Blog Archive

Tuesday, March 13, 2007

யார் பேச்சை யார் கேட்கிறார்கள்?






மரியாதைக்காக நாம்
சில பல வேளைகளில் சில பல சொற்களைக் கேட்கிறோம்,அதன்படி நடக்கிறொம், செய்கிறொம்.

சின்ன வயதில் பெற்றோர் வாக்குக்கு உடன் பட்டாலும்
சில சமயம் மறுப்பதும் உண்டு.

அதே நாம் ,நமது குழந்தைகளைப் பார்த்து
அறிவுரை இனாமாக, இலவசமாகக் கொடுக்கிறொம்

அவர்கள் 60 சதவிகிதம் காதில் வாங்கி, 40 சத்ிகிதம் நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன்னால் இதேதான் நடந்தது.
இப்போதும் இதேதான் நடக்கிறது

அப்போதும் திருமணம் முடியும் வரை தாய்,தந்தையரை

நம் முதல் அட்வைசர்ஸ் ஆக வைத்து இருப்போம்.
நமக்கு ஏதுவாக இருப்பதை எடுத்துக் கொள்வோம்.

திருமணம் முடிந்த பிறகு கணவர்
சொல்வது வேதவாக்கு.
அது பிறந்த வீட்டு வார்த்தைகள் பாணியில்இருக்காது.
இருந்தாலும் சொல்வது கணவர் இல்லியா.
அதனால் அதுபடி நாம நடக்கணும்.

நாம்,

'எங்க 'வீட்டிலெல்லாம் இப்படித்தானப்பா என்று அம்மா அப்பாவிடமே கதை அளக்கும் போது
அவர்களும் சிரித்துக் கொள்வார்கள்.

இங்கே சுருதி எப்போது குறையும் தெரியுமா.
பெண் வந்து புகுந்த வீட்டு சிறப்புகளை அள்ளி விடும்போது மகிழத்தெரிந்தவர்களுக்கு,

தன் வீட்டுப் பையன்கள் தங்கள் மாமனார் வீட்டுக்கு
அடிக்கடி போனாலோ,
அந்த மாமியார் சமையல் திறனை எடுத்துப்
பேசினால் வீட்டில் ஒரு சங்கடம் வந்து விடும்.

ஒண்ணுமே உப்புப் பெறாத விஷயத்துக்கு எல்லாம்
அம்மாக்காரிக்கு சிணுசிணூப்புக் காட்ட
வேண்டி இருக்கும்.

சாதாரணமாக இருக்கும் பையனும் அம்மா முகத்தைப் பார்த்து, அம்மாவுக்குப் பிடித்ததையே பேசுவான்.
அதில் சில சமயம் பொய்யும் சொல்லி மாட்டிக்
கொள்ளுவான்.:-))
அம்மா கேட்கும் கிராஸ் கேள்விகளில் மாட்டிக்காதவங்க யாரு.
இதோ நம் மெரினா சாரின் ஊர்வம்பு நாடகத்திலிருந்து
சில வரிகள்..
''கணேசன்..........லலிதா பொறந்தாத்துக்குப் போறென்னு சொல்லறா.
'அம்மா----ஏண்டா அவள் ஒருமாசம் போனா குழந்தை படிப்பு என்னா ஆறது. '
'அந்த ஊரு அழுக்குத் தண்ணியும்,ரோடு புழுதியும் அவனுக்கு ஒத்துக்காது.
அதுக்குத்தான் சொல்லறேன்.
அப்புறம் உன்பாடு அவள்பாடு. ''

காட்சி மாறுகிறது. கணேசனும் தர்மபத்தினியும்
லலிதா, ''எனக்கு ஒரே ஓச்சலா இருக்கு.
நான் வாயைத்திரந்து ஒரு வார்த்தை உங்ககிட்ட சொல்லலை.//
அப்பா ஊருக்குப் போகும்போது நானும் போயி 2 வாரம் இருந்துட்டு வரேனே. ''
கணேசன்.........''.அத்தை சுரேஷ் படிப்பு கெட்டுடும்னு சொல்லறா// ''
லலி.......''ஆமாம் சொன்னாள். அவளுக்கு நான் ஊருக்குப் போனா பிடிக்குமா ஏதாவது சாக்கைச் சொல்லி நிறுத்தப் பாக்கிறா..// ''
கணே...''அவளுக்கு சுரேஷப் பத்திதான் கவலை// ''
லலி... //''ஆம்மாம் அவ்ன காலெஜ் படிக்கிறான்!!

