Blog Archive

Wednesday, January 17, 2007

இராமஸ்வாமி கோவில் கும்பகோணம்

Posted by Picasaஸ்ரீ ராமசுவாமி கோவில் கும்பகோணம் போக வாய்ப்புக் கிடைத்தது ஒரு சம்பவம்.
எங்கள் அப்பாவுக்கு, சுந்தர காண்டம் ஒரு வாரத்தில் படித்து முடித்தால், தீராத பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும் என்பதில் தீவிரமாக நம்பிக்கை.

உடல், மனம்,சுகம் என்று எல்லோருக்கும் வேண்டிய தருணங்களில் மிகவும் சிரத்தையுடன் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து ஓரொரு நாளும் ஒன்பது அத்தியாயமாகப் படித்து அடுத்த வெள்ளிகிழமை சுந்தர காண்டம் பூர்த்தி செய்து ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகமும் படித்து முடிப்பார்.
அந்த வெள்ளியன்று இனிப்பு வகையறா ஏதாவது கண்டிப்பாக இருக்கும்.
அப்பா படித்து முடிக்கும் அழகும் அம்மா பக்கத்தில் இருந்து பக்தியோடு கேட்கும் அழகும், அப்பா உட்கார்ந்து இருக்கும் இடத்தின் அருகில் அனுமனுக்கு ஒரு இருக்கை போடப்பட்டு, கோலமிட்டு பழஙகள் சமர்ப்பிக்கப் பட்டு இருக்கும்.
ஓரோரு தடவையும் சீதை, ராமர் படும் துன்பங்கள் வரும் கட்டங்களைப் படிக்கும் வேளைகளில் எங்கள் அப்பா கண்கலங்காமல் படித்ததாக எனக்கு நினைவே இல்லை.

சீதா அசோகவனத்தில் ஸ்ரீராமனை நினைத்து கலங்கும் நேரம், அனுமன் ராமர் நாமத்தை உச்சரித்து அவள் கவனத்தைக் கவர்ந்து அவளை அமைதிவழியில் இருத்தி கணையாழி கொடுத்து,
சூடாமணி பெற்றுக்கொண்டு, அரக்கரை அழித்து,இராவணனிடம் வாதிட்டு, இலங்கையை தீக்கிரையாக்கி மீண்டும் சீதையம்மாவைப் பார்த்து ஆறுதல் சொல்லி, ராமலக்ஷ்மணரோடு வருவேன் என்று உறுதி கூறி,
மீண்டும் வானில் பாய்ந்து ஸ்ரீ ராமரை வந்து அடைகிறார்.
சீதையைப் பார்த்து வரும் அனுமனை ராமன் நெஞ்சாரத் தழுவிகொள்கிரார்.
இவ்வளவும் எங்கள் அப்பா படிக்கும்போது மீண்டும் அந்தக் காலத்துக்கே போன உணர்ச்சி வந்துவிடும்.
அதே இன்பம் அவர், திருராமர் சீதை பரத,லக்ஷ்மண சத்ருக்னன் அனுமன்,அங்கதன்,விபீஷணனுடன் நடைபெரும் பட்டாபிஷேக காட்சி மனத்தில் உறுதியோடு படிந்துவிடும்.
இந்தக் காட்சிதான் அப்படியே திரு இராமசுவாமி கோவிலில் கல்சிற்பஙகளாகக் கம்பீரமாகக் காணக் கிடைக்கிறது.
வேறு எங்கேயும் காணக்கிடைக்காத காட்சி இது.
மிகப்பெரிய சிலா ரூபங்கள் அரியணையில் ராமனும் சீதையும் வீற்றிருக்க, பரதன் குடை பிடிக்க,சத்ருக்கினனும்,இலக்குவனும், (சில படங்களில் இலக்குவன் கை கூப்பி நிற்பது போல் இருக்கும்) சாமரம் வீச
அனுமன் பக்கத்தில் ஒரு கையில் வீணையை மீட்டிக் கொண்டு( வழக்கம் போல் ராமாயணம் படிக்கவில்லை) காட்சி.
எவ்வளவு தரம் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கவைக்கும் அருமையான சிறப்பு மிக்க தரிசனம்.
இங்கெ நிகழ்ந்த அதிசயங்கள் எவ்வளவோ இருக்கலாம்.
நம்மைப் பாதிப்பது நமக்கு நிகழும்
நடப்புகள் தானே.
முன்பே சொன்னது போல் கும்பகோணம் முதல் டிரிப்பின் போது சாரங்கபாணியைக் கண்ட பிறகுப் பார்க்கப் போன,உணரப் போன அடுத்த அதிசயம் இந்த சாமி தான்.


நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று இடியுடன் கூடிய மழை.
இதில் என்ன அதிசயம் இருக்கிறது.? கோடை மழை எப்போது வேண்டுமானாலும் வரும், அது என்ன டிவி சானல் பார்த்து விட்டு வரலாமா வேண்டாமா என்று யோசிக்குமா, இல்லையென்றால் இந்த(நான்) அம்மா வருதே, இடியும் மின்னலும் இவங்களுக்கு ஆகாதே.
கண்ணூ காது மூடிக்கொண்டால் சாமியைப் பார்ப்பது எப்படி என்று எல்லாம் வருண பகவானுக்கு நினைவு இல்லை.

யேதோ நல்லவங்க கும்பகோண்த்துக்கு வந்துட்டாங்கன்னு பார்க்க வந்துட்டார்.(நீங்கள் இங்கே சிரிக்க உரிமை உண்டு)
சைகிள் ரிக்சாவில் இருந்து இறங்க முடியாதபடி பிரளய மழை.
ஒரே ஒட்டம் கோவிலுக்குள். (ஆமாம் ,நானும் ஓடினேன்.)!
உள்ளே சிற்பங்கள் வரிசையாக நின்றன. அறுபத்தினாலு கால் மண்டபம் வேறு. ஒவ்வொன்றிலும் அற்புதமான சிற்பங்கள்.
எந்த சிற்பி கொடுத்து வைத்தானொ, ராமனையும் சீதையையும் சேர்த்து வைத்துப் பார்க்கிறான். என்ன கருணை அவனைத் தேடி வந்ததோ.
ஸ்ரீ ராமனின் பரிவு அவனை அணைத்திருக்கும்.

எல்லா கற்களும் உயிர் பெற்று அங்கெ ராமன் புகழ் பாடின.
நமது மெயின் கதை நம்மளைச் சுற்றித் தான்.

அங்கெ சன்னிதியை அடைந்ததும் மஹா பெரிய இடி, மின்னலோடு நுழைந்தது.
அவ்வளவுதான் என் பக்தி பின்னடைந்தது. பயம் பிடித்தது.
அங்கே இருந்த பட்டாச்சாரியாருக்கு இந்த மழை பத்தி எல்லாம் பயம் இல்லை போல.
அவர் சாவதானமாக. பெரிய விளக்குகளை ஏற்றி ,ஒளி ஏற்றி எங்கள் எல்லோருக்கும் கர்பக்ருஹத்தைக் காண்பித்தார்.
என்ன அழகுடா ராமா நீ?
உண்மையான ராமராஜியத்தினுள் வந்து விட்ட உணர்வு.
உடனேயே எங்கள் அப்பாவின் குரல், காதில், பயம் வரும் போது சொல்ல சொன்ன பஞ்ஜாயுத ஸ்தோதிரம் நினைவு வருகிறது.
அங்கெயெ கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து விட்டேன்,.
என்னுடன் வந்த தம்பிகள்,அவர்களின் மனைவிகள்,குழந்தைகள் மற்றவர்கள் சுற்றிப்பார்க்கக் கிளம்பினாலும் எனக்கு மனம் வரவில்லை. இடி வேறு பயமுறுத்தியதால் அந்த தெய்வக் குடும்பத்தையே பார்த்து என் பயம் போக்க வேண்டினேன்.


