Blog Archive

Thursday, August 31, 2006

ஆஜி

ஆஜி. இன்றூ இருந்தால் 111 வயது ஆகி இருக்கும் .
ஒரு கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்து, எட்டு வயதில் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்துக்கு
மருமகளாகி,
பதின்மூன்று வயதில் முதல் மகனைப் பெற்றவர்.
கும்பகோணம் பக்கத்தில் கடம்பங்குடி என்ற ஊரில்
சாதாரணமான ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்
ஆஜியின் தந்தை.
சிறு வயதில் பல ஆங்கிலேய மாவட்ட (1860)ஆட்சியாளர்களைப் பார்த்து எப்படியாவது வாழ்க்கையில்
முன்னேற வேண்டும் என்று தெளிவாகச் சிந்தித்து
அந்தக் கால வழக்கப்படி துண்டை உதறித் தோளில் போட்டு, கையில் வெறும் ஐந்து ரூபாயுடன்,
தீராதக் கல்வி தாகத்தோடு வந்தவர்.
அப்போது ரயிலுக்கு செலவழிக்கக் கூட அவரிடம் பணம் கிடையாது என்று பாட்டி சொல்லிக்
கேள்வி.
சென்னை வந்தவர் தன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரிய
கிரிமினல் வழக்கறிஞரிடம் சேர்ந்தார்.
அந்தச் சிறு பையனின் அறிவும் தீர்க்கமும் பெரியவரை
ஈர்த்து விட்டன. மேலே படிக்க விருப்பமா என்று அவனைக் கேட்டபோது அவனும் தயங்கவில்லை.
எப்படியும் கடமையைச் செய்ய வேண்டும் என்று
உதவியை ஏற்றுக்கொண்டான்.
பெரியவரின் ஊகம் மோசம் போகவில்லை.
வழக்கறிஞராக வந்து நின்ற இளைஞனுக்குத்
தன் பெண்ணையேத் திருமணம் செய்து வைத்தார்.
மயிலைக் குளத்து அருகில் அப்போது வீடுகளும்
கோவில்களுமே இருந்தன.
அதில் ஒரு வீட்டில் குடியமர்த்தப்பட்டனர் இந்தத் தம்பதிகள்.
குடும்பம் பெருகியது. வருமானமும் பெருகியது.
நல்லபடியாக ஆளத்தெரிந்த அரசிபோல வளைய வந்த தன்
அம்மாவை ஆஜி எப்போதும் மறந்ததில்லை.
இதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா?
அந்த நூற்றாண்டில் பெண்கள் செல்லம் கொடுத்து வளர்க்கப் படவில்லை.புத்தி (இடித்து சொன்னதாக) சொல்லி, சமையல் கற்றுக்கொடுத்து,
இன்னோரு வீட்டில் அடங்கி,

நளபாகம் வேலை செய்து
வந்தவர்களை உபசரித்து,
குழந்தைகளைப் பெற்று,
அவர்களைத் தன் பிம்பமாக வளர்த்து................
வயதாகி அடங்க வேண்டியதுதான்.
இந்த அச்சில் வார்க்கப் பட்ட பொம்மையாக
இருக்க ஆஜி மறுத்ததுதான் அதிசயம்.
திருமணம் செய்ய வரனைத் தேர்ந்து எடுத்தது
என்னவோ தன் தந்தையாக இருந்தாலும்(திருமணத்திற்கு
அப்புறம்)
தன் வாழ்வை நிர்ணயிக்கும் மன உறுதி அவரிடம்
இருந்தது. அதை நினைத்துதான் எங்களுக்கெல்லாம்
ஆச்சர்யமாக இருக்கும்.
ஆஜிப் பாட்டி வாழ்க்கைப்பட்டது பெரிய மிராஸ்தார் குடும்பத்தில்.
ஆறு மைத்துனர்கள், இரண்டு நாத்தனார்கள்.
திருமணத்துக்கு முன்னாலேயெ இறைவன் திருவடி சேர்ந்ததால்,
திருமணம் செய்து வரும் குழந்தை மருமகளுக்கு அறிவுரை
சொல்லி, நடத்திச் செல்ல யாருமில்லை.
வீட்டு ஆண்களோ விவசாயத்தையும், வைதிகத்தையும்,
வேதாந்தத்தையும் விடாமல் பின்பற்றுபவர்கள்.
இந்த ஆஜிப் பாட்டிக்கு முன்னாலேயெ வந்து விட்ட முதல் மருமகள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிந்து
நடப்பாராம்.
மச்சு என்னும் மாடியில் பெண்கள் இருக்க, கீழே
கும்பல் கும்பலாக சாப்பாட்டுப் பந்தி நடக்கும் என்றும்,
சாப்பாட்டு மணம் வரும்போது பசி பொறுக்காமல் அந்த மச்சிலேயெ குமித்து வைத்து இருக்கும் உப்பு புளி, வெல்லம் எல்லாம் கலந்து அரிசி யோடு சாப்பிடப் பழகியதாகவும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.


