க முடியுமா? முடியுமான்னேன்..........

'அம்மா...உங்களுக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது'ன்னு சொல்ற மகனையோ மகளையோ
'தேமே'ன்னு பார்க்கணும்:-)))))

ஆமாம். உட்வர்டு கிரைப் வாட்டர் கொடுக்கற பழக்கமெல்லாம் போயிருச்சா?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் குமார். செய்யற திருட்டுத்தனம் சரியா துப்புரவா செய்யலைன்னா இப்படித்தான் மாட்டிப்பாங்க.:-)

இலவசக்கொத்தனார் said...

:))

Anonymous said...

அருமையா இருக்கு இந்த பதிவு வல்லிம்மா.
நீங்க உங்க ரியாலிட்டுய சொல்ற விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

இந்த பக்கம் போயிருக்கீங்களா?
http://www.ammas.com/ammas/Parenting_Questions.html
உங்களைப் போல அம்மாக்களின் தேவை நிறைய இங்க! :)

மெளலி (மதுரையம்பதி) said...

என்ன சொல்ல, இந்த மலச்சிக்கல் என் குழந்தைக்கும் இருக்கிறது (2 வருட குழந்தை), உலர்திராட்சை, பேரிச்சை, வெஜிடபி போன்றவை உண்ண மாட்டேன் என்று அடம். வாழைப்பழம் எப்போதாவது தான் தேவி உண்ண முன்வருவாள்....கஷ்டம் தான் வல்லியம்மா...எப்படித்தான் சமாளித்து வளர்த்தீர்களோ அந்த காலத்தில்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க வீட்டிலும் இதே கதை தான்.
மருத்துவமனை விட்டு வந்ததும் ராஜ்யம் அம்மா கையில் தான்.
இதே கிஸ்மிஸ் வைத்தியம் நடக்கும்.
வசம்பு வைத்தியம் நடக்கும்.

:-)

வல்லிசிம்ஹன் said...

துளசி,
க்ரைப் வாட்டர் கதை பெரிசு.
''அதெல்லாம் உண்மையான மருந்து கிடையாது. சிம்ப்டமாடிக் ரிலீஃப்.
ப்ரச்சினை என்னன்னே தெரியாமப் போயிடும்''

இதெல்லாம் அவங்க சைட் வாதங்கள்.அய்யோபாவம் இப்போ பிறக்கிற குழந்தைகள். எப்பவும் கார்சீட்டும் கையுமா வைத்தியரைப் பார்க்க அம்மாவும் அப்பாவுமா ஓடுவாங்க.
இங்கேனு இல்லை, சென்னையிலும் நம்ம சொல்லு எடுபடாது.:-)

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ, கொத்ஸ் நீங்களும் இந்த ஊருக்காரர்தானே .அதான் சிரிக்கிறீங்களா.:-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மதுரா.
சைட் லின்க் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.
எங்கேயாவது சொல்லணும் இல்லையா. அதான் இங்கே எழுதிடறது.
இவங்க எல்லாம் இந்தப்பக்கம் வந்து படிக்க மாட்டாங்க என்கிற
ஒரு தைரியம் தான்:-)

வல்லிசிம்ஹன் said...

மௌலி,கஷ்டப்படவே வேண்டாம்.
ரொம்ப சாதரணமா ஒரு நல்ல மருந்து இருக்கு.
ஜே அண்ட் ஜே டீ சேன்
என்ற யுனானி மருந்து எங்க மதுரைத் தாத்தா காலத்திலிருந்து எங்க வீட்டில புழங்கறோம்.
சைட் எஃபெக்ட் அது இது ஒண்ணும் பயமில்லை.
அதில சல்ஃபாஸ் என்கிற மருந்து மாத்திரை வடிவில் கிடைக்கும்.
அதைத் தினம் ஒன்று கொடுத்துப் பாருங்கள்.
வயிறு சம்பந்தமான ப்ரச்சினையே வராது.
குழந்தைக்கு மக்காச்சோளம் பிடிக்கும்னா, அந்த கார்ன் கருதோட விப்பாங்களே, அதை வேக வச்சு, துளி உப்பும் வெண்ணையும் தடவிக் கொடுக்கலாம்.
ஃபைபர் சத்து. சிக்கல் வராது.

வல்லிசிம்ஹன் said...

முத்துலட்சுமி,
இதெல்லாம் குழந்தை வளர்ப்பு மருந்துகள் இல்லையா.
நம்ம ஊரில இல்லாத மருந்தே இல்லை.
நல்ல கடையாப் பார்த்து வாங்கி வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம்.
உங்க அம்மா வாழ்க.:-)

மெளலி (மதுரையம்பதி) said...

I'll try the corn stuff first. But I need to see whether she likes it. Thanks Madam.

வல்லிசிம்ஹன் said...

yes fine Mouli.
she will be fine.

drinking hotwater shd also help.
advising is easy. making her take it in is one more step.;-)
love to Dhevi.

பொன்ஸ்~~Poorna said...

:)))

வல்லிசிம்ஹன் said...

வாங்க பொன்ஸ்.
இப்ப ஒண்ணு தெரிஞாகணும்.ஸ்மைலீ
பின்னூட்டத்துக்கா?பதிவுக்கா?

நானானி said...

நமக்கெல்லம் பிரசவமும் அதன் பின் என்ன என்று ஒன்றுமே தெரியாது!தெரிந்துகொள்ள எந்த 'வலை'யும் கிடையாது. இங்கு வந்தபின் என் மகள் பத்து பிள்ளை பெற்றவள் போல் பட்பட்..எனறு
விவரங்கள் சொல்லும்போது பொத்..பொத்..என்று பொத்தென்று
பொத்திக்கொள்ள வேண்டியிருக்கிற்து.
எதற்கு ரிஸ்க் என்று. ஆனாலும் கிரைப்வாட்டர்,விளக்கெண்ணை எல்லாம் கொடுக்கிறேனே
!துள்சி தளம் சுவையாயிருக்கிறது
துள்சியே ஒரு அருமருந்துதானே!!

வல்லிசிம்ஹன் said...

நானானி, வாங்க.
அதென்னமோ சரிதான் நீங்க சொல்றது.
இதெல்லாம் இப்படித்தான்னு நெட்டிலேயே பார்த்து குழந்தையை வளர்த்து விடுவார்கள் அடம் பிடிச்சா ஒரு அணுகுமுறை.
சாக்கலேட் கேட்டா அதில ஏதொ டெஃபிசியன்சி,
இப்படி எல்லாத்துக்கும் புக் புக்.
எங்க வினாயக்ராவ் டாக்டர் வெறுமனே 3 மாத்திரை எழுதிக் கொடுத்தால் ரிக்ஷஅ வீட்டுக்கு வரத்துக்குள்ள சரியாகிவிடும்.
இதுவும் மாற்றம்தான்.