Blog Archive

Tuesday, February 27, 2007

மற்றவர்----(தாத்தா பாட்டிதான்)---தலையிடலாமா


அதீதம் என்று யாரையாவது சொல்ல

வேணுமென்றால் அது தாத்தாக்களும் பாட்டிகளும் தான்.
எல்லாமே நிறைய. அட்வைஸ்,ஆதரவு,அன்பு.
இதோ இந்த லின்க் பாருங்கள்.http://www.ilovegrandma.com/
அற்புதமான அழகான நினைவுகள்.
பதிந்த விதமும் இதம்.
இது பரவாயில்லை.
நாம பெற்ற குழந்தைகள் அவங்க பெற்ற குழந்தைகளை (?!)
எப்படி நடத்தணும்னு நாம பாடம் எடுக்கக்கூடாது.
அது டிஸாச்டர்.
பெருமைதான் பாப்பாக்கள் பிறக்கும்போது.
எங்களுக்கு9எங்க குழந்தைகள் பிறக்கும் போது) அப்போ வாயைத் திறக்க வழி கிடையாது.
திறந்தால் வென்னீர்தான் கிடைக்கும்.
குடிக்கத்தான்.:-)
பேசக் கூடாது.
நோ விசிட்டர்ஸ்.
இப்ப அப்படியில்லை.
பிறந்ததும் சக்கரைத்தண்ணி கொடுக்கக் கூடாதாம். சென்னையிலும் பார்த்தேன்.
நோ சுகர் ப்ளீஸ்!!
இதோ இங்கேயும் பார்க்கிறேன்.
சர்க்கரை,இல்லாட்டா க்ளுகோஸ் தண்ணீர் கொடுத்தால் ரத்தம் டைல்யூட் ஆகுமாம்.
பிறந்த பாப்பா பாட்டு வ்ரரட் வ்ரரட்டுனு கத்தும்போது,
ஒரு நரசம்மா ''ஓ, யூ நாட்டிபாய். ஸ்க்ர்ரிமிங் ஆல்ரெடி/''னு வித விதமான சத்தம் எழுப்பியபடி பாப்பாவை ஒரு பண்டில் செய்து முகம் மத்திரம் தெரியறபடி உருட்டி விட்டுப் போய்விடுவார்கள்.
எனக்கோ கையும் காலும் பறக்கும்.
ஒரு துளி தண்ணீர் கொடுத்தா என்ன குறைவுனு தோன்றும்.
கிடையாது. முடியாது.
வீட்டுக்கு வந்தப்புறம் நம்ம ராஜ்ஜியம்தானேனு நினைச்சீங்க....நோ சான்ஸ்.
அதான் எல்லாம் நெட்டில பார்த்து வச்சு இருக்காங்க.
போதாக் குறைக்கு ஒரு பேபி புத்தகம். அதில
பிறந்த அன்னிலேருந்து ஒரு வயசு வரை
என்ன நடக்கும்.என்ன செய்யலாம் எல்லாம் பட்டியல் போட்டு வச்சு இருக்காங்க.
அதுதான் பெத்தவங்களுக்கு வேத பாடம்.
சின்னவனைப் பற்றி இப்போ எழுதக் கூடாது.அதனால் பெரிய பேரனைப் பற்றீ எழுதுகிறேன்.:-)
அவன் பிறந்து ஒரு மாதத்துக்கெல்லாம்
சரியாக ஜீரணம் இல்லாமல் , மலச்சிக்கல் பிரச்சினை.
ஊரில என்ன செய்வோம்?
ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை போதும்.
பாலில் கரைத்து பாலாடையில் வைத்துப் போட்டிவிடலாம்.
அது கூட வேண்டாம். கொஞ்சம் ஓல்ட் மெதட்.
மில்க் ஆஃப் மக்னீஷியா இரண்டு ஸ்பூன் கொடுக்கலாம்.
அதுவும் இப்போ ஆகாதாம்.
நேச்சுரலாக தானே சரியாகி விடும்.
என்ன பாப்பா ஞொய்னு அழுது கொண்டே இருக்கும். இல்லாட்டா வீல் வீல் கத்தல் போடும்.
ரெண்டு நாளாச்சு மூணு நாளாச்சு. குடல்
அசைந்து கொடுத்தால் தானே.
நான் திராட்சைப் பழமாவது வென்னீரில் ஊற வைத்துக் கொடுக்க நினைப்பேன்.
அப்போது இவங்க இருந்த இடத்தில்,
நம்ம இந்தியன் ஒருவர்தான் குழந்தைநல மருத்துவர்.
அவர் ரூல் போட்டது நாட்டுமருத்துவம் கூடாது.
அவங்க அம்மா அப்பாவும் அவரை இங்கே வளர்த்து இருப்பாங்களோ.:-)
ரெண்டு நாள் பொறுத்துப் பார்த்தேன்.
கிஸ்மிஸ் அதான் உலர்ந்த திராட்சையை நன்றாக கழுவிவிட்டு, சூடானத் தண்ணீரில் போட்டு, அந்த ஜூஸைக் குழந்தைக்கு உட்டிவிட்டேன்.
அவனும் சாப்பிட்டான். அடுத்த நாள் காலையில் 'பிக்ஜாப் டன்.'
முதல் நாள் இந்தப் பசங்க வெளில சினிமா பார்க்கப் போனது வசதியாப் போச்சு.
அடுத்த நாள் குழந்தை கலகலப்பாக விளையாடுவதைப் பார்த்து அம்மா அப்பாவுக்கு சந்தோஷம்.
பெண் மத்திரம் என்னை இரண்டு மூன்று நாட்கள் சந்தேகமாத் தான் பார்த்தாள்.
அம்மா ஏதாவது மருந்து கொடுத்தியா என்று கேட்காத குறைதான்.
நமக்குத்தான் சாமி நல்ல போக்கர் முகம் கொடுத்து இருக்காரே.
அப்பாவியாக இருந்து விட்டேன்.
அடுத்த பிரச்சினை வரும் வரையில.
அப்போது மாப்பிள்ளையே சொன்னார்
நாம வேணா வெளில போலாம்
அம்மா சரி செய்து விடுவார் என்று
சிரிக்கிறார்.
மீதி யிருந்த திராட்சைகளை வெளியில் போட மறந்து
விட்டு இருக்கிறேன்.
சின்க் பக்கத்தில் பார்த்து இருக்கிறார்.
இப்போதெல்லாம் டைரக்ட் டீலிங் தான்.