இவர்கள் சமையல் செய்யப் போகாத காரணம்,
அந்த சமயத்தில் ஆஜிப் பாட்டியின் மாமனார்
ஒரு மடாதிபதியாகப் பொறுப்பேற்றதுதான்.
பெண்கள் சமையல் அறை பக்கம் போக முடியாது.
மடத்தில் குருவைப் பார்க்க வருபவர்கள் நேரே
வீட்டுக்கு சாப்பிட வந்து விடுவார்கள்.
அந்தப் போஜனம் எல்லாம் முடிந்த பிறகுதான்
வீட்டுப் பெண்கள் சாப்பிட முடியும்.!
தினம் தினம் இந்தக் கதைதான்.
ஒருவழியாகத் தாத்தாவின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பும் முடியும் போது
சென்னைக்கு இருவரும் அனுப்பி வைக்கப் பட்டார்கள்
தாத்தா சட்டம் படித்து , குழந்தைகள் பிறந்தது அப்போதுதான்.
தாத்தாவுக்கு நிலபுலன்களைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் சேர்ந்து கொண்டதால்
பாதி நேரம் கும்பகோணம் போக வேண்டிய நிலைமை.
எத்தனை நாள் தந்தையின் வீட்டில் இருப்பது?
அதனால் ஆஜிப் பாட்டி தனக்கென்று ஒரு இடம்
வேண்டும் என்று தன் தந்தையின் ஆசியோடு 1930(என்று நினைக்கிறேன்)ல் இப்போது இருக்கும் சாலைக்கு
வீடும், தோட்டமும் மாடு கன்றுகளோடு வந்தார்கள்.
இதற்குள் ஆஜிப் பாட்டியின் குடும்பத்தில்
இரண்டு புதல்விகள், நான்கு புத்திரர்கள்.
எல்லோருக்கும் நல்ல கல்வி ஏற்பாடு
செய்து கொடுத்தார் ஆஜி..
கோமள
வல்லியாக இருந்த அம்மா , ஆஜி ஆனது அப்போதுதான்.
பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தது பங்களூரில்.
அந்தப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகள் , அந்த ஊர் வழக்கப் படி அஜ்ஜி(கன்னடத்தில் பாட்டி)
ஆஜி என்று கூப்பிட ஆரம்பித்ததும்
எல்லோருக்கும் ஆஜியாகி விட்டார்.
அவருக்கு மாற்றுப் பெண்களும் மாப்பிள்ளைகளும் வந்த
பிறகும் ஆஜி ஓய்வெடுத்து நான் பார்த்ததில்லை.
நிலத்திலிருந்து விளைந்து வரும் பொருட்களைத் தனியாக சீர்செய்து வைப்பது.,
அத்தனை பெரிய வீட்டுக்கு ஒரே ஒரு ஆளை வைத்து
சுத்தம் செய்வது, கடைக்குப் போவது,(மாட்டு வண்டியில் தான்) , பேத்திகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குப் போய்,
விவரங்கள் அறிவது,
மாடுகளுக்குத் தீவனம் வைத்து,பால் கறக்கும் ஆட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது,
சமையல் அறையில் நின்று தன் பெரிய சம்சாரத்துக்கு அளவாக அரிசி, பருப்பு, காய்கறி செலவு செய்து
வேளைக்கு சாப்பாடு செய்து போடுவது..
எப்போதும் சேமிப்புக்கு மாதந்தோறும்
பேரன்கள், பேத்திகள் கணக்கில் பணம் போடுவது.
மகன்களின் வருமானத்துக்கு மீறி செலவு இல்லாமல்
அவர்களைக் கட்டிக் காத்த குடும்பம் நடத்தும் பாங்கு
சொல்லிக் கொடுத்து,
தவறு செய்தால் திருத்திக் கொள்ள வழி சொல்லி,
நேர்மையிலிருந்து ஒரு துளி கூட விலகாமல்,
எல்லாப் பேரன் பேத்திகளுக்கும் கல்லூரி வரைப் படிக்க வைத்தவர்.
படிப்பின் அருமை தெரிந்தவர்.
4 வகுப்பு வரைதான் படித்தவர்.
ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடத்தெரியும்.
நான் என் லெண்டிங் லைபிரரிக்குப் போகும்போது,
கௌந்ட் ஆஃப் மாந்தி க்ரிஸ்டோ, ஷெர்லக் ஹோம்ஸ் நாவல்கள் தமிழாக்கப் பட்டவை, வை.மு.கோதைனாயகி அம்மாள் கதைகள் எல்லாம் எடுத்து வரசொல்லுவார்.
கூர்மையான புத்தி.
எதிராளியின் முகத்தை வைத்தே சொல்வது பொய்யா உண்மையா என்று எடை போடுவார்,.
எல்லாரிடமும் இருக்கும் பலம் பலவீனம் தெரியும்.
நேர்மையாக இருப்பவர்களைப்பார்த்தால் தனி அன்பு காட்டுவார்.
இறக்கும் தருணத்தில் அவர் தன் சொத்து என்று வைத்து இருந்தது இரண்டே இரண்டு நூல் புடவைகள்தான்.
மற்ற எல்லாவற்றையும் நாலு தலைமுறைகும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டு,
வங்கியில் தன் ஈமச் சடங்குக்கு என்று எட்டு ஆயிரமும் வைத்துதான் இறந்தார்.
கீழே விழுந்ததால் தான் அந்த 88 வயதில் இறக்க நேர்ந்தது.
அதுவும் எப்படி?
தன் உயிர் சினேகிதியின் பேரன் அமெரிக்காவுக்கு
எடுத்துப் போக , காலை 4 மணிக்கு, சமையல் அறையில்
புளிக்காய்ச்சல் தயாரிக்கப் போனவர், எண்ணை சிந்தி இருப்பதை பார்க்காமல் வழுக்கி விழுந்து விட்டார்.
ஒரு நல்ல முற்போக்கு எண்ணங்கள் கொண்ட
அறிவாளி நிறை வாழ்வு வாழ்ந்து
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்.
இத்தனை தனித் தன்மை பொருந்திய பெண் எனக்குப் புகுந்த வீட்டுப் பாட்டியானது என் அதிர்ஷ்டம் தான்.
Posted by revathiNarasimhan at Tuesday, August 29, 2006