(இப்போது சிரிப்பு வரலாம். அப்போது அதுதான் என்னை கவ்விக்கொண்டு இருந்தது .பயம். பயம். )
உடனேயெ மனதில் அச்சம் குறையத் தொடங்கினது. நம்ப முடிகிறதா.
அனலைசிங் இங்கே வேலை செய்யாது. முடியாது.
எனக்குக் கிடைத்தது ஒரு காப்பு.
ஒரு அம்மாவும் அப்பாவும் ஒரு குடும்பமே எனக்குக் கருணை செய்ததாக உண்ர்வு.
நான் என் நினைவுகளில் இருந்து நான் மீண்டபோது மழை
நின்று இருந்தது.
சுற்றுப் பிரகாரங்களில் எல்லாம் தண்ணீர். மின்னல் இன்னும் வெட்டிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் என் பயம் தான் வேறு எங்கோஒளிந்து கொண்டது.
வெளி சுற்று எல்லாம் ராமாயணக்காட்சிகள்.
ஒரே ராம மந்திரம் ஒலிக்கிறது.
நீங்களும் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டாமா?
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராமா.

19 comments:

Geetha Sambasivam said...

மனு, நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தமிழ்மணம் முகப்பிலும் உங்கள் வலைப்பூ பெயர் வருகிறது. மறுபடியும் வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

படம் ரொம்ப அருமை. ஆமாம் ஆஞ்சநேயர், ராமர் பாதத்தைப் பிடிச்சுண்டு நிக்கறாரே! அவரோட
வால் எப்படி நீஈஈஈஈஈஈஈஈஈஈளமா வளைஞ்சு வளைஞ்சு இருக்கு. அய்யோடா.....

பொட்டிலே என்ன இருக்கு? அது யார் ரெண்டு பேர்? பரதனும், விபீஷணனுமா?

இந்தப் பதிவு ரொம்ப நல்லா எழுதியிருக்கறதுக்கு வாழ்த்து(க்)கள்.

இந்தக் கோயிலையும் நான் மிஸ் செஞ்சிருக்கேன். ஒருக்கா கும்மோணம் போகணும்.
பக்கத்துலே 'கூந்தலூர்'லே தோழி இருக்காள்.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.நிறைய எழுத வேண்டும்.நீங்கள் வந்தது தான் பெருமையாக இருக்கிறது."அளி" சில சமயம் வொர்க் ஆகிறது. அதனால் கற்றுக்கொள்ள வேண்டியது ஏகப்பட்டது இருக்கும்போது, மதிப்புரை உற்சாகம் தருகிற மாதிரி இது ஒரு பெரிய acknowledgement thaan.

வல்லிசிம்ஹன் said...

துளசி, ஹப்பை மாட்டினீர்களா? ராமாயணப்படி அங்கதன் தான் ராமர் பாதத்தை ஏந்த வேண்டும். அனுமன் கை கூப்பி நிற்க வேண்டும். பெட்டி பக்கத்தில் இருப்பது விபீஷணனும் சுக்ரீவனும்.
அப்பொது ஒரு அழகான முத்துமாலையை இந்திரன் பரிசளிக்க ராமர், சீதையிடம் அதைக் கொடுக்க கழுத்தில் சூடி விட்டு அதை கழற்றுகிறாள். முகம் திருப்பி ராமரை நோக்கியபோது, அவர் அவளிடம், சீதா உனக்கு யார் மிகவும் மிக்க மேன்மையுடன் உதவியதாகக் கருதுகிறாயோ ,யாருக்கு நீ மிகவும் கடமைப்பட்டு இருக்கிறாயோ அவனிடம் இந்த அழகிய பரிசைக் கொடு என்கிறார்.
தயங்காமல் சீதையும் அனுமனிடம் அந்த மாலையைத் தந்து விடுகிறாள். அனுமனும் தயக்கத்தோடு அதை அணிந்து கொள்ளுகிறான். அந்த அழகை ராமயணப்பாடல் "வானத்தில் வெண்மேக மாலை அணிவித்தது போலிருந்தது " என்று வரும்.உங்கள் முன்,(ப்ளொக்ஸ்) பின் உதவிகள் என்னை எப்படி ஆக்கி விட்டது பார்த்தீர்களா?

