Blog Archive

Friday, July 14, 2006

SRI LAKSHMINRUSIMHAN




SRILAKSHMINRUSIMHA ! CHARANAM






Thvayi rakshathi rakshakai
ki
kimanmyai
thvayisaa rakshathi rakshaiki
kimanayai hi
ithi nischayathiisrayaami nithyam
nruhare vekavathi thadaasrayam thvaam
இந்த பாடல் ஸ்லோகத்திற்கு ப் பொருள்
ச்ரி ந்ருசிம்ஹா

உன்னைத்தவிர வேறு யாரால் என்னை ரக்ஷிக்க முடியும்?
நீ வந்து என்னை ரக்ஷிக்க வேண்டும்
ரக்ஷிக்கவில்லை என்றால் யார் ரக்ஷிப்பார்?
நீதான் ரக்ஷிக்க வேண்டும்.
உன்னாலேயெ முடியாது என்றால்
வேறு யாரால் முடியும்?
ரஷித்தாலும் ரஷிக்காவிட்டாலும் நீயே சரண்.

இந்த ஸ்லோகம் ச்ரி வேதாந்த தேசிகரின் "காமசிகாஷ்டகம்" என்ற பாடலில், வேகவதி நதிக்கரையில் இருக்கும் லகஷ்மிநரசிம்மரைப் பார்த்துப் பாடியது.
எல்லாப் பாடல்களுக்கும் மேல் இந்தப் பாடல் எனக்குப் பிடித்தது எதனால் என்று பார்த்ததில் ,

அதில் பொருந்தி இருக்கும் ச்ரணாகதிதான்.
'உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை என்றூ அவனிடம் சொல்லி விட்டால் போதும்.
நம் கவலை விட்டது.
எத்தனையோ சங்கடங்கள்,நோய், மன வருத்தம்
இவை எல்லோர் வாழ்க்கையிலும் சகஜம்தான்.
பயம் என்னை வாட்டும்பொது என்னைக் காப்பாற்றும் மந்திரம் இதுதான்.
ராம ராமா என்று சொல்லிவிட்டு,
இதையும் சொல்லிக்கொண்டே இருக்கத் தோன்றும்.
எல்லாம் என் மாமியார் செய்த மாயாஜால்ம தான்.
மிக இளவயதிலேயெ வந்த மருமகளை
எப்படியாவது மன நலத்தோடு வைத்துக்

கொள்ளவேண்டும் என்ற தீர்மானம். அவருக்கு.

இங்கே வா' என்று அழைத்து இந்த ஸ்லோகம்
சொல்லு. முடிஞ்சபோது ப்ழகிக்கோ'
என்று சொல்லிக் கொடுத்தார்.

அப்போது பிடித்ததுதான் நரசிம்ஹன் மேல் பித்து.
நமக்கு எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.
ப்ரஹலாதனைக் காக்க எடுத்த அவதாரம்,
தூணில் பிறந்தவன்,
முகம் சிம்மம்
உடல் மனிதம்

கைகளில் , கால்களில் நகம் ஆயுதம்
பற்கள் ஒரு க்ருவி ,
சுவாமியின் மடியில் கிடக்கக் கொடுத்து வைத்தான் ஹிரண்யகசிபு.
எங்கேயடா உன் ஹரி?
என்று தந்தை கர்ஜிக்கிறான்.
ப்ரஹலாதன் கை கூப்பி ,எங்கும் இருப்பான்
என்று பதில் சொல்கிறான்

ஒஒ!! இந்த தூணிலும் இருப்பானோ என்று எக்காளமிடுகிறான் ஹிரண்யன்.
அப்போதுதான் சிறுவன் ஹரி தூணிலும் இருப்பான்
இந்தத் துரும்பிலும் இருப்பான் என்று
திண்ணமாக உறுதி அளிக்கீறான்.

ஹிரன்யனுக்கோப் பிள்ளையின் வீரத்தைப் பார்த்துப்
பெருமை ஒருபுறம்
தன்னை மிஞ்சிப் பேசுகிறானெ ேன்று சினம்
.
அங்கெ விஷ்ணுவுக்கு கிலி ,கவலை வந்துவிட்டது.
இந்தக் குழந்தை எங்கே கையைக் காட்டப்போகிறதோ
தெரியவில்லையே.
அங்கெ வெளிவரவேண்டுமே என்று யோசனை.
பக்தன் வார்த்தை பொய்க்ககூடாதே!!