2 Comments:
தி. ரா. ச.(T.R.C.) said...
நல்ல ஆதர்ஷ பெண்மணி.பாரதியார் காலத்தில் வாழ்ந்த அவர் கண்ட பெண்மணி.
8/29/2006 8:08 PM
revathiNarasimhan said...
தி.ரா.ச, நன்றி. உடனே பின்னூட்டம்போட்டதற்கு.அந்த மாதிரி பெண்கள் இப்போது பார்க்க முடியாது.அசராமல் வேலை செய்வார்.திடமான ஆரோக்கியம்.எங்களுக்குத்தான் சில சமயம் கீப் அப் பண்ண முடியாது.
8/30/2006 8:08 AM
Post a Comment




























Sunday, August 27, 2006

வினாயகனே வினை தீர்ப்பவனே



வினாயகனே வெவ்வினையை வேறருக்க வல்லான்.
கணேசனைத் தொழாத கைகள் உண்டா?
அப்பனே காப்பாத்து என்று அரசமரத்தடியை நோக்கி
வணங்காதவர்கள் உண்டா?


எத்தனை நல்ல பிள்ளை இவர். அம்மாவுக்காக அரசமரத்தடி போதும் கூரையும் வேண்டாம் ,
கும்பாபிஷேகம் வேண்டாம் என்று இருப்பார்.

ஆத்திலே தண்ணீர் மொண்டு வீட்டுக்குப் போகும்போது இவருக்கும் ஒரு அபிஷேகம் செய்துவிட்டுக், காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் வழக்கம் இப்பவும் உண்டு.


கருணையுள்ள பிள்ளை.
ஒரு சதுர்த்தேங்காய் போதும்.
மனசு சமாதானமாகிவிடும்.
அவரா சாப்பிடுகிறார்.
சுத்தி இருப்பவர்காளுக்கு பசி தீர்ப்பதற்கே சூறைத்தேங்காய்

என்று சிரிப்பது போல முகம்.
மதுரை முக்குருணிப் பிள்ளயார்,
திருச்சி உச்சிப் பிள்ளயார்,
பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர்,
சேலம் ராஜ கணபதி,
நம்ம நவசக்திப் பிள்ளயார்--லஸ்ஸிலிருந்து கொண்டு

காலையில் ராஜ் டிவிலேயும் வந்து விடுவார்.
இதைத்தவிர வீடு தோறும் வாஸ்துப் பிள்ளையார் வேறு.