வல்லிசிம்ஹன் said...

பொட்டீலே ச்ரீரங்க விமானம் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

கீதா உங்களுக்குத் தான் பதில் எழுதினேன். எப்படியோ பெயர் வரவில்லை.ஓவெர் எக்சைட்மெண்ட்.
மன்னிக்கவும்.

dondu(#11168674346665545885) said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வல்லி அவர்களே.

ஸ்ரீ போடுவதற்கு சற்று சிரமப்பட்டிடருக்கிறீர்கள் போலிருக்கிறது. இகலப்பை உபயோகிக்கும் பட்சத்தில் sr என்று அடித்தால் போதும் ஸ்ரீ வந்து விடும். மேலே நெடில் எல்லாம் போடத் தேவையில்லை.

திருச்செந்தூர் அருகில் உள்ள நவ திருப்பதிகள் போயிருக்கிறீர்களா? இல்லையென்றால் பார்க்கவும். என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் தரிசனம் அருமை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வல்லிசிம்ஹன் said...

டோண்டு சார் வந்தது ரொம்பப் பெருமையாக இருக்கிறது. எப்போதொ சிறு வயதில் திருவைகுண்டம் போயிருக்கிறேன். sri
வரத்தான் இல்லை. மீண்டும் முயற்சிக்கிறேன்.நீங்கள் சொல்வது போல் நவதிருப்பதி போக ஆசைதான். அனுக்கிரஹம் தான் வேண்டும். நன்றி டோண்டு சார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ராமஸ்வாமி கோவிலுக்கு கூட்டிச்சென்று படத்தையும்,பயத்தையும்,காண்பித்து,அதில் சிறு ராமாயணத்தையும்,சுந்தரகாண்டம் எப்படி படிக்கவேண்டும்,என்பதையும் அழகாக விளக்கியுள்ளீர்கள்.தணிக்கை வேலையாக கும்பகோணம் சென்றபோது பலமுறை இந்தகோவிலுக்குச்செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பயனுள்ள(பயமுள்ள) பதிவு. அன்பன் தி.ரா.ச

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் திரு.டி.ஆர்.சி.
நன்றி. நீங்க சொல்லுவது போல் பக்தியைவிட பயம் அதிகமாகத்தான் தெரிகிறது. நிறைய எழுத வேண்டும் என்று ஆசைதான்.எழுத்தில் நிறையப் பிழை வந்துவிடுகிறது.இலக்குவனை விட்டுவிட்டு பட்டாபிஷேகம் எழுதி இருக்கிறேன் பாருங்கள்.நன்றாக எழுதப் பயில்கிறேன். மீண்டும் நீங்கள் எல்லாம் ரசிக்கிற மாதிரி எழுதுவேன்.நன்றி தி.ரா.ச. சார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

நான் படித்த கதையில் ஹனுமான் அந்த மாலையை வாங்கி முகர்ந்து,பின்பு ஒவ்வொரு மணியாக கடித்துப்பார்த்து எல்லாவற்றையும் துப்பிவிட்டதாக கேள்வி. ஏனென்றால் அதில் ராமா என்ற நாமமில்லாததால்.அது சரி யார்சொன்னார்கள் நான் நீங்கள் எழுதியதை ரசிக்கவில்லை என்று? நன்றாக இருந்ததால்தான் பின்னுட்டம் இட்டேன்.என் வார்தைகள் ஏதேனும் தவறான முறையில் இருந்தால் வருந்துகிறேன்.தி. ரா. ச

வல்லிசிம்ஹன் said...