அதனால் ெல்லா இடத்திலும் வியாபித்து விட்டானாம்.
எங்கே த்ட்டினாலும் குதிக்கத் தயார்!!
இந்த மாயவனை அசுரனுக்குத் தெரியாதே.

'"அவன் வரடடும் ,அந்த ஹரி. !
தீர்ந்தது இன்றோடு பகை.' என்று
எக்காளமிட்டபடி தூணில் கதையை வைத்து அடிக்கிறான்.
அப்போது கண்ணை மூடியவன் தான் ப்ரஹலாதன்.
நாராயண ஜபம் அவன் உடல் பூராவும் ஒலிக்கிறது.
அடுத்த நொடியில் தூண் பிளந்தது
வந்தது வெளியே ஒரு அழகிய சிங்கம்.

அழகா ?சிங்கமா என்று கேளாதீர்கள்.
ஆமாம் பக்தனைக் காப்பாற்ற வருபவன்
கோரமாகவா இருப்பான்/?

எங்கள் சிங்கன் அழகாக ஹிரண்யனை
முறித்தான்.
மடியில் கிடத்தி அவனை அனுப்பினான் அவன் முன்னொரிடத்து.
உலகின் அப்போதைய துயரம் முடிந்தது.
நான் சிங்கம் சிரித்து பார்தது இல்லை. எங்கள் வீட்டு ல்கஷ்மிநரசிம்ஹ்ன சிரிப்பான். கண்களொ கருணை வெள்ளம். பிட்ரி மயிர் சிலிர்க்க ஒரு கையில் லட்சுமியை அணைப்பான்.
இன்னொரு கரத்தால் ப்ரஹலாதனுக்கு அருள்வான்
எந்னாளும் அவன் பாதமே துணை.





6 comments:

துளசி கோபால் said...

//அப்போது பிடித்ததுதான் நரசிம்ஹன் மேல் பித்து..//

ஆமாம். தெரியும்:-))))))))))))))))

இன்னிக்குக் காலையில் நம்ம வீட்டுலெ ஸ்வாமி விளக்கு ஏத்தறப்ப
லக்ஷ்மிநரசிம்ஹன் விக்ரஹத்தைப் பார்த்ததும் உங்க ஞாபகம் வந்தது.

கட்டாயம் வீட்டுலெ இருக்கணுமுன்னு வத்ஸலாவின் வற்புறுத்தல்.

இங்கே வந்து பார்த்தால் அவரெ பதிவுலெ வந்து உக்கார்ந்துருக்கார்.

அழகான படங்கள். என் பயம் எல்லாம் விலகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

என் ரகசியம் தெரிஞ்சுடுத்தா!!
ஆமாம் அதிலே ஒண்ணும்(சாமி) சந்தேகமே இல்லை. நரசிம்மான்னா போதும்.
துரௌபதி, கிருஷ்ணனை கூப்பிடும்போது ' த்வாரகையில் இருப்பவனே'னு
கூப்பிடுகிறாளாம்.
அதனாலே கிருஷ்ணர் த்வாரகைக்குப் போயிட்டு வந்தாராம்.
இல்லாட்ட இன்னும் சீக்கிரமே வந்து இருப்பாராம்.
அதனாலே நினைச்ச உடனே வர பெருமாள் விஷ்ணுனு எங்க டீச்சர் சொல்லுவாங்க,.

Geetha Sambasivam said...
This comment has been removed by a blog administrator.
Geetha Sambasivam said...

மனு, தப்பான பின்னூட்டம் உங்க பதிவிலே போட்டு விட்டேன். அதான் நானே எடுத்து விட்டேன். மன்னிச்சுக்குங்க, உங்க அனுமதி இல்லாமல் எடுத்ததுக்கு.

Geetha Sambasivam said...

இன்னிக்கு தினமலர் ஆன்மீகம் பத்தின பேப்பரிலே சோளிங்கர் பத்திப் படிச்சுட்டு வந்து பார்த்தா உங்க நரசிம்மர் பத்தின பதிவு.
அது சரி, யாரு வத்ஸலா? மனு, வல்லி, நாச்சியாரோட இன்னொரு பெயரா?

வல்லிசிம்ஹன் said...

நான் இல்லைப்பா.
தனி வழீஈஇ மனுஷிங்க

வந்ததுக்கு நன்றி.
நமக்கு லக்ஷ்மி கூட இருக்கிற நரசிம்ஹர்தான் கணக்கிலெ கொஞ்சம் போனாபோறதுனு விடுவாரு.
நீங்க சொன்னவர்கிட்டே கொஞ்சம் உஷஅரா இஎஉக்கணும்.