அத்தை சொல்லறதைக் கிளி போலச் சொல்லுங்க.
நான் இங்கேயே உழைச்சு உழைச்சு துரும்பாப் போறேன்.''(கண்ணைக் கசக்குகிறாள்)
கணேசன் தலையைப் பிடித்துக் கொள்கிறான்.
இந்தப் ப்ரச்சினை எல்லா வீட்டிலும் இருக்கிறதுதானே. :-0)


எனக்குத் தெரிந்த ஒரு தோழி மிக்க கலகலப்புடன் இருப்பவள். பாட்டு,சித்திரம்,பக்தி எல்லாம்
ஒரே ஈடுபாடு.
ஆனால் மருமகள் வந்தபோது, மாமியார்-மருமகள்
ஹனிமூன்
பீரியட் என்பது இரண்டு வாரங்கள் தான் நீடித்தது.

வந்த மருமகள் உடனே ஆஸ்திரேலியாவுக்கு,
கணவனுடன்
கிளம்பிவிட்டாள்.
அங்கே ஏர்போர்ட்டில் மகனை இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பார்க்க முடியாத சோகத்தோடு என் தோழி.
பெற்றோரை விட்டுக் கிளம்பும் மனைவி கண்ணீரோடு இருப்பதைப் பார்த்த மகன் அம்மாவை அம்போனு விட்டு மனைவியைச் சமாதனப்படுத்தப்

போய் விட்டான்.

நான் கூட இருந்ததால் தோழியின் முக மாறுதலைப் பார்க்க முடிந்தது.
மகன் ஊருக்குப் போற சோகத்தைவிட , மருமகளை அணைத்து அவன் ஆறுதல் சொல்வது இவளுக்கு
மஹா கஷ்டமாகி விட்டது.
ஏர்போர்ட்டில இருக்கிறவர்கள் எல்லாம் அவனுடைய ப்ஃஇசிகல் டெமான்ஸ்டிரஷனைப் பார்ப்பதாக அனுமானித்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

பெண்களுக்கு சூட்டிகை ஜாஸ்தி.

மாமியாரை எட்டிப் பார்த்த மருமகளும் ,'கொஞ்சம் தள்ளிப்
போங்கொ ' உங்க அம்மாவுக்கு பிபி ஏறுகிறது' என்று திருப்பி விட்டாள்.

அன்று ஆரம்பித்த பனிப்போர் இன்னும் தொடருகிறது.

மகனோ மாப்பிள்ளையோ,மகளொ, மருமகளொ
எல்லோரிடமும் முழுமனசுடன் அன்பைக் கொடு என்று சொல்ல முடியாது.
அதே போல நாமும் அவர்களிடம் மொத்த அன்பையும்
--கேள்வி கேட்காமல் செலுத்தினால் ஒரு வேளை

சந்தோஷமும், அமைதியும் திரும்பும் என்று நினைக்கிறேன்
உங்க அனுபவம் எப்படி??
நானும் மாமியார் தான்.
எனக்கும் நிறைய ஆவலாதி உண்டு.

யாருக்குக் கேக்க நேரம் இருக்கு/
யார் சொல்லி யாரு கேக்கறது?

16 comments:

துளசி கோபால் said...

//யாருக்குக் கேக்க நேரம் இருக்கு//


மொத்தப் பாயிண்ட்டுமே இதுதான்!

சரி. ஒரு ச்சேஞ்சுக்கு நான் வேணா சொன்ன பேச்சைக் கேக்கவா? :-)))))

நானே கோபால்கிட்டே எப்பவும் சொல்லுவேன், 'நான் போயிட்டா உங்க இஷாராவுக்கு
நாச்னேக்கி கோயி னை' :-)))))

வல்லிசிம்ஹன் said...

துளசி நானெ நான் சொல்லறதை கேக்கிறது இல்லை இப்பொ.:-))

எல்லோருகும் லாஆஆஅங் ரோப். எனக்கு ரோப்பே கிடையாது.!!

களிகொட்டுத் துள்ளல் தான்.

FAIRY said...

அன்பின் ஆளத்தை விதவிதமாகத்தான் காட்ட முடியும். எல்லாரிடமும் ஒரே மாதிரி எப்படிங்க? 1000ம் இருந்தாலும் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீடு வேற தான். Nothing can be done to this possessive heart - that too in LOVE.

வல்லிசிம்ஹன் said...

FAIRY,
ஆமாம். யாரில்லைன்னு சொன்னா.