Monday, February 26, 2007

ஆதவனைக் காண ஆயுள் வளரும்











சூரியன் உதிக்க, அதை எட்டிப் பார்க்கும் நேரம்
கூட சென்னையில் கிடைக்காது.
எப்படியோ கோலம் போடும் நேரம் உலகம்
வாசலில் வரும் தவிட்டுப் புறா, தேன் சிட்டு
எல்லோருக்கும் ஒரு அவசர ஹை சொல்லி விட்டுப் பசங்களோட அரட்டைக்காகவும், நெட் சமாசாரங்களை மேய்வதற்கும்
உள்ளே வந்துவிடுவேன்.
அப்போது தெரியாத அதவனின் அருமம இப்போ கண்டேன் கண்டென்னு சூரிய நமஸ்காரம் செய்யலாமா என்று தோன்றுகிறது.
அவர்தான் ரொம்ப ஒளிஞ்சு விளையாடுகிறார்.
இப்போது இங்கே தெரிவதெல்லாம் வெள்ளை வெளேர்னு ஒரு பனி சூட்டின,அடைத்த ரோடுகள்.
ஒரு கரடிக் குல்லாயில் மறையும் முகங்கள்.
என்னதான் குளிராக இருந்தாலும் அடுத்த வீட்டு ஆதிசேஷனோடு வாக் போகும் பாட்டி.(பாட்டியா பேத்தியா?)
பௌர்ணமி எப்போ வரதுனு தெரிஞ்சுக்கணுமா
ஆன்லைன் பஞ்சாங்கம் பாரு.
ஏனென்றால் நிலாவையும் பார்த்து நாளாச்சு.
அதெப்படியோ நாலாம் பிறை என் கண்ணில் படாமல் போன கதையே கிடையாது.
அதுதான் நெட்டில தேடிக் கிடைத்ததைப் போட்டேன்.
இனிமேல் எந்தக் காரணம் கொண்டும் சென்னை வெய்யிலை ஒன்றுமே சொல்ல மாட்டேன்.
ஹீட்டரை அதிகம் செய்தால் தொண்டை வரளுகிறது.
தோல் சுருங்கி விடுகிறது.
அதற்கு நூறு வைத்தியம்.
சரி, ஹ்யூமீடிஃபையரைப் போட்டுக்கலாம் என்றால் குளிருகிறது.
யாரு நடு ராத்திரி எழுந்து அதை நிறுத்துகிரது.?
குழந்தை அழுகிறானே பாட்டுப் பாடி ,தட்டித் தூங்க வைக்கலாம் என்றால் குரல் நடுங்குகிறது.
ஆஃப்கீயில் பாடும் பாட்டியைப் பர்த்து மௌனமாகச் சிரிக்கிறான், அவன்.
வந்த தூக்கமும் போச்சேனு கவலை அவனுக்கு:-)
தொண்டை வரண்டு போவததல் ஃப்ளாஸ்க் நிறைய வென்னீர் போட்டு வைத்துக் கொண்டு கச்சேரிக்காரர்கள் போல அடிக்கடி கனைத்துக் கொண்டு
அலைய வேண்டி இருக்கு.
பக்கத்தில ஒரு வட இந்தியக்கார அம்மா இருக்காங்க.
நாலு வீடு தள்ளி.
அவங்க சொன்னாங்களேனு ஒரே ஒரு நாள் சகல அலங்காரங்களோடு(தலைகுல்லா,காது மஃப்ளர்,
கழுத்து ஸ்கார்f, கைக்கு க்ளௌவ்ஸ் காலுறை, பூட்ஸ் சகிதம் இறங்கி நடக்கப் போனேன்.
சுற்றுமுற்றும் குவித்து வைத்த பனிக்கும்பலைப் பார்த்ததுமே ஒரு நடுக்கம் வந்துவிட்டது.
கடவுளே இத்தனை நாள் அமெரிக்க மண்ணைத் தொட்டு வணங்கவில்லைங்கரதுக்காக
என்னை பதம் பார்த்துடாதேனு ஒரு அபௌட் டர்ன் பண்ணி
படு புத்திசாலியாக மறூபடி வீட்டுக்குள்ளையே
வந்து விட்டேன்.
நடக்கத்தானே வேணும். கணினிலேருந்து டிவி.
அங்கேயிருந்து சமையல் அடுப்புப் பக்கம்.
அங்கே யிருந்து வாசல் கதவு.
மாடிப்படி , எல்லாமே உடல் பயிற்சிதானே!!
என்ன சொல்கிறீர்கள்?

Wednesday, February 21, 2007

சித்திர ராமன்.7......சூர்ப்பனகை வந்தாள்


பஞ்சவடி வருவதற்கு முன்னால் ராமன்சீதா லக்ஷ்மணர்கள் , அத்ரி அனுசூயா ரிஷிகளின் ஆசிரமத்திற்கு வருகிறார்கள்.
அதற்கு முன்பு இருந்த சித்திரகூடத்தில்
மனதுக்கு அமைதியான வாழ்க்கை கிடைத்தாலும் ,பரதன் வந்து போனதில் ராமனுக்கு துக்கம் வதைக்கிறது.
தந்தையை நினைத்து வருந்துகிறான்.
ராமனுக்கு,த் தான் தெய்வ அவதாரம் என்பதும் மறந்து போய்விடும் சமயங்களில் இதுவும் ஒன்று.
அவனுக்கே இந்த கதி என்றால் நாமெல்லோரும் எம்மாத்திரம்!
அத்ரி மகரிஷியின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளும் ராமன் விடைபெறும் தருணத்தில் அனுசூயா ,அவளே ஒரு மகா தபஸ்வினி, சீதையிடம் தன் சர்வ
ஆபரணங்களையும் தருகிறாள்.அன்புடன் அவைகளை
வாங்கி அணிந்து கொள்ளும் சீதையைப் பார்த்து எல்லோரும் மகிழ்கிறார்கள்.
இதில் இரண்டு உண்மை தெரிய வருகிறது.
கதை சொல்பவர் எடுத்துக் காட்டுகிறார்.
'சதி அனுசூயா ஞானி.
அவளுக்குப் பின்னால் நடக்கப் போகும் விஷயங்களை
அறிய முடிகிறது.
சீதையின் நெறி தவறா பதிபக்தியும் அவளை நெகிழ வைக்கின்றன.
அன்புடன் சீதையைத் தழுவி இத்தனை ஆபரணங்களையும் கொடுக்கும் போது ,
சீதையும் எந்த வித அகம்பாவமும் காட்டாமல்
ஏற்றுக் கொள்கிறாள்.
ஏனெனில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குக்
கொடுத்து வழக்கம் இருக்கும்.
ஏற்பது அத்தனை சுலபமாக வராது.
நம்மிலேயே சிலரைக் காணலாம்.
'யார்கிட்டேயிருந்தும் எனக்கு எதுவும் வேண்டாம்'
என்கிற மனோபாவம்.
வாங்கிக்கொள்வதும் ஒருவித அடக்கம் தான்.
சீதையும் ராமனும் ஒத்துப் போகும் விஷயங்களில் இதுவும் ஒன்று.
இங்கிருந்து சரபங்கர்,சுதீஷ்ணர் ஆசிரமங்களை அடைந்து அவர்களிடம் அசுரர்களின் கொடுமைகளைப்
பற்றி அறிந்து அதை விலக்குவதே தங்கள் தர்மம் என்பதத ராமன் எடுத்துச் சொல்லி ஆறுதல் தருகிறான்.
எல்லா முனிவர்களும் ராமன் தங்களுடன் தங்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினாலும், இன்னும்
வனத்துக் குள்ளே சென்றால் தான் மேற்கொண்டு கார்யம் நடக்கும் என்று மூவரும் செல்கிறார்கள்.
பஞ்சவடி அடையும் முன்னால் விராத வதமும் நடக்கிறது.
ராமன் அவனை வீழ்த்தியதும் சாப விமோசனம் அடைந்த கந்தர்வனாக அவன் மோக்ஷம் அடைகிறான்.