அப்பா எப்படி இத்தனை கருணை உனக்கு.??
எங்கே போயி உன்னை நினைத்தாலும் கணத்தில் அருள்கிறாயே.
கணபதியே.



நித்தம் உன்னை நினைக்கும் மனம் கொடு.
நிர்மல கணநாதா.
சித்தம் கலங்கி சிதறி விடாமல்
பொற்பதம் அருள்வாய்
சித்தி விநாயகனே.
நவ சக்தி விநாயகனே.




விளாம்பழம், நாவல் பழம்
அவல் பொரி சுண்டலுடன்
அப்பமும் அதிரசமும்
வெல்லக் கொழுக்கட்டையும்
உனக்குக் கைகாட்டி,

அருகம்புல்லையும் சந்த்னத்தையும்

குங்குமம் விபூதியையும்
சாம்பிராணி வாசனையும் கூட்டி,
வேறு யேதும் தேடாமல்
வீட்டுக்கு வந்த விக்கினேஸ்வரா,


சரணம் சரணம் உன் பாதம்.
சரணம் சரணம் உன் பாதம்

Sunday, August 20, 2006

தேடி வரவழைத்துக் கொண்ட தொந்தரவு

Blogger Beta பற்றி எல்லோருக்கும் தெரியும்.
நானும் பார்த்தேன்.
பேசாமல் போயிருக்கலாம்.
ஆசை யாரை விட்டது.

என் ப்ளாக் பொருனைகரையிலெவை மேம்படுத்துவதாக நினைத்துக் கொண்டு

பீட்டாவுக்குக் கொடுத்தேன்.
இப்போது என்னால் http://porunaikaraiyile.blogspot.com
enter செய்ய முடியவில்லை.
கடைசியாகப் போட்ட பதிவு தான் வருகிறது.
கூகிளில் தேடி என் பழைய பதிவுகளை

இன்னுமொரு பதிவில் போட்டுக் கொண்டுஇருக்கிறேன்.
ஈமெயில் மட்டுமே போட வாங்கின
கம்ப்யுட்டர்,
அதற்காகத் தேடிய அறிவு,
யாஹூ,ஹாட்மெயில்,சிஃபி.காம்

அளவிலேயெ நின்றது மாறி,
இண்டர்னெட் , ப்ரௌசிங் என்று வேகம் பிடித்தது.

1997 தொடங்கி இன்று வரை எத்தனையோ
விதமாகக் கம்ப்யுட்டர் சம்பந்த ப்ரச்சினைகளை

தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் உதவியோடு தீர்க்க முடிந்தது.
இப்போது நான் சந்திப்பது நானாக வரவழைத்துக் கொண்டது.
பார்க்கலாம். எப்படித் தீர்க்கிறேன் என்று.
கம்பூட்டருக்கு ஸ்பெஷல் சாமி உண்டா?

Wednesday, August 16, 2006

ஸ்ரீ கிருஷ்ணா,வாசுதேவா,கோவிந்தா

Posted by Picasa ஸ்ரீ கண்ணனைப் பற்றிப் பாட ,நினைக்க,ஸேவிக்க,
சரண் அடையப்
பல ஆயிர வருடங்களாய்த் தபசு
செய்யும் முனிவர்களும்,
அவனுக்குக் கோவில் கட்டிப் பூஜிக்கும் புண்ணியம் செய்தவர்களும்,
மதுரா, பிருந்தாவனம்,பத்ரினாத்,த்வாரகா
என்று
பக்தி பிரயாணம் செய்தவர்களும்,
அவனையே எண்ணி
ஏழைகளையும்
வலிவில்லாதவர்களையும்

சேவையினால் மகிழ்விப்பவர்கள் மத்தியில்
வெறும் புஷ்பம் சார்த்தி,
கும்பிடு போடும் என்னால் உனக்கு என்ன
கொடுக்க முடியும் கிருஷ்ணா?
வார்த்தைகள் மட்டுமே ,

வெளிவருவதால், பேச்சு கொடுத்ததற்கும்,
எழுத கையில் ,விரலில் பலம் கொடுத்த்தற்கும்,
உன்னை நினைக்க
புத்தி கொடுத்ததற்கும்,
பாகவதம் படிக்க கண்கள் தந்ததற்கும்,

உன்னைப் பாடக் குரல் கொடுத்தற்குமேதான் ,,
உன் சரண் அடைய வேண்டும். .