அதை மனசில் வச்சுக்கணும்.
உங்களை மாதிரி உண்டானு புகுந்த
வீட்டில
எல்லோரையும் சொல்லலாம்.
சர்வைவல் தான்.
நன்றி தேவதை.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தன் வீட்டுப் பையன்கள் தங்கள் மாமனார் வீட்டுக்கு
அடிக்கடி போனாலோ,
அந்த மாமியார் சமையல் திறனை எடுத்துப்
பேசினால் வீட்டில் ஒரு சங்கடம் வந்து விடும்.
ஒண்ணுமே உப்புப் பெறாத விஷயத்துக்கு எல்லாம்
அம்மாக்காரிக்கு சிணுசிணூப்புக் காட்ட
வேண்டி இருக்கும்.//


அனுபவப்பூர்வமான கருத்தா அல்லது பரந்த சிந்தனையா எது உண்மை,

ஆனால் மிக நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்

வல்லிசிம்ஹன் said...

வாங்க நிலவு நண்பரே.
எல்லாமே அனுபவம்தான்.
நான் பார்த்த சொந்த பந்தங்கள்,தோழியர் வட்டாரம்.

எல்லோருக்கும் எங்கிருந்தோ ஒரு ஏக்கம் வருகிறது, நம்மை யாரும் கண்டுக்கலியோ, இத்தனை நாள் பாடு பட்டது பாக் சீட்டுல உட்காருவதற்காகவா என்று.
பெருந்தன்மை உண்டு தான்.
இருந்தாலும் பாசம், கண்ணை மறைக்கிறது.

ஓஹோ உன் மாமியார் கிட்ட ரெசிபி வாங்கி நானும் அதைச் செய்து பார்க்கிறேனே என்று சொல்லத் தெரியவில்லை.

சின்னச் சின்ன புரிதல் வேறுபாடு இப்படித்தான் வருகிறது.

வருகைக்கும்,நல்ல பின்னூட்டத்திற்கும்.
:-)) நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

//எல்லோருக்கும் எங்கிருந்தோ ஒரு ஏக்கம் வருகிறது, நம்மை யாரும் கண்டுக்கலியோ, இத்தனை நாள் பாடு பட்டது பாக் சீட்டுல உட்காருவதற்காகவா என்று.
பெருந்தன்மை உண்டு தான்.
இருந்தாலும் பாசம், கண்ணை மறைக்கிறது.

ஓஹோ உன் மாமியார் கிட்ட ரெசிபி வாங்கி நானும் அதைச் செய்து பார்க்கிறேனே என்று சொல்லத் தெரியவில்லை.

சின்னச் சின்ன புரிதல் வேறுபாடு இப்படித்தான் வருகிறது.//

மேலே சொன்னீங்களே, அது, அதுதான் மேட்டர் வல்லியம்மா...இது தெரிந்திருந்தாலும்ம், பல சமயங்களில் நமக்கே இந்த உணர்வுகள், அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.....

மெளலி (மதுரையம்பதி) said...

ஆமாம், துள்ளல் சரி, அதென்ன "களிகொட்டுத் துள்ளல்" கொஞ்சம் விளக்குங்களேன்?

வல்லிசிம்ஹன் said...

என்ன மதுரையம்பதி, இப்படிக் கேட்டுட்டீங்களே.
களி சந்தோஷம்
துள்ளல் ஆட்டம்.
சந்தோஷத்தில ஆடறது. கைகொட்டி ஆட்டம். திருவாதிரக் கைகொட்டி களியாமோ னு சொல்லுவாங்களே.
களியை முழுங்கிட்டு ஆடறது சிரமம்தான்:-0)

வல்லிசிம்ஹன் said...

மௌலி,
எல்லாவிதமான மாமியார் சாம்பிள்களையும் பார்த்துட்டென்.
(என்னையும் சேர்த்துத்தான்)

நாற்பத்தொரு வருஷமாக இவரை இன்னும் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.
அதுக்கப்புறம் பிள்ளைகள், அவர்கள் சம்சாரங்கள், மாப்பிள்ளை எல்லாரையும் பூரணமாப் புரிஞ்சுக்க முடியாது. அன்றறஇக்கு நடந்ததை அன்னிக்கெ மறக்கரதுதான் நல்லதுனு நினைஇக்கிறேன்.

Geetha Sambasivam said...

மனசைப் புரிஞ்சுக்கறது ஓர் அற்புதமான உணர்வு வல்லி, ரொம்பப் பெருந்தன்மை வேணும், குழந்தைகள் சந்தோஷமாய் இருக்கத் தான் கல்யாணம் செய்து வைக்கிறோம் என்பதை எல்லாப் பெற்றோரும் உணர்ந்தாலே போதும் இல்லையா? தவிர, அன்பை உணரத் தான் முடியும்.இலவசமாய்க் கொடுக்கக் கொடுக்க அதே மாதிரி இலவசமாய் வட்டியுடன் திரும்பி வரும் ஒரே பொருள் அது தான்.

ambi said...