இதற்குப் பிறகு, ராமனுக்கும் சீதைக்கும் நடக்கும் தர்மத்தின் வழிகளைப் பற்றிய சம்பாஷனை நடக்கிறது.
விராத வதம் முடிந்து, வனத்தில் வசிக்கும் அத்தனை முனிவர்களின் சரணகதியையும் ஏற்று அதைச் சேயலிலும் க்ஆட்டும் ராமனிடம் சீதை கேட்கிறாள்.
'ராமா உன் தர்மம் என்ன?'
அசுரர்களை அழித்து சாதுக்களைக் காப்பற்றுவது தான் என் தலையாய கடமை.தர்மம் ' என்று
ராமன் பதிலுரைக்க,
எனக்காக தர்மத்தை விடுவீர்களா என்றால் யாருக்காகவும் தர்மத்தை விடமாட்டேன்.
உன்னையும் விடஎனக்கு மேலான தம்பி லக்ஷ்மணனுக்காகக் கூட தர்மத்தை விட மாட்டேன்' என்கிறான்.
அது சரி,
இத்தனை முனிவர்களூக்காக, ' உங்களை' ஒரு போதும் தொந்தரவு செய்யாத ராக்ஷசர்களை ஏன் வதைக்கிறீர்கள்?
அவர்களைக் கொல்ல என்ன காரணம்?
என்று ஜானகி மீண்டும் கேட்கிறாள்.
நான் ஒரு க்ஷத்ரியன்.
எனக்கு நேர்மையும்,சொன்ன வார்த்தைப்படி நடப்பதும், துன்பப் படுபவர்களைக் காப்பதும் தான் தர்மம்.
இந்தக் கடமைக்காகவே அசுரவதம் நடக்க வேண்டும்'
என்று சீதையிடம் வல்யுறுத்திச் சொல்லுகிறான்.
உலகத்தில் சிறந்த தர்ம வழி என்ன என்றும் சீதை அவனைக் கேட்க,
''பொய் சொல்லாமல் இருத்தல்,
பிற பெண்களை மதித்தல்,
வலியச் சென்று யாரையும் துன்புறுத்தாமல் இருப்பது இவையே தர்மம்.''
என்று எடுத்துச் சொல்கிறான்.
இப்படியாக வருடங்கள் இனிமையாக ஓட, கடைசி,பதினாலாவது வருடம் ஆரம்பமாகிறது.
நடுவில் பறவை அரசன், ஜடாயுவைச் சந்திக்கிறார்கள்.
அவர் சீதையைத் தான் எப்போதும்
கவனித்துக்கொள்ளுவதாக உறுதி அளிக்கிறார்.
வயது முதிர்ந்த அந்தப் பறவை அரசனிடம் ராமனுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த அன்பு ஏற்படுகிறது.
ஒரு நாள் வருகிறாள் சூர்ப்பனகை அங்கே.
ராவணின் தங்கை. கொடியவள். விகாரமான உருவம்.
பசிக்கு இரை தேட வந்தவள் கண்ணில் அழகு, சுந்தர ராமன்
கண்ணில் படுகிறான்.
எப்போதுமே தம்பதிகளாகப் "பெருமாளையும் தாயாரையும் சேர்த்து வழிபடுபவர்க்கே நன்மை பயக்கும்'
என்ற விதியை
மீறிய
ராவணனும் அவன் தங்கையும்
இருவருமே துர்க்கதி அடைந்ததற்கு அவர்களின்
முறை தவறிய ஆசைதான் காரணம் என்று வரிகள் வருகின்றன.
தாயாரை மட்டும் எண்ணிய ராவணனும் ம்அடிந்தான்.
பெருமாளைத் தனியாக விரும்பிய சூர்ப்பனகையும் அழிந்தாள்.
இருவரின் நாட்டங்களுக்கும்
பலி அவர்களின் முழுக்குடும்பம்.
விபீஷணனைத் தவிர.
விபரீத ஆசைதான் காரணம்.
மாயமான் வ்அருகிறது.
ராமன் அதன் பின்னே செல்ல, சீதை இலக்குவனைச்
சொற்களால் சுட,
பாதுகாப்பு ரேகையைச் சுற்றிப் போட்டுவிட்டு அவனும்
கிளம்ப தனித்திருந்த சீதை கபட சன்னியாசியினால்
அபகரிக்கப் படுகிறாள்.
குலசேகர ஆழ்வார்,
ராமனை நினைத்து வருந்துகிறார்.
''எத்தனை தூரம் ,ராமா நீ நடந்தாயோ
எவ்வளவு கால் வலித்ததோ/
நான் உன் உதவிக்கு வரட்டுமா//
என்று.
நாமும் மீண்டும் அவனைக் கிஷ்கிந்தாவில்
பார்க்கலாம்.

Monday, February 19, 2007

எங்க மீனாட்சி.