காப்பாற்ற நீ இருக்கிறாய்,.
இந்த எண்ணம் எப்போதும்
நெஞ்சை விட்டு நீங்காமல் ,,

இருக்க, அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
கண்ணா, காத்திடு.

Tuesday, August 15, 2006

வாழ்த்துகளுக்கு நன்றி

தேன்கூட்டில் பதிவாளர்கள்,பார்வையாளர்கள்

புதியவர்கள்,
முதியவர்கள்,
உள்நாட்டு வெளிநாட்டு
சகோதர சகோதரிகள் தோழிகளுக்கும்

சுதந்திர தின வாழ்த்துகள்.

பின்குறிப்பு;
பெயர் போட்டு வாழ்த்தியவர் யாரென்று
தெரியவில்லையே?

Monday, August 14, 2006

அம்மா சொன்னது

அம்மா நீ சொன்ன வார்த்தைகள்,

சமத்தா, சாமர்த்தியமா இரு---கேக்கவில்லை

அசட்டு நம்பிக்கை, அசட்டு தைர்யம் கூடாது--கேக்கவில்லை

யாரைப் பார்த்தும் குடும்பத்தைப் பற்றி விமரிசிக்கக் கூடாது---கேக்கவில்லை.

பிறந்த வீட்டுப் பெருமையோ, இல்லை தாழ்வோ
புகுந்த வீட்டிலே பேச வேண்டாம்--சரி என்று சொல்லிவிட்டு மீறுவேன்.

சமத்தா, சாமர்த்தியமா இரு---கேக்கவில்லை

அசட்டு நம்பிக்கை, அசட்டு தைர்யம் கூடாது--கேக்கவில்லை

யாரைப் பார்த்தும் குடும்பத்தைப் பற்றி விமரிசிக்கக் கூடாது---கேக்கவில்லை.


அதே போல் பிறந்த வீட்டுக்கு வந்து
வாழும் வீட்டு உறவு பத்தி சொல்லாதே, உன் மதிப்பு தான் குறையும்.-----அம்மாவே இப்படித்தான்.சும்மா ஜாலிக்காகப் பேசினால் என்ன?

ஆறு திரி போட்டு விளக்கு ஏத்து
குடும்பம் மங்களமாக இருக்கும்,

வாங்கவே இல்லியே!
அதனாலெ தானாம்மா ? நீ கடைசியா

இதுகிட்டே நாம என்ன சொல்லி
என்ன கேக்கும்னு
நினைச்சுட்டியா.
சொல்லிக்காமயே போயிட்டியே?

Sunday, August 06, 2006

சூர்யா-ஜோதிகா-தட்ஸ் டாமில்.காம் அறிவிப்பு

சூர்யா ஜோதிகா திருமண அறிவிப்பு.
தட்ஸ் தமிழ்.காம்.
பார்த்தேன்.
செப்டம்பர் 11 ஆம் தேதி சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் திருமணம் என்று திரு.சிவகுமார்
அறிவிப்பு கொடுத்து இருக்கிறார்,
என்று நியூஸ்,.
தம்பதிகளுக்கு(ஆகப் போகிறவர்களுக்கு)
எங்கள் வாழ்த்துக்கள். சிவகுமார் சாருக்கும் தான்.

Tuesday, August 01, 2006

நிலைத்து இருக்கும் உறவுகள்


?



சுற்றத்தின் குற்றம் பார்க்காவிட்டால் உறவுகள் நிலைக்கும்.
இது தான் எனக்குக் கிடைத்த பாடம்.
நேரிடையாக இல்லை எனினும்
அறியாப் பருவம் என்று சொல்லப்படும் நான்கு, ஐந்து வயதிலிருந்தே அவளைத் தெரியும்.
அவள் வ்ஈட்டில் நான் இருப்பேன்.
இல்லையானால் என் வீட்டில் அவள் இருப்பாள்.
எனக்கு இரண்டு சகோதரர்கள் மட்டுமே என்பதால் மற்ற தோழிகள் வீட்டிற்கு என் சாப்பாட்டு வேலை முடிந்ததும் ஓடிவிடுவேன்.
மறுபடி பசி எடுக்கும்போது வீட்டு நினைவு வரும்.
நாங்கள் இருந்த இடம் கிராமமா இல்லை டவுனா?
தெரியாது.
குழந்தைகள் ஓடி விளையாட தெருக்கள்.
மாட்டு வண்டிகள் போகும். ஊருக்கு இருந்த இரண்டு வழித்தடங்களில் ஒன்று எங்கள் ரோடு.
உசிலம்பட்டி மதுரை, டி.கல்லுபட்டி
பெயர் கொண்ட பஸ்கள் ஒரு நாளுக்கு 4 தடவை போகும்.
தெருமுனையில் மீனாட்சிஅம்மன் கோவில்.
அடுத்த முனையில்
அரச மரமும் பிள்ளையாரும்.அவரைத் தாண்டினால்
என் இன்னொரு தோழி கேட்டியின்(காதரின்)) வீடு.
அடுத்த காம்பவுண்டு எங்க அப்பாவின் வேலையிடம்.
தபால் ஆபீஸ்.
அதையும் தாண்டினால் ஒரு சின்ன முனையில் மாடுகளும்,பாலும், உமியும், தவிடும், விரட்டிகளும் நிறைந்து கலப்பட வாசனையோடு ஒரு பால்க்கார ஆயா வீடு.
எதிர் வரிசையில் உடுப்பி லன்ச் ஹோம்.

