Blog Archive

Monday, February 26, 2007

ஆதவனைக் காண ஆயுள் வளரும்











சூரியன் உதிக்க, அதை எட்டிப் பார்க்கும் நேரம்
கூட சென்னையில் கிடைக்காது.
எப்படியோ கோலம் போடும் நேரம் உலகம்
வாசலில் வரும் தவிட்டுப் புறா, தேன் சிட்டு
எல்லோருக்கும் ஒரு அவசர ஹை சொல்லி விட்டுப் பசங்களோட அரட்டைக்காகவும், நெட் சமாசாரங்களை மேய்வதற்கும்
உள்ளே வந்துவிடுவேன்.
அப்போது தெரியாத அதவனின் அருமம இப்போ கண்டேன் கண்டென்னு சூரிய நமஸ்காரம் செய்யலாமா என்று தோன்றுகிறது.
அவர்தான் ரொம்ப ஒளிஞ்சு விளையாடுகிறார்.
இப்போது இங்கே தெரிவதெல்லாம் வெள்ளை வெளேர்னு ஒரு பனி சூட்டின,அடைத்த ரோடுகள்.
ஒரு கரடிக் குல்லாயில் மறையும் முகங்கள்.
என்னதான் குளிராக இருந்தாலும் அடுத்த வீட்டு ஆதிசேஷனோடு வாக் போகும் பாட்டி.(பாட்டியா பேத்தியா?)
பௌர்ணமி எப்போ வரதுனு தெரிஞ்சுக்கணுமா
ஆன்லைன் பஞ்சாங்கம் பாரு.
ஏனென்றால் நிலாவையும் பார்த்து நாளாச்சு.
அதெப்படியோ நாலாம் பிறை என் கண்ணில் படாமல் போன கதையே கிடையாது.
அதுதான் நெட்டில தேடிக் கிடைத்ததைப் போட்டேன்.
இனிமேல் எந்தக் காரணம் கொண்டும் சென்னை வெய்யிலை ஒன்றுமே சொல்ல மாட்டேன்.
ஹீட்டரை அதிகம் செய்தால் தொண்டை வரளுகிறது.
தோல் சுருங்கி விடுகிறது.
அதற்கு நூறு வைத்தியம்.
சரி, ஹ்யூமீடிஃபையரைப் போட்டுக்கலாம் என்றால் குளிருகிறது.
யாரு நடு ராத்திரி எழுந்து அதை நிறுத்துகிரது.?
குழந்தை அழுகிறானே பாட்டுப் பாடி ,தட்டித் தூங்க வைக்கலாம் என்றால் குரல் நடுங்குகிறது.
ஆஃப்கீயில் பாடும் பாட்டியைப் பர்த்து மௌனமாகச் சிரிக்கிறான், அவன்.
வந்த தூக்கமும் போச்சேனு கவலை அவனுக்கு:-)
தொண்டை வரண்டு போவததல் ஃப்ளாஸ்க் நிறைய வென்னீர் போட்டு வைத்துக் கொண்டு கச்சேரிக்காரர்கள் போல அடிக்கடி கனைத்துக் கொண்டு
அலைய வேண்டி இருக்கு.
பக்கத்தில ஒரு வட இந்தியக்கார அம்மா இருக்காங்க.
நாலு வீடு தள்ளி.
அவங்க சொன்னாங்களேனு ஒரே ஒரு நாள் சகல அலங்காரங்களோடு(தலைகுல்லா,காது மஃப்ளர்,
கழுத்து ஸ்கார்f, கைக்கு க்ளௌவ்ஸ் காலுறை, பூட்ஸ் சகிதம் இறங்கி நடக்கப் போனேன்.
சுற்றுமுற்றும் குவித்து வைத்த பனிக்கும்பலைப் பார்த்ததுமே ஒரு நடுக்கம் வந்துவிட்டது.
கடவுளே இத்தனை நாள் அமெரிக்க மண்ணைத் தொட்டு வணங்கவில்லைங்கரதுக்காக
என்னை பதம் பார்த்துடாதேனு ஒரு அபௌட் டர்ன் பண்ணி
படு புத்திசாலியாக மறூபடி வீட்டுக்குள்ளையே
வந்து விட்டேன்.
நடக்கத்தானே வேணும். கணினிலேருந்து டிவி.
அங்கேயிருந்து சமையல் அடுப்புப் பக்கம்.
அங்கே யிருந்து வாசல் கதவு.
மாடிப்படி , எல்லாமே உடல் பயிற்சிதானே!!
என்ன சொல்கிறீர்கள்?

11 comments:

துளசி கோபால் said...

வல்லி,

குளிர்லே கவனமாத்தான் இருக்கணும். ஹீட்டர் இருக்கும் அறையிலே ஒரு வாயகன்ற பேசின்லே
பச்சைத்தண்ணீர் பாதி நிரப்பி வச்சுருங்க.

அப்புறம் கை, காலுக்கு க்ரீம் தடவிக்கிட்டே இருக்கணும். ட்ரை ஸ்கின் ரிலீஃப்.

லிப்ஸ்டிக் கட்டாயம் போட்டுக்கணும். உதடு காய்ஞ்சுரும். கஷ்டமா இருந்தா கலர்லெஸ் போட்டுக்கலாம்.

வீட்டுலே ட்ரெட்மில் இருந்தா உத்தமம். அதுலெ வாக் போகலாம்.