இந்த மீனாட்சி வீட்டுக்கு வந்து 5 வருடம் ஆகிறது.
4 இன்ச் அளவில் அவள்/அவன் வந்த போது எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.
எவ்வளவு நாள் வாழ்வோ என்று.
ஏனெனில் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு திடீர் மீனயோகம்
அடிக்கும் நேரம்.
மீன்கள் வரும். இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.
பிறகு பக்கத்து வீட்டுப் பூனைக்கு உணவாக ஆகிவிடும். இதே போல் வாள மீன் விலாங்கு மீன் தவிர மத்த மீன் வகையறாக்கள் வருவதும்,
''பெல்லி அப் ''செய்வதும் நாங்கள் வருத்தப் படுவதும் நடந்து வந்தது.
அக்கம்பக்கம் பசங்க எல்லாம் "யாய்!! மீன் வந்திருக்கு " என்று வந்து பார்ப்பதும், 'அச்சச்சோ இதுவும் போயிடுத்தா ' என்று உச்சுக் கொட்டுவதும் வழக்கமாகி விட்ட வேளையிலே....
எங்க எஜமானரோட ஜிம் சினேகிதர் மீன்
வளர்ப்பது பற்றீ ரொம்பவே சொல்லி,
அடையாரிலிருந்து இந்த 'ஐய்யம்மா'வைக் கொண்டுவந்தார்.
ஏதோ ஒரு பழைய தொட்டியில் போடலாம், ஒரு வாரம் போன பிறகு இருந்தால்(?)
கவனிக்கலாம் என்று நான் மெத்தனமாக இருந்தால்
வீட்டுக்கு வந்த இன்னோரு சினெகிதர், 'அட! இது வாஸ்து மீன் சார். போற இடமெல்லாம் செல்வம் கொழிக்கும்.
கெட்டவங்களை உள்ளயே விடாது.'
நெகடிவ் பீப்பிள் வந்தாங்கன்னா கலரெ மாறிடும் சார்,
ஒரே சிகப்பாகி விடும்.
அப்படியே அவங்களை வாசலோடு வெளில தள்ளிடும்'
என்றெல்லாம் சொல்வதை நான் ஆ' என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
போன ஜன்ம பாத்தியதை இருந்தால் தான் இதெல்லாம் வீட்டுக்கு வரும்' என்று சொல்லி விட்டுப் போனார்.
நான் புது மரியாதையோடு மீனம்மாவைப் பார்த்தேன்.
விரல் நீளத்துக்கு மீனைப் பார்த்து சந்தேகம் தான்.
உடனே வண்டியை எடுத்துக் கொண்டு ப்ராட்வே போய்
ஒரு மீன்தொட்டி, கொஞ்சம் மணல், முன்ன இல்லாத
காத்து சுத்தம் செய்யும் மெஷின், குட்டி மீன் பொம்மைகள்
ஒரு பச்சை ப்ளாஸ்டிக் செடி
எல்லாம் வாங்கி வந்து ராகு காலமில்லாத நேரத்தில்
குடி வைத்தாச்சு.
விட்ட உடனே நீந்தின வேகத்தைப் பார்க்கணுமே!!
சாப்பாடு வகையறா என்னன்னு விசாரிச்சா
50பைசா மீன் வாங்கிப் போட்டட ஜீரணமாகும் என்றார்
விற்றவர்.
மீன் வாங்கிப் போடணுமா.இதென்ன அசைவ வகையறாவா,
என்று கேட்டதும் எங்க வீட்டு சிங்கம் சொல்லறார்,ஆமாம்மா அது சொல்ல விட்டுப் போச்சு என்றார்.
எத்தனைதான் இப்படி விட்டுப்போச்சோனு
மீன்கள் விக்கிற கடைக்குப் போய்
ப்ளாக் மோலி என்கிற வகை குட்டிகளை வாங்கி வந்தால் மீனாட்சி என்கிற மீனாட்சிசுந்தரம்
கபளீகரம் செய்கிறார்.கும்னு வளர்ந்து
இப்போ மூன்று அடிக்கு வந்துட்டார்.
முன்பு போட்ட பதிவில் தீர்மானமாக மீனாட்சி எண்றுதான் எழுதி இருந்தேன்.
இப்போது எந்த ஜெண்டர் என்றே தெரியவில்லை.
அது பாட்டுக்கு நீயாரோ இங்கு நானாரோ
என்று நிம்மதியாக இருக்கிறது.
ஒரு சின்னக் கடையில் (pet shop) விட்டு விட்டு
வந்திருக்கிறோம்.
மத்சயாவதாரம் என்று நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.
இல்லையென்றால் மதுரை மேல் பாசம் அதிகம் என்பதால் மீனாட்சியம்மா தான் வந்துட்டாங்களோ.
பிள்ளைகள் எல்லோரும் அவங்க அவங்க வேலையைப் பார்த்துக் கொண்டு வெளியூர் போவதால் துள்ளி விளையாட வந்த கிழவனோ தெரியாது.
ஆகக்கூடி நம்ம யாருக்காவது
ஏதாவது செய்ய விட்டுப் போனால் இந்த ரூபத்தில் வருவார்கள் என்பது நிச்சயம்:-)

Friday, February 16, 2007

எங்கள் குழந்தைகள்-சின்னம் சிறு வயதில் பள்ளி விடுமுறை
















எங்க வீட்டில் வருபவர்களும் போகிறவர்களும் ஒரே மும்முரமாக இருக்கும்.
வெளியில் அழைத்துப் போவது என்பது ஆடி,அமாவாசை கணக்குத் தான்.
காப்டன் ஹாடாக்,டின் டின், ஸ்னொயீ ,கால்குலஸ்
இவர்கள் எல்லொரும் எங்கள் வாழ்க்கையில் நுழைந்தது அப்போது அந்த வருடங்களில்தான்.
எல்லொரும் காமிக்ஸ் புத்தக பாத்திரங்கள்.
ஆஸ்டரிக்ஸ்,ஓபிலிக்ஸ் இவர்களும்
எங்களோடு இணைந்ததும் இந்தக் காலத்தில்.
.