தள்ளி நடந்தால் போர்டு ஹைஸ்கூல். அதற்கு நேர் எதிராக பஸ் நிலையம்.(அப்போது) முக்கியமான இடம் இதொ அந்த நிலையத்தைத் தாண்டி வலது பக்கம் . இருக்கிறது.
எங்கள் ஆனந்தா தியேட்டர்.
3 மாதத்திற்கு ஒரு தடவையாவது நங்கள் ப்டம் பார்க்கப் போகும் இடம்.
இவ்வளவு விரிவாகத் திருமங்கலத்தை விவரிக்கக் காரணம், நானும் செண்பகமும் மேற்கூறிய இடங்களுக்கு
ஏதாவது ஒரு காரணம் வைத்துக் கொண்டு போய் வருவோம்.
பல் தேய்க்க உமிக்கரி செய்ய வேண்டும், ஓடு ஆயாம்மா வீட்டுக்கு. இரண்டு படி உமி கொண்டு வந்துவிடுவோம்.
செண்பகம் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. நாங்க ரெடி. ஒரே ஒரு ரூபாய்க்கு நான்கு தோசை பார்சல் கிடைக்கும்.
உடுப்பி ஹோட்டல் மீண்டும் வீடு.
அவர்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பெண்களும் அம்மாவும் அப்பாவும்.
அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் முக்கியமானவர்கள் மேலூர் சித்தப்பா கணபதியும் அவர் சம்சாரம் காஞ்சனாம்மாவும் அவங்க முதல் மகள் காந்திமதி,இராண்டாவது பையன் சந்திரனும்.
தம்பி சின்னவன். அக்கா 16 வயதுஇருக்கும். சரொஜா அக்கா (செண்பகத்தோட முதல் அக்கா)) ஈடு.
என் தோழியின் அப்பா முருகேசன் மாமா மளிகைக்கடை வைத்து இருந்தாலும் அவ்வளவு வசதி போதாது. வாணிகருக்கு வேண்டாத குணம் ஒன்று இருந்தது அவருக்கு.. அதான் கனீவாய் எல்லோருக்கும் கடனைக் கொடுத்து விடுவார்,
திருப்பிக் கேட்கத் தெரியாது.
பாவம் அவ்ரகளுக்கு என்ன கஷ்டமோ என்பார்..
அதற்கு ஏற்ற மனைவி.
வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.
அந்த அம்மா செய்யும் குழம்பு மட்டும் போதும்.
நல்ல கத்திரிக்காய் வற்றல், பூண்டு ரசம், நிறைய பெரிய பானையில் வடித்த சுடு சாதம்.
அவர்கள் மோர் தயிர் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை.
தட்டுகளும் அலுமினியத்தில் ஆனதுதான்.
நான் அங்கே போனால் எனக்குத் தனியாக ஒரு சிலுவர்
தட்டு இருக்கும். ஐயர் வீட்டுப் பொண்ணு என்று.
அதே போல செண்பகாவுக்கும் எங்க வீட்டில ஸ்பெஷல் டிரீட் தான்.
அம்மா செய்யும் எல்லாம் தனித் தனி பாத்திரங்களில் மூடி போட்டு அங்கே போய்விடும்.
அப்பாவும் செண்பகாவின் அப்பாவும் குடை பிடித்து ஒன்றாகப் போவதைப் பார்த்தால் எத்தனை நாள் பழக்கமோ என்று தோணும்.
இந்த நிலையில் தான் ஒரு நாள் காஞ்சனாம்மா வந்தாங்க.
தன் பெண்ணுக்கு ,மாப்பிள்ளை வீட்டு மனிதர்கள் வருவதாகவும், அண்ணனும் அண்ணியும் வரவேண்டும் என்று சொல்லி வீட்டுப் போய்விட்ட்டார்கள்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தோம் நானும் சென்பகாவும்.
எங்க அம்மா நீங்கள் இங்கேயே இருங்க. அப்புறம் வீட்டுக்குப் போகலாம்ென்றர்கள்.
அம்மா முகத்தீல் கவலை.
நாங்களும் சமத்துப் பிள்ளைகளாக பாடம் எழுத உட்கார்ந்து விடடோம்.
பிரகு தான் விஷயம் தெரியும்.
சரோஜா அக்காவுக்காக ஏற்கனவே நினைத்து முடிவு செய்த வரனைத்தான் சித்தியும் பேசி(அதற்கு பணம் பேசியது என்ற அர்த்தம்)
அந்த அத்தான் மதுரையில் கவர்ன்மெண்ட் வேலையில் இருந்தார்.