ஆதிசேஷனுக்கு பனியோ மழையோ எதா இருந்தாலும் நித்தியப்படி ட்யூட்டி போக வெளியிலே
போய்த்தான் ஆகணும். இல்லேன்னா அதுக்கு 'கக்கா' வராது:-)))))

அதான் பாட்டி/பேத்தி சகல அலங்காரங்களுடன் கூட்டிப்போறாங்க. ஆமாம், கையிலே ப்ளாஸ்டிக்
பை கொண்டு போறாங்கதானே? ------வை திருப்பி ரோடுலே இருந்து எடுக்க? :-))))

இலவசக்கொத்தனார் said...

அங்க இன்னும் ஒரு ட்ரெட்மில் வாங்கிப் போடலையா? பேசாம அதில் நடக்க வேண்டியதுதானே? ஹ்யுமிடிஃபயர் போட்டுக்குங்க. அது குளிராது. வேணுமானா அதை ரூமுக்கு வெளியில் வெச்சு கதவைத் திறந்து வெச்சுக்குங்க. இந்த ஹீட்டரில் வர உலர்ந்த காத்து உடம்புக்கு நல்லதே இல்லை.

அதுவும் நம்மை மாதிரி சென்னையில் நல்ல ஈரப்பதம் இருந்த காற்றை பழகியவர்களுக்கு இது ரொம்பவே கஷ்டம். எனக்கு ஹ்யுமிடிஃபயர் இல்லாமல் ஹீட்டர் போட்டால் மூக்கிலிருந்து இரத்தம் வரத் தொடங்கி விடும்!

VSK said...

புகைப்படங்களும், சொல்லிய கருத்தும் மிக அருமை!

கொஞ்சம் பயப்படாம வெளியில் நடங்க!

எத்தனை அற்புதங்களை மிஸ் பண்ணியிருக்கீங்க இதுவரை என்பது புரியும்!

வல்லிசிம்ஹன் said...

துளசி, நீங்க சொன்னது எல்லாம் செய்யறேன்.ஹீட்டர் பேஸ்மெண்டில இருக்கு.
நான் முதல் தளம் மத்தவங்க மாடி.
நமக்குத்தான் முட்டி கெஞ்சறதே.
ட்ரெட்மில்லும் கீழேதான்.
க்யுரெல்னு இங்கெ நல்ல க்ரீம் கிடைக்கிறது.
நம்ம லக்ஸ்(டிலக்ஸ்) மேனியை அதுதான் பாதுகாக்கிறது:-)
ஆமாம், இந்த சேஷனும் சேஷம்மாவும் கையிலெ பையோட தான் போறாங்க.:-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ்.
கண்ணாலே மூக்காலே என் பெண்ணைப் பயமுறுத்தியாச்சு.
இனிமே சரியா உடம்பைப் பார்த்துக்கலை...உன்னைத் தூக்கி ஸ்னொல போட்டுவிடுவேனு சொல்லி இருக்கிறாங்க.

எல்ல்லொரும் ரொம்ப பிஸியா இருக்கிறதாலே அப்பப்போ சவுண்ட் விடறதுதான்.கைவலி கால்வலின்னு.
எல்லாம் அட்டென்ஷன் கெட்டிங் ஸ்ட்ராடிஜி.:-)
நன்றி கொத்ஸ்.
ட்ரெட்மில் இருக்கு. அதுல டிவி ஓடலை.அதனால அங்கே போகவில்லை.))

வல்லிசிம்ஹன் said...

வரணும் எஸ்.கே.
எங்க டாக்டர் மாதிரியே சொல்லறீங்களே.
நதிங் லைக் அ ப்ரிஸ்க் வாக் இன் மரீனா..என்பார்.

போலாம்தான். நாளைக்கு 40*F.
சரியா இருக்கும்.போறேன்.
நன்றி எஸ்.கே.

வடுவூர் குமார் said...

நீங்கள் எல்லாம் சொல்லுவது ஒன்னுமே புரியலை,ஏனென்றால் இங்கு பனியே கிடையாதே!
அனுபவிக்க முடியவில்லை.:-))
அதென்னங்க "அகண்ட பாத்திரத்தில் தண்ணீர்? co2 வை பிடிக்கவா?
இல்ல அனுபவிச்சு தான் தெரிஞ்சுக்கனுமா?

அபி அப்பா said...

வல்லி மேடம், இங்க அப்படீயே தலைகீழ். ஆளை கொல்லும் வெயில். தாங்கவே முடியாது!!

வல்லிசிம்ஹன் said...

குமார், அகண்ட பாத்திரத்தில ஹெச் 2 ஓ வைத்தால்
சுத்திவர ஹீட்டர் உஷ்ணத்தை அது வாங்கி அறை கூலாகும்னு நினைக்கிறேன்.

இதைத்தவிர வேப்பரைசர் ஒண்ணு.சென்னையிலிருந்து வந்த நமக்கு
எல்லாம் கொஞ்சம் அதிகமாத் தெரியுது. நிங்க எனக்கு வீடு கட்டும்போது எல்லாம் சரிவர செய்து கொடுக்கணும்:-)

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா
வெய்யில் ஆரம்பிச்சுடுத்தா உங்க ஊரில?
பார்த்துக்கோங்க . கவனமா இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா அல்கிஸேலயா இருக்கீங்க?
நாங்க அங்கெ வரும்போது பதிவர் மாநாடே போடலாம்.:-)