டி.ஆர்.சி சார்,
உங்கள் பின்னூட்டத்திற்குப் பதில் போட தாமதமாகிவிட்டது.
வீட்டு வேலை அதிகரித்ததால்.
நான் என்னுடைய எழுத்தைத்தான் விமரிசனம் செய்தேன்.இன்னும் நல்ல விதமாக எழுதி இருக்கலாமே என்று எழுதி இருந்தேன்.பிழை கருத்தில் இல்லை. நான் எழுதும் வடிவத்தில் வந்துவிடுகிறது.அதை சொன்னேன் சார். :-)))))

தி. ரா. ச.(T.R.C.) said...

தியகராஜ உத்ஸவம் நங்கனல்லூரில் எங்கள் சமாஜத்தில் 2 ஆம் தேதி கொண்டாடுகிறோம். அதற்காக புதியதாக ஒரு ராமபட்டபிஷ்க தஞ்சாவூர் பெயின்டிங்கில் பெரியதகச் செய்து வந்தது. அதை பார்க்கும் போது உங்கள் பட்டாபிஷேக பதிவும் வந்தது சந்தோஷமாக இருக்கிறது. படத்தை என் பிளாகில் போடுகிறேன் பாருங்கள்.மாமவபட்டாபிராம பாட்டைக்கேட்டால் பட்டாபிஷேக காட்சி கண்முன்னே வந்துவிடும்

தி. ரா. ச.(T.R.C.) said...

தியகராஜ உத்ஸவம் நங்கனல்லூரில் எங்கள் சமாஜத்தில் 2 ஆம் தேதி கொண்டாடுகிறோம். அதற்காக புதியதாக ஒரு ராமபட்டபிஷ்க தஞ்சாவூர் பெயின்டிங்கில் பெரியதகச் செய்து வந்தது. அதை பார்க்கும் போது உங்கள் பட்டாபிஷேக பதிவும் வந்தது சந்தோஷமாக இருக்கிறது. படத்தை என் பிளாகில் போடுகிறேன் பாருங்கள்.மாமவபட்டாபிராம பாட்டைக்கேட்டால் பட்டாபிஷேக காட்சி கண்முன்னே வந்துவிடும்

இலவசக்கொத்தனார் said...

ஒரு கையால் எப்படி வீணை வாசிக்க முடியும்?

வல்லிசிம்ஹன் said...

வாங்க கொத்ஸ் சார்.
எனக்கும் அதே சந்தேகம்.
பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது,.
ஒருவேளை
வீணை வாசித்துவிட்டுப் படிப்பாரோ?
இன்னோரு தடவை போனால் பார்க்கிறேன்.:-)

Anonymous said...

//அனுமன் பக்கத்தில் ஒரு கையில் வீணையை மீட்டிக் கொண்டு ராமாயணம் படிப்பது போல் காட்சி.
//
ஒரு வேளை கதாகாலட்சேபம் செய்கிறாரோ!

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச,வாங்க.
நங்கநல்லூரில் பட்டாபிஷேகமா.
நடக்கட்டும்.

அன்று வால்மீகி சொன்னது போல தென்றல் வீசி,கோலாகலமாக நடக்கட்டும்.
மாமவ பட்டாபிராமனும் எல்லோருக்கும்
ஆனந்த தரிசனம் கொடுப்பதை நானும் மனதில் தரிசனம் செய்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ், நான் எழுதினதுதான் தப்பு.
என்னுடன் வந்தவர்களைக் கேட்டேன்.
அங்கிருந்த ஆராதனை செய்பவர்,
''இவர் (ஆஞ்சனேயர்) வீணை மீட்டுகிறமாதிரி சிலாரூபம் '' என்று சொல்லி இருக்கிறார்.
தப்பை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
திருத்திவிட்டேன்:-)