எங்கா அம்மா கூட ச்ோஜா அக்காவை மெலிதாக சிரிக்க வைப்பதைப் பார்த்து இருக்கிறேன்.
அந்த நாளுக்கான சோகம் என்ன என்றால், அக்கா சாப்பிடாமல் படுத்து விட்டதுதான்.
யார் சொல்லியும் கேட்கவில்லை.
நாங்கள் எல்லோரும் ஒருதரம் மதுரைக்குப் போனபோது
அந்த தங்கதுரை அண்ணனும் எங்காளோடு இரும்புத்திரை சினிமா பார்க்கத் தங்கம் தியேட்டருக்கு வந்ததும், அக்காவோடு சிரித்துப் பேசியதும் ஞாபகம் வந்தன.
எங்க காதல் ஐடியாக்கள் எல்லாம், சிவாஜி,மற்றும் ஹீரோயின்க்ள் நீண்ட நேரம் ஒருத்தரைப் பார்த்தால் அடுத்தாபுல பாட்டு வரும் என்பதுதான்.
அதனால் ச்ோஜா அக்காவின் அழுகை புரியவில்லை
இதையும் மீறி செண்பகத்தின் அம்மாவும் அப்பாவும்
அடுத்த நாள் மேலூருக்குப் பயணம் ஆனார்கள்.
என் அப்பாவிடம் சரோஜாவைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு.
அப்பாகூட முயற்சி செய்தார் சரொஜா பாவம் நாமா ஏதாவது தங்கதுரைகிட்ட பேசி நடத்தலாம்னு.
அவர் ஒத்துக்கொள்ளவில்லை. தம்பி பார்த்த வரனை நாம் கலைக்கக் கூடாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
அக்காவுக்கு எப்படியாவது அந்தக் கல்யாணம் நின்று விடும் எந்று தோன்றிவிட்டது.
எங்களோடு பாண்டி, ஏழு கல் எல்லாம் விளயாடிவிட்டு, சமைத்து வைப்பதாக சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனாள்.
நாங்களும் கூடவே போய்த் துணை இருந்தோம்.
இரவு ஆனதும் எல்லோருக்கும் வரிசையாகத் தட்டு வைத்து அழகாகப் பரிமாறினாள்.
வாசலில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு
போனவர்கள் தான் வந்துவிட்டார்கள் என்கிற சந்தோஷத்தில் ஓடினோம்.
அங்கே நின்றது தங்கதுரை அண்ணன்.!
சரோஜாவுக்கு இதுவரை இருந்த சந்தோஷமும் போச்சு.
திருமணம் சொல்ல வந்திகளோ என்று
பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டாள். நாங்கள் ஆ'
வென்று வாய் திறந்து பார்த்தோம்.
இதற்குள் சத்தம் கேட்டு அப்பாவும் வந்து வ்இட்டார்.
அட நீ எங்கப்பா இங்கே வந்தே என்று கேட்டதற்கு
அந்த அண்ணன் தலையை தொங்கப் போட்டபடி
எனக்கு அதிலே இஷ்டம் இல்லீங்க சார்.
கேக்காம முடிவு செய்துட்டாங்க.
சரோஜாவைத்தான் நான் கட்டுவேன் என்று தீர்மானமாகச் சொன்னதும்,
அப்பா அவனை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்குப் போனார்.
அதற்குல் அப்பா ஆபீசிலிருந்து தந்தி கொடுக்கும் பையன் வந்துவிட்டான்.
சார் தந்தி வந்து இருக்கு". எடுக்க கூட்டி. வர சொன்னாங்க'
அப்பா உடனே கிளம்பினார். அப்பாவே பொஸ்ட்,தந்தி எல்லாம் பார்க்கும் வழக்கம் அப்பொது. பிற்கு தான் போன் வந்தது..'
மீதி சினிமா கதை தோற்றது.
அங்கே காந்திமதி அக்கா மாப்பிள்ளையை நான் கட்ட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து ,
அவளோட மாமாவைப் பார்க்க சமயபுரத்துக்குப் போய் விட்டாளாம்.
மேலூர் போஸ்ட்மாஸ்டரும் அப்பாவும் கட்டு கட கட தந்தி முறையில் பேசிய விஷயம் இது.