அப்போ எல்லாம் மழை வரும், இது ஒரு மழைக்காலம் என்று சொன்னால் மழை பெய்யும். அநேகமாக செப்டம்பர் மாத விடுமுறைகளில் மேய்த்துக் கட்டுவது மகா சிரமம்.
எத்தனை தடவை காரம்போர்ட் விளையாடுவது, டிரேட்,சீட்டுக் கட்டு எல்லாம் அலுத்த பிறகு வானம் வெளி வாங்கும் நேரம்,
அவர்களை அழைத்துப் போக ஒரு நல்ல இடம் மௌண்ட்ரோடு எனும் அண்ணாசாலைதான்.
முதலில் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.) அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெட்டுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின்டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெஷல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.பிறகு வீடே கலகலப்பாகி விடும்.
முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.பிறகு சின்னப் பாட்டியிடம்(ஆங்கிலம் படித்த பாட்டி) சொல்ல வேண்டும். அவர்கள்இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் ,,திருப்பிக் கொடுக்கும் நாளுக்கு முன்னால்காணாமல் போகும்.
.டியூ டேட் முடிந்து பள்ளிக்ககூடம் திறந்த பிறகு, நான்தானேஇருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!
எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நான்தான் லைபிரரி உமன்.பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,வை.மு.கோதைநாயகி அம்மாள்.
மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி ,வாசந்திஇதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
விடுமுறை முடிந்து எல்லாப் புத்தகங்களையும்
திருப்பிக் கொடுக்க எடுத்தால்
இரண்டு மூணு காமிக்ஸ் காணாமல் போயிருக்கும்!
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரிசொந்தக்காரர்
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.
நான் என்ன சொல்லுவேன்?புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாகச் சின்னவனோட அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களைசும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டேன்.அதுவும் இந்த புத்தகங்கள்,
லியான் யுரிஸ், அலிஸ்டர் மாக்லீன்ஹாட்லி சேஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,மரியோ பூசோ,இர்விங் வாலஸ்,ஆர்தர் ஹெய்லி,இயன் ஃப்ளெமிங்,பீட்டர் பென்சிலி ஆகியவர்களின் பேப்பர்பாக் நாவல்கள்.
மேலும் சிலருடைய புத்தகங்களைஇடம் பற்றாக் குறையால் கிலொ கணக்கில் கொடுக்க வேண்டி வந்தது!!. அறிவு தானம் நல்லதுதானே1அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம்.
இன்னும் பார்த்துப் பார்த்துச் சேர்த்த பழைய ஒலிநாடாக்கள்.
45 ஆர்பி எம் ஒலித்தட்டுகள்.
எல்லாமே ஒரு காலத்துக்கு மேல்
வைத்துக் கொள்ள முடியவில்லை.
நினைவுகளோடு சேர்ந்து விட்டன.

Wednesday, February 14, 2007

பாட்டி கொண்டாடிய பேரன்கள் தினம் ஃபெப் 14

















ஃபிப்ரவரி14




காதலர்கள்



மட்டும்தான் கொண்டாட வேண்டுமா என்ன.?



கல்யாணமானவர்களும் கொண்டாடலாமே என்பதுபோல் கடைகளில் ஏகப்பட்ட வாலண்டைன் டே' வாழ்த்து அட்டைகள்.



பள்ளிகளில் குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொள்ள சின்னச்சின்ன கார்டுகள். பரிசுப் பொருட்கள்.



ரோஜாக்கள்.



இதயங்கள்.



இளம்சிகப்பு வண்ண பலூன்கள்.



எல்லாம் சரிதான்.



இந்த ' ஸ்னோஸ்டார்ம்' வந்து எல்லோரையும் வீட்டுக்குள் அடைத்துவிட்டது.



நேற்று அடித்த பனிப் புயலில் பள்ளிகள் மூடியாச்சு.



இன்று உண்டா என்று இன்னும் கொஞ்ச நேரத்தில் இணையத்தில் சொல்லி விடுவார்கள்.



வரலாறு காணாத குளிராம்.



நாம இங்கே வந்தது தெரிஞ்சு போச்சோ?:-0)






அலுவலகம் போக முடியாமல் பனிக் காற்று. எடு அந்த 'ஸ்னோஷோவலை.'



விலை அதிகமானாலும் அடுத்த விண்டருக்குள் அந்த யந்திரத்தை வாங்க வேண்டியதுதான் என்று முணுமுணுத்தபடி வீட்டுஅங்கத்தினர்கள்(நான் இல்லைப்பா) எஸ்கிமோ உடை மாட்டியபடி மதியம்



வெளியே போனார்கள்.



'ஐய்யொ பாவம் த்சு த்சு, குளிரப் போகிறதே ' என்றபடி நானும் க்குட்டிப் பேரனும் கண்ணாடிக்கதவுக்கு இந்தப் பக்கம்.



கொஞ்ச நேரம்தான்.



எதிர்த்த வீட்டிலிருந்து வந்தார் 'ஸ்னோ த்ரோவருடன்'



ஆபத் பாந்தவர்,அனாத ரக்ஷகராக



பேர் தெரியாத நண்பர்.



மே ஐ ஹெல்ப் யூ?



என்றபடி , திணறிக் கொண்டிருந்த எங்க வீட்டு ஆட்களைக் கேட்டு விட்டு,



அவர்கள் கண் இமைத்து மூடுவதற்குள்



ஒரே சுற்றில், எம்.ஜீஆர் கத்தி சுழலும் லாவகத்தில்,



சூப்பர்மேன் உடை மாறும் அளவில்



ஹாரி பாட்டர் 'ஸ்பூஃபியோ !!' சொல்லும் வேகத்தில்



நீலமலைத் திருடனில் ரஞ்சன் குதிரை ஓட்டும்



நடையில்,



பனிக்கட்டிகள்,குன்றுகளாக நடைபாதை வரை



தள்ளப் பட்டன.



நான் ஒரு சூடான டீ எல்லோருக்கும் கொடுக்கலாமா



என்று செயல் படுத்துவதர்கு ம்உன்னாள் அவர் ட்ஹன் வீடு வரை பனியை விரட்டிக் கொண்டே போய்விட்டார்.



சாதரணமாக 3 மணி நேரம் பிழிந்து எடுக்கும் வேலை



இன்று அரை மணி நேரத்தில் முடிந்தது.






கலியாவது ஒண்ணாவது,



''chivalry is still there''....






அப்படியே உள்ளே வந்து பாப்பாவுக்காகப் பாடல் போடலாம் என்று 'மலர்ந்தும் மலராத'



பாட்டுக்காக ராகா.காம் போனால் மயங்குகிறாள்



ஒரு மாது பாடலும் கண்ணில் பட்டது.



சாவித்திரிகணேஷ் என்றே தன்னைஇக் கூபிடச் சொல்லும் நடிகையர் திலகத்தின் ம்உகமும் அவர் நடிப்பும் ஞாபகத்துக்கு வர,






திரையில் மிகவும் அழகான காவியம் காதல் காட்சிகளில் படைத்த அவர்கள் இருவரையும் நினைத்தேன்.



இங்கே அந்தப் பாடலைச் சேர்க்க முயற்சி செய்து விட்டு விட்டேன்.



நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.



எல்லோருக்கும் அன்பு அன்பர்கள் தின வாழ்த்துகள்.



இதோ பனியும் போய்க் கொண்டு இருக்கிறது. சூரியனும் வந்துவிட்டான்.