டாபிக் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. இப்ப சாய்ஸ்ல விடறேன். குழந்தைய (நான் தான்) இப்பவே பயமுறுத்தாதீங்க. :)

இட்லி வார்த்து பேரனுக்கு காக்கா கதை(any crow in US?) எல்லாம் சொல்லி ஊட்டுவீங்களே!னு கேட்டேன். :)

//நாற்பத்தொரு வருஷமாக இவரை இன்னும் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.
//
அந்த சிம்ஹனை புரிந்து கொண்ட வல்லி இங்கு ஏது? :p

ஆனாலும் அவர் என்னிக்கும் லக்ஷ்மி நரசிம்ஹராக தானே அருள்பாலிக்கிறார்! :)

வல்லிசிம்ஹன் said...

கீதா வரணும்.
பெருந்தன்மை எப்போதும் துணைக்கு வருவதில்லை.
நம்மளை மத்தவங்கப் புரிஞ்சுக்கலியேனு ஒரு சுயபச்சாத்தாபம்னு நினைக்கிறேன்.
எல்லாம் ஒரு வேடிக்கைதான்.தள்ளி நின்னு பார்த்தால் கலக்கமே வேணாம். நான் நான் தான். நீ நீதான். தனியாவே சுதந்திரமா சந்தோஷமா இருக்கலாம் என்று விட வேண்டியது கடமை.அன்பு ஒரு வழிப்பாதை.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, நான் சொன்னது ''இட்லிவடையில்''
எங்க பேரு வந்ததைப் பத்தி.
பெரிய பேரனுக்கு ஹாரிபாட்டர் கதைகளும் மிஸ்டரீஸும் தான் இப்போ தேவை.
சின்னவனுக்குத் தூக்கி வைத்துக் கொண்டால் போதும்.
காக்காக் கதையெல்லாம் உங்களுக்குத்தான் இப்போ.:-) ரெடி ஸ்டாக் வச்சுக் கோங்க.வரப்போகும் வாரிசுகளுக்குச் சொல்லத்தான்.
யூ.எஸ்ல காக்கா இருக்கே.!
நம்மா உர்ரு மாதிரிக் குரல் இல்லை. கொஞ்சம் கர்ணகடூரம்தான்.சாப்பாடு வேறவிதம் இல்லையா:-)
லக்ஷ்மிநரஸிம்ஹன் இல்லாமல் வேறதுணை யாரு.
நினைவு படுத்தியதற்கு நன்றி.(சாமியை)

நந்தா said...

//தன் வீட்டுப் பையன்கள் தங்கள் மாமனார் வீட்டுக்கு அடிக்கடி போனாலோ,அந்த மாமியார் சமையல் திறனை எடுத்துப் பேசினால் வீட்டில் ஒரு சங்கடம் வந்து விடும்.ஒண்ணுமே உப்புப் பெறாத விஷயத்துக்கு எல்லாம்
அம்மாக்காரிக்கு சிணுசிணூப்புக் காட்ட
வேண்டி இருக்கும்.//

ரொம்ப அழகா சொன்னீங்க.இது நமது சமுதாய அமைப்பிலேயே உள்ள குறை என்று எனக்கு தோணுது. அதாவது மாப்பிள்ளைன்னா 'கொஞ்சம் கெத்தாத்தான்' இருக்கணும்னு யாரோ எழுதி வெச்சுட்டு போன மாதிரியே கடைப் பிடிச்சுட்டு வராங்க.

மாமியாரும், மருமகளும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டு பேசுவது என்பது வெகு அரிதாக ஒரு சில குடும்பங்களிலே மட்டுமே இருக்கிறது. கிண்டலடித்துச் சிரித்துப் பேசும் ஒரு நட்பான சூழ்நிலையை குடும்பத்தினுள்ளே உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொருவர்க்கும் இருக்கிறது.

ஆனால்....? உண்மைதான். யார் செய்வது? யார் கேட்பது?

வல்லிசிம்ஹன் said...

வாங்க நந்தா.

மாப்பிள்ளை கூட சொந்தப் பிள்ளை ஆகிவிடுவார். கொஞ்ச நாளில். மருமகள் எப்போதும் ''என்ன இருந்தாலும் இன்னொருத்தர் வீட்டுப் பொண்ணு''ஆக இருக்கத் தான்
வழ்க்கமாகிவிடுகிறது.அதாவது எழுபைத்தைந்து சதவிகிதம்.

ஒட்டிக் கொள்ளுகிற பந்தங்களும் இருக்கின்றன.