அடுத்த நாள் தான் அவர்கள் வரமுடியும் என்றும்
சேதி.பக்கத்து வீட்டு வாஞ்சிமாமா,இன்னும் பல பேர் கூடி
தங்கதுரையை எங்க வீட்டில் தங்க வைப்பது, மத்தது காலைலே'' என்று பிரிந்தனர்

சரோஜா ,செண்பகம்,மல்லிகா,தாமரை,சின்னப்பொண்ணு எல்லோருக்கும் காவலாக நானும் என் தம்பிகளும்.

மறுநாள் எட்டரை மணி பஸ்ஸில் சகலரும் வந்தாச்சு.
தங்கதுரைக்கு எங்க வீட்டில் ராஜ உப்சாரம்.
நாங்கள் பள்ளிக்கூட்ம போயே ஆக வேண்டும் என்று
அனுப்பி விட்டார்கள்.
மதியம் சாப்பாடும் கையில்.
மூன்று மணி அளவில் நாங்கள் ஸ்கூலை விட்டு வெளியே வரவும் மாமாவும் தங்கதுரையும் மதுரை பஸ் ஏறவும் சரியாக இருந்த்து.
துரையும் மாமாவும் பஸ்ஸிலிருந்து கை ஆட்டி விடை பெற்றார்கள்.
ஒரு கல்யாணத்தை எதிர்பார்த்து இருந்த எங்களுக்கு
இது அதிர்ச்சி. யோசித்துக்கொண்டு வீடு வந்தோம்.
ஒருவர் முகத்திலும் ஈயாட வில்லை.
மாமா எங்கே போகிறார் என்று கேட்டதற்கு தெரியாது. பதில்தான்.
ஒரு வாரம் கழித்து மீண்டும் செண்பகத்தின் வீட்டில் சந்தடி.
கணபதி சித்தப்பா,தங்கதுரை அம்மா அப்பா, சித்தியின் பெற்றோர்கள் என்று வீடே நிரம்பியது.
முடிவு?
நல்லதுதான்.
முரைப்படி பெண் கேட்டு சரோஜா அக்கா,தங்கதுரை அத்தான்கலயாணமும்,
முருகேச மாமா(அண்ணனாக) பெண்கொடுக்க சமயபுரம்
மாமா,காந்திமதி திருமணமும்
நிச்சயித்து எங்க மீனாட்சி அம்மன் கோவிலிலேயே பந்தல் போட்டு,
பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் கச்சேரியோடு இனிதே
திருமணங்கள் நடந்தன.
ஆனமட்டும் நானும் செண்பகமும் கேட்டும் அந்த கமலா சவுண்ட் சர்விஸ் மாணிக்கம்
வீரபாண்டியக் கட்டபொம்மன் வசனம் போட மறுத்து
விட்டான்.
இந்த்க கல்யாணங்களை நடத்தியது யார் தெரியுமா/ காந்திமதிச் சித்தியின் பெற்றோர்கள் தான்.
யாருக்கும் செலவு வைக்காமல் சுபமாக நடத்தி
பெருமை தேடிக் கொண்டார்கள்.
அதை இப்போது நினைக்கும் போது , நாம் எப்படி
மற்றவர்களைக் குறைவாக எடை போட்டு விடுகிறொம் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

இந்த நிகழ்வுக்கு வில்லன் கதா பாத்திரம் என்று
நான் நினத்த காஞ்சனாம்மா

கல்யாணம் நடக்கவே காரணமாக இருந்தார்கள்.
ரொம்ப சாது என்று எல்லோரிடமும் பேர் வாங்கின சரோஜா அக்கா தீர்மானம் காட்டினாள்.
தெளிவாக இருக்கும் முருகேசன் மாமா கலங்கினார்.

படபடப்பு காட்டும் காஞ்சனா சித்தி
நல்ல முடிவு எடுத்தாள்.

ஆகக்கூடித் தேன்கூட்டிற்கு உறவுகள் பற்றி
எழுத எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.

balaraama krishna subathra---உறவுகள்