Tuesday, February 13, 2007

சித்திர ராமன்....6 சரயுவைக் கடந்து நடந்தான்

ராமன் விடைபெற்றாலும் அவனைப் பிரிய மறுக்கும் அயோத்திமக்கள்




























ரதத்தைப் பின்தொடருகிறார்கள்.
ராமன் ஆறுதல் சொல்லித்
தன்னோடு வந்த மக்கள் எல்லோரும் தூங்கியபிறகு சுமந்திரரோடு தேரில்
ஏறி கங்கைக் கரைக்கு வருகிறான், .
ஆற்றுப் படலம் சொல்லித்தந்த எங்கள் பேராசிரியை
இந்திரா அவர்கள் நினைவுதான் வருகிறது.
தமிழே உயிர்மூச்சாக வாழ்ந்த தூத்துக்குடி ஸ்ரீ.ஸ்ரீனிவாசராகவன் அவர்களின் மாணவி.
தமிழ் வகுப்பு என்றால் பயமுறுத்திய பழைய நினைவுகளைப்
போக்கி எங்களைக் கம்பரோடு ஒன்றச் செய்தவர்.
அந்த ஒரு மணிநேரப் பாடங்கள் இன்னும் மனதை விட்டுப் போகவில்லை.
ஆசிரியையான குருவுக்கு நன்றி.
கோவிலில் கடவுளாக மட்டுமே பார்த்து வந்த
ராமனையும் மற்றவர்களையும் குணநலம் ம்இகுந்த பாத்திரங்களாகக் கண் முன் நிறுத்தி,
ஆராய வைத்து ஆராதிக்கவும் வைத்தவர்.
இப்போது,
குகனைச் சந்தித்து அன்புள்ள குகனோடு ஐவரானோம்
என்று அவனையும் தன் குடும்பத்தில் இணைக்கிறான் ராமன்.
அவனுடைய உபசாரங்களை ஏற்று ,இரவு தூங்கும்போது
லக்ஷ்மணன் விழித்து இருந்து காவல் செய்கிறான்.
என்னதான் அவன் ஆதிசேஷனின் அவதாரம், மாலைக் காப்பதே அவன் வேலை என்றாலும்,
இப்படிக்கூட ஒரு பாத்திரத்தைப் படைக்க முடியுமா என்று பிரமிப்பாக இருக்கிறது!
பதினான்கு வருடங்கள் 'மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல்' தாய் தந்தையராக சீதாராமனை வணங்கிச்
சேவை செய்யும் லக்ஷ்மணன் போல
ஒரு தம்பி கிடைப்பானா.
இல்லாமலா.
நம் உலகத்தில் சேவை செய்தே குடும்பத்தினர் அனைவரையும் காக்கும் எத்தனையோ தந்தைகள் ,
தாய்கள்,அண்ணன்கள்,அக்காக்கள்,தம்பிகள்
இருக்கிறார்கள்.
எல்லாருக்கும் ஒரு அன்பான எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள்
இந்த அயோத்தி ராமனும் அவன் சகோதரர்களும்.
சுமித்திரை ஒரு ஞானி.
அவள் பெற்ற இருவருமே அடியார்கள் ஆகிறார்காள்.
லக்ஷ்மணன் ராமனுக்கு தொண்டனாகிறான்.
சத்ருக்கினன் பரதனுக்குத் தொண்டு செய்கிறான்.
இங்கு சத்ருக்கினனைப் பற்றிச் சொல்லும்போது ,
தசரதன் யாகத்தில் கிடைத்த அமுதின் கடைசிப் பாகத்தில் உதித்தவன்.
கரும்பின் கடைசிக் கண் இனித்து இருப்பதுபோல்
இவனும் பரதாழ்வாருக்குப் பாதுகாவலனாகக் கடைசிவரை பதினான்கு வருடங்களையும் நந்திக் கிராமத்தில் கழிக்கிறான்.
பரதன் வந்து தந்தை மறைந்த செய்தியை ராமனிடம்
சொல்லும்போது கூட,
ராமன் அழுகிறானாம்... என்ன சொல்லித் தெரியுமா?
சீதே உன் மாமனார் போய்விட்டாராம்.
லக்ஷ்மணா உன் தந்தை போய் விட்டாராம் என்று
சொல்லி மறுகுகிறான்.
ஏன் இவனுக்குத் தந்தை மறையவில்லையா என்று கேட்டால்,
எனக்குத்தான் கோடைகாலத் தண்ணீர்ப் பந்தல் போல உன்னைக் கொடுத்து இருக்கிறாரே ,
அதனால் லக்ஷ்மணா எனக்குத் தந்தை இருக்கிறார் என்று அவனை அணைத்துக் கொள்கிறான்.
இதுவே லக்ஷ்மணனுக்குக் கிடைத்த பாக்கியம்.
அதே போல் பரத சத்ருக்கினனின் ஆதர்சமும்
சொல்லாமலே விளங்குகிறது.
எல்லோரும் ராமலக்ஷ்மண பரத சத்ருக்னன் என்று
தானே சொல்கிறோம்.
அயோத்திக்கு மற்றவர்கள் ராம பாதுகையைச் சுமந்து
கொண்டு திரும்ப, பாதுகா பட்டாபிஷேகம் நடக்கிறது நந்திக்கிராமத்தில்.
ராமனுக்குத் தண்டகாரண்யம் அரசாங்கமாகிறது.
ஆஸ்ரமங்கள், அவைகளில் வாழும் முனிவர்கள்
அவர்கலுக்குத் தொண்டுபுரியும் பத்தினி,பிள்ளைகள் எல்லோருக்கும் சரணாகதி அளிக்கிறான்.
அரக்கர்களிடமிருந்து அவர்காளைக் காப்பதாக.
பின் பரத்வாஜ முனியின் குடிலுக்கு சென்று உணவருந்தி
மேலும் பயணத்தை தொடருகிறார்கள்.
ராமன் முன்னே நடக்க சீதை நடுவில் வர லட்சுமணன் பின்னே வர, கம்பன் கண்களுக்கு ஓம் எனும் ப்ரணவ மந்திரமே உருவெடுத்து நடப்பது போலத் தெரிகிறதாம்.
அங்கங்கே தென்படும் அழகிய காட்சிகளைச் சீதைக்கு ஆவலுடன் வர்ணிக்கிறான் ராமன்.
சீதையும் ரமணீயமான காட்சிகளை ரசிக்க
,
பஞ்சவடி க்கு வந்து சேருகிறர்கள்.
அந்த இடம் மிக அமைதியாக,மயில்,குயில் புறா ஆகிய பறவை இனங்களும்
மான்,முயல் இவை போன்ற சிறிய மிருகங்களும் நிறைந்த
இடமாக இருந்தது.சீதையின் முகக்குறிப்பால் அவளது விருப்பத்தை அறிந்த ராமன் லட்சுமனனிடம் அங்கேயே
குடிலை அமைக்க வழி சொல்கிறான்.
அவர்கள் அமைதியாக இருக்கட்டும். நாம் பிறகு பார்க்கலாம்.





Saturday, February 10, 2007

சித்திர ராமன்......5 ராமன் ஆளும் வனம்





































ராமன்





நட்பு பாராட்டிய ஜடாயு, தசரதனுக்குச் சமமாக அவனால்




மதிக்கப் பட்டவர்.










அவர் வரும் ஆரண்ய காண்டத்துக்கு நாமும் செல்லப் போகிறோம்.


இப்பொழுது ராமனுக்கு மன்னனும் வசிஷ்டரும் குறித்த தினத்தில்





பட்டாபிஷேகம் நடக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.





தன் மக்களுடனும் ஆலோசனை நடத்தி விட்டு





மன்னன் கைகேயின் அரண்மனைக்கு விரைகிறான்.





அவள்தானே ஆசைக்காக மணந்துகொண்ட காதல்





மனைவி.





அவளிடம் முதலில் இந்தக் குதூகலத்தைப்





பகிர்ந்து கொள்ள வேண்டும்.










அங்கே அதற்கு முன்பேயே கூனி வந்து





புயலைக் கிளப்பிவிட்டுப் போய்விட்டாள்.










தெளிந்த தடாகமாக இருந்த கைகேயியின் மனது





கலங்கின சேற்றுக் குளமாக ஆனது.





நமக்குத் தெரியும்.




தசரதன் உல்லாசமாகக் கைகேயியின் அந்தப் புரத்தில் நுழைகிறான்.




அவளோ கோபாக்கிரகத்தில் தலைவிரிகோலமாகக் கிடக்கிறாள்.








இங்கே கதை சொல்பவர் விவரிக்கும் விதம் அழகு.




அந்த நாட்களில் கோபத்துக்கு என்று தனி இடமாம்.




வசந்த மாளிகை, அரச தர்பார்,அந்தப் புரம்




இதெல்லாம் நமக்குத் தெரியும்.








அரசி கோபித்துக் கொண்டால் ,




அரசன் வந்து சமாதானம் செய்து அழைத்துப் போகும் வரை,




அரசி இந்த இடத்தில்தான் இருப்பாளாம்.!!








வாஸ்து பார்த்து இப்போது என்னவொ சொல்கிறார்கள்.




அப்போது நல்ல வார்த்தைகள்,சம்பவங்கள்,




மகிழ்ச்சியுடன் நடைபெறும் உரையாடல்கள்




எல்லாவற்றிற்கும் இடங்கள் தனியே இருந்தன.








அரசியல் அந்தப்புரத்துக்கு வருவது கிடையாது.








அதுபோல குழந்தைகள் நடுவே கோபதாபங்கள்




அதிகம் காட்டக் கூடாது என்பதற்காகவே இந்த மாதிரி கோபாக்கிரகங்கள் இருந்தனவோ.!!








கைகேயி மன்னன் வருவதைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.








தசரதனுக்குப் பயம் வந்துவிட்டது.




அவளுக்கு ஏதோ உடல்நலம் சரியில்லை




என்றுபயந்து ,




அருமையாகத் தலையை வருடிக் கொடுத்து




நலம் விசாரித்தான்.


வெடித்தது எரிமலை. இராமன் காடாள பரதன் நாடுஆள வேண்டும்.


முன்னால் கொடுத்த இரு வரங்களை ஞாபகப் படுத்தி,தசரதன் உயிரைப் பறிக்க வந்த கூற்றுவன்


போலக் காட்சி அளிக்கிறாள்.அவனோ மன்றாடுகிறான்,ராமனை என்னிடம் இருந்து பிரிக்காதே


என்று.


மன்னனின் நிலைமையைக் கண்டு,தானே இராமனைக்


கூப்பிடுகிறாள்.


தந்தை ஆணைப்படி ,ராமா நீ மரவுரி தரித்துக் கானகம் ஏக வேண்டும்,


என்னவும்......


'தந்தை அரசாளுகிறாயா 'என்னும்போது இருந்த அதே மனநிலையில் இந்தச் சுடு சொற்களையும்


ஏற்றுக்கொள்ளுகிறான் ரகுநந்தனன்.




தந்தை என்ன ,நீயே சொன்னாலும் நான் வனம் போகத் தயார் அம்மா'என்று சொல்லி, தன் அன்னையைப்


பார்க்க வருகிறான்.


கௌசலையப் பார்த்ததும் ராமன் சொல்லும் முதல் வார்த்தை, அம்மா பரதன் நாட்டை ஆளப் போகிறான்.


அரசு விவகாரங்களில் சூக்ஷ்மம் ஓரளவு தெரிந்த








கோசலை, நீ இங்கே இருக்கலாம் அல்லவா என்று கேட்கிறாள்


இந்த பேச்சு வார்த்தைகளுக்கு இடையில் அங்கெ வரும் சீதையிடம், நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லுகிறான்.


அவள் உடனெ போய் கானகத்துக்கான மரவுரியைத் தரித்து வருகிறாள்.




'ராமா நீ இல்லாத இடம் எனக்குச் சொந்தமில்லை.


வனவாழ்க்கை உன்னுடன் என்றால்


அதுதான் வேண்டும்'


என்று உறுதியாக இருப்பவளை மாற்ற


ராமன் எடுத்துரைக்கும் வாக்குவாதம் அவளைக் கோபிக்க வைக்கிறது.


'என் அப்பா ஏமாந்து போய் ஒரு ஆண் உடை தரித்த பெண்ணை எனக்குத் திருமணம் செய்து


வைத்துவிட்டாரே'


சுடுசொல் ராமன் மேல் தெறித்துவிழுகிறது.


பின்னால் வரும் லக்ஷ்மணனனயும்


தடுக்கப் பார்த்தும் முடியாத நிலையில்


மூவரும் அமைச்சர் சுமந்திரனோடு


தேரில் ஏறும் செய்தி தசரதனுக்கு வருகிறது.


சீதையுமா போகிறாள்?


''காட்டிலே பிழைக்க உணவு,உடை எல்லாம் அவர்களோடு போகட்டும் ' என்று சொல் அனுப்புகிறான்.


ஜனகனை நான் எப்படி எதிர்கொள்வேன்,


'வாழ வந்த பெண்ணை வனத்துக்கு அனுப்பினாயா ' என்று


கேட்பானோ?


இல்லை அவன் ஞானி.


இப்போது அவன் கூட இங்கில்லையே என்று மீண்டும்


மயக்கத்தில் வீழ்கிறான்.


சுமித்திரா, லக்ஷ்மணனிடம் இனி உனக்கு


தந்தை ராமன்,தாய் சீதை.


வனமே உன் நாடு.'


பதினான்கு ஆண்டுகள் கழிந்து பார்ப்போம் என்று ஆசி கூறி அனுப்புகிறாள்.
அன்னையரிடம் விடைபெற்று,
மயங்கிக் கிடக்கும் தந்தையைக் கவனம் கொள்ளுமாறு சொல்லிக் கிளம்புகிறான் ஸ்ரீராமன்.ராவணனுக்கு இடி முழக்கம் கேட்தாம் அப்போது.
அயோத்தியே துன்பத்தில் ஆழ்கிறது.
அடுப்படிப் பாலைக் குடிக்க வந்த பூனைகூட அதை
மறந்து வீதிமுனையில் ராமன் கிளம்புவதைக்
காண வந்துவிடுகிறதாம்.
அவன் செல்வது வெல்வதற்குத்தானே!
ஜய ஜய ராம் ஸ்ரீரகுராம்..
































Thursday, February 08, 2007

சித்திர ராமன்....4 மன்னர் முடி தரித்தால்




திருமணங்கள் முடிந்து திரும்பும்போது தசரதராமனை வெற்றிகொள்ள வரும் பரசுராமனைக் கர்வபங்கம் செய்து கிடைத்த விஷ்ணுதனுசுடன் ஜெயராமன் சீதாராமனாக அயோத்தி வருகிறான்.
இனிமையாகப் பனிரண்டு வருடங்கள் கழிகின்றன.






இப்போது இன்னும் ஒரு சம்பவம் விட்டுப் போச்சு சொல்வதற்கு.


இராமன் அவதாரம் எடுப்பதற்கு எது காரணம், அவதாரம் எடுத்ததால் என்ன பிரயோசனம்


என்று சில பேர் தர்க்கம் செய்தாகளாம்.


இது என்ன பெரிய விஷயமா.


சாதுக்களைக் காப்பத்தவும்,


கெட்டவர்களை அழிக்கவும் தான் என்று எல்லோரும் விவாதிக்க ஒரே ஒருவர் மட்டும் ஒரு நீண்ட கதை சொன்னாராம்.




இதெல்லாம் ஒண்ணும் காரணமில்லை.


''தாயாருக்கும் பெருமாளுக்கும் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு நாலு பேச்சு பேசக் கூட முடியாதபடி பக்தர் கும்பல்,கோஷ்டி சேர்ந்து போய்விட்டதாம்.


பார்த்தாராம் தாயார்.


பூலோகத்தில கணவன் மனைவி எப்போதும்


பேசிக் கொண்டே இருக்கிறார்களே நாமும் அங்கேயே


போகலாமே என்று தன் நாயகனிடம் கேட்க பெருமாளும் சரின்னு வந்துவிட்டாராம்.


இங்கே திருமணத்திற்குக் காத்திருந்து


அயோத்தி வந்தால் அங்கே ராமனை எப்போதும்


அழைக்கும் மாமனார்.


அவர் கூப்பிடுவாராம்.


இவர் நடந்து போவாராம்.


ஒன்றும் விஷயம் இல்லை ராமா' என்று அன்போடு அனுப்புவாராம்.


மீண்டும் அழைப்பாராம்.


என்னடா செய்தி என்று பார்த்தால்


அவருக்கு ராமனின் அழகு நடையில் அத்தனை விருப்பமாம்.!!


இது தான் இப்படி என்றால் மாமியார்கள் அதற்கும் மேலே ஒரு படி.


ராமா இந்த உடைகள் வாங்கலாமா.


இந்தப் பலகாரம் சாப்பிடுகிறாயா.


'சீதே இங்கே வா , அலங்காரம் செய்து நாழியாகி விட்டது. மாற்றிக் கொள்ளலாம் '' என்று சீதையை


மாமிகள் மூவரும் அழைத்துச் சென்று விடுவார்களாம்.




இதை மாற்றத்தான் இருவரும் வனம் போகத் தீர்மானம்


செய்தார்களாம்.


இது மானசீகத் தீர்மானம்தான்.!
உண்மையில் ராமனுக்கு முடிசூட நாள் குறித்து சொல்லி
அனுப்பி அவனும் வருகிறான்.
தந்தையின் சொல்லைக் கேட்டு பட்டாபிஷேகம் செய்துகொள்ள ஒத்துக் கொள்கிறான்.
வசிஷ்டர் 'ராமா, சீதையை அழைத்துக்கொண்டுபோய்
உங்கள் குல தெய்வமான ஸ்ரீரங்கனாதனை
மனதாரப் பூஜித்துவா' என்கிறார்.
ராமன் மனதில் சிந்தனை. என்ன இது நாம் வந்த
வேலையை முடிக்க வேண்டுமே,
ராவண வதம் நடக்கணும்
இங்கே அரசன் ஆனபிறகு அயோத்தி நிர்வாகமே
பெரிதாகிவிடும்,
இந்தக் கூனி ஏன் இன்னும்
அன்னை கைகேயியைப் பார்க்கப் போகவில்லை ,
கலகம் வந்தால் தானெ, பகவத்சன்கல்பம் நிறைவேறும் என்று நினைத்தவாறே,
சீதை கையைப் பிடித்துக் கொண்டு கோவிலில் நுழைகிறான்.


அங்கே சபையில் தசரதன் தன் மந்திரி,மக்களோடு ஆலொசனை செய்கிறான்.


உங்களுக்கு ராமன் என் வாரிசாக வருவதில்


ஆக்ஷேபனை கிடையாதே என்று கேட்கிறார்.


உங்களுக்கு அடுத்தபடியாக எங்களை காபந்து


பண்ண ராமனை விட்டால் வேறு யார்?


என்று ஒரே மகிழ்ச்சிகோஷம் எழுகிறது,.
அயோத்தியா மங்களக் கோலம்
பூணுகிறது.
ஸ்ரீராம ஜயராம தசரத ராமா.
ஸ்ரீராம ஜயராம கோசலை ராமா.
திருவெனும் தாமரை
மனதில் குடிகொண்ட
சீதா ராமனே சரணம்.
கண்கள் தாமரை
கைகள் தாமரை
பதமும் தாமரை
பாதம் சரணம்.